Showing posts with label அவல் ( 5 ). Show all posts
Showing posts with label அவல் ( 5 ). Show all posts

Wednesday, December 24, 2014

ஒரு டவுட்டு

ஏன் எல்லா  இறைத் தூதர்களும்
ஞானமடைதலுக்கு முன்னால்
மனிதர்களை விட்டு
முற்றிலுமாக விலகிப் போனார்கள் ?

காடு மலை
விலங்குகளை அண்டிப் போனார்கள் ?

மனிதன் மேல் கொண்ட
அவ நம்பிக்கையினாலா ?

இயற்கை  மற்றும்
விலங்குகளின் மேல் கொண்ட
அதீத நம்பிக்கையினாலா ?

ஆட்டுடன் கூடிய ஏசுவும்
மாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்
மலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்
இருப்பிடமே அறியாதிருந்த புத்தனும்

எதையோ  சூட்சுமமாய்
சொல்லிப் போகிறார்கள்

என் மட மண்டைக்குத்தான்
ஏதும் புரியவில்லை

உங்களுக்கேதும் புரிகிறதா  ?

புரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ்