Sunday, August 14, 2016

சாவுக் கென்று சாவுவரும்-

சாவுக் கென்று சாவுவரும்-நம்
சஞ்சல மெல்லாம் தீர்வுபெறும்
ஈவு இரக்கம் ஏதுமின்றி-தான்
நினைத்த நொடியில் வெறிகொள்ளும்  (சாவுக்கென்று )

நோவு மூப்பு  எனச்சொல்லி-உடன்
நொடியில் விபத்து எனச் சொல்லி
நூறு காரணம் தினம் சொல்லி-தன்
கோர முகத்தைத் தினம்காட்டும்    (சாவுக்கென்று )

காலம் வெல்லும் வகையினிலே-மனிதன்
தனது எல்லைக் கடக்கையிலே
கோபம் கொண்டுப் பழித்தீர்க்க -அந்தக்
காலன் உடனே கைக் கோர்க்கும்   (சாவுக்கென்று )

முத்து முத்தாய் மணித்தமிழில்-மனம்
மயங்கிச் சொக்கும் வகையினிலே
நித்தம் கவிகள் தந்தவனை-எங்கள்
முத்துக் குமாரின் மூச்செடுத்த       (சாவுக்கென்று )


11 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சாதித்துக்கொண்டிருக்கும் வேளையில் சாவு. ஆழ்ந்த இரங்கல்கள்.

Yarlpavanan said...


'அழகே அழகே'
'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'
ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்
நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!
ஆதலால்,
ஒரு பாவலன் / கவிஞன்
சாவடைந்ததாக வரலாறு இல்லையே!
ஆயினும்
நாமும்
துயர் பகிருகிறோம்!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான இரங்கற்பா.....

ஆனந்தயாழ் தந்த கவி இன்று இல்லை.... வருத்தங்கள். அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

S.P.SENTHIL KUMAR said...

நல்ல கவிஞர். மிக நல்ல மனிதர்.
த ம 3

Seeni said...

வேதனை அய்யா..

Yaathoramani.blogspot.com said...


Dr B Jambulingam said...//

உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam //

உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் said...//
அருமையான இரங்கற்பா.....

//உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

Yaathoramani.blogspot.com said...

S.P.SENTHIL KUMAR said...//

உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Seeni said...//

உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான இரங்கர்பா அருமை...நல்லமனிதர் கவிஞர் இழப்பு கலையுலகிற்கும் அவரது குடும்பத்தாருக்கும்...

Post a Comment