Friday, November 5, 2021

நீட் குறித்து...நீட்டாக ஒரு பதிவு..

 *திராவிட கட்சிகளின் பொய்களைப் பொடிப் பொடியாக்கும் NEET முடிவுகள்:* 


மேடைகளில், தொலைகாட்சி. விவாதங்களில் , ராஜன் குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் *தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களைப் பொடிப் பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட் முடிவுகள்.* 


 பொய்# 1:

 நீட் தேர்வு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?. 


முடிவுகள் சொல்லும் உண்மை: 


 *இந்தாண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநில போர்ட்களில் படித்தவர்கள்.* 


பொய்# 2:

 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.


 முடிவுகள் சொல்லும் உண்மை:


 *திருச்சியில் மட்டும், அரசு நடத்திய பயிற்சி வகுப்புகளில்  பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.* 


 பொய்#3

 அரசுப் பள்ளி மாணவர்கள்  முதல் முறையில் நீட் தேர்வில் தகுதி பெற முடியாது.


முடிவுகள் சொல்லும் உண்மை:  *அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* 

பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி  மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).

ஹரீஷ் குமார் (ஏழுமலை  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373) 

எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351) 

 *ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.* 

 *மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* 


பொய்#4 

கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு.


முடிவுகள் சொல்லும் உண்மை: 


 கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறிய  பெண் எம். சங்கவி. *பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றுள்ளார்.* 

அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

கடந்த ஆண்டு விவசாயக் கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.


பொய்# 5:

தமிழக மாணவர்களுக்கு  நீட் தேர்வு கடினமானது.


முடிவுகள் சொல்லும் உண்மை:  *கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி  பெற்றுள்ளனர்.* 

 

 *கடந்த ஆண்டு : 57 216.* 

 *இந்த ஆண்டு: 58,922* 


அனைவரும் அறிய வேண்டியது:


 *முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.* 


செய்ய வேண்டியது: #1 


நீதிமன்றத்தில் இந்த தரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவ வேண்டும்.


#2  *இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.* 


செய்வார்களா?


இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக்காட்சிகள் அலசுவார்களா?


 *சகோதரர்களே!!!* 

 *நாம் இந்த உண்மையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்* .🙏🙏

நன்றி...... 


மேலும் தகவல் களுக்கு

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா- !!!!


மேற்கண்ட நீட்  பற்றிய எனது முகநூல் பதிவு எழுத்தாளர் மாலன் அவர்கள்  பதிவிட்டது.  அதன் முக்கியம் கருதி எனது முகநூலில் மறு பதிவிடுகிறேன். மாலன்  அவர்களுக்கு நன்றி

2 comments:

Bhanumathy Venkateswaran said...

உண்மை எப்படி இருந்தாலும் அரசியல் நோக்கங்களுக்காக அவை மறைக்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு கஷ்டம் என்று கூறியே தமிழகத்தில் கல்வியின் தரத்தை வெகுவாக தாழ்த்தி விட்டார்கள்.

துரை செல்வராஜூ said...

// இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக்காட்சிகள் அலசுவார்களா?.. //

அலசமாட்டார்கள்!...

Post a Comment