Saturday, December 13, 2025

Right tools of life

The kitchen tap was leaking again. With a sigh, I called a plumber._


_A few minutes later, a middle-aged man walked in — calm, steady, carrying a faded toolkit._

_I watched him at work. He pulled out a wrench - it was cracked at the handle._

_“How will he fix anything with that?” I wondered silently._

_He didn’t seem bothered. With a quiet focus, he began loosening the pipe. A rusted portion needed to be cut off. He reached into his bag again and pulled out a small saw - half of it was missing!_

_Now I was sure. I’ve called the wrong man for the job. But within ten minutes, the leak was gone. The tap was shining, and not a single drop escaped._

_When I handed him a hundred-Rupee note, he shook his head. “No, Sir. Half of this is enough.”_

_I stared at him, surprised. “Who refuses extra money these days?”_

_He smiled - a calm, grounded smile._

_“Sir, every job has a fixed worth. If I take more today, I’ll expect more tomorrow. When that doesn’t come, I’ll be unhappy. So I prefer to take only what’s fair. It keeps me content.”_

_I nodded slowly. “At least buy yourself a new wrench and saw. They’ll make your work easier.”_

_He chuckled softly. “Ah, Sir… tools are meant to wear out. That’s their destiny. But even when they’re chipped or cracked, they still do their job. Just like senior people - a few scars don’t make us useless.”_


_He paused, then added, “When you write in your office, does it matter which pen you use? Expensive or ordinary - if you know how to write, you’ll write well with anything. But if you don’t, even the costliest pen won’t help. The skill lies in the hands, not the tool.”_

_I stood there speechless. His words sank deep. The satisfaction on his weathered face was something rare - something money can’t buy._


*A Thought to Treasure*

_In our endless race for wealth and comfort._

 *we often forget the true “tools” of life* -

 *honesty*, 

*hard work*, 

*gratitude*, 

and *contentment*.


_When these are intact, even broken tools can create miracles._

_But when they’re missing, no riches in the world can fix the leaks within us._


Dedicated to 

*All senior citizens*



Monday, December 8, 2025

வந்தே மாதரம்..

 நமது நாட்டின் தேசிய முழக்கமான வந்தே மாதரம் பாடலுக்கு 150-வது வயது துவங்குகிறது. இதை எழுதியவர் வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திரர்.  இதுபற்றிய எனது கட்டுரை டிசம்பர் மாத அமுதசுரபி இதழில் வந்துள்ளது.


         ஆங்கிலேயரை

            அலறவைத்த 

           வந்தே மாதரம் 



         இந்தியாவில் அன்று…. வந்தே மாதரம் பாடல் நாட்டு மக்களின் புகழ்பெற்ற தாரக மந்திரமாக விளங்கியது. நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னரே எழுதப்பட்ட இப்பாடல் அன்றே மக்கள் மனதில் கலந்து, உறைந்து, சுதந்திரத் தீயை  மேலும் கனன்று எரியச் செய்தது என்றால் அது மிகையல்ல! 

        சீரிய கருத்தான இப்பாடல் அன்று ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான ஒப்பற்ற விடுதலை முழக்கமாக இருந்தது. நாட்டு  மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் மேலும் தீவிரமாகத் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறை வைத்தனர். ரவீந்திரநாத் தாகூர் உட்பட பலரும் ஆங்கில அரசின் தடைகளைப் புறக்கணித்து இப்பாடலை சற்றும் அச்சமின்றி பல்வேறு காலகட்டங்களில் பொது இடங்களில் பாடினர்.

       அன்று பிரிட்டிஷார் ஆட்சியில்  `Save the Queen’ என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலை இந்திய மக்கள் அனைவரும்  பாட வேண்டும்  என கட்டாயமாக்கினார்கள்.

     இதற்கு போட்டியாக எழுதப்பட்ட பாடல் தான் வந்தே மாதரம்!

       1876ல் உருவான வந்தே மாதரம் எனும் இப்பாடலுக்கு.. `தாய் மண்ணே… உனை வணங்குகிறேன்’ என்று பொருளாகும். இப்பாடலை உருவாக்கியவர் பிரபல வங்க இலக்கியவாதியான பங்கிம் சந்திர சட்டர்ஜி. இவரது படைப்புகளில் ஒன்றான ஆனந்த மடம் நாவலில் இடம் பெற்ற பாடலாகும். இது இந்திய இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது இது 1770ல் வங்கத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட நெகிழ்ச்சியான கதையாகும்.

     நாட்டின் பல லட்சக்கணக்கான வாசகர்கள் படித்து மகிழ்ந்த இந்த நாவல், அன்று வெற்றிகரமான மேடை நாடகமாக நடத்தப்பட்டு, பின் 1952ல்  பிருத்வி ராஜ் கபூர், பாரத் பூஷண், பிர்தீப் குமார், கீதா பாலி  முக்கிய பாத்திரங்களில் நடிக்க, ஹேமன் குமார் குப்தா இயக்கத்தில் இந்தி திரைப்படமாகவும் வந்து நல்ல வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

     பின், லீடர், அமர்ஆஷா ஆகிய பிரபல திரைப்படங்களில்  வந்தே மாதரம் பாடலுக்கான சில காட்சியமைப்புகளும் இடம்பெற்றன..

     நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, இது 1950ல் இந்தியக் குடியரசின் தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  ஆங்கிலேய அரசின் கீழ் பணிபுரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் பங்கிம் சந்திரரின் மனதில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

    பங்கிம் சந்திரர், இப்பாடலை தனது தாய் மொழியான வங்க மொழியில் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு எழுதினார். எனினும், முதலில் இப்பாடலில் உள்ள சில சொற்களை உச்சரிப்பதில் இருந்த சிரமங்களால் இப்பாடல் அன்று பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இப்பாடலுக்கு ஜாதுநாத் பட்டாச்சார்யா மெட்டமைக்க,  ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.

        "எதிர் வரும் காலங்களில் இப்பாடல் பிரபலமடைவதை காண நான் இல்லாமல் மறைந்து போகலாம். ஆனால், இது ஒவ்வொரு இந்தியனாலும் பல்லாண்டு காலம்  தொடர்ந்து பாடப்படும்" என்று அன்றே தன் பாடல் குறித்த சிறப்பை தீர்க்க தரிசனமாகக் கூறினார் பங்கிம் சந்திரர்.  

     இப்பாடலின் பெருமை கருதி, மஹாகவி பாரதி இதை இருமுறை மொழி பெயர்த்திருக்கிறார். முதலில் `இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!....’ எனத் தொடங்குகிறது. அடுத்தது… `நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்’ எனத் தொடங்குகிறது.

     இவ்விரு மொழி பெயர்ப்புகளிலும் வந்தே மாதரம் என்ற சொற்றோடரை, அது மந்திர சக்தி நிறைந்தது எனக் கருதியதால், பாரதியார் அதை மொழி பெயர்க்காமல் அப்படியே பயன்படுத்தியுள்ளார். இதில் `நளிர் மணி நீரும்..’ என்ற பகுதியை இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது!

     இப்பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இப் பாடலின் பல்வேறு வடிவ இசைப் பதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு முழுக்க வெளியாகின. 

    அகில இந்திய வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்படும் வந்தே மாதரம் பாடலுக்கு பண்டிட் ரவி சங்கர் இசையமைத்ததாகச் சொல்லப்படுகிறது. இன்றும் வந்தே மாதரம் பாடல் இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஓர் வீர முழக்கமாகவே கருதப்படுகிறது.  முதலில் இதுவே அன்று இந்தியாவின் தேசீய கீதமாக கருதப்பட்டது. பின் சில காரணங்களால் தாகூரின் `ஜன கண மன..’.. பாடலே நாட்டுப் பாடலாக முடிவு செய்யப்பட்டது.,

     இருப்பினும் இப்பாடலின் சிறப்பு கருதி முதல் இரண்டு வரிகளை மட்டும் நாட்டுப் பாடலாக அறிவிப்பது என அன்றைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. எனவே, கடந்த 2006, செப்டம்பர் 7 அன்று  வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 131 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிகளிலும் காலை இறை வணக்கத்தின் போது தவறாமல் இப்பாடலைப் பாட வேண்டும் என அன்றைய காங்கிரஸ் அரசு அறிவித்தது..

    இப்பாடல் 1876ல் எழுதப்பட்டதால், கடந்த 7-11-2025 அன்று தனது 150-வது வயதை தொட்டுள்ளது! இந்த சிறப்புக்காக மத்திய அரசின் பல அலுவலகங்கள் மற்றும் இந்திய ரயில்வே துறை, பல மாநில அரசுகளின் பல துறைகளிலும் காலை இப்பாடல் ஊழியர்கள் மற்றும் பொது மக்களால் நினைவுகூர்ந்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்!

    இப்பாடலின் நினைவாக மத்திய அரசு தில்லியில் ஏற்பாடு செய்த மாபெரும் கவியரங்கம் மற்றும் கருத்துச் சொற்பொழிவுகள் ஜனாதிபதி மற்றும்  பிரதமர் மோடி தலைமையில் நடந்தன..அத்துடன் பங்கிம் சந்திரர் நினைவாக மத்திய அரசால் ஏற்கனவே அவரது நூற்றாண்டு விழாவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் மீண்டும் ஓர் நினைவு தபால் தலையும் 150வது ஆண்டைக் குறிக்க ஓர் நாணயமும் வெளியிடப்பட்டது. வாழ்க பாரதம். வந்தே மாதரம்!

           _________ 


 By sridar ex.hindu

Friday, December 5, 2025

நினைவேந்தல்''''

  


மகம் ஜெகம் ஆளும் எனும் ஆன்றோர் வாக்கினுக்கு நிரூபணமாய்  விளங்கிடும் அற்புதமே..அதிசயமே..அன்னையே..


படுத்துக் கொண்டே
ஜெயிப்பது என்கிற சொற்றோடர்
ஒரு வறட்டுவாக்கியமாய் இருந்ததை
நிஜமாக்கிக் காட்டிய
தமிழகத்து ஜான்ஸியே

நீ கொண்ட உச்சங்கள் எதுவும்
தங்கத் தட்டில் வைத்து
உனக்குப்
பரிசாகக் கொடுக்கப்பட்டதில்லை

பெண்ணாக இந்த உச்சம்தொட
நீ பட்டத் துயரங்கள்
இவ்வுலகில் எப்பெண்ணும்
இதுவரைப் பட்டதில்லை

உன் மீது இருந்த துரும்பினை
தூண் என்றார்கள்
உன் மீது விழுந்த அணுகுண்டை
மலர்ச் செண்டு என்றார்கள்

இரண்டடையும்
துச்சமென மதித்துக்
கடந்து சென்ற
தங்கத் தலைவியே

புராண நிகழ்வுகளின் எச்சமாய்
ஒரு சட்டசபை
கௌரவர் சபையாய்
தன் கொடூர முகம்காட்டி
கொக்கரித்தபோது
சினந்து புலியாய் நீ
சீறிவந்தக் காட்சி....

சனாதன ஆசாமிகள்
பிற்படுத்தப்பட்டவன் என்பதாலேயே
திறமையானவனை
ஒதுக்கிவைத்ததைப் போலவே

போலிப் பகுத்தறிவு ஆசாமிகள்
முற்படுத்தப்பட்டவள் என்பதாலேயே உன்னை
ஒதுக்க முயன்றபோது
நெருப்பில் பூத்த மலராய் நீ
வென்று நின்ற காட்சி...

காலப்பெட்டக்கத்தில்
ஜொலிக்கின்ற வைரங்கள்
வைடூரியங்கள்
சரித்திரப்புத்தகங்களில்
தங்க முத்திரைக் கொண்டு
தகதகக்கும் பக்கங்கள்

விழிமூடுகையில்
மனம் கொள்ளும் வைராக்கியங்கள்
உடலோடு போவதில்லை
ஆன்மாவோடு தொடர்ந்து
அடுத்த ஜென்மமெடுக்கும் என்பதை
நாங்கள் சொல்லி நீ
அறிய வேண்டிய நிலையிலில்லை

கோடிக் கோடியாய்
மதம் கடந்து இனம்கடந்து
மக்கள் செய்யும் பிரார்த்தனைகள்
நிச்சயம் வீணானதில்லை

அதனை மறுக்கும் அதிகாரம்
நியதிப்படி இயங்கும் இறைவனுக்கும்
இல்லையென்பதை
இயற்கையும் மறுப்பதில்லை

பதினேழாம் நூற்றாண்டில்
ராணி மங்கம்மாவாக

பதினெட்டாம் நூற்றாண்டில்
வேலு நாச்சியாராக

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தில்லையாடி மணியம்மையாக

அவதரித்த நீயே

இந்த நூற்றாண்டில்
புரட்சித் தலைவியாய்
அவதரித்திருக்கிறாய் என்பதில்
எங்களுக்கு எள்ளளவும்
சந்தேகமில்லை

தமிழக அடித்தட்டு மக்களின்
வாழ்வை உன்னதமாக்குவதிலேயே
உண்மைமகிழ்ச்சிக் கொண்ட
அன்னையே

உன் வாழ்வை அர்ப்பணித்த
அம்மாவே

உன்னால் நிச்சயம்
சொர்க்கத்தில் வீணே ஓய்வெடுக்க இயலாது

மறுபிறப்பெடுத்து
தமிழகத்திலேயே
நிச்சயம் அவதரிப்பாய்
என்பதிலும் எங்களுக்கு
எள்ளளவும் சந்தேகமில்லை

அதுவரை
எங்கள் தலைமுறை
உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

பிறவிப்பெருங்கடனை
உன்னதமாய் முடித்த
எங்கள் அன்புச் சகோதரியே

மனம் நிறைந்த சோகத்துடனும்
நீர் நிறைந்த கண்களுடனும்
உனக்குப் பிரியா விடை தருகிறோம்

சென்று வா எங்கள்
அன்புச் சகோதரி(மறைந்த நாாளில் எழுதியது )

Friday, November 21, 2025

பீட்டர் பாண்டியன் ???

 


மதுரையில் மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்தது, விரிவானது இந்த நகை கலெக்ஷன். இந்த நகைக்குவியலில் உள்ள ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை இருக்கிறது.

அயல் தேசத்து மன்னர்கள், கொள்ளையர்களின் படையெடுப்பு காலங்களில், அம்மனின் நகைகள் ராமேஸ்வரம் போன்ற தூரதேச கோயில் லாக்கர்களில் டெபாசிட் பண்ண பட்டிருக்கிறது.

1837 முதல் இந்தியாவை ஆண்ட விக்டோரியா மகாராணிக்கு வைர நகைகள் என்றாலே தனி காதல். தனது கணவரிடம் சொல்லி உலகில் உள்ள பிரபல வைர நகைகளை கைப்பற்றி தனது அலமாரியில் சேர்த்து வைப்பார்.

அப்படி எந்த நகையையாவது விலைக்கு வாங்க முடியாவிட்டால், அதை இரவல் வாங்கி தனது கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் வினோத ஆசை அவருக்கு இருந்தது.

மீனாட்சி தேவியின் நகைகளில் பத்து பெரிய சபையர் கற்கள் பதித்த ஒரு நீல பட்டயம் உலகப் பிரசித்தம். அதன் ஆபூர்வ அழகு கண்களை பறிப்பதாக இருக்கிறது என்பதை மகாராணியும் கேள்விப்பட்டார் . அதன் மேல் காதல் கொண்டார்; "காண" விரும்பினார். கம்பெனிக்காரர்கள் ஏற்பாட்டில் பதக்கம் லண்டனுக்கு கப்பலில் சென்றது.

பதக்கத்தை பார்த்ததுமே, மனித காதல் கொள்ள அது சாதாரண நகையல்ல; மகாராணியாக இருந்தாலும் தான் அணிந்து கொள்ள ஏற்புடையதல்லை என்று உணர்ந்தார். மறு கப்பலில் பத்திரமாக அனுப்பப்பட்ட அந்த பதக்கம் மீனாட்சியை அலங்கரிக்க மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.மீனாட்சிக்கு அழகு சேர்க்க இப்படி பல வைர, வைடூரிய நகைகள் இருந்தாலும், ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் அம்மனுக்கு காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு.

தங்கத்தால் இழைக்கப்பட்ட விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடி காலணிகளை தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியவர் அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்.

பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்கு கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.

மதுரையில் இப்போதெல்லாம் ஆறு மாதங்கள் ஆட்சியராக நீடிப்பது துர்லபம். பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.

அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார். கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.

கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறி போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.

தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு அனலாய் சுடும் அந்த கற்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார்.

தினமும் கோவில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனை பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகி போயிருக்கும்.பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார்.

மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்து போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள். தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்த கலெக்டரை ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர்.

ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை.

நள்ளிரவாகிவிட்டது. பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்கு கேட்டது. எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார்.

அந்த இடத்தில் அவரை நெருங்கி வந்த மூன்று வயது மதிக்கும் சிறுமி ஒருத்தி தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்து போனாள்.

சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த சிறுமிக்கு நன்றி சொல்ல தேடினார். சிறுமியை காணவில்லை.

பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின்தொடர்ந்து ஓடினார். பிடிக்கமுடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.

தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்மன் மீனாட்சிதான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர் உறுதியாக நம்பினார்.

கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று ஆலோசனை செய்தார். அவை தான் மேலே சொன்ன அந்த காணிக்கை காலணிகள்.

நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்).

இதுபோக 412 சிவப்பு கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள், சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன....

அம்மனைத்தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும்தான். குதிரை சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத்தான் தெரியும். விழா காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன், சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமபடுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.

வெள்ளைக்காரர்கள் எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள். "எடுறா தங்கத்தை, அடிறா சேணத்தை" என்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

(பட உபயம்: ஹிந்து நாளிதழ் : Enthralling story of ruby-studded stirrups)

இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள்.

முப்பது ரூபாய் குழல் மின் விளக்கை கோயிலுக்கு தானம் கொடுத்தாலும் "இன்னார் உபயம்" என்று பொறித்து கொடுப்பதுதான் மதுரை மரபு. சரித்திரம் முக்கியமல்லவா. வெளிச்சமே தெரியாமல் போனாலும், விளக்கு முழுவதும் தெரியும்படி கொட்டை எழுத்துகளில் இனிஷியலோடு முழு பெயர், ஊருடன் எழுத படவேண்டும்.

அயல்நாட்டை சேர்ந்த பீட்டருக்கு இதன் தாத்பரியம் சரியாக பிடிபடவில்லை. பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள் தன் மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி, அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுத சொல்லிவிட்டார்.

பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்கு திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சி பட்டிணத்திலேயே கழித்தார்.

மதுரையிலேயே காலமான அவர் மதுரை, மேல ஆவணி மூல வீதி் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது.

கிருஸ்துவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.

🌹🌹🌹🌹🌹🌹 படித்ததில் பிடித்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

SIR.. tracking

 BLOவிடம் நாம் கொடுத்த SIR படிவத்தை BLO தன்னுடைய mobile App மூலம் அவர் அனுப்பி விட்டாரா என்பதை உறுதி செய்ய:


voters.eci.gov.in/login என்கிற இணையதளத்துக்குச் செல்லவும். பிறகு


   1."Fill Enumeration Form" என்கிற 'மெனு'-வை கிளிக் செய்யவும்.

2. மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

3. வாக்காளர் அடையாள அட்டை (EPIC) எண்ணை கொடுக்வும்.


உங்கள் SIR படிவத்தை BLO அனுப்பியிருந்தால்,

 "your form has already been submitted “ 

என்ற செய்தி வரும்.(நான் செக் செய்து விட்டேன்..என்னுடையது சேர்ந்துவிட்டது)

Sunday, November 9, 2025

வாக்காளர் விவரம் அறிய...

 *வாக்காளர் பட்டியல்*

*பாகம் எண்,வரிசை*

*அறிய வேண்டுமா*


1⃣

கீழே உள்ள  *link* ஐ *click* செய்யுங்கள்

👇🏼👇🏼👇🏼


https://electoralsearch.eci.gov.in/


*Search by EPIC* என்பதை Click செய்யுங்கள்


2⃣

உங்கள் 

*Voter ID number* ஐ பதிவிடுங்கள்


3⃣

*"SUBMIT"* 

என்ற optionஐ 

Click செய்யுங்கள்


4⃣

வாக்காளர் பட்டியலில் 

உங்கள் 

*பாகம் எண்*

*வரிசை எண்*

*முகவரி*

போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

Friday, November 7, 2025

SIR..கணக்கெடுக்கும் BLO அறிய..

 உங்கள் பகுதிக்கு வாக்காளர் SIR கணக்கெடுப்பு பகுதிக்கு வரும் BLO அலுவலர் மற்றும் அவரின் பெயர் தொலைபேசி எண்ணை கண்டறிய உதவிடும் லிங்க் 


உங்கள் ஏரியாவிற்கு யார் வாக்காளர் கணக்கெடுக்க வருகிறார்கள் என்பதை அறிய...

👇👇👇


https://erolls.tn.gov.in/blo/