Showing posts with label பின்னுரை. Show all posts
Showing posts with label பின்னுரை. Show all posts

Tuesday, September 3, 2013

ஆழக் கடலும் பதிவர் சந்திப்பும்

களிப்பின் உற்பத்திச் சாலையாய்
விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
அந்த அற்புதக் கடல்

இயலாமையாலும் நேரமின்மையாலும்
எட்டி நின்று அதன் அழகை
ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு
ஒரு அற்புத ஓவியமாய்...

தன் அலங்காரம் கலைந்துவிடுமென்று
கரையோரம் அமர்ந்திருந்து அந்தச் சூழலை
உள்வாங்கிக் கொண்டிருந்தோருக்கு
ஒரு அதிசயப் பொருளாய்...

இரசித்தலும் அனுபவித்தலும்
இணைத்துக் கொள்வதில்தான் என
உணர்ந்து தன்னுள் இறங்கியவர்களுக்கு
ஒரு கற்பக விருட்ஷமாய்....

நம்பிக்கையின் ஆழம் பொருத்து
அருள் தரும் ஆண்டவானாய்
அவரவர் மன நிலைக்குத் தக்க
தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது
அந்த அற்புத அதிசயக் கடல்
நம் பதிவர் சந்திப்பைப் போலவும் ....

Sunday, June 17, 2012

"அது "என்பது "இதுதான்"

ஏறக்குறைய முப்பதுவருடங்களுக்கு முன்னால்
 "கண்ணதாசன் " என்கிற ஒரு அருமையான
 இலக்கிய மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது

கணையாழியில் கடைசிப் பக்கத்தில்
சுஜாதா அவர்கள் எழுதி வந்ததைப் போல
கண்ணதாசன் மாத இதழின் கடைசி
பக்கங்களில் கவியரசு கண்ணதாசன் அவர்கள்
தன்னுடைய சிந்தனைகளை அருமையான
கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும்
எழுதி வந்தார்.

(அவைகள் புத்தகங்களாகவெளிவந்துள்ளனவா
என எனக்குத் தெரியவில்லை
தெரிந்தவர்கள் சொல்லலாம் குறிப்பாக
மின்னல் வரிகள் கணேஷ்  )

அதில் குறிப்பாக "நான்" என்கிற தலைப்பில்
ஒரு அற்புதமான கட்டுரையை எழுதி இருந்தார்
அந்தக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட வாசகம்தான்
என்னை சுயமாக சிந்திக்கத் தூண்டிப்போனது
அந்த வாசகம் இப்படிப் போகும்

"எனக்கு ஒரு பொருளைப் பற்றி
எழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்
பொருள் பற்றி எனக்கு எ துவு ம் தெரியாது
எழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து
எனக்கு எல்லாமே தெரியும்
ஏனெனில் எனக்கு எப்படி
சிந்திப்பது என்பது தெரியும்"என்பார்

யோசித்துப் பார்க்கையில்
ஒரு புதிய அறியாத பொருள் குறித்து
ஏதும் தெரியாத போதும்...

அதை உலகின் பார்வையிலும்
நம் தனித்த பார்வையிலும்
அதனை முற்றாக புற நிலையில் பார்க்கவும்
அக நிலையிலும் பார்க்கவும்
அதற்கு ஆதரவாகப் பார்க்கவும்
அதற்கு எதிர் நிலையில் பார்க்கவும்
அதன் கடந்த கால நிலையைப் பார்க்கவும்
எதிர்கால நிலையினை யூகிக்கவும் தெரிந்தாலே
அந்தப் பொருள் குறித்து எல்லாமும்
நிச்சய்ம் தெரிந்து தானே போகும் ?

இப்படிப் பார்க்கப் பழகினால் இதுவரை
நமக்குப் புரியாத, புதிராக இருப்பவைகள் எல்லாம்
பழகிய ,தெரிந்த  பொருளாகிப் தானே போகும் ?

வள்ளுவன் சொல்லுகிற "இதனை இதனால்
இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் " என்பதில்
இது என்பதும் இதனை என்பதும்
அதனை என்பதும் அவன் என்பதும்
அதுமட்டுமா என்ன ? எல்லாமும்தானே !

(குழப்பியதாக பெரும்பாலோர் சொன்ன
முன் பதிவான "அது""க்கான விளக்கப் பதிவு )