எம் படைப்புகள் எல்லாம்...
ஆற்று நீரை எதிர்த்துநிற்கும் எனும்
அதீத எண்ணம் ஏதும்
எங்களில் எவருக்குமில்லை
தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
மலர்ந்து சிரிக்கும் என்கிற
கற்பனையும் எங்களுக்கில்லை
எண்ணையில்லா தீபத்தை
எரியச் செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய் சக்தியில்லைஎன்பது
எங்களுக்கும் தெரியும்
சராசரித் தேவைகளை அடையவே
திணறும்அல்லல் கதைகளை
நியாயமாக நேர்மையாக வாழ
எதிர்படும் பெரும் துயர் களை
எமக்குத் தெரிந்த வகையில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் பெற்றுக் கொள்கிறோம்
அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
உல்லாச அனுபவங்களை
கொஞ்சம் மசாலாக் கலந்து
விருந்தாக்கி மகிழ்கிறோம்
எமது எல்லைக்கு எட்டிய வகையில் புனைவு
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்
உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
"யாது ஊரே யாவரும் கேளீர் "என
பண்புடன் வாழ முயலும்
பதிவர்கள் நாங்களெல்லாம்
இன்றைய நோக்கில்
ஒரு சிறிய குழுவே
ஆயினும்
உலகுக்கு ஒரு நாள் புரியும்
எங்கள் அதீத அசுர பலமே
ஆற்று நீரை எதிர்த்துநிற்கும் எனும்
அதீத எண்ணம் ஏதும்
எங்களில் எவருக்குமில்லை
தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
மலர்ந்து சிரிக்கும் என்கிற
கற்பனையும் எங்களுக்கில்லை
எண்ணையில்லா தீபத்தை
எரியச் செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய் சக்தியில்லைஎன்பது
எங்களுக்கும் தெரியும்
சராசரித் தேவைகளை அடையவே
திணறும்அல்லல் கதைகளை
நியாயமாக நேர்மையாக வாழ
எதிர்படும் பெரும் துயர் களை
எமக்குத் தெரிந்த வகையில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் பெற்றுக் கொள்கிறோம்
அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
உல்லாச அனுபவங்களை
கொஞ்சம் மசாலாக் கலந்து
விருந்தாக்கி மகிழ்கிறோம்
எமது எல்லைக்கு எட்டிய வகையில் புனைவு
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்
உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
"யாது ஊரே யாவரும் கேளீர் "என
பண்புடன் வாழ முயலும்
பதிவர்கள் நாங்களெல்லாம்
இன்றைய நோக்கில்
ஒரு சிறிய குழுவே
ஆயினும்
உலகுக்கு ஒரு நாள் புரியும்
எங்கள் அதீத அசுர பலமே