Showing posts with label பதிவுலகு. Show all posts
Showing posts with label பதிவுலகு. Show all posts

Wednesday, August 10, 2016

இடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்.. ( 2 )

பயிற்சி வகுப்புகள் ஸபா தீவில் முடிந்ததும்
மலேசியாவைச் சுற்றிப்பார்க்கும் விதமாக
மலேசியாவில் ஏற்கெனவே அறைகள்முன்பதிவு
செய்திருந்தோம்

எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு நிலைத் தகவலாக
என்னுடை பதிவில் நான் மலேசியா வருகிற
விஷயத்தையும், தங்குமிடத்தையும் 
பதிவு செய்திருந்தேன்

தினமும் காலையில் சிற்றுண்டு முடித்ததும்
பகுதி பகுதியாக அவர்கள் அவர்களுக்குப்
பிடித்த இடத்தைப் பார்க்கக் கிளம்பினால்
மதிய உணவு மற்றும் இரவு உணவு முடித்து
ஓய்வெடுக்கத்தான் தங்குமிடம் திரும்புவோம்

அப்படி இரண்டாம் நாள் இரவு பத்து
மணி அளவில் அறைக்குத் திரும்புகையில்
வரவேற்பறையில் இருந்த என் நண்பர் 

"காலையில் இருந்து உங்கள் மலேசிய
நண்பர் ஒருவர் உங்களைப் பார்ப்பதற்காகக்
காத்திருக்கிறார்.அவர் உங்களை ரமணி என
விசாரித்திருக்கிறார். அந்தப் பெயர் நம்
குழுவில் உள்ளோர் பலருக்கும் தெரியாததால்
அப்படி யாரும் வரவில்லையென்று
சொல்லி இருக்கிறார்கள்.ஆயினும் அந்த நண்பர்
உறுதியாக வந்திருக்கிறார் எனச் 
சொல்லிக் கொண்டிருக்கையில் நல்ல வேளை
நான் வந்தேன். எனக்கு உங்கள் துணைப்பெயர்
தெரியும் என்பதால் நான் தான் நீங்கள் வந்த விவரம்
சொல்லி இரவுதான் வருவார்கள் எனச்
 சொல்லி இருந்தேன்

அவர்கள் ஊர் தூரம் என்பதால் சென்று வருவதை விட
அருகில் அறை எடுத்துத் தங்குவதாகவும் எப்படியும்
இரவு பார்த்துவிட்டே ஊர் சொல்வதாகவும்
சொன்னார்கள் " என்றார்

மலேசியா வந்ததும் உடன் தற்காலிக போன்
இணைப்பு எடுக்காதது எவ்வளவு தவறு என
நினைத்தபடி வாயிலுக்கு வர அங்கே பதிவர்
நண்பர் ரூபன் அவர்கள் தன் நண்பருடன்
வாயிலியே காத்திருந்தார்.

என்னைக் கண்டதும் "தாங்கள் ரம்ணி ஐயா
தானே "எனக் கூறி கட்டிப் படிக்க எனக்குக்
கண் கலங்கிவிட்டது

எழுத்து மற்றும் பின்னூட்டத்தின் வாயிலாக
தொடர்பு கொண்டதன்றி பேசியோ பார்த்தோ
நாங்கள் தொடர்பு கொண்டதில்லை

அப்படி இருந்தும் நான் வந்திருக்கிற தகவல்
அறிந்து எப்படியும் பார்க்கவேண்டும் என
காலை முதல் காத்திருந்ததை எண்ண எண்ண
வலைத்தளம் மூல்ம் உண்டாகும் இணைப்பு
எத்தனை உண்மையானது, வலுவானது
அன்பானது எனப் புரிந்தது

பின் அவருடன் பின்னிரவு வரை பேசிக் 
கொண்டிருந்துவிட்டு அருகில் இருந்த 
சிற்றுண்டிச் சாலையில் உணவருந்திவிட்டுப் 
பிரிந்தோம்

மறு நாளும் எனக்கும் என மனைவிக்குமாக
மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களுடன் வந்திருந்து
இரவு எங்களுடன் தங்கிவிட்டுச் சென்றது
இன்று வரை மற்க்கமுடியாத நிகழ்வாக
மலேசியாவில் மயக்க வைத்த பல இடங்கள்
தந்த சுகந்த நினைவுகளை விட

 இன்றுவரை இந்த நினைவுதான் என் நெஞ்சில் 
அதிகம் நிறைந்திருக்கிறது

இந்தச் சந்திப்பே பின்னாளில் ஊற்று என்கிற
இலக்கிய இணய தள அமைப்பை உருவாக்கக்
காரணமாகவும் இருந்ததது

நண்பர் பதிவர் ரூபன் அவர்களுடன் இருந்த
அந்த மகிழ்வான தருணங்களை இங்குப்
பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

இத்தனை நாள் கழித்து இந்த நெகிழ்சியானப்
பதிவு இப்போது எதற்கு ?

அதற்குக் காரணமிருக்கிறது..
அது அடுத்தப் பதிவில்


Friday, February 12, 2016

வலையுலகம்....

இப்போது சினிமா பார்ப்பவர்களுக்கெல்லாம்
தெரியும் முதலில் நன்றி சொல்லும்போதெல்லாம்
பத்திரிக்கையாளர்கள்,ஊடகவியலார்கள்,
தொலைக்காட்சி நண்பர்களுடன்
வலைத்தள நண்பர்களுக்கும் மறக்காது
சொல்லிப் போவது....

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை

முன்னர் சொன்ன மூவரை விட மிக விரைவாக
அழுத்தமாக ஒரு படம் குறித்த விமர்சனத்தைத்
தருபவர்கள் வலைத்தள நண்பர்களே

விளையாட்டாகச் சொன்னால் சைக்கிள்
கேப்பில் என்பதைப் போல....

இடைவேளையில் கிடைக்கிற இடைவெளியில்
கூட அதுவரையிலான படம் குறித்த விமர்சனத்தைப்
பதிவு செய்வதைக் கூட நாம் படித்திருக்கிறோம்

காக்கா முட்டையின் வெற்றிக்கும்,
சூர்யாவின் ஒரு படம் பட்ட பாட்டுக்கும்
சிம்புவின் வம்பினை வீதிவரை கொண்டு
வந்ததற்கும் வலைத்தளமே,பத்திரிக்கைகளை விட
முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை

சமீபத்தில் சென்னையில்  நேர்ந்த வெள்ள அவலம்
குறித்து அதிகம் பதிவு செய்ததும்.
வேண்டுதல்கள் மூலம் அதிக உதவிகளைச்
சேர்த்துக் கொடுத்ததும் வலைத்தளம் மற்றும்
நமது சகோதர டுவிட்டரும்
முக நூலும் என்பது அனைவரும் அறிந்தததே

இப்படி சமூகத்தில் உடனடி பாதிப்பினை
ஏற்படுத்த வாய்ப்புள்ள பலமான சக்தியாக
வலைத்தளம் இருப்பதோடு அல்லாது...

தமிழின் அருமை பெருமை,தமிழரின் தொன்மை
குறித்து அறியவும் ,அறிந்து தெளியவும்
தவறின்றி மொழியினை எழுதப் பழகவும்
கவிதை இலக்கணம்,அருமையான கவிதைகள்
கட்டுரைகள் படித்துக் கற்றுத் தேறவும்  பயனுள்ள
தளமாக அல்லாது...

தூரம் தொலைவினை வெட்டிச் சாய்த்து
உலக அளவில் ஒருங்கிணையவும்,
நட்பைனை வளர்த்து உறவாடவும் அல்லாது..

இப்படி அல்லாது அல்லாது எனச் சொல்லிக் கொண்டே
போகிற அளவு சக்தி மிக்க ஊடகமான இந்த
வலைத்தளத்தினை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த
பயிற்சிப்பெறவும் ,அதன் மூலம் இந்தச் சமூகத்திற்கு
இன்னும் கூடுதலாக பயன்படும்படியாகச் செய்யவும்
நமக்கு ஒரு அமைப்புத் தேவை என்பதை அனைவரும்
அறிந்திருக்கிறோம்

அதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக
பதிவர் சந்திப்புகளை நடத்தி அதற்கான
அஸ்திவாரமும் அமைத்து விட்டோம்

புதுகை பதிவர் சந்திப்பு இன்னும்
அதிக நம்பிக்கையையும் வாய்ப்பின் வழிகளையும் ,
நமது பலத்தையும் மிகத் தெளிவாகக்
காட்டிவிட்ட பின்னும் அதன் தொடர்ச்சியாய்
காரியங்கள் தொடராது ஒரு தேக்க நிலையில்
இருப்பதற்குக் காரணமே இது குறித்து யோசிக்கவும்
செயல்படவும் பரவலாக அனைவரையும் உள்ளடக்கிய
ஒரு மைய அமைப்பு இல்லாததே என்பது
என் எண்ணம்

இது குறித்து அனைவரும் கருத்தினைப்பதிவு செய்தால்
அடுத்து அடுத்து செயல்பட வசதியாய் இருக்கும்

இப்போதிருந்து ஆரம்பித்தால் இன்னும் ஆறு மாதத்தில்
நடக்க இருக்கிற பதிவர் சந்திப்பில் ஒருமுழுமையான
முடிவுக்கு வரவும்,செயல்படத் துவங்கவும்
வசதியாக இருக்கும் என்பதாலேயே இந்தப் பதிவினை
இப்போது எழுத வேண்டி வந்தது

மூத்த பதிவர் ஜி எம்.பி.அவர்கள் இது குறித்து
பதிவிடுவதாகப் பதிவிட்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது

அனைவரின் பதிவுகளையும்,ஆலோசனைகளையும்
ஆவலுடன் எதிர்பார்த்து....

Saturday, February 6, 2016

பதிவுலகப் பின்னூட்டங்கள் ..

பதிவுலகில் பக்கப் பார்வைகளும்
தமிழ்மண வாக்கும் பதிவின் தரவரிசைக்கு
முக்கிய காரணங்கள் என்றாலும்...
பின்னூட்டங்களின் எண்ணிக்கையே பதிவரின்
எழுத்துச் செல்வாக்கையும் பதிவின் தரத்தையும்
 நிர்ணயிக்கிறமுக்கிய காரணியாக நான் கருதுகிறேன்

ஏறக்குறைய ஆறு ஆண்டுகள்
எழுதிக் கொண்டு வந்தாலும் நான் என் ஒரு பதிவில்
பெற்ற அதிகப் பட்ச பின்னூட்டம்
அனேகமாக  நூறு மட்டுமே இருக்கும்.
அதுவும் என்னுடைய பதில்
 பின்னூட்டங்களும் சேர்த்து..

அந்த வகையில் இன்று  மதிப்பிற்குரிய
பதிவுலகப்பிதாமகர் அவர்களின் பதிவுக்கு
நான் பின்னூட்டபோது
அது 231 ஆக இருந்தது அதிக மகிழ்ச்சியையும்
ஆச்சரியத்தையும் அளித்தது
http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

மத ரீதியாக முரண்பட்ட விஷயத்தை முன்வைத்த
பதிவுகள் அன்றி நேர்மறையான ஒரு பதிவுக்கு
அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவு இதுவாகத்தான்
இருக்கும் என நினைக்கிறேன்

இந்த வகையில் பதிவின் தரவுகள் குறித்து
முழுமையான தகவல் தர முடிந்த பதிவர்கள்
(மிகக் குறிப்பாக  திண்டுக்கல் தன்பாலன்,
தமிழ் இளங்கோபோன்றவர்கள்  )
அவர்களுக்குத் தெரிந்து அதிகப் பின்னூட்டங்கள்
பெற்றப் பதிவுகள் இருந்தால் பதிவிடலாமே

அது அந்தப் பதிவுகளைப் படிக்கவும்
அந்தப் பதிவரைத் தொடர இணைப்பினை
 ஏற்படுத்திக் கொள்ளவும்
 வசதியாய் இருக்கும் தானே ?