இதைக் கதையாகக் கொள்வதுதான் நல்லது.
உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்
ஏன் ? எல்லோருக்குதான்.
வயது நாற்பதை வயதை ஒட்டிய சமயத்தில்
மனைவியின் தொடர் வற்புறுத்தலாலோ அல்லது
அடுத்து அடுத்து வீட்டுச் சொந்தக் காரர்களின்
அடாவடித்தனத்தால் வீடு மாற்றி மாற்றி
நொந்து போனதாலோ எனக்கும் சுயமாக
வீடு கட்டவேண்டும் என ஆசை இருந்தது
ஆனால் எதனாலோ அதிக ஆர்வமில்லை
இந்தச் சூழலில்
எனது அலுவலகத்தில் எனது வயதை ஒத்த
உதவியாளன்ஒருவன் இருந்தான்.
அவன் அந்த சமயத்தில் அவனுடையபையனுக்கு
தீவீரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருந்தான்.
நேற்று என்னிடம் பெண் பார்க்கப் போவதாக விடுமுறை
சொல்லிவிட்டுப் போயிருந்ததால் அவன் வந்தவுடன்
ஆர்வமாக"என்ன ஆயிற்று " எனக் கேட்டேன்
அவன் சலித்தபடி சொன்னான்
"பெண் அழகாயிருக்கிறதுவசதியான குடும்பம் தான்.
பவுனும் 30 க்கு குறையாமல்போடுகிறேன் எனச்
சொல்கிறார்கள்.சம்பாதிக்கிற அண்ணன்கள்
இருவரும் தாட்டியமாக இருக்கிறார்கள்.
ஆனாலும்... 'எனச் சொல்லி நிறுத்தினான்
எனக்கு எரிச்சலாகிப் போனது.
"இதற்கு மேல் உனக்கு எப்படிச் சம்பந்தம்
வேண்டும் எனநினைக்கிறாய் "
என்றேன் எரிச்சலுடன்
"எல்லாம் இருந்து என்ன சார்.வாடகை வீட்டில்
இருக்கிறார்கள்வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு
எப்படி சார் பெண்ணைக்கொடுப்பது " என்றான்
எனக்கு அவன் பதில் சட்டென யாரோ மண்டையில்
தடி கொண்டுதாக்கியது போல இருந்தது.
நான் கௌரவமான ஒரு அரசுப் பணியில் இருக்கிறேன்
இரண்டு பெண்களையும் பொறியியல் கல்லூரியில்
சேர்த்துபடிக்கவைத்துக் கொண்டுள்ளேன்.
மிகச் சிறப்பான முறையில்திருமணம் செய்து
கொடுக்கக் கூடிய வகையில்திருமணத்திற்கு
த்தேவையான அனைத்தையும்
சிறிது சிறிதாக சேமித்தும் வைத்துள்ளேன்
வீடு கட்டுவதற்கு ஏதுவாக இரண்டு மூன்று
இடங்களைவாங்கியும் வைத்துள்ளேன்
.பொறியல் துறையிலேயேஇருப்பதனால்
வடிவமைப்பதுகுறித்தோ வேலை ஆட்களிடம்
வேலை வாங்குவது குறித்தோ கவலை இல்லை
.ஆனாலும்
எப்போது வேண்டுமானலும் கட்டிவிடமுடியும் என்கிற
நமபிக்கையினாலோ அல்லது அலட்சியத்தினாலோ
உடன்சொந்தமாக வீடு கட்ட நான் முயற்சிக்கவே இல்லை
இன் நிலையில் என் உதவியாளர் சொந்த வீடு
இல்லாதவர்கள்வீட்டில் எப்படி சம்பந்தம் செய்வது
என்கிற வார்த்தை என்னுள்ஒரு பெரும் பாதிப்பை
ஏற்படுத்திவிட்டது,இவன் அளவிலேயேஇப்படிப்பட்ட
எண்ணம் இருக்குமாயின் நான் மாப்பிள்ளை பார்க்கத்
துவங்குகையில் நல்ல சம்பந்தம் அமைந்து
இதன் காரணமாகதட்டிப் போனால் என்ன செய்வது
என்கிற எண்ணம் வர அவனுடைய வார்த்தையை
ஏதோ அசரீரியின் வாக்காக எடுத்துக்
-கொண்டு உடன் வீடு கட்டது துவங்கிவிட்டேன்.
ஆறு மாதத்தில் புதிய வீட்டில் குடியேறியும் விட்டேன்
இதிலெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை
.நான் வீடு கட்டியபகுதி புதிய குடியேற்றப் பகுதியாய்
இருந்ததால் என் வீட்டை ஒட்டிஒரு இரண்டு பர்லாங்க்
தூரத்திற்கு வீடு ஏதும் இல்லை
அது கூட பெரிய பிரச்சனையாய் இல்லை.
என் வீட்டிற்குகிழக்கே இரண்டு பர்லாங்க் தூரத்தில்
மிகப் பெரியமுள் காடு ஒன்று இருந்தது.
அதனால் இத்தனை பிரச்சனைகள் இருக்கும் என
எனக்கு முதலில் தெரியாது.
(தொடரும்