மதி நிறைந்த நன் நாளில்
அதி உன்னத இளங்காலை
சித்தப்புவின் வயதொத்தவர் எல்லாம்
அந்தச் சித்திரை வீதியில்
சிவப்பழமாய் பஜனை செய்தபடி
பவனித்துவர....
இவர் மட்டும் மொட்டை மாடியில்
வேர்க்க விறுவிறுக்க
ஸ்கிப்பிங் ஆடிக்கண்டிருப்பதைப் பார்க்க
சித்திக்கு மட்டும் இல்லை
எனக்கும் கோபம்
பொத்துக் கொண்டு வந்தது....
சித்தி வழக்கம்போல் அடக்கிக் கொண்டாள்
என்னால் முடியவில்லை
என் முகச் சுளிப்பைக் கண்ட சித்தப்பு
"ஒன்று என் பக்கம் வா
அல்லது அவர்களுடன் போ
ஏனெனில் இரண்டும் ஒன்றுதான் "என்றார்
எனக்கு எரிச்சல் கூடிப் போனது
"அது எப்படி ஒன்றாகும்"
கோபம் கொப்பளிக்கக் கேட்டேன்
அவர் வேர்வையைத் துடைத்தபடி
நிதானமாகச் சொன்னார்
"அவர்கள் வீட்டினுள் அமர்ந்தபடி
கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டிராது
வீதியில் மூச்சிரைக்க
நாமாவளி பாடுவதும்...
வீட்டினுள் இல்லாது
மூச்சிரைக்க வெட்ட வெளியில்
நான் ஸ்கிப்பிங்க் ஆடுவதும்
நிச்சயம் ஒன்றுதான்
அது காரணம் அறியா காரியம்
இது காரணம் அறிந்த காரியம்"
என்றார்
"எனக்கு ஏதும் விளங்கவில்லை
விளங்கச் சொல்லக் கூடாதா ? "
என்றேன் எரிச்சலுடன்
சித்தப்பு சிரித்தபடிச் சொன்னார்
"விளக்கிச் சொல்லப்படும் எதுவும்
நீர்த்துத்தான் போகும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டவையே
நிச்சயம் நெடு நாள் வாழும் " என்றார்
நான் விளங்கிக் கொள்ள
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
அதி உன்னத இளங்காலை
சித்தப்புவின் வயதொத்தவர் எல்லாம்
அந்தச் சித்திரை வீதியில்
சிவப்பழமாய் பஜனை செய்தபடி
பவனித்துவர....
இவர் மட்டும் மொட்டை மாடியில்
வேர்க்க விறுவிறுக்க
ஸ்கிப்பிங் ஆடிக்கண்டிருப்பதைப் பார்க்க
சித்திக்கு மட்டும் இல்லை
எனக்கும் கோபம்
பொத்துக் கொண்டு வந்தது....
சித்தி வழக்கம்போல் அடக்கிக் கொண்டாள்
என்னால் முடியவில்லை
என் முகச் சுளிப்பைக் கண்ட சித்தப்பு
"ஒன்று என் பக்கம் வா
அல்லது அவர்களுடன் போ
ஏனெனில் இரண்டும் ஒன்றுதான் "என்றார்
எனக்கு எரிச்சல் கூடிப் போனது
"அது எப்படி ஒன்றாகும்"
கோபம் கொப்பளிக்கக் கேட்டேன்
அவர் வேர்வையைத் துடைத்தபடி
நிதானமாகச் சொன்னார்
"அவர்கள் வீட்டினுள் அமர்ந்தபடி
கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டிராது
வீதியில் மூச்சிரைக்க
நாமாவளி பாடுவதும்...
வீட்டினுள் இல்லாது
மூச்சிரைக்க வெட்ட வெளியில்
நான் ஸ்கிப்பிங்க் ஆடுவதும்
நிச்சயம் ஒன்றுதான்
அது காரணம் அறியா காரியம்
இது காரணம் அறிந்த காரியம்"
என்றார்
"எனக்கு ஏதும் விளங்கவில்லை
விளங்கச் சொல்லக் கூடாதா ? "
என்றேன் எரிச்சலுடன்
சித்தப்பு சிரித்தபடிச் சொன்னார்
"விளக்கிச் சொல்லப்படும் எதுவும்
நீர்த்துத்தான் போகும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டவையே
நிச்சயம் நெடு நாள் வாழும் " என்றார்
நான் விளங்கிக் கொள்ள
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்