Tuesday, August 2, 2016

தொடர் பயணம்

(ஆறு  வருடம்

1000 வது பதிவு

116 நாடுகளில் தொடர்பவர்கள்

4 இலட்சத்திற்கும் மேற்பட்ட   பக்கப் பார்வை

30000/ க்கும் மேற்பட்ட  பதிலுரைகள்

10 க்குள் தொடர்ந்து  தமிழ் மணத்தில் முன்னிலை
                         (தற்சமயம்   5 /  12279 )

இவைகளையெல்லாம்  அடையக்  காரணமாய்
இருக்கிற  பதிவர்கள்  அனைவருக்கும்
என மனமார்ந்த  நன்றி )


                                        **********************************

சமதளமாகவே
காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
ஒரு ஓரமாகவே  இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை
கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி
ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை
இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்
எதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை
தொடர்கிறேன் உங்கள் ஆசியுடனே 

13 comments:

KILLERGEE Devakottai said...

கவிஞரின் எழுத்துப்பயணம் மென்மேலும் சிறந்து தொடர்ந்திட எமது வாழ்த்துகள் - கில்லர்ஜி

Unknown said...

வாழ்த்துகள் !உங்களின் பயணத்தில் நாங்களும்தொடர்கிறோம் !(இடைவெளியின்றி:)

தனிமரம் said...

வாழ்த்துக்கள் ஐயா! தொடர்ந்தும் எழுத்துலகில் பயணிக்க ,வாழ்த்துக்களும் ,பிரார்த்தனைகளும்.

தி.தமிழ் இளங்கோ said...

// தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி
ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை
இதில் எனக்கு எவ்வித குழப்பமுமில்லை //

என்ற உங்கள் அனுபவ மொழியோடு, உங்கள் பயணம் தொடரட்டும். வழியில்தான் எத்தனை மனிதர்கள்? எத்தனை அனுபவங்கள்? உங்களது 1000 – ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள். ( அமெரிக்காவில் பதிவர்கள் சந்திப்பு ஏதும் இல்லையா?)

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் எழுத்துலகப் பயணம்
தொடரட்டும் ஐயா
புதுப் புது உச்சங்களை எட்டட்டும்
வாழ்த்துக்கள் ஐயா

மனோ சாமிநாதன் said...

//சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை
கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்//

மிக அருமை!

ஆயிரமாவது பதிவு என்ற சாதனை அசத்துக்கிறது! இனிய வாழ்த்துக்கள்!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

“ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி” அய்யா ரமணி அவர்களுக்கு வாழ்த்துகள்.
மிச்சப் பதிவுகளில் உச்சப் பதிவுகளைத் தர என் இனிய வாழ்த்துகள்

K. ASOKAN said...

ஆயிரம் பதிவு கண்ட அற்புத மனிதருக்கு தலைதாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

G.M Balasubramaniam said...

சிகரத்தை எட்டிவிட்டபின் இலக்குதான் என்ன.?ஆங்கிலத்தில் ஒன்று கூறுவார்கள் AIM AT THE STARS THEN AT LEAST YOU WILL REACH THE TREE TOP. ஆயிரமாவதுபதிவுக்கு வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

தங்கள் பய்ணம் தொடர எனது வாழ்த்துகள்.....

kowsy said...

மனதாலும், படைப்புக்களாலும் சிகரத்தைத் தொட்டுவிட்டீர்கள். தொடரும் பாதையில் நாமும் தொடர்ந்து நடக்கின்றோம். வாழ்த்துக்கள்

kowsy said...

மனதாலும், படைப்புக்களாலும் சிகரத்தைத் தொட்டுவிட்டீர்கள். தொடரும் பாதையில் நாமும் தொடர்ந்து நடக்கின்றோம். வாழ்த்துக்கள்

V Mawley said...

"It is better to travel than to arrive" என்ற G.K Chesterton னின் வரிகள் மறக்க
முடியாதவை ..ஆயிரமாவது பதிவுக்கு மனமுவந்த பாராட்டுக்கள் ..

மாலி

Post a Comment