Showing posts with label சென்னை முக நூல் நண்பர்கள் சந்திப்பு 2014. Show all posts
Showing posts with label சென்னை முக நூல் நண்பர்கள் சந்திப்பு 2014. Show all posts

Tuesday, December 9, 2014

சென்னை முக நூல் நண்பர்கள் சந்திப்பு 2014





வலைப்பதிவர்களிடம் அறிமுகம் ஆகி இருக்கிற மாதிரி
நான் டுவிட்டர்களிடமோ அல்லது
முக நூல் நண்பர்களிடமோ அறிமுகம் ஆனவனில்லை

ஆனாலும் டுவிட்டர்களிடமும் முக நூல் நண்பர்களிடமும்
இருக்கும் ஒரு இளமைத் துள்ளலுடன் கூடிய
மிகக் கூர்மையான டுவீட்டுகளும் பதிவுகளும்
எனக்கு மிகவும் பிடிக்கும்

அதன் காரணமாகவே அவர்களை மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே
என்னுடைய திருப்பூர் நண்பர் கோவைக் கமல்
அழைப்பின் பேரில் கோவையில் நடைபெற்ற
ஒரு டுவிட்டர்களில் கூட்டத்தில் கலந்து கொண்டேன்
இளமைத் துள்ளலுடன்  கூடிய அந்தக் கூட்டம்
ஒரு வித்தியாசமான இரசிக்கத் தக்க சுவாரஸ்யமான
அனுபவமாக இருந்தது

அதைப் போலவே சென்னையில்  நடைபெறும்
முக நூல் நண்பர்களின் பதிவு வழியாக வந்த
அழைப்பினை ஏற்று நான் அந்தக் கூட்டத்தில்
கலந்து கொண்டேன்

ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன
அரிமா சங்கத் தலைவராக இருக்கிறவன்
என்கிற முறையில்அதன் காரணமாக
அறிமுகம் ஆகி இருந்த இருவரைத் தவிர
வேறு யாரையும் எனக்குத் தெரியவில்லை

அது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை

ஏனெனில் நடத்துபவர்கள் கலந்து கொள்பவர்கள்
என்கிற வேறுபாடு தெரியாதவாறு அனைவரும் மிக
இயல்பாக சொந்த வீட்டு வைபவத்தில் கலந்து
கொள்வதைப் போன்ற ஒரு சூழ் நிலையை அங்கு
ஏற்படுத்தி இருந்தார்கள்

அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிகம் பேர்
கலந்து கொண்டதாலும் மிகச் சிறப்பான
பறை நடனத்திற்கும்இன்னிசைக் கச்சேரிக்கும்
நேரம் வேண்டி இருந்ததாலும்அதிகம் பேர்
சுய அறிமுகம் செய்து கொள்ள இயலவில்லை

ஆனாலும் ஏற்கெனவே பின்னூட்டத்தின் மூலம்
தொடர்பில் இருந்தவர்கள் குழு குழுவாகத்  தங்களை
அறிமுகம் செய்து கொண்டு
மகிழ்ச்சிக் களிப்பில் இருந்தது
கண்கொள்ளாக்  காட்சியாக இருந்தது

மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த
அட்வகேட் சுரேஷ் பாபு அவர்களுக்கும் அவர்களது
நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



















அட்வகேட் சுரேஷ் பாபு அவர்களுக்கும் அவர்களது
நண்பர்களுக்கும் மீண்டும்  எனது
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்