Showing posts with label ஒரு சிறு அறிவிப்பு. Show all posts
Showing posts with label ஒரு சிறு அறிவிப்பு. Show all posts

Sunday, January 28, 2018

மடத்தனம் மீண்டும் தொடர்கிறது...

படுத்திருப்பவன்
அனுபவித்துத் தூங்காது
தன்னைக் கடப்பவனுக்கு
தான் உயிர்த்து இருப்பதை
நிரூபிக்கவேண்டும் என்பதற்காக
காலாட்டிக் கொண்டிருக்கும்
மடத்தனத்திற்கு
எந்த விதத்திலும்
குறைவாகப்படவில்லை...

அனுபவப்பட்டவன்
அனுபவத்தைப் பாடமாக்கி வாழாது
தன்னைச் சூழ்ந்தவருக்கு
தான் அனுபவமானவன் என்பதை
நிரூபிக்கவேண்டும் என்பதற்காக
எழுதிக் கொண்டிருப்பதும் என்பதுவும்..

இது தெளிவாகத் தெரிந்தும்...

காலாட்டுபவன் கொள்ளும்
அற்ப சுகத்தை
அவனுக்கு விட மனமில்லை
என்பதுபோல்
எழுதும் அற்ப சுகத்தை விட
எனக்கும் மனமினமையால்...

மடத்தனம்
மீண்டும் தொடர்கிறது

Friday, March 10, 2017

"ஒரு பாமரப் பதிவரின் " அமெரிக்கப் பயணம் "

கடந்த பத்து நாட்களாக தேவையில்லாமல்
அலைவதில்லை
(தேவைக்காக அலைவதே அதிகம்
அதைத் தவிர்க்க இயலவில்லை )

அளவோடு சாப்பிட்டுக் கொள்கிறோம்

முழு உடல் பரிசோதனைச் செய்து கொண்டு
குறைபாடு உள்ளதற்கு மருந்து மாத்திரை
எடுத்துக் கொள்கிறோம்

மிக முக்கியமான தகவல்களை
நாட்குறிப்பில் குறித்துக் கொள்கிறோம்

சென்றமுறை போல அவ்வளவு
பதட்டமும் குழப்பமும் இல்லையென்றாலும்
கூட கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது

மொத்தம் 31மணி நேரப் பயணம்
மலைப்பை ஏற்படுத்துகிறது

வருகிற 13 இல் மீண்டும் மனைவியுடன்
அமெரிக்கா (நியூஜெர்ஸி ) செல்கிறோம்

சென்ற முறை பதட்டத்திலேயே
மிகச் சரியாக இரசித்துப் பார்க்க முடியாததை
இம்முறை பதட்டமின்றி பார்த்து இரசிக்க
உத்தேசித்துள்ளோம்

அவசியமெனில் "ஒரு பாமரப் பதிவரின் "
அமெரிக்கப் பயணம் என ஒரு கட்டுரைத் தொகுப்பு
எழுதலாம் என்கிற எண்ணமும் இருக்கிறது

சென்றமுறை எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு
அடிக்கடி ஞாபகமூட்டிப் போகிறது

அமைப்பு எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை

பார்ப்போம்.....

Saturday, October 31, 2015

"ஊற்று "வலையுல எழுத்தாளர்கள் மன்றம்





Displaying Untitlednm-1 copy.jpg

மிகக் கனத்த மழைக்குப் பின்
மீண்டும் ஒரு பெரும் கனத்த மழைக்கு
அவ்வளவாக வாய்ப்பில்லை

அதைப் போல உலக அளவில் வலைப்பதிவர்கள்
சார்பாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிக்குப் பின்
கவிஞர் ரூபன் அவர்களின்
தனிப்பட்ட முயற்சியால் துவக்கப்பட்ட
 "ஊற்று  "
வலையுல எழுத்தாளர்கள் மன்றத்தின்  
சார்பாக நடத்தப்பட்ட
தீபாவளிப் பண்டிகைக்கான பரிசுப் போட்டியில்
இத்தனைக் கவிஞர்கள்
கலந்து கொள்வார்கள்,
இத்தனை அற்புதமான கவிதைகள் வரும்
என நாங்கள் நிச்சயம் எதிர்பர்க்கவில்லை

கலந்து கொண்ட கவிஞர்கள் அனைவருக்கும்
எங்கள் மன்றத்தின்  சார்பாக மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

கவிதைகள் நடுவர் குழுவின்
பரிசீலனையில் உள்ளன
இன்னும் சில தினங்களில் போட்டி
முடிவுகள் வெளியாகும் என்பதை
நடுவர்களின் சார்பாகத் தெரிவித்துக் கொள்வதில்
பெரும் மகிழ்வு கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...



Friday, October 16, 2015

மாபெரும் கவிதைப் போட்டி

தீபாவளித் திரு நாளை  முன்னிட்டு

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி

தவறாது  கலந்து கொள்வீர்

தமிழுக்கும்  வலையுலகிற்கும்

சிறப்புச் செய்வீர்


வாழ்த்துக்களுடன்.......


விவரங்களுக்குப்   படத்தினைக்   கிளிக் செய்யவும்


TRTAMILKKAVITHAIKAL.COM|BY ர

Monday, March 17, 2014

விமர்சனப் பகிர்வு

பதிவுலகப் பிதாமகர் வை.கோ அவர்களின்
சிறுகதைப் போட்டியில் எனக்கு இரண்டாவது
பரிசுபெற்றஎனது விமர்சனத்தை தங்களுடன்
 பகிர்ந்து கொள்வதில்பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்

குழந்தைப் பருவத்திற்கும் காளைப்பருவத்திற்கும்
இடையிலான பருவம்,ஒரு சிக்கலான
 பருவம் மட்டுமல்ல
ஒரு விசித்திரமான பருவமும் கூட
.
காயுமாக இல்லாது பழமும் ஆகாது
வித்தியாசமாக இருக்கும்
"ஒதைப்பழம் " போல எனக் கூடச் சொல்லலாம்

இந்த சிக்கலான பருவத்தை அதன் அர்த்தமற்ற
எண்ணங்களை, செயல்களை ,பெரியவர்கள்
 மனமுதிர்சியோடுபுரிந்து கொள்ளவேண்டும் என்கிற
உயரிய நோக்கில்எழுதப்பட்ட கதையாகத்தான் இந்த
"ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்" என்கிற
கதை இருக்க வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம்

சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்தாலும்
பருவ வயது ஆண்களிடத்தில் ஒரு வகையான
 மனக் கிளர்ச்சியையும் பெண்களிடத்தில்
ஒருவகையான மன முதிர்ச்சியையும்
ஏற்படுத்திப் போவதுதான் இயற்கையின் விசித்திரம்

அந்த வித்தியாசமான விசித்திரத்தை
விடலைப் பையனின் மாறுபாடான
 எண்ணங்கள் மூலமும், அந்த விடலைப் பெண்ணின்
முதிர்ச்சியை அதன் மாறுபாடுகள் இல்லாத
செயல்களின் மூலம் மட்டும் சொல்லிப் போனதுதான்
இந்தக் கதையின் சிறப்பு

புறவெளித் தாக்கங்கள் அதிகம் தாக்கவிடாது
பெண்கள்தங்களைக் காத்துக் கொள்ளும்படியாக
சமூக அமைப்பும் குடும்பப் பாதுகாப்பும்
இருப்பதால்தான்  பெண்கள் ஓரளவுக்குமேல்
தங்கள் எண்ணச் சிறகுகளை
அதிகம் விரித்து அவதிக் கொள்வதில்லை

பருவமடைந்ததும் பெண்களுக்கென செய்யப்படுகிற
அந்தமங்களச் சடங்குகள் கூட உறவுகளின்
அவசியத்தை அதன் நெருக்கத்தை அவளுக்குள்
ஆழ விதைத்துப் போகிறது

அதற்கு மாறாக விடலைப் பருவத்து ஆணோ
மிக அதிகம் புறவெளித் தாக்குதலுக்கு உள்ளாவதுடன்
குடும்பத்திலும் பெரியவனாக வளர்ந்துவிட்டவன்
என்கிற நிலையில்தாய் தந்தை மற்றும்
சகோதரிகளிடம் இருந்தும் ஒரு இடைவெளியைப்
பராமரிக்க வேண்டிய அவசியத்திற்கு
உட்படுத்தப் படுகிறான்

அந்த இடைவெளிக்குள் காதல் தவிர
அந்த வயதிற்கான விஷயம்வேறொன்றுமில்லை என
விஷ விதையை ஊடகங்களும்
உடன் பழகும் நண்பர்களும் விதைத்துப் போக
அதுவரை கள்ளம் கபடமற்று இருக்கும் அவன் மனம்
கண்டதையும் நினைக்கத் துவங்குகிறது
மெல்ல மெல்ல தடம் மாறி நடக்கவும் தொடங்குகிறது

அதன் உச்சக் கட்டமே இக்கதையில் கதை நாயகன்
அவன் வரைந்திருந்த படத்தின் கன்னத்தின் மேல்
ஆப்பிளை வைத்துக் கடிக்கத் துணிவதும்
அப்படி கடித்ததே  அவள்  அழகிய ஆப்பிள்
கன்னத்தைக்கடித்துருசித்ததைப் போன்ற
அற்ப மகிழ்ச்சியைக் கொள்ளவதுவும்...

கதையில் மட்டுமல்ல, நிஜவாழ்விலும்
விடலைப் பருவத்தில் தன் வயப்பட்ட
அதீத காதல் சிந்தனையில், பருவம் அவனுள்
ஏற்படுத்திப்போகும் புரிந்து கொள்ளமுடியாத
அந்த உணர்வுப்பாய்ச்சலில் ,கற்பனை எண்ணங்களில்
இருந்து,தனிமைச் சூழலில் இப்படி
அரைவேக்காட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுபவன்
அதனால் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில்
மகிழத் துவங்குதல்தான் ஒரு இளைஞனை
நரக லோகத்திற்கு இட்டுச் செல்லும்
தலைவாசல் என்றால் நிச்சயம் அது மிகை இல்லை

இந்தக் கதை நாயகனின் குடும்பச் சூழல்
 மிகச் சரியானதாகஇருப்பதால்தான்
பிறந்த நாள் பரிசாக அந்தப் பெண்ணின்
படத்தை வரையத் துவங்குவதையோ,
பரிசாகத் தருவதையோ தவறாக
கற்பனை செய்து கொண்டு தடைவிதிக்க முயலவில்லை
இப்படி எத்தனை பேரின் குடும்பத்தில் சாத்தியம் ?

அதனால்தான் அவள் அவனுக்கு இல்லை
என்கிற போதுமிக இயல்பாக சுவற்றில்
அவள் ஓவியத்தை ஆணி அடித்து
மாட்டுகையில் அந்த நினைவையும் அத்துடன்
ஆணி அடித்து மாட்டவும்
கை கழுவுகையில் அவள் நினைவுகளையும்
மெல்லக் கை கழுவவும் வைக்கிறது

இல்லையெனில் "அடைந்தால் மகாதேவி
இல்லையேல் மரணதேவி "
தனக்கில்லாதது நிச்சயம் வேறு யாருக்கும்
கிடைக்கக் கூடாது "போன்ற வில்லத்தனமான

விஷ எண்ணங்ளை உடன் வளர்ந்து
அவனை அழித்துக் கொள்ளச் செய்துவிடும்
அல்லது அடைய முடியாததை அழித்து கொடூரச்
 சுகம் காண விழையும்இது போன்று நம்
அன்றாட வாழ்வில்  காண்கிற, கேள்விப்படுகிற
காதல் தற்கொலைகளும் ஆசிட் வீச்சுகளும்தான்
இந்தக்கதையைஎழுதும்படியான ஒரு உத்வேகத்தை
கதை கதாசிரியரின் மனதில்உருவாக்கி
இருந்திருக்க வேண்டும்  என நான் நினைக்கிறேன்

அந்த சிந்தனையை,மிக நேர்த்தியான
கதையாக விரிவாக்கி நம்முள் அற்புதமான காட்சியாக
விரிவாகும் வண்ணம் தன் எழுத்தாற்றலால்
 மிகச் சிறப்பாகப் பதிவு செய்த சிறு கதை மன்னன்
திருவாளர் வை,கோ அவர்களுக்கு
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

(தலைப்பு மட்டும் ஆப்பிள் கன்னங்களும்
அபூர்வ எண்ணங்க்களும் என இல்லாது
ஆப்பிள் கன்னங்களும் அழிச்சாட்டிய எண்ணங்களும்
என்பதுபோல்இருந்திருக்கலாமோ என எனக்குப்பட்டது
காரணம் இந்த அபூர்வ என்கிற வார்த்தை அதிகம்
நேர்மறையான விஷயத்திற்குத்தான்
மிகச் சரியாகப் பொருந்தும் என நினைக்கிறேன் )

Sunday, February 2, 2014

இரண்டாம் முறைக் கிடைத்த லட்டு

பதிவுலகப் பிதாமகரின்
இரண்டாவது சிறுகதைக்கான போட்டியில்
(தை வெள்ளிக்கிழமை  )
நான் தவறாது விரும்பித் தொடரும் பதிவர்
திருமதி.ராஜலெட்சுமி பரமசிவம் அவர்களுடன்
முதல் பரிசைப் பகிர்ந்து கொள்ள  கிடைத்த
யோகத்தை பெருமையாகக் கருதுகிறேன்

சரியோ தவறோ படைப்பாளியின் கருத்துக்கு
என் கருத்து உடன்பட்டுப் போகிறதோ இல்லையோ
கதையைப் படித்ததும் நான் உணர்கிற கருத்தை
குழப்பமின்றி பதிவு செய்வதால் கிடைத்த
அங்கீகாரமாக இந்தப் பரிசைக் கருதுகிறேன்

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-01-03.html

திரு .வைகோ அவர்கள் போட்டிக்கான அறிவிப்பில்
குறிப்பிட்டிருப்பதைப் போல இந்தப் போட்டியில்
கலந்து கொள்வதன் மூலம் ஒரு படைப்பை
ஊன்றிப் படிப்பதற்கான பயிற்சியாகவும்
நமது விமர்சனத் திறனை வளர்த்துக் கொள்ள
ஒரு நல்ல வாய்ப்பாகவும் இந்த சிறுகதை
விமர்சனப் போட்டி இருப்பதால் பதிவர்கள்
அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இத்துடன் இந்த இரண்டாம் சிறுகதைக்கான
இணைப்பையும் அதற்கான எனது  விமர்சனத்தையும்
இத்துடன் பகிர்ந்துள்ளேன்

http://gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html



எனது விமர்சனம் 



துவங்கியதும் தெரியாது தொடர்ந்ததும் தெரியாது
சட்டென  கனத்துப் பெய்து 
ஓய்ந்த  கோடை மழைபோலவும்...

வளைவுகள் நெளிவுகள் அற்ற ஒரு
நெடுஞ்சாலையில் சட்டெனத் தோன்றி
வேகமாக நம்மைக் கடந்து போகும் ஒரு
அதி வேக அழகியக் கார் சட்டென நம்முள்
ஏற்படுத்திப் போகும் அதிர்வினைப் போலவும் ...

இக்கதை நம்முள் ஒரு எதிர்பாராத 
ஆயினும் ஒரு அழுத்தமான பாதிப்பை 
ஏற்படுத்திப் போகிறது
என்றால் நிச்சயம் அது மிகையில்லை

"ருக்குவுக்கு இடுப்பு வலி எடுத்துவிட்டது " என
எடுத்தவுடன் கதைக் கருவின் கழுத்தை அழுத்தப்
பிடிப்பதற்கு உண்மையில் கொஞ்சம் கூடுதல்
"தில் "தான் வேண்டும்.அது வைகோ சாருக்கு
கூடுதலாக இருக்கிறது என்பதற்கு இக்கதையே சாட்சி

வேறு யாரேனும் இக்கதையைச் சொல்லி இருந்தால்
நிச்சயமாக செக்- அப்புக்கு வருவது முதல் துவங்கி
பின் குழந்தை இல்லாத தம்பதிகளின் மன நிலையை
விளக்கி பின் விலாவரியாக பேரம் பேசுதலை
விவரித்து உச்சக் கட்டமாக பிரசவ வலியெடுத்து
மருத்துவ மனையில் சேர்ப்பது என்கிற வகையில்தான்
யோசித்திருப்பார்கள்.அதுவும் ஒரு சாதாரணக்
கதையாகிப் போயிருக்கும்

நிச்சயம் எத்தனை குழந்தை பெற்றாலும்
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பத்து மாதம்
சுமந்து பெற்றவள் நிச்சயம் மனசார தன் குழந்தையை 
விற்கத் துணியமாட்டாள்

இது கதாபாத்திரமாக வருகிற மருத்துவருக்கும்
நிச்சயம் தெரிந்திருக்கிறது.அதனால்தான் குழந்தையை
வாங்க நினைப்பவர்களை வரச் சொல்லிவிட்டு
இவர்களிடம் அவர்களை வரச் சொல்லவா எனக் கேட்கிறார்

குழந்தையைப் பெற்றவர்களுக்கும் குழந்தையை
ஆரோக்கியமாகப் பெற்றுவிட வேண்டும் அதற்காக
மருத்துவர் மூலம் பெற முடிந்த உதவிகளைப்
பெற்றுக் கொள்வோம்,அதுவரை மருத்துவரிடம்
முரண்பாடு வேண்டாம் எனத் தான்  முடிவு
எடுத்திருக்கவேண்டும்.இல்லையெனில் மருத்துவர்
கேட்டவுடன் இருவரும் இப்படி திட்டவட்டமான
பதிலைக் கூறி இருக்க வாய்ப்பே இல்லை

கதை மாந்தருக்கும் தெரிந்த கதைபடிப்பவருக்கும்
புரிந்த விஷயம் கதையை எழுதியவருக்குத்
தெரியாமலா இருந்திருக்கும்.நிச்சயம் தெரிந்திருக்கும்

கதாசிரியரைப் பொருத்தவரை அவர் குழந்தையைப்
பெற்றுக் கொடுக்கும் நிகழ்வினைப் பயன்படுத்திக் 
கொள்கிறாரே ஒழிய அவரது முழுக் கவனமும் 
நிச்சயம் அதில் இல்லை எனவே எனக்குப் படுகிறது

உண்மையோ பொய்யோ தப்போ சரியோ
காலம் காலமாக பண்பாடு ரீதியாக கலாச்சார ரீதியாக
நாம் பல நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறோம்

தப்பிக்கவே முடியாமல் சிக்கிக் கொள்கிற சூழலில்
மிக எளிதாக தப்பித்துக் கொள்ள இது போன்ற
நம்பிக்கையின் மீதான  நம்பிக்கைகள் கை கொடுக்கின்றன

"ஐந்தாவது குழ்ந்தை " "தை வெள்ளிக்கிழமை " என்கிற
சென் டிமெண்டானநம்பிக்கையை தவிர்த்து  
வேறு எந்தக் காரணத்தைஸ் சொல்லி இருந்தாலும் 
அதற்குமருத்துவர் மாற்று ஒன்று சொல்லி இருக்கமுடியும்
இந்த நம்பிக்கைக்கு எதிராக நிச்சயம் அவர்
எந்த வாதத்தையும் வைக்க முடியாது
கதையில் வைக்கவும் இல்லை

எனக்கு இந்தக் கதையின் மையக் கருத்தே
இதுதான் எனப்படுகிறது 

இல்லையெனில் கதை ஆசிரியர் ஐந்தாவது குழ்ந்தை
மற்றும் தை வெள்ளிக் கிழமை என்கிற வரிகளுக்கு
அத்தனை அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார்.

அந்த வகையில்  நிலாவைக் காட்டி சோறு
ஊட்டுகிற தாயினைப் போல ஏதோ ஒரு
நிகழ்வை  எடுத்துக் கொண்டு தான் வாசகருக்கு
ஊட்ட நினைக்கிற கருத்தினை மிகச் சுருக்கமான
கதையாகச் சொல்லிப்போனாலும் சரியாக சொல்லிப்
போனவிதம் மிக மிக அருமை

அதே சமயம்

கலையை முன் வைத்துவிட்டு கலைஞன்  ரசிகனே
தேடி அறியட்டும் எனச் சொல்கிற மாதிரி
அந்த இரண்டு சொற்களை அத்தனைப் பெரிதாக
உருவத்திலும் நிறத்திலும் அழுத்திச் சொல்லாமல்
படிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும் என
மிகச் சாதாரணமாகச் சொல்லி இருக்கலாமோ
எனத் தோன்றிய எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை

இருப்பினும் வருடத்தில் வருகிற வெள்ளிக் கிழமைகளில்
தை வெள்ளி மிகச் சிறந்தது என்பதைப் போல
இந்தத் "தை வெள்ளிக் கதையும் " மிகச் சிறந்தது
என்பதை முத்தாய்ப்பாகச் சொல்லித்தான் ஆகவேண்டும்

Tuesday, October 8, 2013

சந்திப்பு குறித்து ஒரு சிறு அறிவிப்பு

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் துவங்கப்படவும்
அது தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்பட
காரணமாகவும் இருக்கிற மரியாதைக்குரிய
புலவர் இராமானுஜம் ஐயா அவர்கள்
சொந்த பணியின் நிமித்தம் நாளை
குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லுகிற
வழியில் இன்று மதுரையில்  இரயில்வே விருந்தினர்
விடுதியில் தங்கி நாளைக் காலையில்
தன் பயணத்தைத் தொடர்வார் என அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறோம்

சந்தித்து அளவளாவி மகிழ விருப்பமுடையோர்
மாலை ஏழு மணிக்கு மேல் சந்திக்க இயலும்
என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்

மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களும்
நானும் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும்
மதுரைப் பதிவர்கள் சிலரும் புலவர் ஐயா அவர்களை
 மாலையில் சந்திக்க இருக்கிறோம்