Wednesday, August 31, 2016

ரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )

                                      காட்சி  ( 7  )

(பண்ணை வீட்டை சுற்றி வந்த பின் டீ அருந்திவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு புல் வெளியில்
போடப்பட்டிருந்த மர நாற்காலியில் அனைவரும்
அமரவும்...

(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவராகவே )

ரஜினி:
தாணு சார் நாமளும் படம் சக்ஸஸ் ஆகணும்னு
எவ்வளவோ  மூளையைக் கசக்கி
எவ்வளவோ செலவழிச்சு எவ்வளவோ கஷ்டப்பட்டு
ஒரு படம் பண்றோம்

அப்ப்டியும் எப்படியும் ஒரு சில படம் ஃபிளாப்
ஆகிப்போகுது. படம் ஃபிளாப் ஆகணுன்னு
யாரும் படம் பண்றதில்ல

(சற்று நிறுத்தி )ஆனா அந்த சமயத்தில
மீடியாவா ஆகட்டும், டிஸ்ட்ரிபூட்டர்களாகட்டும்
கொடுக்கிற ஆண்டி ரியாக்ஸன்
ரொம்ப் ரொம்ப ஓவர் நான் ரெண்டு படத்தில
ரொம்ப அப்செட் ஆகிட்டேன்

ஆகையால இந்த முறை எப்பவும் போல்
நாம படத்தை வியாபாரம் பண்ணப் போறதில்லை
எல்லாம் வித்தியாசமா.. வித்தியாசமா செய்யப்போறோம்

(எனச் சொல்லியபடி இருவர் முகத்தையும் பார்க்கிறார்
இருவரும் ஒன்றும் புரியாமல்..ஆனால் ஆவலுடன்
தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்ததும்
உற்சாகத்துடன் மீண்டும் தொடர்கிறார் )

ஆமா ..எப்படி ஒரு பொருளுக்கு அதுக்கான
பெறுமான விலையை விட  கூடுதலா விக்கணும்னா
அந்த பொருளுக்கு செயற்கையா ஒரு டிமாண்டை
உருவாக்கி நினைச்ச விலைக்கு
வியாபாரி விக்குறாரோ
அதே  ஃபார்முலாவை இந்தப் படத்துக்குப்
பயன்படுத்தறோம்

எவ்வளகெவ்வளவு படத்தோட கதை லீக் ஆகாம
டீஸரை மட்டும் பயன்படுத்தமுடியுமோ

எவ்வளவுகெவ்வளவு எல்லா வகையான
மீடியாக்களையும் பயன்படுத்த முடியுமோ

அவ்வளவு பயன்படுத்தி அளவுக்கதிகமான
எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி எப்பவும் போல
முதல் வார கலெக்ஸன்னு இல்லாம

படம் வெளிவருவதற்கு முன்னாலேயே
அட்வான்ஸா எவ்வளவு கலெக்ஸன்
பண்ணமுடியுமோ அவ்வளவு பண்றோம்

எவ்வளவு காசு கொடுத்துன்னாலும் முதல் நாள்
பார்க்கறது முதல் வாரத்தில பார்க்கிறது
ஒரு கௌரவம்னு நினைக்கிற மாதிரி
ஒரு செயறகையா ஒரு சூழலை உருவாக்கறோம்
இதுவரை நம்ம தமிழ் பட உலகில யாரும்
செய்யாத மாதிரி.. இனி செய்ய முடியாத மாதிரி
அதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க

(என மூச்சு விடாமல் பேசி சற்று மூச்சு
வாங்க..)

(.தாணு தன் கை வசம் வைத்திருந்த
ஒரு சூட்கேஸைத் திறந்து சில
ஃபைல்களை வெளியே எடுத்தபடி.....)

தாணு:
சார்  நீங்க முதல் நாள் சொல்றப்போதே எனக்கு
கொஞ்சம் புரிஞ்சது சார்..அதை வைச்சு
பாலிவுட்ல் படத்தை ப்ரொமோட் பண்றவங்களை
வச்சு, வாரம் வாரம் செய்ய வேண்டியது
மாதா மாதம் செய்ய வேண்டியது
படம் ரிலீஸுக்கு முதல் வாரம் செய்ய வேண்டியது
முதல் நாள் செய்யவேண்டியன்னு
ஒரு பக்கா பிளான் ரெடி பண்ணிட்டேன் சார்

கிராமத்துல சின்ன சம்சாரி
எல்லா செலவும் செஞ்சு
கதிர்  பால்வைக்கிற நேரத்தில ,மேலுரத்துக்கும்
இரண்டு பாய்ச்சலுக்கும்  காசு இல்லாம
படற  கஷ்டம் மாதிரி நம்ம தயாரிப்பாளருங்க
எல்லாம்  இருக்கிற காசையெல்லாம்
தயாரிப்புக்கே செலவழிச்சுட்டு பிரிண்ட்டுக்கும்
விளம்பரத்துக்கும் இல்லாம படுகிற பாடுதான்
இங்கே வாடிக்கையாகிப் போச்சுசார்

நாம இந்தப் படத்துக்கு அப்படி இல்ல சார்
பட ப்ரோமோஷனுக்கே தயாரிப்புச் செலவு அளவு
பண்றோம் சார்

நிறைய ஸ்பான்ஸர் கூட நம்மளோட   சேர்ந்து  
 செலவு செய்யவும் ரெடியா இருக்காங்க சார்

(எனச் சொல்லி ஒரு ஃபைலை  எடுத்து
மெல்ல இருவர் முன் விரிக்கிறார் )

(தொடரும் )

Monday, August 29, 2016

ரஜினி ரஞ்சித் கபாலி ( 7 )

                                    காட்சி 6  ( தொடர்ச்சி )

ரஞ்சித் :
(ரஜினி அவர்கள் ஆர்வமாக  ரஞ்சித்தின் பதிலை
எதிர்பார்த்து முன் பக்கம் முகம் சாய்க்க...
ரஞ்சித் தொடர்கிறார் )

சார்.. ஒன் லைன்னா இப்படிச் சொல்லலாம் சார்
ஒரு ஒடுக்கப்பட்டவன் தாதாவாக எழுச்சி அடைவதும்
அதனால தாதாக்களிடையே உண்டாகும் பாதிப்புக்களும்
தனி மனிதனாக அவன் அடையும் பாதிப்புக்களும் ....

(இப்படிச் சொல்லிவிட்டு ரஜினி மற்றும் தாணு
அவர்களின் முகக் குறிப்பை அறிய முயல்கிறார்)

ரஜினி:
(சிறிது நேரம் யோசித்துப் பின்..)

வெரி நைஸ் ரஞ்சித்...ரொம்ப அருமை
ஆனா இதுல நாலு விஷயத்தை மிகச் சரியா
சொல்ல வேண்டி இருக்கும் இல்லையா

ஒடுக்கப்பட்டவனாக முதல்ல
பின்னால அவனோட எழுச்சி
அதனால தாதாக்களிடையே வரும் பிரச்சனை
அப்புறம் இவனோட தனி மனிதப் பாதிப்பு

இந்த நாலு விஷயத்தையும் மிகச் சரியா
ஒரு லீட் எடுத்து இணைக்கணும்

கொஞ்சம் எதிலாவது கூடக் குறச்சுப் போனா
நாலும் தனித் தனியா திட்டுத்  திட்டா
தெரிய ஆரம்பிச்சுடும்
படம் பார்க்க ஒரு நிறைவு இருக்காது

திரைக்கதைப் பண்ணும் போது அதுல ரொம்பக்
கவனமா இருக்கணும்

நீங்க அதைச் சரியா பண்ணீடுவீங்க
எனக்குச் சந்தேகமில்லை...
இந்த படத்தைப் பொருத்த வரை நான்
கதை விஷய்த்தில தலையிடப் போவதில்லை
முழுசா இது டைரக்ரோட படமா
இருக்கணும்னு நினைக்கிறேன்

ஆகையால என ரசிகர்களை மனசுல வச்சு
பஞ்சு டயலாக அது இது எல்லாம் வேணாம்
கதைக்கு எது தேவையோ அதை மட்டும்
சரியா செஞ்சா போதும் சரியா

ரஞ்சித் :
(நெகிழ்ச்சியுடன் ) என்னை ந்ம்பி இவ்வளவு
பொறுப்புத் தர்றது பெருமையா இருந்தாலும்
கொஞ்சம் பயமாகவும் இருக்கு சார்

ரஜினி ( முன் நகர்ந்து தோளைத் தட்டியபடி)
பயம் வேண்டியதில்லை. நல்லா சுதந்திரமா
சந்தோஷமா செய்ங்க..படம் நல்லாவே  வரும்
ஆனா ஒரு சில சஜ்ஜஸன்...இதை மட்டும்
கவனத்துல வைச்சுச் செய்ங்க...

(எனச் சொல்லி நிறுத்தி விட்டு மெதுவாக
முன் பின் யோசித்தபடி நடந்து விட்டு... )

நமப்ர் ஒன்
வெளி நாடுங்கிறது இலங்கை வேண்டாம்
எப்படிச் சூதானமா செய்தாலும் ஏதாவது
பிரச்சனை வர வாய்ப்பு இருக்கும்

இரண்டு
மெயின் ரோல் நடிகைகள்
தென் இந்தியாவில் வேண்டாம்
அது பாலிவுட்டா இருக்கட்டும்
அதுதான் எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியா
இருக்கும்

மூணு
தாதான்னு எனக்கு அதிக உடல் சிரமம் தராம
பாத்துக்கங்க. வயசு உடல் நிலை இதையும்
கவனமா வச்சுகங்க.அதுக்கு வில்லன் ரோல்
பண்ணுகிறவர் வெளி நாட்டுக்காரரா இருந்தாலும்
ஸ்டைலா இருக்கிறவரைப் பாருங்க
பெரிய பாடி பில்டப் ஆசாமி வேண்டாம்
அது சரியா ஈகுவலா சூட் ஆகாது

நாலு
இதுதான் முக்கியம் படத்துல எல்லோருமே
கவனிக்கும்படியா விமர்சிக்கும்படியா ஒரு
கான்ரோவர்ஸியலான பிரச்சனையை லேசா
தொட்டு விடுங்க
அதுதான் தொடர்ந்து மீடியாவுல, மத்த
ஊடகங்கள்ல தொடர்ந்து நம்ம படத்தைப்
பத்திப் பேச அவல் மாதிரிப் பயன்படும்

ரஞ்சித் இப்போதைக்கு இவ்வளவுதான்
ஊடே எதுவும் தோணினா நானே உங்களுக்கு
தகவல் தாரேன்

நீங்க மூணு மாசத்தில முழு ஸ்கிரிப்ட் செய்யுங்க

( பின் தாணுவின் பக்கம் திரும்பி)

என்ன தாணு சார்...
நான் சொன்னதெல்லாம் சரிதானா
நீங்க எதுவும் சொல்லினுமா....

தாணு
சார் நான் நீங்க டைரக்டர்கிட்ட பேசப் பேச
நான் மலைச்சுக் கேட்டுக்கிட்டே இருந்தேன் சார்
இவ்வளவு தீர்க்கமா ஒவ்வொரு விஷயத்தில
இருக்கிறதுனால தான் நீங்க தொடர்ந்து
சூப்பர் ஸ்டாரா ஜொலிக்க முடியுது
இது வெளியில எத்தனைப் பேருக்குத் தெரியும்...

ரஜினி
(தாணு பேசுவதைத் தடுத்தபடி  )
தாணு சார்.. சப்ஜெட் தடம் மாறுது
படம் படம் மட்டும் பத்தியே பேசுங்க சரியா

(ரஞ்சித் பக்கம் திரும்பி ...)
ரஞ்சித் கொஞ்சம் டென்ஸனா இருக்கீங்கன்னு
நினைக்கிறேன்..வாங்க கொஞ்சம் ரிலாக்ஸுடா
தோட்டத்தில நடந்திட்டு வரலாம்
அப்புறம் ப்ரொடூஸர்கிட்டே ஒரு ரவுண்ட்
ஓபனா பேசலாம்

(எனச் சொல்லிய்படி ரஞ்சித்தை கைகொடுத்து
எழச் செய்கிறார்.பின் மூவரும் மெல்ல
தோட்டத்தை ரசித்தபடி நடக்கத் துவங்குகிறார்கள் )

Saturday, August 27, 2016

ரஜினி , ரஞ்சித்,கபாலி ( 6 )

                                            காட்சி ( 6 )

ரஜினி:

(ரஜினி அவர்களின் பண்ணை வீடு. முன் லானில்
தாணுவும் ரஞ்சித் அவர்களும் அமர்ந்திருக்க
ரஜினி அவர்கள் மிக வேகமாக வீட்டின் உள்ளிருந்து
வெளியே வந்தபடி... )

வாங்க தாணு சார் டைரக்டர் சார்
கொஞ்சம் முன்னாலயே வந்துட்டிங்களா
இது என் யோகா நேரம்..அதுதான் கொஞ்சம் லேட்
சாரி...சாரி

தாணு:
இது எங்க  யோக நேரம்...அதுதான் கொஞ்சம்
முன்னாலய வந்துடோம் சார்....

ரஜினி (சிரித்தபடி )
என்னை விட நல்லா டைமிங்கா பஞ்ச் பேசுறீங்களே
ப்ரொடூஸர் சார்...சரி சரி டைரக்டர்  கிட்டே
கதையைப் பத்தி பேசினீங்களா

தாணு:
இல்லை சார் நீங்க வந்த உடனே பேசிக்கலாம்னுதான்
நான்தான் சொன்னேன்

ரஜினி:
ஓ.கே டைரக்டர் சார்..கொஞ்சம் விரிவாவே
கதையோட அவுட் லைன சொல்லுங்க
முதல்ல ப்ரொடூஸருக்குப் பிடிக்கணும்
அதுதான் முக்கியம்...

ரஞ்சித்
சார்,, சார் ..போட்டுப் பேசறது கொஞ்சம்
அன் ஈஸியா இருக்கு..ரஞ்சித்ன்னே சொன்னீங்கன்னா
கொஞ்சம் கம்போர்டெபில பீல் பண்ணுவேன்

ரஜினி
ஓகே ஓகே டைரக்டர்ன்னு சொன்னா தன்னால
அந்த சாரும் ஒட்டிக்கிரும்...இனி ரஞ்சித்துன்னே
சொல்றேன்.. ஓகே யா
..ம்...சொல்லுங்க

ரஞ்சித்
(கைகளால் முகத்தை அழுத்தத் தேய்த்து
தன்னை ஆசுவாசப் படுத்திய பின்  ...

சார் நடிச்சு ...இப்ப ஒரு மாஸ் கிட் கொடுக்கணும்னா
அதுக்கு ஒரு டாண் கதைதான் சரியா வருங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்

டாண் கதைன்னா உலக சினிமா அளவுல
காட் ஃபாதரை மிஞ்சி ஒரு படமோ
தமிழ்ல நாயகனை மிஞ்சி ஒரு படமோ
இல்லை சார்.

எல்லோரும் அதைத் தழுவி படம் பண்ணி
இருக்காங்க சார்.. எனக்கென்னவே அதை
அடிப்படையா வைச்சு அதுன்னு தெரியாதபடி
அதுக்கு நேர்மாறா ஒரு கதை பண்ணினா
நல்ல வரும்னு எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்

(தாணு அவர்களும் ரஜினி அவர்களும்
ஒருவரை ஒருவர்பார்த்துக் கொண்டு லேசாகத்
தலையாட்டிக் கொள்கிறார்கள்
ரஞ்சித் அவர்கள் இருவரின் முக பாவம் நேர்மறையாக
இருக்க பின் தொடர்ந்து பேசுகிறார் )


முதல்ல கதை சொல்ல ஆரம்பிக்கிறதில இருந்தே
கதையை மாத்தறோம் சார்

அதுல வேலு நாயக்கர் கதையை அவங்க
சிறு வயதில இருந்து ஆர்ம்பிச்சு டாணாகி
சாவு வரைன்னுக் கொண்டு போனா...

நாம டாணாகவே ஆரம்பிச்சு தொடர்ச்சியா
கதையைக் கொண்டு போகாம முன் பின்னா
போறோம் சார்

அதுல பேருல மட்டும் ஜாதி இருக்கும் சார்
மத்தபடி ஜாதிப் பிரச்சனை இருக்காது சார்

இதுல பேரே ஜாதி மாதிரி இருக்கும்
கதாப்பாத்திரமும் ஜாதியைத்தான் அதிகம்
பேசும் சார்

அதுல மனைவி சாவை  கண் எதிரே
பார்ப்பாரு சார்

இதுல அப்படியில்ல செத்துட்டதாச் சொல்லி
தேடுறதா கதையை நகட்டுவோம் சார்

அதுல அப்பாவைக் கொன்னதுக்கு லூஸ்மகன்
பழி வாங்கக் கொல்றதா முடியும் சார்

இதுல கொஞ்சம் மாத்தி லூஸு மாதிரி
தனியா ஒரு கேரக்டரையும் அப்பனை
கொல்றதுக்குக் காரணம் ஆனதுக்குப்
பழி வாங்கறதா இன்னொரு கேரக்டரையும்
ஆக அதை இரண்டா ஒடைக்கிறோம் சார்

அதுல வேலு நாயக்கருக்கு உள்ளூர் உடைன்னா
இதுல கதா நாயகனுக்கு சஃபாரி டிரஸ் சார்

ஏன்னா அதுல வேலு நாயக்கர் இருக்கிறது
இந்தியான்னா இந்தப் படக் கதா நாயகன்
இருக்கிறது வெளி நாடு சார்

அதுல வில்லன் உள்ளூர்னா

இதுல வெளி நாட்டுக்காரன் சார்...

அதுல கதை நடக்கிற லொகேசன், சேரி
கடல்னா

இது சிட்டி, பெரிய ஹோட்டல் மால்
அப்படி சார்...

அதுல கதா நாயகனுக்கு நல்லவனா
கெட்டவனான்னு அவருக்கே ஒரு
குழப்பம் இருக்கும் சார்

இதுல அதுக்கு சான்ஸே இல்ல சார்
கதானாயகனுக்கு தான் நல்லவன்ற
கர்வமும் திமிருமே இருக்கும் சார்

ரஜினி:

(இரஞ்சித் தொடர்ந்து சொல்லிக் கொண்டு போக
சட்டென கைகாட்டி நிறுத்தியபடி...)

சரி சரி..இப்படி மாத்திக்கிட்டேப் போனா
நாயகன்னு தெரியாம வேணுமானா போகும்
ஒரு கட்டுக் கோப்பான முழுக்கதையா இது வருமா

முடிஞ்சா இதையெல்லாம் உள்ளடக்கி
ஒன் லைனா கதையைச்
சொல்லமுடியுமா ரஞ்சித்?

(ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )

Thursday, August 25, 2016

ரஜினி, ரஞ்சித், கபாலி ( 5 )

                        காட்சி   ( 4  ) தொடர்ச்சி

(குறைந்தப்  பொழுதெனினும் கனத்துப்
பெய்து விடுகிறக் கோடை மழை போலச்
சுருக்கமாக எனினும்கனமான விஷயத்தை
மிக எளிதாகச் சொல்லிப்போன
ரஜினியை மலைப்புடன் பார்த்தபடி
நெகிழ்ச்சியுடன்..)

ரஞ்சித்:
எவ்வளவு உச்சத்தில இருந்தாலும் சினிமா
மற்றும் நடிப்புச்  சம்பத்தப்பட்டு , ஒரு கடைக் கோடிக்
கிராமத்துல நடக்கிறதைக் கூட  மிகச் சரியா
தெரிஞ்சு வச்சிருக்கிறது மலைக்க வைக்குது சார்

ரஜினி:
(சப்தமாய்ச் சிரித்தபடி )
உச்சம் தொடுறது கஷ்டம் இல்லை தம்பி
அதல நிலைக்கிறதுதான் ரொம்ப ரொம்பக் கஷ்டம்
சைக்கிள்ல இருந்து விழுந்தா சுளுக்கு மட்டும்தான்
ஆனா விமானத்தில இருந்து விழுந்தா...
மேலப் போறதைத் தவிர வேற வழியே இல்லை

(மீண்டும் சபதமாய்ச் சிரித்து.. நிறுத்திப்பின்.... )

சரி அதை விடுங்க எப்படிப் பண்ணலாம்..
என்ன பண்ணலாம் அதைச் சொல்லுங்க
முடிஞ்சா ஒன் லைனா.....

ரஞ்சித்:
சார்...உங்ககிட்ட இருந்து தகவல் வந்ததில இருந்து
உங்களுக்குச் சரியா இருக்கும்படியா
சீரியஸா ஒன்  லைன் யோசித்தேன் சார்

நீங்க எத்தனையோ கிட் கொடுத்திருந்தாலும்
திரும்பத் திரும்ப உங்க படம்னா
நினைப்புல வந்து நிக்கிறது
மூன்றுமுடிச்சு, புவனா ஒருகேள்விக் குறி
முள்ளும் மலரும்,அப்புறம் சரிதா மேடம் கூட
ஒரு டபிள் ரோல் பண்ணினீங்களே அந்தப் படம்
அப்புறம் மெயினா பாட்சா, எந்திரன்தான் சார்
காரணம் வில்லத்தனமான  அந்தக் கதா நாயகன்
பாத்திரங்கள் தான் சார்

அந்த மாதிரி பண்ணினாத்தான் உங்களுக்கு
ரொம்பப்பொருத்தமாகவும், ஜனங்களுக்குப்
ரொம்பப் பிடிக்கும்படியாகவும் இருக்கும்ங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்

ரஜினி:
நீங்க சொல்றது ரொம்பச் சரி
மனம் திறந்து சொன்னா என் நிஜ குணத்துக்கும்
அந்தக் கதாபாத்திரங்களுக்கும் துளிக் கூட
பொருத்தம் இருக்காது

என்ன செய்யறது நீங்க சொல்ற மாதிரி
அதுதான் எனக்கும் மிகச் சரியா
பொருந்தி வருது. ஜனங்களுக்கும்
அதுதான் பிடிச்சுப் போகுது..

ஆனா முன்னப் போல அந்த ரோல் பண்ண
உடம்பு இடம் கொடுக்குமாங்கிற யோசிக்கணும்

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
ஒரு டாண் மாதிரி, கேங்க் லீடர் மாதிரி
இந்த வயசுக்குத் தகுந்த மாதிரி ஒரு
கேரக்டரை கிரியேட் பண்ணி கதைப் பண்ணினா
சரியா வரும் சார்.

ரஜினி
சரி அது எனக்குச் சரியாக பொருந்தி வரும்
உங்கள் பாணிக்கு......

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
அந்த டாண் ஒரு நசுக்கப்பட்டச் சமூகத்தைச்
சேர்ந்தவனா ஆக்கிட்டா அதுவும் சரியா
வந்திரும் சார்...

ரஜினி:
ஓ...ஏற்கெனவே  கொஞ்சம் யோசிச்சிட்டுத்தான்
வந்திருக்கீங்க ரொம்பச் சந்தோஷம்
அதை அப்படியே ஒன் லைனா சொல்றீங்களா ?
அப்பத்தான் கொஞ்சம் தொடர்ச்சியா யோசிக்க
சரியாய் வரும்...

ரஞ்சித்:
(கொஞ்சம் தயங்கியபடி )
ஒன் லைன் கூடக் கொஞ்சம் குழப்பும் சார்
வேற மாதிரிச் சொன்னா இன்னும் சரியாப் புரியும் சார்

ரஜினி
அப்படியா...பரவாயில்லையே சொல்லுங்க
டெவெலொப் பண்ண வசதியா இருந்தா சரிதான்
இந்த ஒன் லைன் சமாச்சாரம் எல்லாம்
இப்ப வந்ததுதானே...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்
சார் ..எப்படிச் சொல்றதுன்னுதான் ....

ரஜினி
என்ன ரஞ்சித்,.. உங்களுக்கு என்ன ஆச்சு?
ஏன் இத்தனைப் பீடிகை...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்:
வந்துசார்   ஒரு தோசையை அப்படியே
தலை கீழா திருப்பிப் போடுற  மாதிரி
ஒரு படத்தோடக்கதையை
அப்படியே அடையாளம் தெரியாம
திருப்பிப் போடறோம் சார்
ஆமாம் சுத்தமா அடையாளமே தெரியாத மாதிரி..

ரஜினி:
அப்படியா சும்மா சொல்லுங்க
 நாம தானே பேசறோம் எந்தப் படம்......

ரஞ்சித்:
கமல் சாரோடா நாயகன் சார்

(சொல்லிவிட்டு ரஜினி என்ன நினைப்பாரோ
என அதிர்ச்சியுடனும் ஒரு எதிர்பார்ப்புடனும்
அவரையே உற்றுப் பார்க்கிறார் )

(முற்றிலும் எதிர்பாராத  ஒன்றை
கேள்விப்பட்டவரைப் போல சிறுஅதிர்ச்சியுடன்
சோபாவில் இருந்து எழுந்து மெல்ல
நடக்கத் துவங்குகிறார் )


(தொடரும் )

Wednesday, August 24, 2016

ரஜினி இரஞ்சித் கபாலி 4

                                         காட்சி       ( 4  )     (தொடர்ச்சி )
ரஜினி :

(ரஞ்சித் ஆர்வமாக சோபாவின் முன் நுனி வர
ஆர்வமான ரஜினியும் முன் நகர்ந்து )

ரஞ்சித் உங்களுக்குத்தான் தெரியுமே...
நாடகக்கலையை இன்றளவும் கட்டிக் காக்கிறது
தென் தமிழகம் தான்
அதுவும் குறிப்பா சங்கரதாஸ் சுவாமிகளிருந்த மதுரை

அங்கெல்லாம் கிராமங்களில நாடகம் இல்லாம
திருவிழா இருக்காது அதுலயும் குறிப்பா
வள்ளித் திருமணம்

அங்கெல்லாம் நாடகத்துக்கு குழுக்கள் நிறைய
இருந்தாலும் கிராமத்துப் பெருசுங்க குழுவைக்
கூப்பிடமாட்டாங்க

போன வருஷம் எல்லா ஊர்லயும் நடந்த
நாடகங்கள்ல யார் சிறப்பா நடிச்சாங்கண்ணு
ஒரு லிஸ்ட் எடுப்பாங்க

வள்ளியா புதுக்கோட்டை சித்திரா தேவி
நாரதரா விராலிமலைக் கிட்டு
முருகரா தென்கரைக் கண்ணன்னு
பப்பூனா அவனியாபுரம் ராஜப்பா அப்படின்னு
ஒரு லிஸ்ட் எடுத்து அவங்களைப் புக்
பண்ணுவாங்க

லிஸ்ட்டைப் பார்த்ததும் சுத்துபத்து
கிராமங்கள்ல எல்லாம் சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

காரணம் மேடை ஏறுகிறவரை இவங்க
ஒருத்தரை ஒருத்தர் சந்திருச்சுக்கமாட்டாங்க.
 ரிகர்ஸல் எல்லாம் கிடையாது
மேடைதான் முதல் சந்திப்பு

உங்களுக்த்தான் தெரிஞ்சிருக்குமே
வள்ளித் திருமண நாடகமே மூணு தர்க்கம்தான்

வள்ளி-நாரதர், நாரதர்-முருகர், முருகர் -வள்ளி
அம்புட்டுத்தான்

மூணு தர்க்கத்தில ஒவ்வொருத்தரும் தான்தான்
ஜெயிக்கணும்னு போடுகிற போட்டி இருக்கே

அது இருந்து பார்த்தாத்தான் தெரியும்

(பின் சிறிது நேரம் இடைவெளி விட்டு
மீண்டும் தொடர்கிறார் )

சினிமாவும் அப்படித்தான்

இதுவரை சேராத ஆனா தனித்தனியா
ஜெயிச்சவங்களை ஒண்ணு சேர்த்து ஒரு
படம் பண்ணஆரம்பிச்சா மக்கள்கிட்ட
ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

அப்படிப் பிடிச்ச நெருப்பை விடாம ஊதி ஊதி
ஊடகத்தால பெருசாக்கி பெருசாக்கி
படத்தை விட்டா அதன் மதிப்பே தனிதான்

நீங்க மெட்றாஸ் படம் மூலம் தனியா
ஒரு பெஸ்ட் டைரக்டரா இன்னைக்கு
முன்னால் நிக்குறீங்க

நானும் ஏதோ ஒரு முன்னணி நடிகர்னு
இத்தனி வருஷமா ஃபீல்டுல
குப்பைக் கொட்டிக்கிட்டு இருக்கேன்

தம்பி தாணுவும் ஒரு பெரிய தரமான
தயாரிப்பாளரா பேர் எடுத்து இருக்கார்

இந்த மூணு பேரும் சேர்ந்து ஒரு படம்
பண்றதாக ஒரு விளம்பரம் வந்தாலே
ஃபீல்டுல ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்
மக்கள்கிட்டயேயும் ஒரு  எதிர்பார்ப்பு எகிரும்

அதை மட்டும் திருப்திபடுத்தும்படியா
ஒரு படம் பண்ணினா போதும்
தொடர்ந்து  எல்லோரும் உச்சத்தில்
நின்னுடலாம்

அதுக்கு முக்கியமா தேவை.......

(எனச் சொல்லி நிறுத்தியவர் சோபாவை விட்டு
எழுந்துத்  தன்னை ஆசுவாசப்படுத்திக்
கொள்ளும்படியாக சிறிது நேரம் நடக்கிறார்
பின் ரஞ்சித்தை நோக்கி .... )

ஆமா அதுக்கு முக்கியமா தேவை ஒரு கதை
எனக்கும் சரிப்பட்டும் வரும் படியா
உங்களுக்கும் திருப்தி தரும்படியா
என ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும்படியா

(இப்படி ஒட்டுமொத்தமாய் தன் நிலையை
ரஜினி அவர்கள் சொல்லியதைக் கேட்டதும்
ரஞ்சித் தான் எதையோ சொல்ல முயல்கிறார்
ரஜினி அவரைத் தடுத்து )

கொஞ்சம் ஃபிரியா அரை மணி நேரம்
ரெஸ்ட் எடுத்துச் சொல்லுங்க
ஒண்ணும் அவசரமில்லை

(எனச் சொல்லி செல்போனில் ஸ்னாக்ஸ்
மற்றும் டீக்கு யாருடனோ பேசுகிறார்
ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )


தொடரும்

Tuesday, August 23, 2016

ரஜினி ...ரஞ்சித்...கபாலி ( 3 )

                                காட்சி 4

(தனது பிரத்யேக அறைக்குள்
ரஞ்சித் அவர்கள் நுழைந்ததும், ரஜினி அவர்கள்
மிக வேகமாக முன்வந்து அவரைக் கட்டி அணைத்து
கைக்குலுக்கி வரவேற்கிறார் )

ரஜினி;
வாங்க ரஞ்சித் வாங்க...
ரொம்பக் காக்க வைச்சுட்டேனோ சாரி.சாரி

ரஞ்சித்:
இல்லைங்க சார். இப்பத்தான் வந்தேன்

 (எனச் சொல்லியிபடித்  தான் கொண்டுவந்திருந்த
 மலர்ச் செண்டினைக் கொடுத்தபடித் தொடர்கிறார்)

உங்களைப் பார்க்க எத்தனை மணி நேரம்
வேணுமானாலும் காத்திரும்படியா
கோடிச் சனம் இருக்க என்னையும் மதிச்சு.....

ரஜினி:
நோ ஃபார்மாலிடீஸ் ரஞ்சித்..திறமை எங்கிருந்தாலும்
பாராட்டப்படணும் பாராட்டணும்.அதுதான் நல்லது
அதுதான் பாராட்டிறவன் வளரவும்
பாராட்டப்படறவன் வளரவும் உதவும்
சரி நேரடியா விஷயத்துக்கு வருவோம்
மேடம் போனில் சொன்னாங்களா ?

ரஞ்சித்:
ஆமாம் சார் என்னால நம்பவே முடியலை
அவங்க போனை வைச்ச அரை மணி நேரத்தில
நான் திரும்பவும் ஒரு முறை நானே பேசி
கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்
இப்ப கூட உங்க கூட உட்கார்ந்து பேசறது
நிஜந்தானான்னு குழம்பிக்கிடக்கு சார்.. நிஜமா...

ரஜினி
(தொடர்ந்து அவரைப் பேசவிடாதபடித் தடுத்து )

ரொம்ப எக்ஸைட் ஆகுறீங்க ரஞ்சித்..இப்ப முதல்ல
நாம சந்திக்கும்படியா இங்க ஏற்பாடு செஞ்சதே
இந்த ஃபார்மாலிடி பேரியரை உடைக்கத்தான்
கொஞ்சம் மனம் திறந்து பேசத்தான்
படம் பத்தியெல்லாம் அடுத்த மீட்டில் பேசலாம் சரியா

ரஞ்சித்
(தன்னை  மனரீதியாக சரிப்படுத்திக் கொள்வது போல்
மூச்சை இழுத்து விட்டு தன்னைத் தளர்த்தியபடி)
புரியுது சார் ...சொல்லுங்க சார்

ரஜினி:
நான் உங்க அட்டைக்கத்தி படம் பார்த்தேன்
கொஞ்சம் வித்தியாசமா கவனிக்கும்படியா இருந்தது
பிற்படுத்தப்பட்ட ஒருவனின் சூழல் ,
அவன் விடலைத்தனம்
எல்லாம் ரொம்பச் சிறப்பா இருந்தாலும்
ஒரு நிறைவு  ஏனோ இல்லை

ஒருவேளை முதல் படம் என்பதால கொஞ்சம்
கூடுதல் கவனத்தில சொல்ல வேண்டியதை
சொல்லத் தயக்கம் இருந்திருக்கலாம்
பட் வெரி நைஸ்  மூவி

ஆனால் மெட்றாஸ் .. சான்ஸே இல்லை
வெரி வெரி சூப்பர்..இப்படி வடக்குசென்னை
ஒரு குடியிருப்பைப் பத்தி, அவங்க வாழ்க்கைச்
சூழல்பத்தி,அவங்க வாழ்க்கையோட
விளையாடுற அரசியல் பத்தி ..ரியலி வெரி சூப்பர்
குறிப்பா ..தனியா ஒரு நைட் ஸாட் வைச்சிருத்தீங்களே
ஒரு லாங்க்  ஸாட் ..அந்த சுவத்து ஓவியத்தக் காட்டி
ஒரு ஸைலண்ட் சாட்...அதுவும்  கிரேன்சாட் ...

அந்த ஸாட்டைப் பார்த்ததும்
நிமிர்ந்து உட்கார்ந்தவன்தான்
அப்புறம் சாய்ஞ்சு உட்காரவே இல்லை

(இதைச் சொன்னவுடன் அவருக்கே உரித்தான
மௌனத்தில் சிறிது ஆழ்ந்து போகிறார்)

அப்பத்தான் எனக்கு உங்க டைரக்ஸன்ல
ஒரு படம் பண்ணனுனு முதல்ல தோணிச்சு
அந்தப் படம் மட்டும் இல்லாம
தொழில் ரீதியா நாம இணைஞ்சு படம் பண்ணினா
ஒரு பெரிய எதிபார்ப்பை உண்டாக்கும்னும் தோணிச்சு
அது எப்படின்னு உதாரணத்தோடச் சொன்னாத்தான்
கொஞ்சம் தெளிவாப் புரிஞ்சிக்க முடியும்

(எனச் சொல்லி கண்களை மூடி
 விஸுவலாக ஏதோ  ஒன்றைப் மனக் கண் முன்
பார்ப்பது போல் தலையாட்டி இரசிக்கிறார் )

நம்மைப் போலவே ரஞ்சித் அவர்களும் அது
என்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்தில்
ஸோபாவின் நுனிக்கு நகர்கிறார்


தொடரும்

Monday, August 22, 2016

ரஜினி ,தாணு , கபாலி ( 2 )

                                  காட்சி 3

டிரைவர் ஒரு பழக்கூடையுடன் பின் தொடர
பூச்செண்டுடன் ரஜினி அவர்களின் வீட்டில்
நுழையும் தாணு ஹாலில் இருந்து வரவேற்கும்
லதா அவர்களிடம் பழக் கூடையைக் கொடுத்து
நலம் விசாரித்து விட்டுப்   பூச்செண்டுடன்
ரஜினி அவர்கள் இருக்கும் அறைக்குள்
நுழைகிறார் )

 ரஜினி ( தான் அமர்ந்திருந்த ஸோபாவில் இருந்து
            வேகமாய எழுந்து வந்து தாணு அவர்களை
            கட்டிப் பிடித்து வரவேற்றபடி )

            வாங்க தாணுசார் வாங்க..வீட்டில் எல்லோரும்
            சௌக்கியமா ?

தாணு (மலர்ச்செண்டி கையில் கொடுத்தபடி )
             எல்லோரும் நல்ல சௌக்கியம், மேடம் போனில்
             தகவல் சொன்னதும் கூடுதல் சௌக்கியம்
             எல்லாம் தங்கள் சித்தம்....

ரஜினி (சட்டென இடைமறித்தபடி )
              எல்லாம் அவன் சித்தம் என்று சொல்லுங்க
   
தாணு அவர் கூட தானாக எதுவும் செய்ய முடியாதே
              யார் மூலமாகத்தானே முடியும்
              நீங்கள்தான் எங்களுக்கு...

ரஜினி (அவர் வார்த்தையை முடிக்க விடாதபடி )
              திருநெல்வேலிக்கே அல்வாவா...சரி சரி
              அதையெல்லாம் அப்புறம் பேசலாம்
              முதலில் உட்காருங்கள்...

              (என தன் ஸோபா அருகில்  இருக்கும்
              இருக்கையில் அமரும்படி
              சைகைக் காட்டுகிறார்
              இருக்கையின் முன் நுனியில் பௌயமாய்
               தாணு அமர..
              எப்படித் துவங்கலாமென்பது போலச் சிறிது
              நேரம் தரையைப் பார்த்தபடி
              குனிந்து கொண்டிருந்த
              ரஜினி அவர்கள் சட்டென நிமிர்கிறார்..

               ஆம் தாணு மேடம் சொல்லி இருப்பாங்களே
               ஆமாம் நாம இணைஞ்சு ஒரு படம் பண்றோம்
               இதுவரை யாரும் செய்யாத மாதிரி...
               வித்தியாசமா... புதுமாதிரியா....

தாணு   செய்துடும்வோம் சார்..இதுவரை யாரும்
                செலவழிக்காதபடி.. பிரமாண்டமா...

ரஜினி   (இடைமறிக்கிறார் ) என வார்த்தையை நீங்க
               சரியா உள் வாங்கல.. நான் சொல்ற
               வித்தியாசமா...புதுமாதிரியாங்கறது
               செலவழிப்பைப்பத்தி இல்லை
               வரவுப் பத்தி.....

தாணு   (சற்று யோசித்தபடி ) சார் சொல்றது
               கொஞ்சம் புரியலை சார்

ரஜினி   (சோபாவை விட்டு எழுந்து சிறிது நேரம்
              முன் பின்னாக நடக்கிறார். அவர் ஏதோ
              பழைய நினைவுகளின் தொடர்ச்சியாய்ப்
              பேசுவது போலப் பேசுகிறார்...

              ஆமாம் தாணு சார்.  புதுமாதிரியாகத்தான்
              ஒவ்வொரு முறையும் அதிகமா செலவழிச்சு
              லாபம் சேத்து அதிகமா வித்து,அந்த அளவு
              படம் வசூல் தராம, டிஸ்டிரிபூட்டர்கள்
             போராட்டம்அ து இதுன்னு அசிங்கப்படுத்தி,
             பின்னால நான்பணம் செட்டில் பண்ணி ....

              (சிறிது பெருமூச்சு விட்டுப்பின் தொடர்கிறார்)
              அது இனி வேண்டாம்....முதல்ல செலவுப் பத்தி
              பேசிப்பேசி வரவைப் பத்திப் பேசாததால
              இந்த தடவ வரவைப்பத்தி முதல்ல பேசுவோம்
              அப்புறம் செலவைப் பத்திப்... புரியுதா

             (சட்டென பேசுவதை நிறுத்தி
             தாணுவைப் பார்க்கிறார்
              தாணு ஒன்றும் புரியாது விழிக்கிறார்
             ரஜினி சார் அவருக்கே உரித்தான ஒரு பெரும்
             சிரிப்பைச் சிரித்து விட்டு பின் தொடர்கிறார்

             ஆமாம் இந்தத் தடவை நாம் படத்தை எடுத்து
             டிஸ்டிரிபூட் பண்ணலை, படத்தை விக்கலை
             படத்தை மார்கெட் பண்றோம்
             ப்ரமாண்டமா.. பாலிவுட்ல பண்ற மாதிரி
             ஹாலிவுட்ல பண்ற   மாதிரி ..இப்பப் புரியுதா...

தாணு (தலையை ஆட்டியபடி ) இப்ப கொஞ்சம்
              புரியுது சார்... நான் என்ன செய்யணும்..
              எப்படிச் செய்யனும்னு மட்டும் சொல்லுங்க
              மிகச் சரியாய்ச் செஞ்சிடறேன்

ரஜினி (நிதானமாய் )
             அதை அடுத்த முறை சொல்றேன்
             அதுக்குள்ள படம் சூட்டிங்க
             ஆரம்ப்த்தல இருந்து முடிகிற வரை

             மீடியாவுல பிரமாண்டமா எப்படி
             எப்படிபி படத்தை  பூஸ்ட் பண்றதுங்கிறதை ஒரு
             ப்ராஜெக்ட் ரிப்போர்ட்  மாதிரி...
             புரிஞ்சதா  பிராஜெக்ட்ரிப்போர்ட்  மாதிரி

             அடுத்த வாரத்துக்குள்ள
             தயார் செய்துட்டு வாங்க
             நீங்க அனுபவமான பெரிய ப்ரடூஸர்
             உங்களுக்குச்சொல்லவேண்டியதில்லை
             முதல் ஒரு வாரத்தில் டிக்கெட் கிடைப்பதே
             பெரிய விஷயம் மாதிரி,
             படம் பார்த்துட்டேன் என்கிறது
             மிகப்பெரிய விஷயம் மாதிரி
             ஆமா படம் ரிலீசுக்கு முன்னாலயே
             செலவுப்பணம்கைக்கு வந்துடற மாதிரி...
             புரியுதா தாணு சார்

தாணு (மிகச் சந்தோஷமா )புரியுது சார் ...
             பாலிவுட் முடிஞ்சா
              ஹாலிவுட் ப்ரொமோட்டர்களை வைச்சே
             இதைப்பிரமாண்டமா தயாரிச்சுட்டு
             வாரேன்  சார்

ரஜினி    மகிழ்ச்சி... நீங்க உறுதியா செஞ்சிருவீங்க
             வாழ்த்துக்கள்

             ( எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
             அறையில்  உள்ள செல் போன் மணி யடிக்க
             ரஜினி எடுத்துப் பேசுகிறார்

             (பின் தாணுவின் கைபிடித்துக்  குலுக்கியபடி
           
             அப்ப நீங்க கிளம்புங்க சார்...ரஞ்சித் சாரை
             வரச் சொல்லி இருந்தேன்..
             வந்து காத்திருக்கிறார் போல
             அவரிடமும் ஒரு ரவுண்ட் பேசிடறேன்
             அடுத்த வாரம் உங்க ப்ராஜெக்ட்டோட அவர்
             கொண்டுவர்ற கதை அவுட்லயனோட
             சேர்ந்து பேசுவோம்   சரியா ...

தாணு (பணிவாய்க் குனிந்தபடி )
            ரொம்ப சந்தோஷம் சார்
              நான் அடுத்த வாரம் சந்திக்கிறேன் சார்

ரஜினி (மீண்டும் கை குலுக்கியபடி )
             நிச்சமா..நிச்சயமா


             தாணு மெல்ல நடந்து அறையின்
             வாசலைக் கடக்கையில்
             ஏதோ சட்டென நினைவுக்கு வந்ததைப் போல

             தாணு சார் மறக்காம சாப்பிட்டுப்போங்க
             இல்லையானா அவங்க என்னைத்தான்
             கோபிப்பாங்க சரியா.....

தாணு நீங்க சொல்லணுமா சார்
             அவங்களே விடமாட்டாங்க

             எனச் சொல்லியபடி அறைவிட்டு வெளியேற...

                               ( காட்சி  நிறைவு )


(தொடரும்)

Sunday, August 21, 2016

ரஜினி...பா. ரஞ்சித்...கபாலி ( 1 )

                                  காட்சி-1  

(ரஜனி  சுற்றிலும் கண்ணாடிப் பதித்த தனது
அறைக்குள் அதீதச் சிந்தனையுடன்
தன் மோவாயைத் தடவியபடி ஆழ்ந்த யோசனையில்
இருக்கிறார்.

சட்டென நெற்றியைத்
தேய்த்தபடியும்,சடாரெனத் திரும்பியப்படியும்
கண்களை கண்ணாடியின் மிக அருகில்
கொண்டுபோய்விழித்துப் பார்ப்பதும்
ஏதோ அவசியமாய் ,அவசரமாய்
ஒரு முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்
இருப்பதை நமக்குப் புலப்படுத்துகிறது

திடீரென சட்டென முன்பிருந்த கண்ணாடி டேபிளில்
ஓங்கிக் குத்தியபடி நிமிர்கிறார்

கண்ணாடியில் அவர் மெல்லப் புன்னகைப்பது
நமக்குத் தெரிகிறது.அவசரமாய் கதவைத் திறந்து
வெளியேறுகிறார் )


               காட்சி -2

( கல்யாண மண்டபம் போல் இருக்கிற ஹாலின்
ஊஞ்சலில்  எங்கோ வெறித்துப் பர்ர்த்தபடி
மிக வேகமாக ஆடியபடி இருக்கிறார் ரஜினி
இடது புறம் அவர் மனைவி லதா அவர்களும்
வலது புறம் இரண்டுப் பெண்களும் பதட்டத்துடன்
நிற்கிறார்கள். வேகமாக ஒரு முறை ஊஞ்சலை
ஆட்டிவிட்டு அதுவாக ஓய்கிறவரை விட்டு விட்டு
அது நின்றவனுடன் பேசத் துவங்குகிறார் )

ரஜினி  (மனைவியைப் பார்த்தபடி )
            எஸ் எஸ். நானும் ரெண்டு நாளா நீ
            சொன்னதையெல்லாம்..
            ஆமாம்..நீ.... சொன்னதையெல்லாம்...

            (என்றபடி தன் மூத்த மகளைப்பார்க்கிறார்
             அவர் தரையைப் பார்த்தபடி குனிந்து நிற்கிறார் )

            பின் தன் மனைவியைப்பார்த்தபடி

            ..."அடுத்து ஒரு படம் நடிக்க
             முடிவெடுத்து விட்டேன்
             சந்தோஷந்தானே "

அதுவரை எட்டி இருந்த இரண்டு பெண்களும்
ஓடி வந்து  அப்பாவை
அணைத்துக் கொள்கிறார்கள்

மெல்ல நடந்து வந்த அவரது பின்புறம் வந்த
அவரது துணைவியார்  மெல்ல அவரது கழுத்தைக்
கைகளால் சுற்றியணைத்துக் கொள்கிறார்
.
அந்த அன்புப் பிடியில் சிறிது நேரம் கண்மூடி
இருந்தவர்..பின் பேசத் துவங்குகிறார்...

           (எதிரே இருந்த ராகவேந்திரர் படைத்தை
            வெறித்து நோக்கியபடி )

           "ஆம் நடிக்கமுடிவெடுத்து விட்டேன்
            ஆனால் எப்போதும் போல இல்லை
            மிக வித்தியாசமாய்... ஆம்  
             மிக மிக வித்தியாசமாய்
            படத்தில் மட்டுமல்ல...எல்லா விதத்திலும்
            ஆம் எல்லா விதத்திலும் ...

           எனச் அழுத்தமாய்ச் சொல்லியபடி அவருக்கே
           உரித்தா அந்த "ஹா...ஹா.." என்று
          சப்தமாய்ச் சிரிக்கிறார்
            எல்லோரும் என்ன சொல்லப் போகிறாரோ என
            ஆவலுடனும் அதிர்ச்சியுடனும் அவரைப்
             பார்த்தபடித்  திகைத்து நிற்கிறார்கள்

             பின் அவரே தொடர்கிறார்

ரஜினி  ( தன் மனைவியை நோக்கி )
            உடன் தாணுவுக்கும்ரஞ்சித்துக்கும்
            ஒரு போன் போட்டு அவர்களுடன்
           ஒரு படம் பண்ண விரும்புவதாகச் சொல்லு
           இன்னைக்கே..அதாவது இன்னைக்கே "

           எனச் சொல்லியபடி பெண்கள் இருவரின்
           கன்னங்களில்அன்பாய்த் தட்டியபடி
           எழுந்து செல்கிறார்
         
           லதா ரஜினி அவர்கள் மெல்ல திரும்பிக்
            காலண்டரைப் பார்க்க அதிலிருந்த
            வியாழக்கிழமைப் பெரிதாகி பெரிதாகி
            திரை மறைக்க காட்சி முடிகிறது

Saturday, August 20, 2016

நிஜம் உணர வரும் சுகம்

வண்ணமயமான மேடையில்
மழலைப் பள்ளியின்
ஆண்டுவிழா
கோலாகலமாக
நடந்து கொண்டிருக்கிறது

நாங்களும்
இரசித்துக் கொண்டிருக்கிறோம்

ஆங்கிலத்தில் 
ஒரு குழந்தை பேசிமுடித்ததும்
எங்களை விட
கூடுதல் நேரம்
கைதட்டிக் கொண்டிருக்கிறார்
எங்கள் அருகிலிருந்த
ஆங்கிலப் பேராசிரியர்

பின் அவராகவே
காதோரம் மெல்ல

"மிகச் சரியான
உச்சரிப்பை விட
மழலைகளின் உச்சரிப்பே
அழகாகவும் இருக்கிறது
அருமையாகவும் இருக்கிறது" என்கிறார் 

அவர் கண்களில்
லேசான ஈரக் கசிவு

அவர் வார்த்தையைக் கேட்டதும்
என் கண்களும் 
பனிக்கத் துவங்குகிறது

அருகிலிருந்த நண்பன்
"உனக்கென்னடா ஆச்சு " என்கிறான்

நான் உடைந்த குரலில் 
"என் எழுத்தையும் பாராட்டுகிற
சிறந்தப் படைப்பாளிகளின்
நினைவு வந்தது " என்கிறேன்

புரிந்து கொண்டவன்
மெல்லக் கைப்பிடித்து அழுத்துகிறான்

ஆறுதலாய் இருக்கிறது

கற்பனை  தரும்
போலிச்   சுகத்தை   விட
நிஜம் உணரவரும்  சுகம்
கூடுதலாக இருக்கத்தானே சாத்தியம்  ?

Friday, August 19, 2016

நாளொன்று.....

நாளொன்று
மெல்ல நழுவிக்கொண்டிருக்கிறது

கிழக்கில் மெல்ல ஒளிர்ந்து
நண்பகலில் கனன்று
அதற்கு வருந்துவது போல்
மாலை மெல்லத் தலைச்சாய்த்து
பகலென....

மெல்ல இருள் பரப்பி
நடு இரவில் அடர்த்திக் கூட்டி
பின் பலம் இழந்தது போல்
அடங்கி மெல்ல மாயமாய் ஒடுங்கி
இரவென......

நாளொன்று
மெல்ல நழுவிக் கொண்டிருக்கிறது

நம்பிக்கையுடன்
தன்னை எதிர்க்கொள்பவனுக்கு
வாழ் நாளில்
ஒன்றைக் கூட்டியதாய்
நம்பிக்கையூட்டி...

நம்பிக்கையின்றி
தன்னைஎதிர்க்கொள்பவனுக்கு
வாழ் நாளில்
ஒன்றைக் கழித்ததாய்
அவ நம்பிக்கையூட்டி

இரண்டுமற்று
தன் நினைவு அற்றவனுக்கு
அவன் வாழ்வில்
தான் ஒரு பூஜ்ஜியமாய்ப்
போக்குக் காட்டியபடி

மெல்ல மெல்ல
நகர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது
எப்போதும் போலும்
இன்றைய நாளும்

Thursday, August 18, 2016

"லயம் "என்கும் சாத்திரம்.....

 நோக்கம் விட்டு
விலகாத
எண்ணங்களும் 
அதை மிகச் சரியாகத்
தாங்கும்படியான
வாக்கியங்களும்
அதனுள் மிகச் சரியாய்ப் 
பொருந்துபடியான
வார்த்தைகளும்
சூழல் பொருத்துப் 
பொருத்தமான தொனியும்
அறிந்து பேசுவதுப் 
பேச்சுக் கலை எனில்...

தொனி,
வார்த்தை,
வாக்கியம்
எண்ணம் கடந்து
மிகச் சரியாய்
பேசுவோனின்
நோக்கமறியத் தெரிதலே
கேட்கும் கலை

அனுபவம் விட்டு விலகாத
உணர்வும்
உணர்வினைப் புரிந்துப்
பொருந்திக் கொள்ளும்
வடிவமும்
வடிவம் பொருத்து
வளைந்து கொள்ளும் 
வார்த்தைகளையும்
மிகச் சரியாய்த் 
தேர்ந்தெடுக்கத் தெரிதலே
லாவகமாய்
கோர்க்கத் தெரிதலே
படைப்பின் இலக்கணம் எனில்...

லாவகம்
வார்த்தை
வடிவம்
உணர்வு கடந்து
மிகச் சரியாய்ப் 
படைப்பினில்  ஊடாடும்
அனுபவத்தை அனுபவிக்கத் தெரிதலே
 இரசனைக்  கலை 

துவங்கியப்  புள்ளியில்
வளைந்தக்  கோடு
இணைகையில்தால் 
வட்டம்  என்கும்  கணிதச்   சூத்திரம்

இருவர் உணர்வுகளும்
உச்சமாகி
ஒரு நொடியில் இணைவதையே  
"லயம் "என்கும்  உடற்  சாத்திரம்

ஆம்
படைப்பவன் இரசிப்பவன்
இருவரின் அனுபவச்  சங்கமிப்பே
சிறந்தப்  படைப்பாகவும் சாத்தியம்

      

Wednesday, August 17, 2016

ஐயனார் சாமியும் கண்காணிப்புக் கேமராவும்....

சிறு வயதில்
வாரம் இருமுறை
எங்கள் ஐயனார்சாமியைப்
பார்க்கவில்லையில்லை யெனில்
என் மனம் ஒப்பாது

ஊருக்கு
வெகு வெகுத் தொலைவில்
குதிரையில்
மிக மிக உயரத்தில்
அமர்ந்தபடி
ஊரையே
பார்த்துக் கொண்டிருப்பார்
காத்துக் கொண்டிருப்பார்
எங்கள் ஐயனார்சாமி,,

ஊரின்
ஒவ்வொரு வழித்தடமும்
அவர் பார்வையில் இருக்கும்
ஊரின்
எந்த ஒரு சிறு நிகழ்வும்
அவர் ஆசி வழங்கவே துவங்கும்

குற்றப் பயத்தாலோ
தீவீர நோயாலோ
வருடத்துக்கு இருவர்
இரத்தம் கக்கிச் சாகப்
படையல் கூடிப் போகும்
ஐயனாரின் பலம் கூடிப்போகும்
குற்றங்களும் குறைந்துப் போகும்


இப்போது ஊர்
கிழக்கு மேற்காய்
மிக விரிந்துப் போகக்
கட்டிடங்களும்
மிக உயர்ந்துப் போகத்
தன் இருப்பிடம் தெரியாதும்
தன் நெடியப் பார்வையற்றும் போனார்
எங்கள் ஐயனார்சாமி

நோய்க்கு மருத்துவரும்
காவலுக்குக் காவல் நிலையமும் வர
படையல்கள் குறையக்
கொஞ்சம் விலகவும்
பார்வையைக் குறைக்கவும்
துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

சமீபத்தில் இரண்டுமுறை
அவர் உண்டியலே
உடைத்துத் திருடப்பட
கண்காணிப்புக் கேமரா
பொருத்தப்படத்
"தனக்கே காவலா " என
நொந்து போனதன் அடையாளமாய்
மெல்ல மெல்ல
விரிவுபடத் துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

ஜபர்தஸ்தாய்
சாரட்டில் பார்த்த ஜமீந்தாரை
நடக்கப் பார்த்து
நொந்தக் கதையாய்
மேகம் தொட்டு நின்ற
எங்கள் ஐயனார்சாமியை
இடுக்கில் பார்ப்பதற்கு
எனக்கும்
மனம் ஒப்பவில்லை

வலுக்கட்டாயமாய்
அவரைப்பார்ப்பதைத்
தவிர்க்கத் துவங்கினேன் நான்

எங்கள்
ஐயனார்சாமிக்கும்
மனம் ஒப்பாதே
இருந்திருக்க வேண்டும்

இல்லையெனில்
எத்தனையோ
புயல் மழையைத்
தூசியாய்த் தள்ளியவர்
நேற்றையச் சிறுத்தூறலுக்கு ...

என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது ?

Tuesday, August 16, 2016

தூம்பை விட்டு...

ஐந்தும்  ஆறும்  எனும் பொருளில்
இருந்த அஞ்சறைப்பெட்டி
இப்போது மிக அழகாய்
வெறும் ஐந்தாய்..

மீதம் ஆறு எதுவென
யாருக்கும் தெரியவில்லை

தொலைக்காட்சிப் பெட்டியருகில்
சட்டென எடுக்கும்படியாய்
மருந்துப் பெட்டி
எப்போதும் நிறைந்தபடி

சமயத்தில் யாருக்கு எதுவெனத்
தினமும் குழம்பும்படி..

Monday, August 15, 2016

எங்கள் பாரதிக்கு.. எங்கள் வாக்குறுதி

இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்...

(அடிப்படை வசதிக ளின்றி
அனுதினம் துயருற் றாலும்  )

பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்...

( எதிர்ப்பினைக்  காட்டி  நாளும்
தடியடி அதைப்பெற் றாலும்)

விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்

(அரசுகள் எல்லாம் எங்கள்
நலமதை மறந்திட்டாலும்  )

சுதந்திர தேவி உன்னை
தொழுதிடல் மறக்கி லேனே

(சுதந்திர தேவி தன்னை
தொழுதிட மறக்கி லோமே )

அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Sunday, August 14, 2016

சாவுக் கென்று சாவுவரும்-

சாவுக் கென்று சாவுவரும்-நம்
சஞ்சல மெல்லாம் தீர்வுபெறும்
ஈவு இரக்கம் ஏதுமின்றி-தான்
நினைத்த நொடியில் வெறிகொள்ளும்  (சாவுக்கென்று )

நோவு மூப்பு  எனச்சொல்லி-உடன்
நொடியில் விபத்து எனச் சொல்லி
நூறு காரணம் தினம் சொல்லி-தன்
கோர முகத்தைத் தினம்காட்டும்    (சாவுக்கென்று )

காலம் வெல்லும் வகையினிலே-மனிதன்
தனது எல்லைக் கடக்கையிலே
கோபம் கொண்டுப் பழித்தீர்க்க -அந்தக்
காலன் உடனே கைக் கோர்க்கும்   (சாவுக்கென்று )

முத்து முத்தாய் மணித்தமிழில்-மனம்
மயங்கிச் சொக்கும் வகையினிலே
நித்தம் கவிகள் தந்தவனை-எங்கள்
முத்துக் குமாரின் மூச்செடுத்த       (சாவுக்கென்று )


Thursday, August 11, 2016

பதிவர்களாய்..கவிஞர்களாய்

நம்
இளமைப் பருவத்தில்
தீமைகள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவைகள் எல்லாம் எங்கோ
மிக மறைவாய்க்
கண்ணுக்குத் தெரியாதபடி..
கைகளுக்கு எட்டாதபடி
மிக மிக முயன்றால் மட்டுமே
அபூர்வமாய் கிட்டும்படி...

இப்போது
நல்லவைகள் இருக்கிறபடி...

நம்
இளமைப் பருவத்தில்
தீயவர்கள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவர்கள் எல்லாம்
மிக ஒதுங்கியபடி
அனைவருக்கும் தெரியாதபடி
அன்றாடவாழ்வில் தட்டுப்படாதபடி
அளவை மீறுகையில் மட்டும்
இருப்புத் தெரியும்படி

இப்போது
நல்லவர்கள் உள்ளபடி

என்ன செய்வது ?

கள்குடித்தக் குரங்கதுப்
பாறையில் நின்றபடித்
தன் முட்டைவைத்து
விளயாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறப்
பெட்டைகளாய்...

நாகரீகக் காலம்
நுகர்வுக்கலாச்சாரத்தில்
இளமையைவைத்து
விளையாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறோம்
ஊமைகளாய்..

என்ன செய்யலாம் ?

மழையில்லை என
புலம்பிய படியும்
அழுதபடியும்
இருத்தலை விடுத்து
நமபிக்கையுடன்
உழுதுக் கொண்டிருக்கும்
புஞ்சை விவசாயியாய்

மாற்றும் வழியதுத்
தெரியவில்லையெனப்
புரியவில்லையெனச்
சும்மா இருத்தலைவிடுத்து
நம்பிக்கையுடன்
எழுதிக்கொண்டிருப்போம்
பதிவர்களாய்..கவிஞர்களாய்

Wednesday, August 10, 2016

இடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்.. ( 2 )

பயிற்சி வகுப்புகள் ஸபா தீவில் முடிந்ததும்
மலேசியாவைச் சுற்றிப்பார்க்கும் விதமாக
மலேசியாவில் ஏற்கெனவே அறைகள்முன்பதிவு
செய்திருந்தோம்

எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு நிலைத் தகவலாக
என்னுடை பதிவில் நான் மலேசியா வருகிற
விஷயத்தையும், தங்குமிடத்தையும் 
பதிவு செய்திருந்தேன்

தினமும் காலையில் சிற்றுண்டு முடித்ததும்
பகுதி பகுதியாக அவர்கள் அவர்களுக்குப்
பிடித்த இடத்தைப் பார்க்கக் கிளம்பினால்
மதிய உணவு மற்றும் இரவு உணவு முடித்து
ஓய்வெடுக்கத்தான் தங்குமிடம் திரும்புவோம்

அப்படி இரண்டாம் நாள் இரவு பத்து
மணி அளவில் அறைக்குத் திரும்புகையில்
வரவேற்பறையில் இருந்த என் நண்பர் 

"காலையில் இருந்து உங்கள் மலேசிய
நண்பர் ஒருவர் உங்களைப் பார்ப்பதற்காகக்
காத்திருக்கிறார்.அவர் உங்களை ரமணி என
விசாரித்திருக்கிறார். அந்தப் பெயர் நம்
குழுவில் உள்ளோர் பலருக்கும் தெரியாததால்
அப்படி யாரும் வரவில்லையென்று
சொல்லி இருக்கிறார்கள்.ஆயினும் அந்த நண்பர்
உறுதியாக வந்திருக்கிறார் எனச் 
சொல்லிக் கொண்டிருக்கையில் நல்ல வேளை
நான் வந்தேன். எனக்கு உங்கள் துணைப்பெயர்
தெரியும் என்பதால் நான் தான் நீங்கள் வந்த விவரம்
சொல்லி இரவுதான் வருவார்கள் எனச்
 சொல்லி இருந்தேன்

அவர்கள் ஊர் தூரம் என்பதால் சென்று வருவதை விட
அருகில் அறை எடுத்துத் தங்குவதாகவும் எப்படியும்
இரவு பார்த்துவிட்டே ஊர் சொல்வதாகவும்
சொன்னார்கள் " என்றார்

மலேசியா வந்ததும் உடன் தற்காலிக போன்
இணைப்பு எடுக்காதது எவ்வளவு தவறு என
நினைத்தபடி வாயிலுக்கு வர அங்கே பதிவர்
நண்பர் ரூபன் அவர்கள் தன் நண்பருடன்
வாயிலியே காத்திருந்தார்.

என்னைக் கண்டதும் "தாங்கள் ரம்ணி ஐயா
தானே "எனக் கூறி கட்டிப் படிக்க எனக்குக்
கண் கலங்கிவிட்டது

எழுத்து மற்றும் பின்னூட்டத்தின் வாயிலாக
தொடர்பு கொண்டதன்றி பேசியோ பார்த்தோ
நாங்கள் தொடர்பு கொண்டதில்லை

அப்படி இருந்தும் நான் வந்திருக்கிற தகவல்
அறிந்து எப்படியும் பார்க்கவேண்டும் என
காலை முதல் காத்திருந்ததை எண்ண எண்ண
வலைத்தளம் மூல்ம் உண்டாகும் இணைப்பு
எத்தனை உண்மையானது, வலுவானது
அன்பானது எனப் புரிந்தது

பின் அவருடன் பின்னிரவு வரை பேசிக் 
கொண்டிருந்துவிட்டு அருகில் இருந்த 
சிற்றுண்டிச் சாலையில் உணவருந்திவிட்டுப் 
பிரிந்தோம்

மறு நாளும் எனக்கும் என மனைவிக்குமாக
மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களுடன் வந்திருந்து
இரவு எங்களுடன் தங்கிவிட்டுச் சென்றது
இன்று வரை மற்க்கமுடியாத நிகழ்வாக
மலேசியாவில் மயக்க வைத்த பல இடங்கள்
தந்த சுகந்த நினைவுகளை விட

 இன்றுவரை இந்த நினைவுதான் என் நெஞ்சில் 
அதிகம் நிறைந்திருக்கிறது

இந்தச் சந்திப்பே பின்னாளில் ஊற்று என்கிற
இலக்கிய இணய தள அமைப்பை உருவாக்கக்
காரணமாகவும் இருந்ததது

நண்பர் பதிவர் ரூபன் அவர்களுடன் இருந்த
அந்த மகிழ்வான தருணங்களை இங்குப்
பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

இத்தனை நாள் கழித்து இந்த நெகிழ்சியானப்
பதிவு இப்போது எதற்கு ?

அதற்குக் காரணமிருக்கிறது..
அது அடுத்தப் பதிவில்


Tuesday, August 9, 2016

இடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்..

பொதுச் சேவையில் ,சமூக இயக்கங்களில் எனக்கு
சிறு வயது முதலே அதிக ஈடுபாடு உண்டு

அந்த அந்த வயதில் அந்த அந்த சூழலில்
வய்து மற்றும் சூழலுக்கு ஏற்றார்ப் போல
ஒரு சமூக மனிதனாகவே வாழ எனக்குத் தொடர்ந்து
வாய்ப்புக் கிடைத்ததுக் கூடப் பாக்கியம்தான் என்கிற
நினைப்பும் எப்போதும் உண்டு

அதன் தொடர்சியாய் இப்போது  கூட உலகளாவிய
சேவை அமைப்பான அரிமா சங்கத்தில் தற்போது
மாவட்டத் தலைவராகத் தொடர்கிற எனக்குக்
கடந்த வருடம் வட்டாரத் தலைவராக
பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது

அதற்கான பயிற்சி வகுப்பு மலேசியாவில் உள்ள
ஸபா என்கிற அற்புதமான தீவில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. அந்தப் பயிற்சி முகாம்
அந்த அற்புதத் தீவு ,மற்றும் மலேசியச் சுற்றுப்பயண
அனுபவங்கள் எல்லாம் இன்னும் எழுதப்படாமலேயே
உள்ளது





(பயிற்சி முடித்து அதற்கானச்  சான்று பெறுதல் )

சமீபத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி
உடலால் மறைந்த அப்துல் கலாம் அவர்களின்
காணோளி ஒன்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது

அதிலொரு பள்ளி மாணவன் "தங்கள்
கண்டுப்பிடிப்புகளிலேயே சிறந்த கண்டுபிடிப்பாக
எதைக் கருதுகிறீர்கள் " எனக் கேட்க, அவர்
விண்ணாய்வுத் தொடர்பாக தான் உடன் இருந்து
கண்டுபிடித்தவைகளையெல்லாம் சொல்லி
முடிவாக, ஊனமுற்றவர்களுக்கு பயன்படும்படியாக
எடைக் குறைந்த செயற்கைக் காலணிகள்
செய்ததுதான்எனச் சொல்லி முடித்தார்

https://www.facebook.com/BalaajeeCares/videos/1060691787299933/

அதைப் போல சுற்றுலாவை மட்டுமே பிரதான
வருமானமாகக் கொண்டிருக்கிற அந்த அழகிய
ஸபா தீவு, அமெரிக்க  வேகாவை மிஞ்சும்படியான
மலேசிய காஸினோ,பத்துமலை முருகன் கோவில்
இன்னும் பல நினைவில் இருந்த போதும்
இவைகளையெல்லாம் மிஞ்சும்படியாக ஒரு
நினைவு தொடர்ந்து மனதில் பசுமையாய்த் தொடர்கிறது
என்றால் .....அது.....

( நீளம் கருதி அடுத்தப் பதிவில் 

Monday, August 8, 2016

குளிக்காது பவுடர் அடிக்கிற கதை...

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட்
என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்

 " யார் மாறினாலும்
நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர்ப்  பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர்ப்  பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச்
சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது

இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்

முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாகப்  பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

 அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது

"மொழி  வளர்ச்சிக்கான
அடிப்படை வளர்ச்சிக்  குறித்துச்  சிந்தியாது
வெற்று மொழிமாற்றம் என்பது
குளிக்காது
பவுடர் அடிக்கிற கதைதான்
அது சிலகாலம் மணக்கலாம்
தொடர்ந்துப்   பயன் தராது "என்றேன்

அவனுக்குப் புரிந்தது போல்
மெல்லத் தலையாட்டினான்

வழக்காடும் மொழியாக
ஆங்கிலமே தொடர
பெயர்ப்  பலகை  மாற்றக்  கோரும்
இவர்கள் என்று இதனைப்
புரிந்து கொள்ளப்  போகிறார்கள்  ?

தமிழ் மொழியை
உண்மையாய்  வளர்க்க
ஆவன  செய்யப் போகிறார்கள் ?

   

Sunday, August 7, 2016

படைப்பும் பயனும்

எந்தப் படைப்பும்
இதுவரை எனக்குப்
பயன்தராதுப் போனதில்லை

அதனால
கையில் கிடைக்கும்
எந்தப் படைப்பையும்
இரசிக்காது இருந்ததில்லை

மிக மிக
மோசமான படைப்பெனில்
நான் எழுத வேண்டிய
அவசியம் சொல்லிப் போகும்

ஓரளவு
இரசிக்கக் கூடிய படைப்பெனில்
நான் தொடர்ந்து எழுத
தைரியம்  தந்துப் போகும்

ஆகச்
சிறந்தப் படைப்பெனில்
என் எழுத்துச் சிறக்க
நல்வழிக் காட்டிப் போகும்

அதனால்
எந்தப் படைப்பையும்
நான் இரசிக்காதும் இருப்பதில்லை

பிரதிபலானாய்
எந்தப் படைப்பும்
எனக்குப் பயன்தராதும்  போவதில்லை

Friday, August 5, 2016

அபுரிக் கவிதைகள்

"அந்த ஜோல்னாக் கவிஞன்
 கூப்பிட்டான்.பூங்காவில் ஒரு கூட்டமாம்
 போகலாமா ? " என்றான் நண்பன்

"எனக்கு இந்த ஜோல்னா,குறுந்தாடி
ஜிப்பா,கவிஞ்ர்களைக் கண்டாலே அலர்ஜி
கொள்கையை நிலை நாட்ட
எப்போதுசட்டையைக் கிழிப்பார்கள்
எனச் சொல்ல முடியாதே "என்றேன்

"இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறார்கள்
பயப்படாமல் வா " என
இழுத்துப்போனான் நண்பன்

கூட்டம் கூடி இருந்தது
வட்ட வடிவில்
பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்

நாளை மறு நாள்
உலகம் அழியப்போவது போலவும்
அது இவர்களுக்கு மட்டும் தான்
தெரியும் போலவும்
ஏதாவது செய்தாகவேண்டுமே என்கிற
அதீதக் கவலையில் இருப்பது போல்
அனைவரின் முகங்களும் இறுகிக் கிடந்தன

நாங்கள் இருவரும் அமர
வட்டம் கொஞ்சம் நெகிழ்ந்து
எங்களையும் சேர்த்துக் கொண்டது

நாங்களும் முகத்தை இறுக்கிக் கொண்டோம்

ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரியைப் போலிருந்தவர்
பேசத் துவங்கினார்

"இது பதினெட்டாவது வாசிப்புக் கூட்டம்
இம்முறையும் ஐம்பது பேருக்கு  கடிதம் போட்டேன்
பதினைந்து பேருடன் போனில் பேசினேன்
பத்து  பேருக்குக் குறையாமல் வந்திருப்பது
நம்பிக்கையூட்டுகிறது

நம் அமைப்புக்குத் தலைவர் எல்லாம் கிடையாது
எல்லோரும் தலைவர்கள்தான்..."
இன்னும் என்ன என்னவோ எல்லாம் சொல்லித்
தலைமை உரை ஆற்றியப் பின்

"கவிதை வாசிப்பைத்   துவங்கலாமா " எனக்கேட்டு
ஜோல்னாவில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப்
பிரித்து உரக்கப் படிக்கத் துவங்கினார்.

சிறுவன் மிட்டாயை இரசித்துச் சாப்பிடுவது போல
ஒவ்வொரு வார்த்தையும் இரசித்துப் படித்தார்

கூட்டம் சப்புக் கொட்டியது

எங்களுக்கு இது தமிழ் என்பது புரிந்தது
வார்த்தைகளும் புரிந்தது
அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை

எதற்கு வம்பு என்று நாங்களும்
சப்புக் கொட்டி வைத்தோம்

படித்து முடித்ததும் " இக்கவிதை ஒவ்வொருவருக்கும்
அவரவர் அனுபவம் பொறுத்து
புதுப் புதுப் பொருள் கொடுத்திருக்கும்
எனக்கானதைச் சொல்லி கவிதையை
நீர்த்துப் போகச் செய்ய விருப்பமில்லை "என்றார்

கூட்டமும் கனத்த (" ன "வுக்கு முடிந்தால்
 ஐந்து சுழி கூடப்போட்டுக் கொள்ளலாம் )
மனத்தோடு மௌனமாய் அங்கீகரிக்க
அடுத்தவர் அடுத்தக் கவிதையைப்
 படிக்கத் துவங்கினார்

இப்படியே பத்துப்  பேரும் அர்த்தமே சொல்லாது
படித்து முடிக்கிற நேரத்தில்
முதலில் படித்தவருக்குஅலைபேசியில்
யாரோ பேச,

"நண்பர்களே !மனைவிக்கு இரண்டு நாளாய்
கடும் காய்ச்சல்.நான் கிளம்புகையில்
வயிற்றுப் போக்கும் சேர்ந்து விட்டது
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல
எட்டுக்குள் வருவதாகச் சொல்லி இருந்தேன்
இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் "
எனச் சொல்லியபடி அனைவரிடமும்
விடைபெற்றுக் கொண்டுக் கிளம்பினார்

கவிதைக்குச் செய்ய வேண்டிய கடமையை
மிகச் சரியாகச் செய்து விட்டதைப் போலவும்
இனி கவிதைப் பிழைத்துக் கொள்ளும்
என்பதைப் போலவும் அவர் திருப்தியுடன்
சிரித்துச் சென்றார்

கவிதை இவர்களைக் கஷடப்படுத்துகிறதா
அல்லது இவர்கள்  கவிதையை
கஷ் டப்படுத்துகிறார்களா என  எனக்குக்
குழப்பமாக இருந்தது

"இது எந்த மாதிரியான கவிதையில் சேரும்
மரபு தெரியும்  வசன கவிதை,புதுக்கவிதை
ஹைக்கூ மற்றும் சென்ட்ரியூ  கூடத்  தெரியும்
இந்தப் புரியாத கவிதைகள் எதில் சேர்த்தி"
என்றான்  குழப்பத்துடன் நண்பன்

வட்டம் இரண்டாக மூன்றாக ஐந்தாக
உடைந்து தனித்தனியாய்ப் பிரியத் துவங்கியது

"இதன் பேர் அபுரி "என்றேன்

"இப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லையே"

"இது காரணப் பெயர் .புரிய முயற்சி செய்
புரிந்தால் இந்தக் கவிதைகள் போல
சுகம்  தரும்.புரியவில்லையா  ஒன்றும்
பிரச்சனை இல்லை .புரிகிறதா "என்றேன்

நாங்களும் கிளம்பினோம்

(புதிய வார்த்தைத் தந்த  பதிவர்
ஸ்ரீராம் அவர்களுக்கு  நன்றி )


  

Thursday, August 4, 2016

சமைத்தலும் ,படைத்தலும்

என்ன எழுதுவது என
யோசித்துக் கொண்டிருப்பேன் நான்

என்ன சமைக்கலாம்
என யோசித்துக் கொண்டிருப்பாள் மனைவி

மன அறைத் திறந்து
கரு எது சரியாய் வரும் எனத்
தேடத் துவங்குவேன் நான்

குளிர்சாதனப் பெட்டித் திறந்துக்
காய்எது சரியாக இருக்கும் என
தேர்ந்தெடுக்கத் துவங்குவாள் அவள்

என் தேர்வில் கூடுமானவரைக்
 கூறியது கூறாமல் இருக்கக்
கூடுதல் கவனம் இருக்கும்

அவளும் கூடுமானவரையில்
 சமைத்ததுச்  சமைக்காமல் இருக்க
கூடுதல் கவனம் கொள்வாள்

தேடுகையில் எனக்கு
சட்டென ஏதோ ஒன்று கூடுதல்
கவனம்  கொள்ளச் செய்யும்

அது அன்றைய செய்திப்  பொறுத்தோ
பாதித்த நிகழ்வு குறித்தோ இருக்க
 கூடுதல் சாத்தியம் உண்டு

தேடுகையில் அவளுக்கும்
சட்டென ஏதோ ஒன்று
கூடுதல் அக்கறை கொள்ளச் செய்யும்

அது அன்றைய நாள், திதி குறித்தோ
அல்லது உடல் நிலைக் குறித்தோ இருக்க
கூடுதல் சாத்தியம் நிச்சயம்

கரு ஒன்று கிடைக்கும் வரைத்தான்
எனக்குள் ஒரு மதமதப்பு  இருக்கும்

எது என்று முடுவெடுக்கும் வரைத்தான்
அவளுள்ளும் ஒரு மெத்தனம் இருக்கும்

பின் எழுதி முடிக்கும் வரை நான்
வேறெதிலும் கவனம் கொள்ள மாட்டேன்

பின் சமைத்து முடிக்கும் வரை அவளும்
வேறேதிலும் நினைவைத் திருப்பமாட்டாள்

ருசியிலும்  சத்திலும் குறைவிருக்க
அவள்  ஒருபோதும் சம்மதிப்பதில்லை

கருவிலும் எளிமையிலும் குறைவிருக்க
ஒருபோதும் சம்மதிப்பதில்லை  நானும்

 எல்லாவற்றிலும்

உணவது  சமைத்தலும்
கவியது படைத்தலும்
ஒன்றாய் இருந்தபோதும்
தொடர்ந்து நடந்தபோதும்

"ஆயிரம் சொல்லுங்க
எங்க அம்மா கைப்பக்குவம்
எனக்கில்லை  "என்கிற
சலிப்பு அவளிடமும்

"ஆயிரம் கடந்தாலும்
 எழுத்து  இன்னும்  எனக்கு
வசப்படவில்லை "என்னும்
ஆதங்கம் என்னிடமும்

நீங்காது தொடர்வதால் ...

 என்ன எழுதுவது புதிதாய்  என
யோசித்துக் கொண்டிருக்கிறேன்  நான்

என்ன சமைக்கலாம் புதிதாக
என யோசித்துக் கொண்இருக்கிறாள் என்  மனைவி

Wednesday, August 3, 2016

அகத்தினை... புறத்தினை

அகப்பொருள்  எனில்
காதல் எனவும்
புறப் பொருள் எனில்
வீரம் எனவும்
நம் முன்னோர்கள் சொன்னதை
கொஞ்சம் கூடுதலாகப் ( ? )
புரிந்து கொண்டதால்...

காதலைக் காமமெனவும்
வீரத்தை வன்முறை எனவும்
மடைமாற்றி விட்டோம்

அதனால்
சிதிலமடைந்துக் கிடைக்கிறது
நம் அகமும் புறமும்

அதனால்
சீரழிந்துத் தொலைக்கிறது
நம் மனமும்  இனமும்

பாரதியின்
புதிய ஆத்திச் சூடிபோல்

அகத்தினைச் சீர்செய்ய
அறத்தினை வலியுறுத்தும்
புதிய அகப் பொருளை ..

புறத்தினை நேர்செய்யப்
பொறுப்பினை வலியுறுத்தும்
புதிய புறப்பொருளை ..

படைக்க முயல்வோம் வாரீர்
பண்டைப் பெருமைகளை
மீட்கத் துணிவோம் வாரீர்

Tuesday, August 2, 2016

தொடர் பயணம்

(ஆறு  வருடம்

1000 வது பதிவு

116 நாடுகளில் தொடர்பவர்கள்

4 இலட்சத்திற்கும் மேற்பட்ட   பக்கப் பார்வை

30000/ க்கும் மேற்பட்ட  பதிலுரைகள்

10 க்குள் தொடர்ந்து  தமிழ் மணத்தில் முன்னிலை
                         (தற்சமயம்   5 /  12279 )

இவைகளையெல்லாம்  அடையக்  காரணமாய்
இருக்கிற  பதிவர்கள்  அனைவருக்கும்
என மனமார்ந்த  நன்றி )


                                        **********************************

சமதளமாகவே
காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
ஒரு ஓரமாகவே  இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை
கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி
ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை
இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்
எதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை
தொடர்கிறேன் உங்கள் ஆசியுடனே 

Monday, August 1, 2016

"உண்மைக்கும் கவிதைக்கும்.....

"உண்மைக்கும்
கவிதைக்கும்
அதிகத் தூரமோ ?

இல்லையெனில்
ஏன் கவிஞனை
பொய்யன் என்கிறார்கள் ? "
என்றாள் அவள்

"இல்லை இல்லை
தன் கூற்றுக்குக்
கொஞ்சம் அழுத்தம் கொடுக்க
சில வார்த்தைகளைச் சேர்ப்பான் அவன்

அது அவனைப்  பொய்யனாக்கி விடுகிறது
மற்றபடிக்  கவிஞர்கள் எல்லாம்
அரிச்சந்திரன் உறவுதான் " என்கிறேன்

கொஞ்சம் யோசிக்கும்
பாவனையில் இருந்த அவள்
"மிகச் சரியாகப் புரியவில்லை " என்றாள்

நான் சிரித்தபடிச் சொன்னேன்

"தங்களின்  இந்த வாக்கியமே
அற்புதக் கவிதைதான்
நீங்கள் சிறந்த கவிஞர்தான் "

"புரியவில்லை " என்றாள்

"புரியவில்லை  என்பது உண்மை
மிகச் சரியாக என்றது கவித்துவம்" என்றேன்

"புரிந்தது " என்றாள் நாணயமாக

மலேசியக் கபாலி.....அமெரிக்காவில்

ஆறு மாதப் பயணமாக மதுரையிலிருந்து
அமெரிக்கா புறப்படுகையிலேயே
அமெரிக்காவில் இருக்கையில் பார்க்கத்தக்க
விஷயமாகப் பல விஷயங்களைக் குறித்து
வைத்திருந்தோம்

அதில் அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் படம்
பார்ப்பதும் இருந்தது.

மிகச் சரியாகக்  கபாலிப் படம் அதற்கு
ஒத்து வந்ததால் கபாலிப் பார்ப்பதாக
முடிவு எடுத்து வைத்திருந்தோம்

வெளியீட்டு அன்றே பார்ப்பதாகத்தான்
முதலில் திட்டம் இருந்தது

ஆனால் அன்று டிக்கெட் விலை 25 டாலர்
என இருக்க , அவ்வளவு தேவையா என்கிற
எண்ணமும்,மிகச் சரியாக செல்வதற்கான
சூழலும் இல்லாததால் அடுத்த வாரம் செல்வதாக
முடிவெடுத்து இந்த சனிக்கிழமை போனோம்

அமெரிக்க வந்தமுதல் வாரத்திலேயே
கம்பேரிஸன் மேனியாவையும்

(சுத்தம், சமூக ஒழுங்கு,)

கன்வர்ஸன் மேனியாவையும்

(நம் ஊரில் சாலையோரம் பழம் வெட்டி
விற்பவர்கள் ஐந்து ரூபாய்க்கு ஒரு டப்பாவில்
கொடுப்பார்கள்

அதே அளவு இங்குக் கடையில் வாங்க
அது இரண்டு டாலர்நம் மதிப்புக்கு 65 ஆல்
பெருக்கிக் கொள்ளுங்கள்)

தவிர்க்கவில்லையாயின் அமெரிக்காவை
மிகச் சரியாக அனுபவிக்க முடியாது
எனப் புரிந்து கொண்டோம்

நாங்கள் சென்ற தியேட்டர் வளாகத்தில்
ஐந்து தியேட்டர்கள் இருந்தன. அதில்
இந்தி மற்றும் ஆங்கில்ப் படத்துடன்
கபாலிப் படமும் இருந்தது.

ஆனால் ஒரு வாரம் ஆனதாலோ என்னவோ
டிஸ்பிளே போர்டில் கபாலிப் படம் இல்லை
ஆதலால் புகைப்படம் எடுக்கும் எண்ணம்
மங்கிப் போனது

ஏழு மணிக் காட்சிக்கு மிகச் சரியாக
ஆறரைக்குப் போனோம்.

எழுபது வயதுக்குக்கு மேல், நடுத்தர வயது
,குழந்தைகள் என பல்வேறு நிலைகளிலும்
அனைவரும் இருந்ததும்முழுவதும்
தமிழர்களாகவே அதிகம் பேரைப் பார்க்க
மிகவும் உற்சாகமாக இருந்தது

(ஏன் எனத் தெரியவில்லை..மாமியார் தமிழில்
பேசினால் மருமகள் ஆங்கிலத்தில் பதில்
சொல்லிக் கொண்டிருந்தார்.மகன் அம்மா
மகள் அம்மா அப்பா என்றால தமிழில்
பேசிக் கொண்டார்கள்.குழந்தைகள் யாரும்
தமிழில் பேசிக் கொள்ளவில்லை)

தமிழ்த் திரைப்படச் சரித்திரத்தில் மிக மிக
அதிகமாக இந்தியாவில் மட்டுமல்லாது
வெளி நாடுகளிலும் விளம்பரத்திற்காக அதிகம்
செலவழிக்கப்பட்ட படம்,

ரஜினி என்கிற மாஸ் ஹீரோ,
சமீபத்தில் தன்தரமான வித்தியாசமான
படைப்பின் மூலம்

அதிகம் பேசப்படுகிற கவனிக்கப் படுகிற
இய்க்குநர் பா.இரஞ்சித் அவர்களுடன்
இணைந்து வழங்கும் முதல் படம்

முதல் ஒரு வாரத்தில் ஒட்டியும் ,வெட்டியும்
மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டப் படம்

என அனைத்து விஷயத்திலும் கபாலித்
திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன்
பார்க்கத் தக்கப் படமாக இருந்ததால்
துவக்கத்திலிருந்தே கவனம் சிறிதும்
சிதறாமல் படம் பார்க்கத் துவங்கினோம்

விமர்சனம் அடுத்த பதிவில்

(தொடரும் )