Monday, August 22, 2016

ரஜினி ,தாணு , கபாலி ( 2 )

                                  காட்சி 3

டிரைவர் ஒரு பழக்கூடையுடன் பின் தொடர
பூச்செண்டுடன் ரஜினி அவர்களின் வீட்டில்
நுழையும் தாணு ஹாலில் இருந்து வரவேற்கும்
லதா அவர்களிடம் பழக் கூடையைக் கொடுத்து
நலம் விசாரித்து விட்டுப்   பூச்செண்டுடன்
ரஜினி அவர்கள் இருக்கும் அறைக்குள்
நுழைகிறார் )

 ரஜினி ( தான் அமர்ந்திருந்த ஸோபாவில் இருந்து
            வேகமாய எழுந்து வந்து தாணு அவர்களை
            கட்டிப் பிடித்து வரவேற்றபடி )

            வாங்க தாணுசார் வாங்க..வீட்டில் எல்லோரும்
            சௌக்கியமா ?

தாணு (மலர்ச்செண்டி கையில் கொடுத்தபடி )
             எல்லோரும் நல்ல சௌக்கியம், மேடம் போனில்
             தகவல் சொன்னதும் கூடுதல் சௌக்கியம்
             எல்லாம் தங்கள் சித்தம்....

ரஜினி (சட்டென இடைமறித்தபடி )
              எல்லாம் அவன் சித்தம் என்று சொல்லுங்க
   
தாணு அவர் கூட தானாக எதுவும் செய்ய முடியாதே
              யார் மூலமாகத்தானே முடியும்
              நீங்கள்தான் எங்களுக்கு...

ரஜினி (அவர் வார்த்தையை முடிக்க விடாதபடி )
              திருநெல்வேலிக்கே அல்வாவா...சரி சரி
              அதையெல்லாம் அப்புறம் பேசலாம்
              முதலில் உட்காருங்கள்...

              (என தன் ஸோபா அருகில்  இருக்கும்
              இருக்கையில் அமரும்படி
              சைகைக் காட்டுகிறார்
              இருக்கையின் முன் நுனியில் பௌயமாய்
               தாணு அமர..
              எப்படித் துவங்கலாமென்பது போலச் சிறிது
              நேரம் தரையைப் பார்த்தபடி
              குனிந்து கொண்டிருந்த
              ரஜினி அவர்கள் சட்டென நிமிர்கிறார்..

               ஆம் தாணு மேடம் சொல்லி இருப்பாங்களே
               ஆமாம் நாம இணைஞ்சு ஒரு படம் பண்றோம்
               இதுவரை யாரும் செய்யாத மாதிரி...
               வித்தியாசமா... புதுமாதிரியா....

தாணு   செய்துடும்வோம் சார்..இதுவரை யாரும்
                செலவழிக்காதபடி.. பிரமாண்டமா...

ரஜினி   (இடைமறிக்கிறார் ) என வார்த்தையை நீங்க
               சரியா உள் வாங்கல.. நான் சொல்ற
               வித்தியாசமா...புதுமாதிரியாங்கறது
               செலவழிப்பைப்பத்தி இல்லை
               வரவுப் பத்தி.....

தாணு   (சற்று யோசித்தபடி ) சார் சொல்றது
               கொஞ்சம் புரியலை சார்

ரஜினி   (சோபாவை விட்டு எழுந்து சிறிது நேரம்
              முன் பின்னாக நடக்கிறார். அவர் ஏதோ
              பழைய நினைவுகளின் தொடர்ச்சியாய்ப்
              பேசுவது போலப் பேசுகிறார்...

              ஆமாம் தாணு சார்.  புதுமாதிரியாகத்தான்
              ஒவ்வொரு முறையும் அதிகமா செலவழிச்சு
              லாபம் சேத்து அதிகமா வித்து,அந்த அளவு
              படம் வசூல் தராம, டிஸ்டிரிபூட்டர்கள்
             போராட்டம்அ து இதுன்னு அசிங்கப்படுத்தி,
             பின்னால நான்பணம் செட்டில் பண்ணி ....

              (சிறிது பெருமூச்சு விட்டுப்பின் தொடர்கிறார்)
              அது இனி வேண்டாம்....முதல்ல செலவுப் பத்தி
              பேசிப்பேசி வரவைப் பத்திப் பேசாததால
              இந்த தடவ வரவைப்பத்தி முதல்ல பேசுவோம்
              அப்புறம் செலவைப் பத்திப்... புரியுதா

             (சட்டென பேசுவதை நிறுத்தி
             தாணுவைப் பார்க்கிறார்
              தாணு ஒன்றும் புரியாது விழிக்கிறார்
             ரஜினி சார் அவருக்கே உரித்தான ஒரு பெரும்
             சிரிப்பைச் சிரித்து விட்டு பின் தொடர்கிறார்

             ஆமாம் இந்தத் தடவை நாம் படத்தை எடுத்து
             டிஸ்டிரிபூட் பண்ணலை, படத்தை விக்கலை
             படத்தை மார்கெட் பண்றோம்
             ப்ரமாண்டமா.. பாலிவுட்ல பண்ற மாதிரி
             ஹாலிவுட்ல பண்ற   மாதிரி ..இப்பப் புரியுதா...

தாணு (தலையை ஆட்டியபடி ) இப்ப கொஞ்சம்
              புரியுது சார்... நான் என்ன செய்யணும்..
              எப்படிச் செய்யனும்னு மட்டும் சொல்லுங்க
              மிகச் சரியாய்ச் செஞ்சிடறேன்

ரஜினி (நிதானமாய் )
             அதை அடுத்த முறை சொல்றேன்
             அதுக்குள்ள படம் சூட்டிங்க
             ஆரம்ப்த்தல இருந்து முடிகிற வரை

             மீடியாவுல பிரமாண்டமா எப்படி
             எப்படிபி படத்தை  பூஸ்ட் பண்றதுங்கிறதை ஒரு
             ப்ராஜெக்ட் ரிப்போர்ட்  மாதிரி...
             புரிஞ்சதா  பிராஜெக்ட்ரிப்போர்ட்  மாதிரி

             அடுத்த வாரத்துக்குள்ள
             தயார் செய்துட்டு வாங்க
             நீங்க அனுபவமான பெரிய ப்ரடூஸர்
             உங்களுக்குச்சொல்லவேண்டியதில்லை
             முதல் ஒரு வாரத்தில் டிக்கெட் கிடைப்பதே
             பெரிய விஷயம் மாதிரி,
             படம் பார்த்துட்டேன் என்கிறது
             மிகப்பெரிய விஷயம் மாதிரி
             ஆமா படம் ரிலீசுக்கு முன்னாலயே
             செலவுப்பணம்கைக்கு வந்துடற மாதிரி...
             புரியுதா தாணு சார்

தாணு (மிகச் சந்தோஷமா )புரியுது சார் ...
             பாலிவுட் முடிஞ்சா
              ஹாலிவுட் ப்ரொமோட்டர்களை வைச்சே
             இதைப்பிரமாண்டமா தயாரிச்சுட்டு
             வாரேன்  சார்

ரஜினி    மகிழ்ச்சி... நீங்க உறுதியா செஞ்சிருவீங்க
             வாழ்த்துக்கள்

             ( எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
             அறையில்  உள்ள செல் போன் மணி யடிக்க
             ரஜினி எடுத்துப் பேசுகிறார்

             (பின் தாணுவின் கைபிடித்துக்  குலுக்கியபடி
           
             அப்ப நீங்க கிளம்புங்க சார்...ரஞ்சித் சாரை
             வரச் சொல்லி இருந்தேன்..
             வந்து காத்திருக்கிறார் போல
             அவரிடமும் ஒரு ரவுண்ட் பேசிடறேன்
             அடுத்த வாரம் உங்க ப்ராஜெக்ட்டோட அவர்
             கொண்டுவர்ற கதை அவுட்லயனோட
             சேர்ந்து பேசுவோம்   சரியா ...

தாணு (பணிவாய்க் குனிந்தபடி )
            ரொம்ப சந்தோஷம் சார்
              நான் அடுத்த வாரம் சந்திக்கிறேன் சார்

ரஜினி (மீண்டும் கை குலுக்கியபடி )
             நிச்சமா..நிச்சயமா


             தாணு மெல்ல நடந்து அறையின்
             வாசலைக் கடக்கையில்
             ஏதோ சட்டென நினைவுக்கு வந்ததைப் போல

             தாணு சார் மறக்காம சாப்பிட்டுப்போங்க
             இல்லையானா அவங்க என்னைத்தான்
             கோபிப்பாங்க சரியா.....

தாணு நீங்க சொல்லணுமா சார்
             அவங்களே விடமாட்டாங்க

             எனச் சொல்லியபடி அறைவிட்டு வெளியேற...

                               ( காட்சி  நிறைவு )


(தொடரும்)

12 comments:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்....

Anonymous said...

onnum puriala

Yaathoramani.blogspot.com said...

தொடர் முடிகையில் ஒருவேளைப்புரியலாம்
முகம் மறைத்துப் பின்னூடமிட்டாலும்
நேர்மையான பின்னூட்டத்திற்கு
நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து வருகிறேன்.

G.M Balasubramaniam said...

மழை நின்றாலும் தூவானம் விடலியே

G.M Balasubramaniam said...

/படம் வசூல் தராம, டிஸ்டிரிபூட்டர்கள்
போராட்டம்அ து இதுன்னு அசிங்கப்படுத்தி,
பின்னால நான்பணம் செட்டில் பண்ணி ..../ இதில் ஏதோ பூனை இருக்கிறதோ

Avargal Unmaigal said...

தொடர்கிறேன் ஒன்று மட்டும் புரிகிறது சுவராஸ்யமாக சொல்லி சென்றாலும் அதில் ஒரு பெரிய விஷயம் உள்ளடங்கி இருக்கிறது என்று..... சஸ்பென்ஸுக்கா வெயிட்டிங்க்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
தொடருகிறேன்... ஐயா..முடிவுதான் என்வென்று பார்க்க ஆவல்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

பின் பகுதியில் இருந்து தொடர்வதால் கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கிறது! தொடர்கிறேன்!

Unknown said...

Understood

Thulasidharan V Thillaiakathu said...

தாணு சார் போல ஏதோ புரியுது போலவும் புரியாதது போலவும்.....ம்ம்ம் ஏதோ உள் அர்த்தம் இருக்கிறதோ...அடுத்த பகுதிக்குச் செல்கிறோம்...

Post a Comment