Saturday, January 17, 2026

காலத்தை வென்ற வரை...

 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான்,
 தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை  நம்முள்
விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை
காவியமானவரை
இந்த நூற்றாண்டுப்   பிறந்த நாளில்
 நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்திப் பெருமிதம் கொள்வோம்

Wednesday, January 14, 2026

படித்ததில் பிடித்தது

 *மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!*


ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..


இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..


தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..


அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..

ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.


ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..


மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..


இங்கு வெள்ளையன் 

வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.


வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...


 வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..


தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...


 புகையிலையும் அப்படி வந்ததே.


இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.


 உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.


வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான், 

வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.


கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.


கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.


தேங்காய் இருந்த 

இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌


மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.


நோய்கள் பெருகின..


ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...


 ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட் 

இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..


ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..


அத்தோடு விட்டானா?


அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.


 விளைவு..?


தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...


சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.


 சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...


ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..


நோய் பெருகிற்று....


அதாவது சூடான பூமியில் சூடு 

கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...


வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசிக் கஞ்சியும், பதநீரும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?


குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.


உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..


இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..


எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.


இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...


பரிதாபம்.


காரணம்,  அவற்றுக்கு உண்மையான 

பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....


அவை என்ன செய்யும்?


எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...


 ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!


நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார் 

நிலையங்கள் எப்படி இருக்கும்?


எதையோ தின்று 

எதையோ குடித்து, 

எதையோ புகைத்து, எதையோ மென்று 

இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்


எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..


ஆப்ரிக்காவிலும் 

அரேபியாவிலும் காப்பி இருந்தது..


தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. 


பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!


புரிகிறதா...?


இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..


பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,

இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. 


 காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..


அவை இன்றியும் வாழமுடியும்...


அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.


 பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 


விஷம் அவை..


இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. 

இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது


ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை  ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் 

காணலாம்..


தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..


துளசி போல் அருமருந்தில்லை..


அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.


தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..


தேர்களில் தெய்வங்களுக்கு 

வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.


உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...


அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி 

இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.


அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.


சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..


அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் 

நோய்க்கு இடம் கொடா...


மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..


இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..


அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..


கருத்தரிப்பு சிக்கல் 

சிசேரியன் என மறுபுறம்.


 மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..


பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..


அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...  மாறாக அதெல்லாம் பழமை என 

ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..


அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது


 இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..


அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...


நாம் பாரம்பரியத்தை 

மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது... 

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..


ஆம். 


மாறாக,  கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் 

ஆகபோவது ஒன்றுமில்லை...


நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..


 அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...


 பழங்களை சாப்பிடும் முன்....

    🍌 வாழைப்பழம் நீங்கலாக, எந்தப் பழத்தையும் சாப்பிடுவதற்கு முன்னர் உப்புத் தண்ணீர்+ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து,ஒரு மணி நேரமாவது ஊறவைத்து, பின்னர் சாதாரண தண்ணீரில் நன்றாகக் கழுவி உண்ண வேண்டும். இப்படி செய்வது பழத்தின் மேற்புறத்தில் உள்ள பூச்சிக்கொல்லி படிமங்களை நீக்கிவிடும். உடல் நலம் காக்கும் ரகசியம் இதுதான். *By சிவராமன் படித்ததில் பயனுள்ளது.

Sunday, January 11, 2026

பொடி விசயம்

 நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

🥧🥧🥧

அருகம்புல் பொடி:

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.


நெல்லிக்காய் பொடி:

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.


கடுக்காய் பொடி:

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.


வில்வம் பொடி:

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.


அமுக்கரா பொடி:

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.


சிறுகுறிஞான் பொடி:

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.


நவால் பொடி:

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.


வல்லாரை பொடி:

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.


தூதுவளை பொடி:

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.


துளசி பொடி:

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.


ஆவரம்பூ பொடி:

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.


கண்டங்கத்திரி பொடி:

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.


ரோஜாபூ பொடி:

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.


ஓரிதழ் தாமரை பொடி:

ஆண்மை குறைபாடு,

மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.


ஜாதிக்காய் பொடி:

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.


திப்பிலி பொடி:

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.


வெந்தய பொடி:

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.


நிலவாகை பொடி:

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.


நாயுருவி பொடி:

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.


கறிவேப்பிலை பொடி:

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.


வேப்பிலை பொடி:

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.


திரிபலா பொடி:

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.


அதிமதுரம் பொடி:

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.


துத்தி இலை பொடி:

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.


செம்பருத்திபூ பொடி:

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.


கரிசலாங்கண்ணி பொடி:

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.


சிறியா நங்கை பொடி:

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.


கீழாநெல்லி பொடி,:

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.


முடக்கத்தான் பொடி:

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.


கோரைகிழங்கு பொடி:

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.


குப்பைமேனி பொடி:

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.


பொன்னாங்கண்ணி பொடி:

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.


முருஙகை விதை பொடி:

ஆண்மை சக்தி கூடும்.


லவங்கபட்டை பொடி:

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.


வாதநாராயணன் பொடி:

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.


பாகற்காய் பவுட்ர்:

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.


வாழைத்தண்டு பொடி:

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.


மணத்தக்காளி பொடி:

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.


சித்தரத்தை பொடி:

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.


பொடுதலை பொடி:

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.


சுக்கு பொடி:

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.


ஆடாதொடை பொடி:

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.


கருஞ்சீரகப்பொடி:

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.


வெட்டி வேர் பொடி:

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.


வெள்ளருக்கு பொடி:

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.


நன்னாரி பொடி:

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நாவறட்சிக்கு சிறந்தது.


நெருஞ்சில் பொடி:

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.


பிரசவ சாமான் பொடி:

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.


கஸ்தூரி மஞ்சள் பொடி:

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.


பூலாங்கிழங்கு பொடி:

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.


வசம்பு பொடி:

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.


சோற்று கற்றாழை பொடி:

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.


மருதாணி பொடி:

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.


கருவேலம்பட்டை பொடி:

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.


இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.


#health

Tuesday, December 30, 2025

வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்..

  தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே

வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்  
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே 

Tuesday, December 23, 2025

காலத்தை வென்றவன்

  


 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

Monday, December 15, 2025

உணர்ந்து தெளிவோம்..

 🌳🌧️🌳🌧️🌳🌧️🌳🌧️




*பிரதிபலிப்புகள்*🫀🫁🧠


1. வாகனம் ஓட்டும்போது டயர்கள் தேய்ந்து போகின்றன, ஆனால் உங்கள் உள்ளங்கால்கள் வாழ்நாள் முழுவதும் நடந்த பிறகும் புதியதாகவே இருக்கும்.


2. உடல் 75% தண்ணீரால் ஆனது, ஆனால் மில்லியன் கணக்கான துளைகள் இருந்தபோதிலும், ஒரு துளி கூட வெளியேறாது.


3. ஆதரவு இல்லாமல் எதுவும் நிற்க முடியாது, ஆனால் உடல் அதன் சமநிலையை தானே பராமரிக்கிறது.


4. சார்ஜ் செய்யாமல் எந்த பேட்டரியும் இயங்க முடியாது, ஆனால் இதயம் பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து துடிக்கிறது.


5. எந்த பம்பையும் என்றென்றும் இயங்க முடியாது, ஆனால் இரத்தம் உடல் முழுவதும் நிற்காமல் பாய்கிறது.


6. உலகின் மிக விலையுயர்ந்த கேமராக்களுக்கு கூட வரம்புகள் உள்ளன, ஆனால் கண்கள் பில்லியன் கணக்கான பிக்சல்கள் தெளிவுடன் ஒவ்வொரு காட்சியையும் படம்பிடிக்க முடியும்.


7. எந்த ஆய்வகமும் ஒவ்வொரு சுவையையும் சோதிக்க முடியாது, ஆனால் எந்த உபகரணமும் இல்லாமல் நாக்கால் ஆயிரக்கணக்கான சுவைகளை அடையாளம் காண முடியும்.


8. மிகவும் மேம்பட்ட சென்சார்களுக்கு கூட வரம்புகள் உள்ளன, ஆனால் தோல் சிறிதளவு தொடுதலைக் கூட உணர முடியும்.


9. எந்த கருவியும் ஒவ்வொரு ஒலியையும் உருவாக்க முடியாது, ஆனால் தொண்டை ஆயிரக்கணக்கான டோன்களையும் அதிர்வெண்களையும் உருவாக்க முடியும்.


10. எந்த சாதனத்தாலும் ஒலிகளை முழுமையாக டிகோட் செய்ய முடியாது, ஆனால் காதுகளால் ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டு விளக்க முடியும்.


பிரபஞ்சத்தால் நமக்குக் கொடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற பரிசுகளுக்கு நன்றியுடன் இருங்கள். புகார் செய்ய நமக்கு எந்த உரிமையும் இல்லை.



*இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.*💐💐

எது தோல்வி ?

 முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வோம். இந்த பிரபஞ்சத்தில் ‘தோல்வி’ என்ற வார்த்தையே கிடையாது. அது மனிதன் தன் ஈகோவைக் காப்பாற்றிக்கொள்ளக் கண்டுபிடித்த ஒரு தவறான சொல்.


ஒரு சிங்கம் மானைத் துரத்துகிறது. குறி தப்பியோடுகிறது. மான் தப்பித்துவிடுகிறது. அந்தச் சிங்கம் உடனே ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, "சே! நான் ஒரு லூஸர் (Loser). எனக்கு வாழ்வதற்கே தகுதியில்லை. நான் ஏன் பிறந்தேன்?" என்று டிப்ரஷனில் போகுமா? போகாது.

அது என்ன செய்யும்? அடுத்த வேட்டைக்குத் தன் வேகத்தை எப்படி அட்ஜஸ்ட் செய்வது, காற்றின் திசை எப்படி இருக்கிறது என்று ‘டேட்டா’வை (Data) மட்டும் எடுத்துக்கொள்ளும். மிருகங்களுக்குத் தெரியும், இது ‘தோல்வி’ இல்லை, இது ஒரு ‘நிகழ்வு’ (Event). அவ்வளவுதான். மனிதன் மட்டும்தான் அந்த நிகழ்வுக்கு ‘தோல்வி’ என்று பெயர் சூட்டி, அதற்கு ஒரு சோகப் பின்னணி இசையையும் போட்டுக்கொண்டு அழுகிறான்.

ஒரு விஞ்ஞானிக்கு 'தோல்வி' என்று ஒன்று கிடையாது. ஒரு எக்ஸ்பெரிமெண்ட் (Experiment) செய்கிறார். எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை என்றால், அது தோல்வி இல்லை; "இப்படிச் செய்தால் இந்த ரிசல்ட் வராது" என்று கற்றுக்கொண்ட ‘டேட்டா’ (Data). அவ்வளவுதான். வாழ்க்கை என்பதும் ஒரு நீண்ட பரிசோதனைதான்.


நடக்கப் பழகும் குழந்தை 50 முறை கீழே விழுகிறது. அது தோல்வியா? இல்லை. அது புவி ஈர்ப்பு விசைக்கும் , தன் கால்களுக்கும் உள்ள சமன்பாட்டை சரி செய்கிறது. "ஐயோ, நான் 10 முறை விழுந்துவிட்டேன், இனி நடக்கவே மாட்டேன்" என்று எந்தக் குழந்தையும் மூலையில் உட்கார்ந்து அழுவதில்லை. 


இளமைக்காலம் முழுவதும் சிக்கனம், கஞ்சத்தனம், முகத்தில் ஒரு இருக்கம். எதற்கு? 60 வயதில் ரிட்டயர் ஆன பிறகு ராஜா மாதிரி வாழப்போகிறோம் என்ற நம்பிக்கை. இது ஒரு மோசமான சூதாட்டம்.


60 வயதில் கையில் கோடிக்கணக்கில் பணம் வரலாம் (வராமலும் போகலாம்). அப்படியே வந்தாலும், அதை அனுபவிக்க உங்களுக்கு என்ன மிச்சம் இருக்கும்? அல்சரும், சுகரும், மூட்டு வலியும் வைத்துக்கொண்டு ஸ்விட்சர்லாந்து போனால் என்ன, மணிக்கூண்டு டிராஃபிக்கில் நின்றால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.


வாழ்க்கை என்பது ஒரு ‘டெஸ்டினேஷன்’ (Destination) அல்ல. அது ஒரு பயணம். ரயிலில் ஜன்னலோர சீட் கிடைத்தும், "நான் இறங்கப்போகும் ஸ்டேஷன் வந்த பிறகுதான் கண்ணைத் திறந்து பார்ப்பேன்" என்று அடம் பிடிப்பது எவ்வளவு முட்டாள்தனம்? பயணம் முழுக்கத் தூங்கிவிட்டு, கடைசியில் எழுந்து "ஐயோ பயணம் முடிந்துவிட்டதே" என்று பதறுவதில் என்ன லாஜிக்?


வெற்றியின் விகிதாச்சாரம் (Probability of Success) எல்லோரும் பிரதமராகிவிட முடியாது. 100 பேர் ஓடும் பந்தயத்தில் ஒருவர்தான் முதலிடம் வர முடியும். மீதி 99 பேரும் தோல்வியடைந்தவர்களா? கிடையாது.


வெற்றி என்பது அடுத்தவனை முந்திக்கொண்டு ஓடுவதில் இல்லை. ஓடுகிற ஒவ்வொரு அடியையும் ரசிப்பதில் இருக்கிறது. நீங்கள்  சொன்னது போல, 100 கோடி சம்பாதித்து, ஆனால் மனழுத்தத்தில் சாகும் ஒருவனை விட, அன்றாடம் உழைத்து, சாயங்காலம் நிம்மதியாகக் கால் நீட்டித் தூங்கும் ஒருவன் பயாலஜிக்கலாக (Biologically) வெற்றியாளன். அவனது என்டார்ஃபின் (Endorphin) அளவுகள் அதிகம்.


அறிவியலின் படி பார்த்தால், தோல்வி என்பதே கிடையாது. நீங்கள் ஒரு விஷயத்தைச் செய்கிறீர்கள். எதிர்பார்த்த முடிவு வந்தால் = வெற்றி . எதிர்பார்த்த முடிவு வராவிட்டால் = பாடம் .


தாமஸ் ஆல்வா எடிசன் பல்பைக் கண்டுபிடிக்கும் முன் 1000 முறை தோற்கவில்லையாம். "பல்ப் எரியாத 1000 வழிகளைக் கண்டுபிடித்தேன்" என்றாராம். இதுதான் ஆட்டிட்யூட்.


நீங்கள் ஒரு பிசினஸ் தொடங்கி நஷ்டமடைந்தால், பணத்தை இழந்திருக்கலாம். ஆனால் அந்த அனுபவம்? அது உங்கள் மூளையில் நியூரான்களாகப் பதிவாகி இருக்கிறது. அதுதான் சொத்து. அடுத்த முறை அந்தத் தவறைச் செய்ய மாட்டீர்கள். அப்படியென்றால் அந்த நஷ்டம் என்பது, நீங்கள் புத்திசாலியாவதற்குக் கட்டிய கல்விக் கட்டணம் (Tuition Fee).


வாழ்க்கை என்பது பரீட்சை ஹால் இல்லை, எல்லாவற்றிலும் 100 மார்க் வாங்க. இது ஒரு டிராயிங் கிளாஸ் . கிறுக்கலாம், கலர் அடிக்கலாம், தப்பானால் அழிக்கலாம், அல்லது அந்தத் தப்பையே ஒரு டிசைனாக மாற்றலாம்.


இன்றே வாழுங்கள். இப்போதே சிரியுங்கள். நாளைக்குக் கிடைக்கப்போகும் 100 ரூபாயை விட, இன்று கையில் இருக்கும் 10 ரூபாய் முக்கியம்.


முடிவில் நாம் கொண்டு செல்லப்போவது பேங்க் பாஸ்புக்கை அல்ல; "வாழ்ந்தேன்டா நிம்மதியா!" என்கிற அந்தத் திருப்தியை மட்டும்தான்.

எதிர்பார்த்தது நடந்தால் வெற்றி. எதிர்பார்த்தது நடக்காவிட்டால் அனுபவம். இரண்டுமே லாபம்தான்!

படித்ததில் ரசித்தது