Showing posts with label பதிவர். Show all posts
Showing posts with label பதிவர். Show all posts

Monday, May 15, 2017

நூலினும் வலத்தளமே பலமிக்கதெனும் ....

ஆயிரம்  கவிதைகளை
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
தொகுத்திருந்தால்
பத்துக்  கவிதைப் புத்தகங்கள்
ஆகியிருக்கக் கூடும்

ஒரு பதிப்புக்கு ஆயிரமென
கணக்கிட்டால் கூட
அவையனைத்தும்
விற்றிருக்கக் கூடுமென
கற்பனையில் மிதந்தால் கூட
பத்தாயிரம் பேரே
வாங்கியிருக்கச் சாத்தியம்

கற்பனையை
இன்னும் விரித்து
ஒரு புத்தகத்தை பத்துபேர்
தொடந்து படித்தார்கள் என
நம்பிக்கை கொண்டால் கூட
ஒரு இலட்சம்  பேரே
படித்திருக்கச் சாத்தியம்

வலைத்தளம் போல்
ஐந்து  இலட்சத்தை நெருங்கித் தொட
சத்தியமாய்ச் சாத்தியமே இல்லை

புத்தகத்தினைப் பாராட்டி
ஆசிரியருக்கு கடிதமாக
புத்தகம் வாங்கியவர்கள்
அனைவருமே எழுதியிருப்பினும்
பத்தாயிரம் வாசகர் கடிதமே சாத்தியம்

வலைத்தள பின்னூட்டம் போல்
நாற்பதாயிரம்  தொட
நிச்சயமாய்ச் சாத்தியமில்லை

எத்த்துனைச் சாதுர்ய
பதிப்பகத்தார் ஆயினும்
குறைந்த பட்சம் ஐந்து நாடுகளில்
விற்றுவிடச் சாத்தியம்

இதுபோல்
நூற்று  இருபத்தைந்து நாடுகள் கடக்க
நிச்சயம் வாய்ப்பே இல்லை

எத்தனைப் பெரிய
எழுத்தாளர்கள் ஆயினும்
நல்ல வாசகர்களை பெற்றிடவே
அதிகச் சாத்தியம்

வலையுலகம் போல்
நூற்றுக்கணக்கான
நல்ல நண்பர்களை பெற்றிட
நிச்சயம் வாய்ப்பே இல்லை       

எனவே
வாளினும் எழுதுகோலே
பலமிக்கது என்பதனைப் போல்

நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும்
புதுமொழியைப்  பரப்புவோம்

அவ நம்பிக்கையுடன் பகிரும்
பதிவர்களின் மனதை
நம்பிக்கை ஒளியால் நிரப்புவோம்

(ஒரு உதாரணத்திற்கே என்னுடைய கணக்கு
என்னைவிட ஜாம்பவான்கள்  இங்கே
அதிகம் உண்டு )


தமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கலாம்.

Monday, January 5, 2015

அதிசய விருந்துக் கூடம்

இந்த விருந்துக் கூடம்
அற்புதமானதாக மட்டும் இல்லை
மிக அதிசயமானதாகவும் இருக்கிறது

விருந்தாளியாய் வருவோரே
விருந்து கொடுப்பவர்களாகவும்
விருந்து கொடுப்போரே
விருந்தாளியும் இருப்பதால்

இந்த விருந்துக் கூடம்
புதுமையானதாக மட்டுமில்லை
புரட்சிகரமானதாகவும் இருக்கிறது

நண்பர்களை மட்டும்
அழைப்பாளர்களாய் கொள்ளாமல்
வருவோரையெல்லாம்
நண்பர்களாகக் கொள்வதால்

இந்த விருந்துக் கூடம்
பெருமைக்குரியதாக மட்டுமல்ல
பெருமைப்படுத்துவதாகவும் இருக்கிறது

விதிமுறைகள் இல்லையெனினும்
விதி மீறாதவர்களாலும்
வரையரைகள் இல்லையெனினும்
அதனை மீறாதோர் நிறைந்திருப்பதால்

ஆம் இந்தப்

பதிவர் விருந்துக் கூடம்
வியப்பளிப்பதாக மட்டும் இல்லை
விரும்பத் தக்கதாகவும் இருக்கிறது