Monday, December 18, 2017

To R K nagar voters

R K நகர் வாக்காளர் பெருமக்களுக்கு

காட்டிக் கொடுத்தல் தவறே        
ஆயினும்                            
குற்றவாளியைக் காட்டிக்கொடுத்தல் பாராட்டுக்குரியதே

                          
துரோகம் வெறுக்கத்தக்கதே      
ஆயினும்                                    
துரோகிக்குத் துரோகம் போற்றத்தக்கதே
                        
ஏமாற்றுதல் அருவருக்கத்தக்கதே
ஆயினும்                                
 நயவஞ்சகனை ஏமாற்றுதல்    செய்யத் தக்கதே
                                  
பணம் பெற்றபின் மாறிச் செயல்படுதல்
நம்பிக்கைத் துரோகமே 
                           
ஆயினும்                                        
கொள்ளை அடித்த நம் பணத்தை
மீண்டும் கொள்ளை அடிப்பபதற்கே தருபவனுக்கு                                      
 மாறாக வாக்களிப்பது                      
நிச்சயம் நியாயமே
                        
இன்றைய நிலையில்                      
அதுவே அரசியல் தர்மமே

Tuesday, December 12, 2017

சராசரித்தனமும் அதீதமும்

சராசரித்தனம் எதையும் சாதித்ததில்லை
அதீதமே அனைத்து மாறுதலுக்கும்
மூலகாரணமாயிருக்கிறது

வெறித்தனம் அனைத்து அழிவிற்கும்
காரணமாதல் போலவே

காதல் எதையும் அழித்து இரசித்ததில்லை
காமமே அனைத்தையும் அழித்து
சுகம் காணவிழைகிறது

ஜாதி மத வெறி அனைத்து அழிவிற்கும்
காரணமாதல் போலவே

பாசம் மருமகனைக் கொன்று
மகளைக் கொள்ள நினைப்பதில்லை

ஜாதி வெறியே எதையும் அழித்து
நினைத்ததைச் சாதிக்க நினைக்கிறது

காதல் கூட பழிக்குப் பழிக்குப் பழி வாங்கி
கணக்கை நேர்செய்ய முயல்வதில்லை

காமமே தந்தையோடு பெற்றதாயையும்
பலி கேட்டு தன்முனைப்புக்குத் தீனியைத் தேடுகிறது

நற்சமூகம் எச்சிறு அழிவையும் இரசிப்பதில்லை
மன அழுக்குச் சமூகமே பிறர் அழிவில்
தன் கொடிக்கு வலுசேர்க்க நினைக்கிறது

அழிகிற இரண்டு குடும்பங்கள் குறித்த
எந்தப்  பச்சாதாபமும் இன்றி
இரு கூறாய்ப் பிரிந்து

பட்டிமன்றம் நடத்துகிற
ஊடகங்கள் போலவே
மதிகெட்ட ஜாதி அரசியல் தலைவர்கள் போலவே

Tuesday, November 21, 2017

சுவாரஸ்யமான கேளிக்கைகளில், நாம் மயங்கி நிற்கையில்,

வருமான வரி ரெய்டு
நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்
என மனம் மயக்கும் சுவாரஸ்யமான கேளிக்கைகளில்,
நாம் மயங்கி நிற்கையில்,

மந்திரிகள் யாரும் வாயசைக்காது
ஒரு அரசு ஆணையாக,பிறப்பு இறப்புச்
சான்றிதழுக்கான கட்டணங்களை அரசு
பன்மடங்கு உயர்த்தி ஆணையிட்டுள்ளது

இருமடங்கு மூன்று மடங்கு என இல்லாமல்
இருபது  முதல் ஐம்பது  மடங்கு உயர்த்தப்பட்டிருக்கும்
இக்கட்டணங்கள் குறித்து மக்களுக்காக
கவலைப்படும்படியாக நடித்துக் கொண்டிருக்கும்
எந்த அரசியல் கட்சிகளும், பேனைப் பெருமாளாக்கும்
எந்த ஊடகங்களும் கூட இதை கண்டு கொள்ளாதிருப்பதை
என்னவென்று சொல்வது ?


Monday, November 13, 2017

நேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

Sunday, October 22, 2017

GST யை மெர்சலாக்குவோமா

வரிவிதிப்பு முறையை பயன்படுத்தி GST வரம்புக்குள் உட்படாத நிறுவனங்களும் அவர்களது ரசீதில் CGST, SGST என்று வரி விதிப்பதாக சொல்லப்படுகிறது.
இதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

அந்த நிறுவனங்கள் வரி வாங்க அனுமதி உள்ளதா என்பதை கண்டறிய 1 நிமிடம் மட்டுமே போதுமானது.

முதலில் அவர்கள் கொடுக்கும் ரசீதில் GSTIN எண் அச்சிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள். இல்லையென்றால் நீங்கள் வரிசெலுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் பொருள்.

GSTIN எண் இருந்தும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அதுவும் 1 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்.
www.gst.gov.in என்ற இணையதளத்தில் "Search Tax Payer" என்பதை க்ளிக் செய்தால் GSTIN எண் கேட்கும் அதில் உங்கள் ரசீதில் உள்ள எண்ணை பதிவிடுங்கள். பதிவிட்ட உடனே கீழ்வரும் தகவல்கள் தெரியும்:

நிறுவனத்தின் பதிவு பெயர்.
மாநிலம்
பதிவு தேதி
நிறுவனத்தின்
வரி செலுத்தும் வகை
GST பதிவின் நிலை

என அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

அப்படி அந்த எண் இந்த தகவலில் ஒத்துப்போகவில்லை என்றால் நீங்கள் வரி செதுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு புகார் அளிக்கவேண்டும்.

14404 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

மேலும் core.nic.in என்ற இணையதள முகவரியில் உங்கள் குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் பதிவிடலாம்.

நிறுவனம் ஏமாற்றுகிறது என்றால் இந்த அளவிற்கு நீங்கள் செல்ல தேவையே இருக்காது. மொபைல எடுத்து இருங்க இந்த நம்பர் இருக்கா இல்லையானு பாக்குறேன்னு சும்மா டைப் பண்ணாலேயே அவர்கள் பயந்து வழிக்கு வந்துவிடுவார்கள்.

இது போன்ற தவறுகளை களைய மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது. அதை நாம் தான் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முக்கியமா இந்த ஹோட்டல், தண்ணீர் கேன் விநியோகம், பலசரக்கு கடை, ஜவுளி கடை, எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர் கடை இதெல்லாம் கவனிக்க வேண்டிய இடங்கள்...

மக்களே உஷார்...
அதை பயன்படுத்தி சில வியாபாரிகளும் அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். அதை அனுதிக்கக்கூடாது.

Thursday, October 19, 2017

நரகாசுரன்

" கோடிக்கணக்கில் குடித்துக் குடித்து உடலைக் கெடுத்துத் தொலைத்து  கோடிக்கணக்கில் வெடித்து வெடித்து சுற்றுச் சூழலைக் கெடுத்துத் தொலைத்து..ம்ம் இவர்களது சந்தோஷமும் கொண்டாட்டமும் இப்படித்தான் இருக்குமெனத் தெரிந்திருந்தால் சத்தியமாய் நாராயணா  என் மரணத்தைக் கொண்டாடும்படியான வரத்தை கேட்டே இருக்க மாட்டேன் "என  அலுத்துக் கொண்டான் நம் நகர வாசிகளின் கொண்டாட்டம் கண்ட நரகாசுரன்

Monday, October 16, 2017

முக நூல் சாரம்

எது பதியப்பட்டதோ அது நன்றாகவே பதியப்பட்டது
எது பதியப்படுகிறதோ அது நன்றாகவே பதியப்படுகிறது
எது பதியப்பட இருக்கிறதோ அதுவும் நன்றாகவே பதியப்படும்
உன்னுடையது என நீ எதைப் பதிந்தாய் ?
எதற்காக நீ பெருமிதம் கொள்கிறாய் ?
நீயாக எதைப் பதிந்தாய் பேரானந்தம் கொள்வதற்கு ?
நீயாக எதைக் கொடுத்தாய் பேருவகை கொள்வதற்கு ?
நீ எதைப் பதிந்தாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்ப்பட்டது
நீ எதைப் பகிர்ந்தாயோ
அதுவும் இதிலிருந்தே பகிரப்பபட்டது
எது இன்று உன்னுடையதோ அது
நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையாதாகும்
இதுவே முக நூல் நியதியும்
முக நூலின் சாரமுமாகும்

முக நூல் பகவான்

( இடையிடையே கூட ஏதேனும் ஒன்றிரண்டு கூட
சுயமாக எழுதாது வெட்டி ஒட்டுதலை மட்டும்
செய்து கொண்டிருப்பவர்களுக்காக )

Thursday, October 12, 2017

காலச் சூழல்

காலச் சூழல்
தலை கீழ் மாற்றம் கொண்டுள்ளது
ஆயினும்
எமது தேர்வுகளில் விருப்பங்களில்
எவ்வித மாற்றமுமில்லை

கலப்படத்தால்
முன்பு
அரிசியில் கல்லைப் பொறுக்குவது
மிக எளிதாயிருந்தது

இப்போது
கல்லில் அரிசி பொறுக்குவதே
மிக எளிதாயிருக்கிறது

ஆயினும் எம் தேவை
அரிசி என்பதில்
எவ்வித மாற்றமுமில்லை

நல்லவைகளில்
முன்பு
தீயவைகளை ஒதுக்குவது
மிக எளிதாய் இருந்தது

இப்போது
தீயவைகளில் நல்லதை எடுப்பதே
மிக எளிதாய் இருக்கிறது

ஆயினும் எம் தேவை
நல்லவையே என்பதில்
எவ்விதக் குழப்பமுமில்லை

ஆம்
எம் விருப்பங்களில் தேர்வுகளில்
எவ்வித மாற்றமுமில்லை என்பதால்

காலச் சூழல்
எப்படித்தான் மாறினும்
எம்முள் எவ்வித மாற்றமுமில்லை



Wednesday, October 4, 2017

ஜோதிடத்தை நம்புபவர்களுக்கும்/ நம்பாதவர்களுக்கும்/

எனக்குக்  கொஞ்சம் ஜோதிடம் தெரியும்
ஜாதகம் எழுதும் அளவுக்கு ஜோதிட
அறிவும் கொஞ்சம் உண்டு

கடந்த ஆண்டு ஏடு பார்ப்பவர்கள் குறித்து
தெரிந்து கொள்ளலாமே என
என் பகுதியில் இருந்த ஏடு ஜோசியரைப்
பார்க்கப் போனேன்

ஒரு வகையில் பரிசோதிக்கும் நோக்கத்தோடு
என்று கூடச் சொல்லலாம்

அவர்கள் வழக்கம்போல ஒவ்வொரு ஏடாக
எடுத்துப் போட்டு பெயருக்கு ஒரு குறிப்பினைக்
கேட்கக் கேட்க நானாக ஒரு வார்த்தையும்
கூடுதல் குறைவாகச் சொல்லிவிடாது
இல்லை/ஆம் என்பது போல மட்டும்
சொல்லி வந்தேன்

என் மூலம் அவர்கள் எதையாவது தெரிந்துகொண்டு
அதன் மூலம் மிகச் சரியாகச் சொல்லுகிறார்போல
ஆகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக
இருந்தேன்

மூன்று நான்கு கட்டுக்கள் முடிந்து அடுத்து
ஒரு கட்டு எடுத்தவர்,"

உங்கள் பெயர்
இரண்டு தெய்வங்கள் குறிக்கும் பெயரா ? "
என்றார்

அது அப்படித்தான் என்பதால் "ஆம்" என்றேன்

"ஒன்று வைணவம் சார்ந்து ஒன்று
சைவம் சார்ந்ததா?" என்றார்

அதுவும் அப்படித்தான் என்பதால்
"ஆம் " என்றேன்

அவ்வளவுதான். அதற்கு மேல் என்னிடம்
எதுவும் கேட்கவில்லை

மடமடவென என்பெயர் என் மனைவி பெயர்
என் தாயார் பெயர் என வரிசையாக
மிகச் சரியாக அந்த ஏட்டைப்பார்த்துச்
சொல்ல ஆரம்பித்து விட்டார்

நான் பிரமித்து விட்டேன்

இது எப்படிச் சாத்தியம் என இதுவரை
விளங்கவில்லை

இது கூடப் பரவாயில்லை

என் கட்டை விரல் ரேகையைப் பதிவு
செய்துவிட்டு "இரண்டு நாட்கள் கழித்து
வாருங்கள் உங்கள் ஜாதகம் கணித்துத்
தருகிறேன் " என்றார்

மிகச் சரியாக இரண்டு நாள் கழித்துச் செல்ல
என் ஜாதகக் கட்டம் பிறந்த தேதி அனைத்தையும்
மிகச் சரியாக கணித்து வைத்திருந்தார்

சுயமாக எழுவதானாலும், கம்பியூட்டர்
ஜாதகமாயினும் பிறந்த ஊர், வருடம்,
தேதி, நேரம்மிகச் சரியாகத் தெரியாமல்
மிகத் துல்லியமாய் லக்கின ஜாதகம்
எழுதச் சாத்தியமே இல்லை


இவர்கள் எப்படி ரேகையை வைத்தும்
ஏடைவைத்தும் மிகத் துல்லியமாகக்
கணிக்கிறார்கள்

இது இன்றுவரை எனக்கு மிகக்
குழப்பமான விஷயமாகவே இருக்கிறது

நம்புபவர்கள் அது குறித்தும்
நம்பாதவர்கள் அதில் உள்ள சூட்சுமங்கள்
குறித்தும் எழுதினால் மகிழ்வேன்

இத்துடன் உங்கள் பார்வைக்காக என்னுடைய
கம்பியூட்டர் ஜாதக நகலையும்
இவர்கள் கொடுத்த குறிப்பினையும்
இணைத்துள்ளேன்






Monday, October 2, 2017

இதுவும் விக்ரம் வேதாதான்




"நிஜம் போல் ஒரு கதை சொல்லட்டுமா என்றான்"
விக்ரம்

"சொல் " என்றான் வேதா

விக்ரம் தொடர்ந்தான்

"அரசுத் துறையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத்
திட்டத்தின் கீழ் ஐயாயிரம் மரக்கன்று
நடத் திட்டமிட்டார்கள்

அவசர அவசியம் கருதி குழி பறித்தல்,
மரக்கன்று ஊன்றுதல் ,குழியை மூடுதல் ஆகிய
மூன்று வேலைகளையும் ஒருவரிடமே கொடுத்தால்
காலதாமதம் ஆகும் எனக் கருதி
மூன்று வேலைகளைத் தனித்தனியாக
ஒவ்வொருவரிடமும் பிரித்துக் கொடுத்தார்கள்

குழி தோண்டுபவர் உடனே வேலையை
முடித்துக் கொடுத்து பில் தொகையையும்
பெற்றுவிட்டார்

இரண்டாமவருக்கு மரக்கன்றுகள் கிடைக்கத்
தாமதமாகிக் கொண்டே இருக்க

மூன்றாவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து
இனியும் தாமதிக்க முடியாது என
குறிப்பிட்ட காலத்திற்கு முன் தன்
வேலையை முடிக்க வேண்டும் எனச் சொல்லி
வெட்டிய குழியை மூடி பணமும்
பெற்றுச் சென்றுவிட்டார்

மரக்கன்று ஊன்றாமலே குழி மூடப்பட
எரிச்சலுற்ற பொது ஜனம் இது குறித்து
விசாரித்து ஆவன் செய்ய உயர் அதிகாரிகளிடம்
மனுக் கொடுக்க, உயர் அதிகாரிகள்
தணிக்கை அதிகாரிகளிடம் விசாரிக்க
உத்தரவிட்டனர்

"இந்த விசாரனையின்
முடிவு என்ன என்னவாக இருக்கும்
எனச் சொல்ல முடியுமா ? "
என்றான் விக்ரம்

வேதா சற்றும் யோசிக்கவில்லை
சட்டென இப்படிச் சொன்னான்

"அவசரம் அவசியம் கருதி மூன்றாக
டெண்டர் விட்டது சரிதான்
குழிவெட்டியதற்கான ஆதாரமாய்
பட்டியலுடன் புகைப்படமும் இணைக்கப்
பட்டுள்ளது.என்வே இந்த வேலை
நடைபெற்றுப் பின் பணம் பட்டுவாடா
செய்ய்ப்பட்டது உண்மை

அதைப்போலவே குழியை மூடியதற்கான
ஆதாரமாய் பட்டியலுடன் புகைப்படமும்
இணைக்கப்பட்டுள்ளது. என்வே இந்த
வேலை நடந்ததும் உண்மை

மர்க்கன்றுக்கென டெண்டர் எடுத்தவர்
கன்றுகள் சப்ளை செய்யவில்லை
எனவே அவருக்கு பணப் பட்டுவாடா
ஏதும் செய்யப்படவில்லை

எனவே இந்த வேலையில் முறை மீறலோ
அல்லது ஊழலோ இல்லை எனவே
இந்த மனுவை தள்ளுபடி செய்யலாம்
என வந்திருக்கும் சரிதானே " என்றான்

வேதாவின் மிகச் சரியானப் பதிலால்
விக்ரம் திகைத்திருக்க
வேதா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான்

"நீ நிஜம் போல் ஒரு கதை சொன்னாய்
நான கதை போல் ஒரு நிஜம் சொல்கிறேன்
முடிவு என்னவாக இருக்கும் நீ சொல்"
எனச் சொல்லிச் சொல்லத் துவங்கினான

"மதுரையில் தென் பகுதியில் வில்லாபுரம்
புது நகர் என ஒரு ஒரு பகுதி
வீட்டுவசதி வாரியத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது

ஏற்க்குறைய ஐந்து பிரதான வீதிகளும்
நூற்றுக்கு மேற்பட்ட குறுக்குத் தெருக்களும்
அமைந்த அந்தப் பகுதியில் வீதி குறிக்கும்
பெயர் பலகை இல்லாததால் ஏற்படும்
சிரமங்கள் குறித்து அந்தப் பகுதி வாழ மக்கள்
மா நகராட்சிக்கு மனு கொடுக்க..

மா நகராட்சி அதிகாரிகளும்,மொத்தக்
குறுக்குத் தெருக்கள் எண்ணிக்கையை
அதற்கான பெயர் பலகைக்கான டெண்டரும்
விட்டுவிட்டார்கள்

இடையில் அந்த மரக்கன்றுக்காரரைப் போலவே
தெருவின் எண் குறித்த விவரங்கள்
பெற்றுத் தர அதிகாரிகள் தவறியதால்
அவசர அவசியம் கருதி (?) அந்த
ஒப்பந்தக்காரரும் ஒட்டு மொத்த
பெயர் பலகையையும், வில்லாபுரம்
புது நகர் குடியிருப்பு எனவே தயார் செய்து
எல்லாத் தெருக்களிலும் ஊன்றி வைத்து
பட்டியலும் வாங்கிச் சென்று விட்டார்

மதுரை தெருக்களெல்லாம் மதுரை என்கிற
பெயர் பொறித்ததுபோல் இப்போது
வில்லாபுரம் புது நகர் பகுதி தெரு முழுவதும்
வில்லாபுரம் புது நகர் என்கிற பெயர்
பலகையே உள்ளது

இது அலட்சியத்தின்பால் நடந்த வெட்டிச்
செலவு ஊழலா ? அல்லது ஊழலினால்
அதிகாரிகள் கொண்ட அலட்சியமா?
இந்த விஷயத்தை உயர் அதிகார்களின்
கவனத்திற்குக் கொண்டு சென்றால்
என்ன நடக்கும்? "என்றான்

விகரம் கொஞ்சமும் யோசிக்காமல்
சட்டெனப் பதில் சொன்னான்

"இது பெரிய விஷயமே இல்லை
முதலில் இப்போதுள்ள அதிகாரிகள்
இது எங்கள் காலத்தில் நடக்கவில்லை
காரணமானவர்களிடம் விளக்கம்
கோரியுள்ளோம் என்பார்கள்

இதற்கிடையில் அந்தப் பெயர் பலகைகளை
உடன் அப்புறப்படுத்தி கரி பூசிய
முகத்தைத் துடைத்து கொள்வார்கள்

ஒப்பந்தக்காரரை பட்டியலிலிருந்து நீக்கி
இருக்கிறோம் எனச் சொல்லி பின்
அவர் மனைவி பெயரிலோ மகன் பெயரிலோ
பதிவு செய்து கொடுப்பார்கள்

பிடுங்கப்பட்ட பெயர்பலகைகளை பெயர் மாற்றி
வேறு ஒரு பகுதிக்கு ஊன்றுவதற்கு
ஏற்பாடு செய்து காசக்கி விடுவார்கள்

இதற்கிடையில் இது குறித்து தொடர்ந்து
ஏதும் எழுதவேண்டாம என சம்பத்தப்பட்டவரை
அவருக்கு வேண்டியவர்கள் மூலம்
கேட்டுக் கொண்டு இந்த விஷயத்தை அப்படியே
அமுக்கியும் விடுவார்கள்
சில நாட்களில் எல்லோரும் இதை
மறந்தும் விடுவார்கள்" என்றான்

விக்கிரமனின் மிகச் சரியான பதிலால்
நிலை குழைந்து போன வேதா பின்
பலமாகச் சிரித்து...

"நிஜம் போன்ற கதையும்
கதை போன்ற நிஜமும்
நம் ஊரில் சகஜம்தானே
வா ஒரு நல்ல காஃபி சாப்பிடலாம்"
என அழைக்க இதை படித்த நம்மைப் போல
அவர்களும் மிக சகஜமாகிப் போனார்கள் 

Saturday, September 23, 2017

என்றென்றும் புகழ்மங்கா எம்மதுரை வாழியவே....

மஞ்சளோடு குங்குமமும்
மணக்கின்ற சந்தனமும்
மங்களமாய் ஊரெங்கும்
மணக்கின்ற மாமதுரை

சுந்தரனாம் சொக்கனோடு
சரிபாதி எனஆகி
எங்களன்னை மீனாட்சி
எமையாளும் சீர்மதுரை

அன்னைமடித் தவழ்ந்துதினம்
அகம்மகிழும் குழந்தையாக
மண்தொட்டு மகிழ்ந்தோடும்
வைகைநதித் தண்மதுரை

மணக்கின்ற மல்லியதன்
மணம்போல நிறம்போல
குணம்கொண்ட நிறைமாந்தர்
நிறைந்திருக்கும் நன்மதுரை

நகரெல்லாம் விழாக்கோலம்
நாளெல்லாம் கொண்டாட்டம்
தவறாதுக் காண்கின்ற
தவச்சீலம் தென்மதுரை

தூங்காதப் பெருநகரம்
கோவில்சூழ் மாநகரம்
ஓங்குபுகழ் தமிழ்வளர்த்த
ஒப்பில்லாத் திருமதுரை

தென்மதுரை தண்மதுரை
சீர்மதுரை வாழியவே
என்றென்றும் புகழ்மங்கா
எம்மதுரை வாழியவே







Wednesday, September 20, 2017

நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும்
ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை

மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை
எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை

இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும்
பெண்கள்தான்காரணம் என்பதை
இந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனைஆதியிலேயே
மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்......

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக
கலைக்கும்கல்விக்குமான கலைமகளை
துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்

காக்கும் திருமாலுக்கு இணையாக
கருணையும்செல்வத்திற்குமான திருமகளை
துணைவியாக்கி குதூகலித்திருக்கிறான்

அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக
ஆக்ரோஷமும்சக்தியின் சொரூபமான
மலைமகளை இணையாக்கி
இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்

அவர்களின் உள் நோக்கமறிந்து
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

குழந்தையாய்
முழுமையாக அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவான   அன்னையாக

கணவனாக
அவளுக்கு இணையாக சேர்ந்திருக்கும் நாளில்
பின்னிருந்து இயக்கும் சக்தியாகத்  தாரமாக

வயதாகி
சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக

 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம் கண்கண்ட
முப்பெரும் தேவியராய்த் திகழ்வதாலேயே

மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
 நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்

அவர்களது தியாக உள்ளங்களை இந் நாளில்
 சிறிதேனும் நாமும் கொள்ள முயல்வோம்

அவர்களோடு இணந்து  சமூகம்  சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

அனைவருக்கும் இனிய நவராத்திரி தின
நல்வாழ்த்துக்கள்  

Tuesday, September 19, 2017

"வரம் கொடுத்தவன் தலையிலேயே

"வரம் கொடுத்தவன்
தலையிலேயே
கைவைக்க முயற்சித்த
அசுரன் கதையில்
எனக்கு நம்பிக்கையில்லை"
என்றார் அந்த முதியவர்

"எனக்கும் அப்படித்தான்
அரக்கனே ஆயினும் கூட
அப்படிச் செய்ய மனம் வருமா ?"
என்றார் அடுத்தப் பெரியவர்

அடுத்திருந்தப் பெரியவர் மட்டும்
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது
முயற்சித்த இல்லை
கைவைத்த....."
என்றார் விரக்தியாய்

பெரியவர்கள் இருவரும்
ஒரு பத்தாம்பசலியைப்
பார்ப்பதுப் போல
அவரைப் பார்க்க...

அவர் இப்படிச் சொன்னார்
"வாரீசுகள் வசதியாய் இருந்தும்
இந்த வயோதிகர் இல்லத்தில்
இருக்கிற நாமெல்லாம் யாராம்?
அனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் ?"
என்றார் மெல்லச் சிரித்தபடி

சிறிது நேரம் யாரும்
பேசிக் கொள்ளவுமில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்ளவுமில்லை

மெல்லக் கனத்த இருள்
சூழத் துவங்கியது
வெளியிலும்....

Monday, September 18, 2017

யாருக்குப் பொருந்தும் ?

யாருக்குப் பொருந்தும் ?

திருடிக் கொண்டு ஓடுகையில்
கண்டு கொண்ட
மக்கள் கூட்டம்
"திருடன் திருடன்' எனக் கத்தியபடி விரட்ட

கெட்டிக்காரத் திருடன்
தானும்
"திருடன் திருடன் " எனக் கத்தியபடியே
முன்னே ஓடுகிறான்

பார்ப்பவரையும்
விரட்டுபவர்களையும்
குழப்பியபடியும்
ஏமாற்றியபடியும்..

துரோகம் இழைத்ததற்காக
"அவர்" இருக்கையில்
ஒதுக்கியே வைக்கப்பட்டவர்
இப்போது
"துரோகிகள் துரோகிகள் "
என அனைவரையும்
தூற்றியபடியே
நகர் வலம் வந்து கொண்டிருக்கிறார்

தொண்டர்களையும்
மக்களையும்
முட்டாள்கள் என
நினைத்தபடி
கணித்தபடி

(இது யாருக்குப் பொருந்தும் என
கணிக்க முடியாதவர்களுக்கு
ஒரு அருமையான க்ளூ

அவர் மூன்றெழுத்து இன்சியலால்
அழைக்கப்படுபவர்

மூவரும் அப்படித்தானே அழைக்கப்படுகிறார்கள்
என நீங்கள் யூகித்தால் அதற்கு
நான் பொறுப்பல்ல )

Friday, September 15, 2017

நிகழ்வுகள்

நாளை (16-09-2017) காலை 9 மணிக்கு மதுரை பாத்திமா கல்லூரித் தமிழ்த்துறை மாணவியரைக் கொண்டு முனைவர்.மு.இராமசாமி உருவாக்கிய 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' நாடகம் நிகழ உள்ளது. வாய்ப்புள்ளோர் அவசியம் வருக! ....

Monday, September 11, 2017

நல்லதோர் வீணையாய்....

"நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை" யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே" தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"  இருக்கும்வரைச் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனென  இன்றளவும்
 அவன் மட்டுமே பரிமளிக்க முடிகிறது

Wednesday, August 30, 2017

மரியா மாண்டிச் சோரி

ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்
கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்

குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா

பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்
பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா

திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா

இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா

(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)

Monday, August 28, 2017

கர்ணனும் சித்தாள் முனியம்மாவும்

கருவண்டாகிச்
சதிகாரக் கண்ணன்
தன் தொடை துளைத்த போதும்
இரத்தம் ஆறாய்ப்
பெருக்கடுக்க
வலி தீயாய்ப்
பொசுக்கியபோதும்
அலுப்பில் அயர்ந்த
குரு நாதரின் துயில்
கலையக் கூடாதென
கற்சிலையாய் இருக்கிறான்
பாரதக் கர்ணன்

வறுமை தந்த
சோர்வும் நோவும்
மெல்லப் படுத்தியெடுக்க
அதன் காரணமாய்
அடிவயிற்றிலிருந்து கிளம்பும்
அடக்கவொணா இருமலை
அரைவயிற்றுப் பசியில்
மார்பில் அயர்ந்த குழந்தை
விழித்துவிடக் கூடாதென
உதடு கடித்து விழுங்கித்
தாய்மைக்கு இலக்கணமாகிறாள்
சித்தாள் முனியம்மா

ஒப்பு நோக்கின்
இரண்டில் ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லையாயினும்

என்றோ ஒருமுறை
நடப்பதற்கும்
அன்றாடம் நடப்பதற்குமான
வித்தியாசத்தில்

கர்ணனையும் மீறி
என் மனத்தில் உயர்கிறாள்
சித்தாள் முனியம்மா

Sunday, August 27, 2017

எங்கள் ஐயனார்சாமி

சிறு வயதில்
வாரம் இருமுறை
எங்கள் ஐயனார்சாமியைப்
பார்க்கவில்லையில்லை யெனில்
என் மனம் ஒப்பாது

ஊருக்கு
வெகு வெகுத் தொலைவில்
குதிரையில்
மிக மிக உயரத்தில்
அமர்ந்தபடி
ஊரையே
பார்த்துக் கொண்டிருப்பார்
காத்துக் கொண்டிருப்பார்
எங்கள் ஐயனார்சாமி,,

ஊரின்
ஒவ்வொரு வழித்தடமும்
அவர் பார்வையில் இருக்கும்
ஊரின்
எந்த ஒரு சிறு நிகழ்வும்
அவர் ஆசி வழங்கவே துவங்கும்

குற்றப் பயத்தாலோ
தீவீர நோயாலோ
வருடத்துக்கு இருவர்
இரத்தம் கக்கிச் சாகப்
படையல் கூடிப் போகும்
ஐயனாரின் பலம் கூடிப்போகும்
குற்றங்களும் குறைந்துப் போகும்


இப்போது ஊர்
கிழக்கு மேற்காய்
மிக விரிந்துப் போகக்
கட்டிடங்களும்
மிக உயர்ந்துப் போகத்
தன் இருப்பிடம் தெரியாதும்
தன் நெடியப் பார்வையற்றும் போனார்
எங்கள் ஐயனார்சாமி

நோய்க்கு மருத்துவரும்
காவலுக்குக் காவல் நிலையமும் வர
படையல்கள் குறையக்
கொஞ்சம் விலகவும்
பார்வையைக் குறைக்கவும்
துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

சமீபத்தில் இரண்டுமுறை
அவர் உண்டியலே
உடைத்துத் திருடப்பட
கண்காணிப்புக் கேமரா
பொருத்தப்படத்
"தனக்கே காவலா " என
நொந்து போனதன் அடையாளமாய்
மெல்ல மெல்ல
விரிவுபடத் துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

ஜபர்தஸ்தாய்
சாரட்டில் பார்த்த ஜமீந்தாரை
நடக்கப் பார்த்து
நொந்தக் கதையாய்
மேகம் தொட்டு நின்ற
எங்கள் ஐயனார்சாமியை
இடுக்கில் பார்ப்பதற்கு
எனக்கும்
மனம் ஒப்பவில்லை

வலுக்கட்டாயமாய்
அவரைப்பார்ப்பதைத்
தவிர்க்கத் துவங்கினேன் நான்

எங்கள்
ஐயனார்சாமிக்கும்
மனம் ஒப்பாதே
இருந்திருக்க வேண்டும்

இல்லையெனில்
எத்தனையோ
புயல் மழையைத்
தூசியாய்த் தள்ளியவர்
நேற்றையச் சிறுத்தூறலுக்கு ...

என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது ?

Thursday, August 24, 2017

கணபதி திருவடி அனுதினம் அடிபணி...


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது கனவினி -என்றும் 
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
காணுநீ  தினமினி
நிஜமென மருவிடும்-உடன்
வருகிற கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையது  தகர்ந்திடும்  -என்றும் 
நிறைவுதான் எனத்தெளி


(அனைவருக்கும் இனிய  விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்   )

Wednesday, August 23, 2017

கலைஞர் செயல்(படும் ) தலைவராய் இருந்தால்...

அரசியல் என்பதே சந்தர்ப்பங்களை
மிகச் சரியாக தமக்கும் தம் கட்சிக்கும்
பயன்படுத்திக் கொள்வதே

இதில் நியாயம் தர்மம் நேர்மை
உண்மை என்பதெல்லாம் இரண்டாம்
பட்சமே(மிக முக்கியமாய் இந்தியாவில் )

அந்த வகையில் காங்கிரஸை முழுமையாக
எதிர்த்தது, பின் இந்திராவின் மகளே வருக
நிலையான ஆட்சித் தருக என்றதும்

மதவாதக் கட்சி எனச் சித்தரிக்கப்பட்ட
கட்சியுடன் கூட்டணி சேர்ந்து
ஆட்சிப்பொறுப்பில் இருந்தததும்

பின் அதே காரணம் காட்டி அந்தக்
கூட்டணி விட்டு விலகியதும்

(சரியான நபர் சரியில்லாத இடத்தில்
வசனம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்)

புரட்சித்தலைவர் உடல் நலம் இல்லாது
வெளி நாட்டில் மருத்துவ சிகிச்சைப்
பெற்ற போது வந்த தேர்தலில்
எனக்கு ஓட்டளித்தால் அவர் வந்தவுடன்
அவரிடம் ஆட்சிப் பொறுப்பை
ஒப்படைப்பேன் என்றதும்

இப்படிக் கலைஞரின் அரசியல் செயல்பாடுகள்
குறித்துச் சொல்லிக் கொண்டே போகலாம
அவரைப் பிடித்தவர்கள் இதனை அவரின்
இராஜதந்திரம் என்பர்

பிடிக்காதவர்கள் அரசியல் பித்தலாட்டம்
என்பர்

அதெல்லாம் நமக்குத் தேவையில்லை

இன்று அண்ணா தி. மு.க மூன்றாகப்
பிரிந்து தமிழக  அரசியல் சூழலையே
அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும்
வேளையில்

நிச்சயம் அவர் செயல் தலைவராக
இருந்தால் தளபதி அவர்கள் போல
நிச்சயம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு
இருக்க மாட்டார் எனபது மட்டும் சர்வ நிச்சயம்

மாறாக வாஜ்பாய் அவர்களுக்கு ஆதரவு
தரச் சொன்ன வசனம் போல

எங்கள் இன முட்டை எதிரிக் கூண்டில்
என ஒரு புதுமையான வசனத்தைச் சொல்லி
அண்ணா தி. மு. க  தாழ்த்தப்பட்ட
இனத்தைச் சார்ந்த யாரையேனும்
முதல்வராக முன்னிறுத்துவார்கள் ஆயின்

(இப்போது ஒரு அணி சொல்வதற்கு
முன்பாகவே )

 தி. மு.க அண்ணா, பெரியார்
அவர்களின் ஆசையை நிறைவேற்ற நிச்சயம்
வெளியிலிருந்து தன் முழு ஆதரவைத்
தரும் என ஓரு குண்டைப் போட்டு
அவர்களை மேலும் ஒரு குழப்புக் குழப்பி
சிதற வைத்து இருப்பார்

அவர் போட்ட குண்டு செல்லுபடியாகும்
பட்சத்தில் சில காலம் சொன்னதுபோல்
ஆதரவளித்துப் பின் மிகச் சரியான நேரம் பார்த்து
ஒரு சரியான காரணமும் காட்டி
கவிழ்த்தும் விடுவார் எனபது என அபிப்பிராயம்

(வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்னமும்
ஒரு அணி இருப்பது கூடுதல் சாதகம்)

அப்படிச் செய்வார் எனில்
இதுவரை முதல்வர் பதவியை ஒரு தாழ்த்தப்பட்ட
இனத்தைச் சார்ந்தவர் அலங்கரிக்காததை
ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றியமைக்காகவும்

தாழ்த்தப்பட்டாருக்கு பிற்பட்டோர் நலத்துறை
ஒதுக்கி மற்ற அதிகாரமிக்கத் துறைகளைக்
காலம் காலமாய் அனுபவித்து வரும்
முற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
அரசியல் கட்சிகளுக்கு பாடம்புகட்டினார்
என்கிற வகையிலும்

இன்னும் ஒரு
தனிச்சிறப்பினைக் கலைஞர் பெறவும்
செய்திருப்பார் என்பதுவும் என் கருத்து

நலமாகி வீடு வந்துள்ள கலைஞர்
என்ன செய்கிறார் பார்ப்போம்

Tuesday, August 22, 2017

உங்கள் போதையைத் தெளிய வைத்து விடுகிறோம்

போதையில்  
குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து
வெளிச்சூட்டை ஆராய்பவர்கள்
நிச்சயம்
உண்மை நிலையறிய வாய்ப்பே இல்லை

பதவிச் சுகத்தில்
சுய நலமாய்ச் சிந்திப்போருக்கும்
மக்கள் மனமறிய
நிச்சயம்
துளியும் வாய்ப்பே இல்லை

தயாரிப்பாளரும்
நடிகரும் இயக்குநரும்
தம் படம் குறித்துப் கொள்ளும் பெருமிதம்

உண்மையா கற்பனையா என்பதை
படம் வெளியானால்
மிகச் சரியாக
ஒரு நடைபாதை வாசிக் கூடத்
தெளிவாய்ப் புரிய வைத்துவிடுவான்

யாருக்குச் சொந்தம்
யார் உண்மையானவர்கள் என்பதை
நீங்களே பேசி பேசி
ஏன் எங்களுக்குள்
கூடுதல் வெறுப்பையேற்றுகிறீர்கள்

தில் இருந்தால்
வெளியே வாருங்கள்
நாங்கள் மிக எளிதாய்
உங்களுக்குப் புரிய வைத்து விடுகிறோம்

உங்கள் போதையையும்
மிக எளிதாய்த்
தெளிய வைத்து விடுகிறோம்

Sunday, August 20, 2017

Our Muslims Brothers & Sisters are not happy.

Our Muslims Brothers & Sisters are not happy.

 I actually feel very sad for this as a human being.

They’re not happy in Gaza
They're not happy in Egypt
They're not happy in Libya
They're not happy in Morocco
They're not happy in Iran
They're not happy in Iraq
They're not happy in Yemen
They're not happy in Afghanistan
They're not happy in Pakistan
They're not happy in Syria
They're not happy in Lebanon
*************************************
Lets Find The reason Why..
So, where are they happy?
They're happy in Australia
They're happy in England
They're happy in France
They're happy in Italy
They're happy in Germany
They're happy in Sweden
They're happy in the USA & Canada
They're happy in INDIA

They're happy in almost every country that is not
Islamic! And who do they blame?
Not Islam..
Not their leadership..
Not themselves..

THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!!

And they want to change the countries they're happy in, to be
 like the countries they came from where they were unhappy.
**********************************
Buddhists living with Hindus = No Problem
Hindus living with Christians = No Problem
Christians living with Shintos = No Problem
Shintos living with Confucians = No Problem
Confusians living with Bahai's = No Problem
Bahai's living with Jews = No Problem
Jews living with Atheists = No Problem
Atheists living with Buddhists = No Problem
Buddhists living with Sikhs = No Problem
Sikhs living with Hindus = No Problem
Hindus living with Bahai's = No Problem
Bahai's living with Christians = No Problem
Christians living with Jews = No Problem
Jews living with Buddhists = No Problem
Buddhists living with Shintos = No Problem
Shintos living with Atheists = No Problem
Atheists living with Confucians = No Problem
Confusians living with Hindus = No Problem

Now..

Muslims living with Hindus = Problem
Muslims living with Buddhists = Problem
Muslims living with Christians = Problem
Muslims living with Jews = Problem
Muslims living with Sikhs = Problem
Muslims living with Bahai's = Problem
Muslims living with Shintos = Problem
Muslims living with Atheists = Problem

MUSLIMS LIVING WITH MUSLIMS = BIG
PROBLEM !

Mind You ! :

Worth thinking upon...A very dear muslim friend of mine has sent me this!!!!!!!

Until today no one has told you the truth that ????

There are 3 lakh mosques in India.

No other country in the world has these many mosques.

There are only 24 Churches in Washington.

71 Churches in London.

There are 68 Churches in the city of Milan in Italy.

While in Delhi alone there are 271 churches.

And you call a Hindu communal.

Further I have not come across an Indian Muslim opposing ISIS.

But we have millions of Hindus who are opposing views of RSS.

I have not seen any Muslim holding party on Holi or Diwali festivals for Hindus, but have seen Hindus holding iftar for Muslims during Ramadan.

I saw Indian flags being burnt in Kashmir by Indian Muslims.

But never saw an Indian Muslim burning a Pakistan flag.

I have seen Hindus wearing topis and visiting Mazars.

But I have neither seen nor heard an Indian Muslim applying tilak on his forehead and visiting temples.

This is called Hindu tolerance and respect for other religious community.

It's my humble request to share this message with your friends & near and dear.
Ps: if you agree then let it go viral via your contacts..

Saturday, August 19, 2017

இப்படியும் .....

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
அருகில் வாணியம்பாடி செல்லும்
சாலையோரத்தில்இருக்கிறது ஏலகிரி ஓட்டல்.
 அங்குச்சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்
கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து
விட்டுச் செல்கின்றனர். NEW INFORMATION

கல்லாவில் இருந்தவரும்காசு கேட்பதில்லை.
பணத்துக்குப்பதில் வணக்கம் செலுத்தினால்
போதுமா?

விசாரித்தபோதுதான்மேலே
தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்
காட்டினார். விஷயம் புரிந்தது.

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்
கு காலை 8 முதல் 11
மணி வரை இலவச உணவு’ (100 பேர்
வரை), ‘

பால் வாங்கப்
பணமில்லையென்றால்
குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’

, ‘வாரம் 100மாணவர்களுக்கு இலவசமாக
பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம்
வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு காலை முதல்மாலை வரை
பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள்
சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால்,
“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;
வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய
தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்
இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.
அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்
செய்துவருகிறார்.

ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்
வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்
தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட
மற்றும் தென் தமிழகம், கர்நாடகம்
மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்
முக்கியச் சந்திப்பு. இந்த
நிலையத்தைக் கடந்ததுதான்
அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

 பயணத்தின்போது காலி தண்ணீர்
பாட்டிலை ஜன்னல்
வழியே வீசுவதைப்போல
குடும்பத்தில் பாரமென கருதப்படும்
மனிதர்களை ரயிலில்அழைத்து வந்து
இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர்.
அவர்கள்பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

மாதந்தோறும் குறைந்தபட்சம் 15
பேராவது இப்படி அனாதைகளாகத்
தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல்
தவிக்கும்அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே
சுற்றித்திரிகின்றனர்   இப்படியும்
.
இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்
சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற
உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத
வருக்குக்கூடஉணவு நமக்கு தேவை
 என்பதை உணர்த்து கிறது”என்கிறார் நாகராஜ்.
இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில்
வீடுகளில் கவனிக்க முடியாதநிலையில் இருக்கும்
முதியவர்களுக்குத் தேவையான உணவை
அவர்களது குடும்பத்தினர்வந்து இலவசமாக
பார்சல் வாங்கிச் செல்லலாம்.

நாகராஜின்மனைவி சுஜாதாவும் தன் கணவரின்
இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில்இதையெல்லா எப்படிச்
சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
“இவர்களுக் கென்று தனியாக
உலை வைக்கப்போதில்லை.
வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம்
கூடுதலாகசமைக்கிறேன்.

 5கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்
10 கிலோ மாவு போட்டாலும்மா
ஸ்டருக்கு ஒரே கூலிதான்.
எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான்
செலவா கிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய்இழப்புதான் என்றாலும்
எனக்கு குடும்பம் நடத்தத்தேவையான லாபம் கிடைக்கிறது.
மனதுக்கும் சந்தோஷமாகஇருக்கிறது” என்கிறார்
 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடி நிற்கும்' நாகராஜ்

.
NEW INFORMATIONNEW INFORMATION

Friday, August 18, 2017

*"தேடி வரும் தெய்வம்..."*🙏🏻

தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவதும், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி... இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை... ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே...

இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன்...

நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே... இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது... ஆனால் இறைவன் தான் உன்னை வந்து  அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான்...

பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா.

அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல.
முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால், ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...

அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான்.

பல அறச் செயல்களைச் செய்கிறான்.

இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார்.

அல்லது

அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார்.

அவனோடு உரையாடுகிறார்...
பாராட்டுகிறார்....
பரிசுகள் தருகிறார்.

இது நடக்கும் இல்லையா?”

“நிச்சயமாக நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்.

நீதான் அவன்.

நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம்.
ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால்...

அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார்.

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு.

*இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் மட்டுமே ஈடுபடு...*

இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...

*நம்*
*எண்ணங்களும்...*
*உணர்வுகளும்...*
*சிந்தனைகளும்...*
*சொற்களும் ...*
*செயல்களும்...*

*நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...*

*நல்லது செய்யுமெனில்...*

*இறைவனை*
*நாம் தேட* *வேண்டியதில்லை...*

*இறைவனே நம்மை தேடி வருவார்...*

*இனி வரும் அனைத்து நாட்களும்...*
*இனிய நாளாக அமைய இறைவன் அருள் புரிவார்...*
வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்.

Wednesday, August 16, 2017

👇மறைந்த தெலுங்கு ஓவியர் திரு வட்டாதி பாபய்யா ஒரு பிரபலமானவர்.அவர் 1904ல் வரைந்த இந்த ஓவியம் கோபத்தில் இருக்கும் *கைகேயி* மற்றும் துக்கத்தில் இருக்கும் *தசரதன்*


இதிலென்ன  விஷேசம் .முயற்சித்துப்   பார்க்கவும் 


முடியவில்லையெனில் கடையில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும் 










* தலைகீழாக பார்த்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும்.



Monday, August 14, 2017

பொறுப்பறியா சுதந்திரமும் சுதந்திரமில்லா பொறுப்புக்களும்

கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்

நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்

எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன

"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
நேரத்திற்குக்   கிடைத்துவிடும்
ஆனால் நம்  இஷ்டம்போல்
குலைக்கத் தான் முடிவதில்லை "
என்று குறைபட்டுக்குக்  கொண்டது
கொழுத்திருந்த  அது

"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
யாரைப்பார்த்தும்குலைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்று சலித்தது
எலும்பும்  தோலுமாய்
காட்சியளித்த இ து 

இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன

பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...

இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே

(சிறந்த சமூக மனிதனாய்
தகுதிப்படுத்திக் கொள்வோம்
சுதந்திரச்  சுகத்தை
முழுமையாய் அனுபவிப்போம்
அனைவருக்கும் இனிய
சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள் )   

Friday, August 11, 2017

நம்பிக்கையுடன் எழுதிக்கொண்டிருப்போம்...

நம்
இளமைப் பருவத்தில்
தீமைகள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவைகள் எல்லாம் எங்கோ
மிக மறைவாய்க்
கண்ணுக்குத் தெரியாதபடி..
கைகளுக்கு எட்டாதபடி
மிக மிக முயன்றால் மட்டுமே
அபூர்வமாய்க்  கிட்டும்படி...

இப்போது
நல்லவைகள் இருக்கிறபடி...

நம்
இளமைப் பருவத்தில்
தீயவர்கள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவர்கள் எல்லாம்
மிக ஒதுங்கியபடி
அனைவருக்கும் தெரியாதபடி
அன்றாடவாழ்வில் தட்டுப்படாதபடி
அளவை மீறுகையில் மட்டும்
இருப்புத் தெரியும்படி

இப்போது
நல்லவர்கள் உள்ளபடி

என்ன செய்வது ?

கள்குடித்தக் குரங்கதுப்
பாறையில் நின்றபடித்
தன் முட்டைவைத்து
விளயாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறப்
பெட்டைகளாய்...

நாகரீகக் காலம்
நுகர்வுக்கலாச்சாரத்தில்
இளமையைவைத்து
விளையாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறோம்
ஊமைகளாய்..

என்ன செய்யலாம் ?

மழையில்லை என
புலம்பிய படியும்
அழுதபடியும்
இருத்தலை விடுத்து
நமபிக்கையுடன்
உழுதுக் கொண்டிருக்கும்
புஞ்சை விவசாயியாய்

மாற்றும் வழியதுத்
தெரியவில்லையெனப்
புரியவில்லையெனச்
சும்மா இருத்தலைவிடுத்து
நம்பிக்கையுடன்
எழுதிக்கொண்டிருப்போம்
பதிவர்களாய்..கவிஞர்களாய்

Thursday, August 10, 2017

#இலஞ்சியில்_முதுமை_இனிமையாகிறது


{இன்று ஒரு தகவல் INFORMATION TODAY மூலம் )

வயதானவர்களை பார்த்தால் கையெடுத்து கும்பிட்டு அவர்களது ஆசீர்வாதத்தை பெறுவது பொதுவான இயல்பு.....
அப்படிப்பட்ட வயதானவர்களே ஒருவரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்சியுடனும் நெகிழ்சியுடனும் வணங்குகின்றனர்.

 செங்கோட்டையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள இலஞ்சி பாண்டியன் இல்லத்திற்கு செல்லவேண்டும்.

பெயர் தம்புராஜ் வயது 82 திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர்.

மலேசியா போன்ற வெளிநாடுகளில் நிறுவனத்தின் பெருமையோடு நாட்டின் பெருமையையும் ஒருசேர நிறுவியர்
பணி ஒய்வுக்கு பிறகு இலஞ்சிக்கு வந்தவர் இங்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் உறுப்பினரானார் சில காலத்திலேயே மன்றத்தின் தலைவராகவுமானார்.

தலைவரான பிறகு அறுபது வயதை தாண்டி நுாறு வயதை தொடப்போகும் நிலையில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

பல உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருக்கின்றனர் பெற்றவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர் ஆனால் பணம் இருந்தாலும் சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் அவதிப்படுவதை உணர்ந்தார்.

இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீவிரமாக யோசித்து சென்னையில் இருந்து முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் நடராஜனை வரவேற்று மூன்று நாள் மருத்துவமுகாம் நடத்தி அவர்களுக்கு எப்படிப்பட்ட உணவு வழங்கவேண்டும் என்று கேட்டார்.

காலையில் பலகாரமும் மதியம் உணவும் இரவில் பழங்களும் இருக்கவேண்டும் காலை உணவும் மதிய உணவும் எப்படி இருக்கவேண்டும் எந்த அளவிற்கு உப்பு புளி காரம் இருக்கவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் என்றெல்லாம் எழுதி பட்டியலாக தந்துவிட்டார்.

இரவு உணவிற்கான பழங்களை அவர்களே வாங்கிக்கொள்வார்கள் அதில் பிரச்னை எதுவுமில்லை காலை மற்றும் மதிய உணவு மட்டும் மருத்துவர் சொன்னபடி உடலுக்கு ஆரோக்கியம் தரும்வகையிலும் ருசியாக இருக்கும்படியும் தருவது என முடிவு செய்தார்.

இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் துவங்கிய இந்த சேவை இப்போது 120 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது.

மாதத்திற்கு ஆன செலவை 120 பேருக்குமாக பிரித்துக்கொள்கிறார்கள் இது தலைக்கு 1800 ரூபாய் அளவில் வரும்.

காலை உணவு காலை 7.30 மணிக்கும் பகல் உணவு பகல் 11 மணிக்கும் வீடு தேடி சென்றுவிடுகிறது.

ஒரு நாள் ஒரு பொழுது கூட இது தவறியது இல்லை அதே போல ஒருவர் கூட உணவில் குறை என்று இதுவரை சொன்னது இல்லை.

இலஞ்சியில் மட்டுமின்றி செங்கோட்டை குற்றாலம் மேலகரம் சங்கராஸ்ரமம் வரை சாப்பாடு செல்கிறது.

பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசி கிடைப்பதால் இந்த வேலையை புனிதமாக கருதி சமையல் கலைஞர்களும் ஆட்டோ டிரைவர்களும் ஒரு ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.

மேலும் துரை.தம்புராஜின் இந்த சமூக பணிக்கு அவரது துணைவியார் சண்முகவடிவு நாச்சியார் பெரும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவி வருகிறார்.

அதிகாலை ஐந்து மணிக்கு துரை.தம்புராஜின் பணி சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிடுகிறது.ஒரு இளைஞரின் வேகத்தோடும் விவேகத்தோடும் பல வேலைகளை பம்பரமாக சுற்றி சுற்றி வந்து பார்த்து காலை மதிய உணவை அனுப்பிவிட்டே கொஞ்சம் இளைப்பாறுகிறார்.

 இதில் இன்னோரு விஷயம் பயனாளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் திரு மற்றும் திருமதி துரை.தம்புராஜ்தான்.

உணவு விஷயத்தை தாண்டி முதியவர்களுக்கான மருத்துவமுகாம் கலந்துரையாடல் இலக்கிய கூட்டம் என்று ஏதாவது ஆரோக்கியமான விஷயங்களை நடத்தி தானும் தன்னைப்போன்ற பெரியவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.

கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் போதும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை வெடிச்சிரிப்புடன் அந்த சூழலையே தனது நகைச்சுவையான பேச்சால் கலகலப்பாக்கிவிடுகிறார்.மொத்தத்தில் முதுமையை இனிமையாக்கி கொண்டுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண கருவிதான் எல்லா பாராட்டும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தை சேர்ந்த டி.சோமசுந்தரம்,ஆர்.வி.துரைசாமி,எஸ்.வேங்கடசுப்பிரமணியன்,பி.கே.சண்முகசுந்தரம்,டி.சோமசுந்தரம்,எஸ்.முததுசாமி,வி.சுப்பிரமணியன்,எஸ்.தெய்வாங்பெருமாள்,குற்றாலிங்கம்,அருணகிரிநாதர்,என்.திருவேங்கடம்,ஆர்.எம்.கணபதி ஆகியோரைத்தான் சாரும், அவர்கள்தான் தேவையான ஆலோசனைளை வழங்கி வழிநடத்தி செல்கின்றனர் என்கிறார் அடக்கமாக.

மகத்தான புண்ணியத்தைதரும் இந்த நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும் அவரவர் ஊரில் இருந்து செய்யலாம்...

செய்து பாருங்கள் .
வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டாகும் என்று சொல்லி முடித்த துரை.

தம்புராஜிடம் ஆலோசனை பெறவும் வாழ்த்தவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9944234499.

படித்ததில் பிடித்தது


Tuesday, August 8, 2017

புதிதாய்ப் பிறக்கவேண்டும்

''மொத்தம்
கழிந்தது
இருப்பு
இந்த மூன்றில்
எந்த இரண்டு இருந்தாலும்
மற்றொன்றை
எளிதாய் கண்டு விடலாம்
ஆனால்... "எனத் தயங்க

இதைக் கேட்ட நண்பன்
மிகப் பலமாய்ச் சிரித்தான்

"சுற்றி வளைத்து
எங்கு வருகிறாய் எனப் புரிகிறது
உனக்கு உன் மொத்த வாழ்நாள்
தெரிய வேண்டும் அப்படித்தானே "
என்றான்

நானும் மௌனமாய்த் தலையாட்ட


அவனே  தொடர்ந்தான்

"கழிந்த நாட்களை
கணக்கிட்டுக் கொள்

அதனுடன்
நீ விழிப்பதால்
சேருகிற நாளினை
கூட்டிக் கொள்

இப்போது கிடைப்பது
உன் மொத்த வாழ் நாள்

இப்போது இரண்டு கிடைத்து விட்டதல்லவா
இதில் கழிந்ததைக் கழி
இனி அடுத்தது கிடைப்பது
மிக மிக எளிதுதானே "
எனச் சப்தமாய் சிரிக்கிறான்

நான் மெல்லத் தயங்கியபடி
"அப்படியானால் விடை எப்போதும்
ஒன்றாகத்தானே இருக்கும் "

"ஆம் உண்மையும் அப்படித்தான்
மாறி மாறி இருக்காது
ஒன்றாகத்தான் இருக்கும்

புரிந்தவன் ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பிறக்கிறான்
கிடைத்த  நாளில்
முழுமையாய் வாழத் துவங்குகிறான்

புரியாதவனோ
உன்னைப் போல்
தேடி அலைந்து
அன்றையும்
கழிந்த நாளாக்கி
வாழாதுத் தொலைக்கிறான்" என்கிறான்

கொஞ்சம் புரிந்தது போலிருந்தது

நாளை முதலாவது
புதிதாய்ப் பிறக்கவேண்டும்

Sunday, August 6, 2017

"வாடா போடா " நண்பர்கள்...

"வாடா போடா "
நண்பர்கள் அதிகம்
உடனிருக்கையில் இருந்த
இளமைத் துள்ளலும்
தைரியமும் மகிழ்வும்

"வா, போ "
நண்பர்களிடம்
விட்டக் குறையாய்
தொட்டக்குறையாய்
விடாதுத் தொடர்ந்ததும்

இப்போது
"வாங்க போங்க "
நண்பர்களிடமும்
இருப்பது போன்ற
பாவனையில் என்
நட்பைத் தொடர்கிறேன்

பிறந்த சூழலில் வாய்த்த
புழுதி வீதியும்
அந்த எருமை குளிக்கும் குளமும்
கிட்டிப் புல் விளையாட்டும் தந்த
 நீங்காதச் சுகத்தை

இன்று வசதி வாய்ப்புகள் தரும்
பிரதான சாலைகளில்
நவீன நீச்சல் குளங்களில்
நவ நாகரீக  விளையாட்டுகளில்
நாளும்தேடிச் சோரும்
என்வயதுப்பெருசுகள் போலவும்

( வலைத்தளம், மற்றும் முக நூல் நண்பர்கள்
அனைவருக்கும்  
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ) 

Friday, August 4, 2017

.....போக்கு மா நிலம்

முன்பு ஒரு காலத்தில் மத்திய அரசில்
தமிழகத்திற்கென ஒரு கேபினெட்
அந்தஸ்துள்ள மந்திரி கூட
இல்லாத காலம் இருந்தது

அப்போது ஒரு இயக்கம் தமிழகத்திற்கு
கேபினெட் அந்தஸ்துள்ள மந்திரிகள்
பெறும் தகுதி இல்லையா என தமிழகம்
எங்கும்  சுவர்ப் பிரச்சாரம் செய்த ஞாபகம்
இப்போதும் இருக்கிறது

அதே போல இப்போது அடுத்துள்ள
யூனியன் பிரதேசத்திற்குக் கூடத் தனியாக
துணை நிலைய ஆளுனர் இருக்க
நம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தனியாக
ஆளுநர் இல்லாமல் கூடுதல் பொறுப்பிலேயே
இருப்பது .......

(அதுவும் அரசியல்  அநாகரிகங்கள்
மிக மிக அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கும்
மிக மிக அவசியமான இந்தச் சூழலில் )

இம்மாநிலம் ஒரு .....போக்கு
மாநிலமாக மத்திய அரசால் மதிக்கப்படுகிறதோ
என்கிற ஒரு மோசமான எண்ணத்தைத்
தோற்றுவிப்பதைத் தவிர்க்க இயலவில்லை

(கிராமங்களில் ஒன்றுக்கும் லாயக்கற்றவனை
இப்படிச் சொல்லித்தான் கண்டு கொள்ளாமல்
விட்டுவிடுவார்கள் )

எது எதற்கோ எப்படியெல்லாமோ
விளக்கம் சொல்கிற தமிழக பி.ஜெ.பி
முக்கியஸ்தர்கள் இதற்கும் நாம்
இரசிக்கும்படியாகவோ அல்லது
திகைக்கும்படியாகவோ (கேஸ் மானிய
ஒழிப்பிற்கு மேடம் சொன்னமாதிரி )
விளக்கம் சொல்வார்களா ?

அல்லது தலைப்பில் சொன்னது
ஒருவேளை சரிதான் எனும்படியாக
இது குறித்துத் தொடர்ந்து மௌனச் சம்மதம்
தெரிவிப்பார்களா ?

இனி நாம்...

இனி நாம்...

மாடி வீடு வைத்திருக்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..

கார் வைத்திருக்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..

மாதம் 1 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள வேட்பாளருக்கு
 ஓட்டு போடக்கூடாது..

1 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் வேட்பாளருக்கு 
ஓட்டு போடக்கூடாது.
.
அரசியல் பாடத்தில் முதுநிலை பட்டம் 
பெற்றிருப்போருக்கு மட்டுமே எங்கள் ஓட்டு..

வேட்பாளரின் மகன்/மகள் தனியார் பள்ளி/கல்லூரியில்
 படிப்பவர்களாக இருந்தால் ஓட்டு போடக்கூடாது
..
குடும்பத்தில் எவரேனும் அரசு வேலையில் பணிபுரிந்தால் 
அந்த குடும்ப வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..

கொடுமையான சட்டமியற்றி மக்களை சிரமப்படுத்தும் 
ஆட்சியாளர்களை நாமும் நம்மால் முடிந்த எதிர்ப்பினை 
ஒற்றுமையுடன் வெளிப்படுத்துவோம்.👍👍👍

வாட்சப்பில் வந்தது

Saturday, July 29, 2017

முயற்சியும் வெற்றியும்

அந்தச் சிறு குன்றின் முன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்

நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்

"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்

"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்

"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்

நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது

"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்

அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்

ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது

நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்

Thursday, July 27, 2017

எங்கள் அப்துல் "கலாமே '


தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "

இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை

ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு

உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்

ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே

இந்த நூற்றாண்டில்
இந்தியனின்  உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே

இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....

அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே  "பாவி "

அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "

விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே

நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்

இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே

இனியேனும் சிறிது  ஓய்வெடுப்பீர்

நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு

இனியேனும் இரசித்து மகிழ்ந்து
சொர்க்கத்தில் சிறிது ஓய்வெடுப்பீர் 

Tuesday, July 25, 2017

காற்று வாங்கப் போனால் ....

காற்று வாங்கப் போனால்
கவிதை வாங்கி வரலாம்-இந்தக்
கூற்று மெத்த நிஜமே-இதை
உணர்ந்து தெளிந்தால் நலமே

இல்லந் தன்னில் அனலாய்
எரித்துக்  கொல்லும் தனிமை-தனித்துச்
செல்லும் போது நெஞ்சில்-தானே
பெருக்கித்  தருமே இனிமை

வீட்டுச் சுவற்றில் எங்கும்
ஒட்டி வைத்தச் செய்தி-நமக்கு
நாட்டு நடப்பைச் சொல்லும்-அதனால்
கருவும் தானே சுரக்கும்

மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே

உள்ளம் அதனில்  உடலில்
உடனே  சக்திக்  கூட்டும்  -எளிய
நல்லப்  பயிற்சி என்றால் --அது
நடக்கும் பயிற்சித் தானே

  எனவே நாளும்----

"காற்று வாங்கப் போனேன்
கவிதை வாங்கி வந்தேன் " -இந்தக்
கூற்றை நினைவில் கொண்டே    -நாமும்
காற்று  வாங்கப் போவோம்  

Friday, July 21, 2017

உனக்கும் வருமடி "வளர்மதி "ஆப்பு...

அண்ணே!
ஒரு சின்ன டவுட் அண்ணே
சமூகத்தைக் கெடுப்பது என்றால்
சமூக  அமைதியைக் கெடுப்பது
என்றால் என்ன அண்ணே ?

தம்பி
சமூகத்துக்கு எது எது
தேவையற்றதோ
எதை எதைச் செய்தால்
அது
இன்னும் நாசமாகுமோ
அதையெல்லாம் செய்வது
சமூகத்தைக் கெடுப்பது

என்ன செய்தாலும்
பொறுத்துக் கொண்டு
ஸ்மரணையற்றுக் கிடக்கும்
சமூகத்தைத் தட்டியெழுப்ப முயன்றால்
அது சமூக அமைதியைக் கெடுப்பது

சமூகத்தைக் கெடுக்க
உறுதுணையாய் இருந்தால்
சம்பள உயர்வு இரண்டு பங்கு
நிச்சயம் உண்டு

மாறாக
அதற்கு எதிராக
ஏதேனும் பிரச்சனை செய்தால்
தண்டனை என்பது
நிச்சயம் உண்டு

அண்ணே
அப்ப இந்த ஜன நாயகம்
மக்கள் உரிமை
அப்படி இப்படிச் சொல்றதெல்லாம்
என்ன அண்ணே

போடா மண்டு
எந்த ஊரில் இருந்துகிட்டு
என்ன என்னவோ எல்லாம்
உளறிக்கிட்டு

உன் வீட்டுக்கிட்டயே
கடையைத் திறந்தாச்சு
போய் ஒரு ஆஃப் அடிச்சிட்டு
பேசாமத் தூங்கு

இல்லாட்டி
உனக்கும் வருமடி
"வளர்மதி "ஆப்பு

Thursday, July 20, 2017

கமல் சார்....

கமல் சார்
இப்பத்தான் தெரிஞ்சது
நீங்க ஒரு பெண்ணை
அவ விருப்பத்துக்கு மாறா
கடத்திட்டுப் போய்
கொடைக்கானலிலே
மறைச்சு வச்சது

அதுக்கு ஆதாரம் தேடி
இப்பத்தான்
அந்தக் குகைக்கு
விசாரணைக் குழு போயிருக்கு

(இதில் தப்புவது கஸ்டம்
ஏன்னா அந்தக் குகைக்குப் பேரே
இப்ப குணா குகைதான் எப்புடீ )

அப்புறம் நீங்க
பரமக்குடி பார்ப்பானாமே
அது கூட
இப்பத்தான் தெரிஞ்சது

(இதிலும் தப்புவது மிக மிக கஸ்டம்
நீங்க படிச்ச ஸ்கூலில் இருந்து
ஆதாரத்தைத் திரட்டிட்டோம் )

ஏன்னா
திராவிடம் ஆரிய மாயையில
சிக்கிடப் பூடாது இல்ல

இன்னும்
நிறைய ஆதாரம் இருக்கு
அவசியமானா அப்ப  அப்ப
வெளியிடுவோம்

தெளிவாய்ச் சொல்லிடறோம்
நாங்க சினிமா எடுக்க
உங்கப் பக்கம் வரலை

நாங்க என்னவோ அரசியல்ல
படம் காட்டித் திரிவோம்
அதுக்கு நீங்க வராதீங்க

அதுதான் இருவருக்கும் நல்லது
புரியுதா ?
 

Tuesday, July 18, 2017

தமிழனுக்கே உரியது என உலக அங்கீகாரம் பெறுவோம்...

பணம் பத்தும் செய்யும்
இது பழைய மொழி
பதினொன்று செய்வது
"அன்பே வா "காலம்
எதையும் செய்யும் என்பது
"சசியின்" காலம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
-----------
பணத்தைக் கொண்டு
எதையும் செய்யலாம் எனச்
சமூகச் சூழல் ஆன பின்பு

எதையும் செய்து
பணம் சம்பாதிக்கலாம் என்பது
இன்றைய தர்மம்
இப்படிப் பேசிச் சமாதானம் கொள்வோம்
--------------

பணம் பாதாளம் வரை
பாயும் எனில்
பக்கம் இருக்கிற
மாநிலச்சிறைக்குள்
பாய்வதில் என்ன ஆச்சரியம் ?
இப்படிக் கேட்டு எதிரியை மடக்குவோம்
---------------

விலையில்லா பொருட்கள் கொடுத்து
நம் வாயடைத்து
அரசுப்பணிகள்
அனைத்திற்கும்
விலை வைத்தது ராஜ தந்திரம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
----------------

தர்மம் நியாயம்
நீதி சட்டம் அனைத்தையும்
சந்தைப்படுத்தியது
அரசியல் சாகசம்
இப்படிச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்
--------------------
மறக்காது
சாக்கடை அரசியலும்
அதனைச் சகிக்கும் மனப்பாங்கும்
தமிழனுக்கே உரியது என
உலக அங்கீகாரம் பெறுவோம்
மீசையை முறுக்கிக்  கர்வமும் கொள்வோம்

Monday, July 17, 2017

ஒரு நீர்க்குமிழியே கூட....

பிரிவுத் துயரை
அனுபவித்து அறிய
பிரிய வேண்டியதுதான்
கட்டாயம் என்பதில்லை

அவ்வப்போது
கடந்து செல்ல நேரும்
புகைவண்டி நிலையமே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

வலியின் வலுவினை
நோய்வாய்ப்பட்டே
அறிய வேண்டியதுதான்
அவசியம் என்பதில்லை

அவ்வப்போது
ஆறுதல் சொல்லச் சென்றுவரும்
மருத்துவமனையே கூடப்
அதனை உணர்த்திவிடுகிறது

வாழ்வின் முடிவினைப்
புரிந்து கொள்ள
இறந்துதான் ஆகவேண்டும்
என  அவசியமில்லை

அவ்வப்போது
தவிர்க்க இயலாது சென்றுவரும்
சாவு வீடுகளே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

உலக வாழ்வின் நிலையாமை
குறித்துத் தெளிய
 நூறு  நூல்கள்
வேண்டும் என்பதில்லை

வண்ண்ங்களைப் பிரதிபலித்து
மயக்கித் தெறிக்கும்
 மிகச் சிறு நீர்க்குமிழியே  கூட
போதுமென்றாகிப் போகிறது

  

Saturday, July 15, 2017

பொலிடீசியன் பிகேவியரா/பிக் பாஸ் ப்ரொமோஷனா

நகரமயமானபின்னே
சேரிக்கான பொருளே
வேறுவகையாகிப்போனதே

வேளச்சேரி,கூடிவான்சேரியை
மட்டும் சொல்லவில்லை
கூவத்தோரம் இருப்பவர்களுக்கும்
சேர்த்துத்தான் சொல்கிறேன்

கிராமங்களில்
பழையபச்சேரிகள்
எனச் சொல்லப்பட்டதெல்லாம்
அம்பேத்கார் நகர் எனவே
பொதுப்பெயர் பெற்றுப் போக

சேரிகள் எனில்
பொருளாதார ரீதியாக
பின் தங்கியோர்
வாழும் பகுதி என ஆனபின்
ஜாதிப்பிரச்சனை ஏன் வருகிறது ?

அவர்களை முன்னேறாது
அவர்களாகவே வைத்திருத்தலே
தங்கள் நிலைப்புக்கு வசதி
எனக் கருதும் அரசியல் வியாதிகள்

அவர்களே மறந்துபோன
அவர்களுக்கான அடையாளங்களை
மீண்டும் நிலை நிறுத்த
முயல்வதுதான்
பொலிடீசியன் பிகேவியரா ?

இல்லை இது கூட
பிக் பாஸுக்கு மறைமுகமாய்
ப்ரொமோஷன் செய்யும் தந்திரமா ?

Friday, July 14, 2017

மாற்றம் சில நாள் குழப்பத்தான் செய்யும்

மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் சில  மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை
புரிந்து கொண்டால் குழப்பமில்லை

உதாரணமாய்...

நில உடமைச் சமுதாயத்தின்
எச்சமாய் இருந்த
எங்கள் ஊர்
நான் சிறுவனாய் இருக்கையில்...

கீழக்கடைசியில் பச்சேரி
மேலக்கடைசியில் அக்ரஹாரம்
இரண்டுக்குமிடையில்
பிள்ளைமார தெரு
யாதவர் தெரு
நாடார் தெரு
தெற்குப் பகுதியனைத்தும்
சேர்வார் வீதி
அதை ஒட்டி
சௌராஸ்டிரா தெருவென
ஜாதியாகத்தான் பிரிந்திருந்தது

அறுபத்தியேழுக்குப் பின்
எழுந்த ஒரு பெரும்
சமூக நீதிப்புரட்சியில்
ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தில்
சாதிப்பெயர்கள் அனைத்தும்
அழித்தொழிக்கப்பட்டு

கீழக்கடைசியில் அம்பேத்கர் நகர்
மேலக்கடைசி ஈஸ்வரன் கோவில்தெரு
இரண்டுக்குமிடையில்
வ.வு.சி வீதி,மற்றும்
கோபாலகிருஷ்ணன் தெரு
காமராஜர் தெரு
தெற்குப்பகுதியனைத்தும்
மருதுபாண்டியர் தெரு
அதை ஒட்டி பிரஸ்ன்ன காலனி
என அரசின் உத்திரவால்
சமத்துபுரமாகிப் போனது

மனம் மாற்றி பெயர் மாற்றாததால்  
சில நாட்கள் பெயர்க்குழப்பமிருந்தது

விளக்கம் சொல்பவர்கள்
"அதுதாம்பா "எனச் சொல்லிப்
பழைய பெயரைச்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்

இப்போதெல்லாம்
பெயரிலேயே விளக்கம் இருப்பதால்
யாரும் குழம்புவதில்லை

ஆம்மாற்றங்கள்  சில நாள்
குழப்பத்தான் செய்யும்
பின் அது தானாய் சரியாகிவிடும்

ஏனெனில் மாற்றங்கள்
மாறுவதற்காகச்  செய்வதில்லை

புரிந்து கொண்டால் குழப்பமில்லை


Thursday, July 13, 2017

அரண்மனை மெத்தைக் கூட....

பசித்தலில் குடலில் ஏதும்
பிரச்சனை இல்லை யென்றால்
புசித்திடும் உணவு எல்லாம்
நிச்சயம் விருந்து தானே

பசித்தலில் குறைகள் ஏதும்
தொடர்ந்திடக் கூடும் ஆயின்
புசித்திடும் மருந்தும்  கூட
நிச்சயம் சுமைபோல் தானே

உறங்கிட முயலும் போதில்
உடனது தழுவும் ஆயின்
உறங்கிடும் இடங்கள் யாவும்
உன்னத மெத்தை ஆமே

உறக்கமே எதிரிப் போலே
உறுத்தியே இருக்கு மாயின்
அரண்மனை மெத்தைக் கூட
முள்ளென உறுத்தும் தானே

பழகிடும் பாங்க றிந்து
பழகிடக் கூடு மாயின்
துயர்தரும் பகைவர் கூட
விரும்பிடக் கூடும் தானே

பழகிடும் நேர்த்தி தன்னில்
பங்கமே இருக்கு மாயின்
உறவுகள் கூட நம்மை
ஒதுக்கிடக் கூடும் தானே

கவித்திறன் பெற்றுப் பின்னே
கவியது புனைவோம் ஆயின்
நதியெனக் கருக்கள் நம்முள்
மகிழ்வுடன் பாயும் நாளும்

இலக்கண அறிவு இன்றி
இலக்கண மீறல் செய்யின்
குழப்பமே வந்து சூழும்
மனமதில் கொள்வோம்  வெல்வோம் 

Wednesday, July 12, 2017

உடல் மொழி

"கொஞ்சம் அறிகுறி
தெரிகையிலேயே
அழைத்து வந்திருக்கலாமே
இப்படியா நோயை முற்றவிட்டு..."

அவ நம்பிக்கையில்
உதடு பிதுக்கினார் மருத்துவர்

"அவனுக்குத் தெரியலையே டாக்டர்
நாங்கள்தான் கண் இத்தனை
மஞ்சளாயிருக்கிறதே என
சந்தேகப்பட்டு...."வார்த்தைகளை
மென்று விழுங்கினார் தந்தை

சோர்வாய் மெல்லச் சிணுங்கி
அடி வயிற்றில்
மிக லேசாய் வலி கூட்டி
பின் பசியடக்கி
சிறு நீரின் நிறம் மாற்றி
பின் கண்களுக்கு அதை மாற்றி
உடல் பேசிய வார்த்தைகள் எதையும்
புரியும் அறிவில்லாததால்
நோய் முற்ற
ஒடுங்கி அடங்கிக் கிடந்தான் அவன்

அறிய வேண்டிய
ஆதார மொழியினை முதலில்
அறியப் பயிலாது

தாய் மொழி நீங்கலாய்
நான்கு மொழிகள் அதிகம் அறிந்திருந்த
அந்த மெத்தப் படித்த மடையன்

Tuesday, July 11, 2017

முக நூலும் நிஜ வாழ்வும்....

கண்ணில்பட்ட
நல்லவைகள்
சுவாரஸ்யமானவைகள்
பயனுள்ளவைகள்
அனைத்தையும்

யாம் பெற்ற இன்பம்
இவ்வையகமும் பெறட்டும்
எனும் பரந்த நோக்கில்

தாமதிக்காது
அடுத்த நொடியே
பகிர்ந்து வைக்கத் துடிக்குது

விரிந்த மனம்
முக நூலில்..

என்றேனும்
பயன்படலாம்
பயன்படாதும் போகலாம்
என்பவைகளைக் கூட

யாம் பெற்ற சுகம்
தனக்கும் தன் குடும்பத்திற்கும்
எனும் குறுகிய நோக்கில்

தாமதிக்காது
அடுத்த கணமே
மறைத்து வைக்கத் துடிக்குது

சுய நல மனம்
நிஜ வாழ்வில்...

ஆயினும்
எறும்பு ஊற ஊற
தேய்கிற கல்லது

காட்சியாய்
நெஞ்சுள் விரிகிறது
மிக லேசாய்
நம்பிக்கை ஊட்டிபடி


Monday, July 10, 2017

என் அப்பன் குதிருக்குள் இல்லை

ஆத்துல போடுவதாக இருந்தாலும்
அளந்துப் போடப்
பயிறுவிக்கப்பட்டவர்கள் நாம்

ஆகவே அளத்தல் சரிதான்

கறாராக என்பதுவும் சரிதான்

ஆனால் எதை எதனால் எப்படி ?

தூரத்தைத்  தராசில் நிறுத்தா ?

திரவத்தை அடிக் குச்சிக் கொண்டா ?

மணத்தை நாவின் மூலமா ?

ருசியைச் செவியின் மூலமா ?

இல்லையாயின்

மனம் கொள்ளும் நம்பிக்கைகளை

அறிவால் அளக்க முயல்வோமா?

காட்டு யானையை
பயிற்றுவிக்க
பயிற்றுவிக்கப்பட்டக்  கும்கியாய்

அனுபவத்தால்
அடைந்த சில
வழிமுறைகளை, நெறிமுறைகளை

சடங்காய் சம்பிராதயங்களாய்
வகுத்து வைத்திருக்கிறோம்

(பல விஷயங்கள் கண்ணை
மூடிக்  கொண்டு  ஏற்கும்படியாய்

சில விஷயங்கள் அடியோடு
அறுத்தெறியும்படியாய்  ) 

குட்டியில் சங்கிலியால்
கட்டப்பட்ட யானை
பலங்கொண்டதும் சணலுக்கு
அடங்கிடும் கதையாய்....

புரிந்துத் தொடர்கிற
புரிந்து மறுக்கிற
இருவரும்
நிச்சயம் புத்திசாலி

மாறாக
நாத்திகம் என் உயிர் மூச்சு

கோவிலுக்கு வந்தது
மனைவிக்காக என்பது

காவி உடுத்தியபடி
உத்திராட்சம் அணிந்தபடி
பகுத்தறிவு மேடையில் நாடகமாடுவதும்  

நிச்சயம்
இரசிக்கத் தக்கதில்லை

மாறாக
ஊரை ஏமாற்றுவதாய் நினைத்து
தன்னையே ஏமாற்றிக் கொள்ளும்
............................... கூட

(சமீபத்தில் ஒரு பகுத்தறிவுக் கூட்டத்
தலைவர் தன் அறுபதாம் கல்யாணத்தினை
அதற்கான கோவிலில் சென்று
செய்து கொண்டார்

அப்போது நிருபர்கள் கேட்டக் கேள்விக்கு
இது  என் தனிப்பட்ட விஷயம் என்றார்

ஒரு ஆதீனத் தலைவர் எப்போதும்
எப்போதும் கடவுள் மறுப்பாளர்களைச்
சுற்றியே காட்சித் தருவார்

இந்த இரண்டுக்கும்  இந்தப் பதிவிற்கும்
எந்தச்சம்பந்தமில்லை

ஆம் என் அப்பன் குதிருக்குள் இல்லை )

Sunday, July 9, 2017

இவனும் அதுவும்

நண்பன்
அவனைத்தேடி வந்தால்
இவனும் போகலாம்
என இருந்தான்

அவனும் வரவில்லை
இவனும் போகவில்லை

பின்னொரு நாளில்
அவனும் அதையே சொல்ல
இவன் மிக நொந்து போனான்

காதலை
முதலில்அவள் சொன்னால்
தானும் சொல்லலாம்
என  இவன் இருந்தான்

அவளும் சொல்லவில்லை
இவனும் சொல்லவில்லை

பின்னொரு நாளில்
அவளும் அதையே சொல்ல
இவன் மனம் வெந்து போனான்

....................................................

...................................................

......................................................

அறிவுக்குப்
பிடிபடுமாயின் "அதனை "
முழுதாய் நம்பலாம்
என இவன் இருந்தான்

அது பிடிபடவும் இல்லை
இவன் நம்பவும் இல்லை

அந்திம நாட்களில்
இவன் நம்பத் துவங்க
"அது "பிடிபடத் துவங்க
இவன் மிகச் சிதைந்தே போனான்

Friday, July 7, 2017

பேராசையும் தேவையும்

தேவைகள் மட்டும்
எவையென அறிந்திருந்து
பேராசைகள் குறித்து
ஏதுமறியாது
நிம்மதியாய் இருந்தார்கள்
நம் பாட்டன்மார்கள்

தேவைகள் குறித்தும்
பேராசைகள் குறித்தும்
ஒரு தெளிவிருந்தும்
பேராசைகள் தேவையற்றவை என
தெளிவாய் இருந்தார்கள்
நம் தகப்பன்மார்கள்

தேவைகள் எவை
பேராசைகள் எவை என்கிற
பெருங்குழப்பத்தில்
இரண்டிலும் பாதியே நிறைவேற
எப்போதும் பதட்டத்தில்
வாழ்ந்தோம்  நம் காலத்தவர்கள்

பேராசைகளே தேவைகளென்றாக
எந்தத் தேவையும் அடையாது நீள
புலிவால்பிடித்த நாயராய்
பிடிக்கவும் இயலாது விட்டுவிடமும் முடியாது
நொடிதோறும்திண்டாடுது
இன்று நம் குலத்தோன்றல்கள்

ஆம்
ஆதி முதல்  இன்றுவரை
 கூடியும்  குறைந்தும்
 ஒன்று போலவும் நேரெதிர்போலவும்
ஒளிபோலும்  நிழல் போலும்
பம்மாத்துக்காட்டி
உலகினைத் தம் போக்கில்   இயக்கிப் போகுது
பேராசையும் தேவையும்

தமிழ்மண ஓட்டுப் பட்டை- ஒரு சிறு சந்தேகம்


இது எப்பத் தெரியாது
ஏன் தெரியாதுன்னு
யாருக்கும் தெரியாது

ஆனா
தெரிய வேண்டிய நேரத்தில
மிகச் சரியா தெரியாமப் போகுது

நான் எப்ப வருவேன்
எப்படி வருவேன்னு
யாருக்கும் தெரியாது

ஆனா
வரவேண்டிய நேரத்தில
மிகச் சரியா வருவேன்னு
முத்து ரஜினி சொன்ன "பஞ்சை "
உல்டாவா நினைவுபடுத்தியபடி

இது எனக்கு மட்டும்தானா/

Wednesday, July 5, 2017

வாடித் தவிக்குது பதிவர் உலகு

வாடித் தவிக்குது பதிவர் உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

தேரின்றி நடக்கும்
திருவிழா போலவும்
நீரின்றித் தவிக்கும்
காவிரி போலவும்

கண்ணனைக் காணாத
கோகுலம் போலவும்
வெண்நிலவைத் தேடும்
வானமதைப் போலவும்

வண்ணமதைப் பூணாத
ஓவியத்தைப் போலவும்
வண்ணமலர் இல்லாத
பூங்காவைப் போலவும்

கோலமது வரையாத
வெளிவாசல் போலவும்
தாளமது சேராத
சுகராகம் போலவும்

வாடித் தவிக்குது பதிவர உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

பதிவர் மனமதில் உள்ளதனை-இங்கே
பதிவாய்  நானும் தந்து விட்டேன்
இனியும் தாமதம் செய்யாது-பதிவினைத்
தந்தெமை மகிழ்ந்திடச் செய்வீரே

(எழுதாது இருக்கும் நம்  மனம் கவர்ந்த
பதிவர்கள் அனைவருக்கும்
பதிவர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளாய்  )

Tuesday, July 4, 2017

நாங்கள் திட்டம் போட்டு கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கிறோம்

ரோடெல்லாம்
துருப்பிடித்த ஆணிகளைப்
பரப்புவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு

"ஜாக்கிரதையாக வண்டியோட்டுங்கள்
பாதையெல்லாம் துருப்பிடித்த ஆணி "என
எச்சரிக்கைப் பலகை வைக்கும்
காவலர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?

ஊரெல்லாம்
மதுபானக் கடைகளைத் திறந்து
வைத்துவிட்டு

"குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என
எச்சரிக்கைப் பலகை வைத்து
பம்மாத்துக் காட்டும் அரசுக்கும்
இதற்கும் என்ன வேறுபாடாம் ?

குழந்தை தவழுமிடமெல்லாம்
விஷப்பாட்டில்களைத்  திறந்து வைத்துவிட்டு
பாலையும் பிஸ்கெட்டையும்
எட்டத்தில் வைக்கிற தாயை
நீங்கள் பார்த்ததுண்டா ?

சந்து பொந்தெல்லாம்
சிகரெட்டும் குட்காவும்
கிடைக்கும்படியாக இருக்கவிட்டு

கல்வியையும் நீரையும்
விற்பனைக்கு என ஆக்கிவிட்டு
விட்த்திடேயாகத் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன மாறுபாடாம் ?

கரும் பலகையெல்லாம்
ஆபாசப் படங்களை
வரைந்து வைத்துவிட்டு

அதனைப் பார்த்துக்
கெட்டுப் போகாதே என எச்சரிக்கிற ஆசிரியரை
நீங்கள் சந்தித்ததுண்டா ?

ஊடகங்களிலெல்லாம்
ஆபாசங்கள் தலைவிரித்தாடுதலை
அனுமதித்து விட்டு

மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி
அறிவுறுத்தித் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன வித்தியாசமாம் ?

நீ அவல்  கொண்டுவா
நான் உமி கொண்டுவருகிறேன்
ஊதி ஊதிச்  சாப்பிடுவோம்
எனும் சாமர்த்திய நண்பனைப்
பார்த்ததுண்டா ?

நீ சம்பாதிப்பதையெல்லாம்
வரியாகக் கட்டு
நாங்கள் திட்டம் போட்டு
கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கிறோம்
என்கிற  அரசுகளுக்கும் இதற்கும்
என்னதான் வித்தியாசம்  ?

எது என்ன நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும் என
போதையில் வீதியில் கிடக்கும்
மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா ?

நாட்டில் எது நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும்
நாம் நம்மைக் காத்துக் கொள்வோம் என
சுயநலப் போதையில் திரியும்
நமக்கும் அவர்களுக்கும் என்னதான்  வேறுபாடாம் 

Monday, July 3, 2017

விதையும் கருவும்

குனிந்து
மிக எளிதாய்
மண் மீதே
எடுத்துக் கொள்ளும்படியாகவா

உயர்ந்து
வளர்ந்து
முயன்று
பறித்துக் கொள்ளும்படியாகவா

புதையல்போல்
கவனமாய்த்
தோண்டி
அள்ளிக் கொள்ளும்படியாகவா

விளைவித்தப் பலனை
எப்படித் தருவது என்பதை
விதைப்பவன் முடிவு செய்வதில்லை
அதை விதையே முடிவு செய்து கொள்கிறது

விதைப்பவன் பணி
விதைப்பதும்
அதனைப் பாதுகாப்பாய்த்
தொடர்ந்துப் பராமரிப்பது மட்டுமே

ஒருமுறை
வாசித்து
முடித்ததும்
புரிந்து கொள்ளும்படியாகவா

கொஞ்சம்
முயன்று
பின் எளிதாய்
தெரிந்து கொள்ளும்படியாகவா

அதன் போக்கில்
மெனக்கெட்டுப்
பயணித்துப் பின்
உணர்ந்து மகிழும்படியாகவா

உறுத்தும் படைப்பினை
எப்படித் தருவது என்பதனை
படைப்பாளி முடிவு செய்வதில்லை
அதைக் கருவே முடிவு செய்து கொள்கிறது

படைப்பாளியின் பணி
அதனை ஏற்பதுவும்
தாய் போலப் பொறுப்பாய்
ஈன்றுப் புறந்தருதல் மட்டுமே

(இதனை எழுதப் பின்னூட்டம் மூலம்
கரு தந்துக் காரணமான வை.கோ அவர்களுக்கும்
ஜி.எம் .பி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி )

Sunday, July 2, 2017

வாயிற்காப்போர்கள்..

குளிரூட்டப்பட்ட
தன் அலுவலக அறையில்
இடையூறுகள் ஏதுமின்றி
இயல்பாகவும் , மகிழ்வாகவும்
பணியாற்றிக் கொண்டிருந்தான் என் நண்பன்

"எப்படி  இது சாத்தியமாகிறது
என்னால் இப்படி முடியவில்லையே ஏன் ?"
என்றேன்

"இது பெரிய விஷயமில்லை
வாயிற்காப்போர்கள் விஷயத்தில்
மிகக் கவனமாய் இருந்தால் போதும் "
என்றான் சிரித்தபடி

"நான் அலுவலகத்தைக் கேட்கவில்லை
உன்னைக் கேட்கிறேன்
எப்படி உன்னால் இயல்பாகவும்
மகிழ்வாகவும் எப்போதும்.."

நான் சொல்லி முடிக்கும் முன்
"நானும் அலுவலகத்தை மட்டும்
சொல்லவில்லை
என்னையும் சேர்த்துத்தான் "என்றவன்
தன் காதுகள் இரண்டையும்
வாயையும் தொட்டுக் காட்டி
இரு கண்களையும் மெல்லச் சிமிட்டினான்

மூலச் சூத்திரம் மெல்லப் புரிந்தது



Saturday, July 1, 2017

காலச் சூழல்...

நாங்கள்  சிறுவனாய் இருந்தபோது
தீயவைகள் இல்லாமல் இல்லை
இருந்தது

ஆனால் தேடித் தேடி
கண்டுபிடிக்கும்படியாய்
எங்கோ ஒளிந்து கொண்டு
கொஞ்சம் பயந்தபடியும்...

நாங்கள்  வாலிபனான போதும்
அவைகள் இல்லாமல் இல்லை
இருந்தது

ஆனால் தேடினால்
கிடைக்கும்படியாய்
கொஞ்சம் தூரத்தில் எட்டாதபடி
தன்னை மறைத்தபடியும்...

இன்றைய நிலையில்
அவைகள் இல்லாமல் இல்லை
இருக்கிறது

ஆனால் விலகிப்போனாலும்
விடாது தொடர்கிறபடி
கொஞ்சம் அசந்தாலும் வீழ்த்திவிடுகிறபடி
திமிராய் தான் தோன்றித்தனமாய்..

இப்போது நல்லவைகளும்
இல்லாமல் இல்லை
இருக்கிறது

ஆனால்முன்பு தீயவைகள்
இருந்ததுபோல்
தன்னை மறைத்தபடியும்
நிறையப் பயந்தபடியும்...



Friday, June 30, 2017

கணினி உலகம்

உலகைச் சுற்றி
உலகை அறிந்து கொள்வதை விட
"மௌசைத் "தட்டி
அறிந்து கொள்ளுதல்
எளிதாகவும்
விரைவாகவும்
முடிவதை நினைக்க

ஞானப் பழம் பெற
உலகைச் சுற்றிய முருகனும்
தாய் தந்தையரைச் சுற்றி
ஞானப் பழம் பெற்ற
"மூஸிக "வாகனனும்
நினைவில் வந்து போவதைத்
தவிர்க்க இயலவில்லை

உடன்
கணிப்பொறி இல்லையெனில்
உலகின் இயக்கமே
இல்லையென்றாகிப் போன
இன்றைய சூழலில்

அம்மையப்பன் தான் உலகம்
உலகம்தான் அம்மையப்பன்
என அருளிய
அம்மையப்பனின் அருளுரையும்...

Tuesday, June 27, 2017

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

காலம் சிரித்தபடி எப்போதும்போல்
நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
பயனற்றதாகிப் போனது
அந்தக் குறிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

ஒரு பார்வையற்றவனின்
உன்னத இசையில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாம் நானே என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனமாயிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள் சுமைதாங்கிகள்
அளவீடுகளின் எல்லையினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழத்தெரிந்தவானாகிப்போக
அதை அறியாதவனே  அற்பனாகிப்போகிறான்

Monday, June 26, 2017

முகமற்று ஏன் முக நூலில்...

பார்வைக் குறையுடன்
பிறந்த குழ்ந்தைக்கு
கண்ணாயிரம் எனப் பெயர் வைத்த
பெற்றோரின் மன நிலையைப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

வீராச்சாமி எனப்
பெயரிடப்பட்டவன்
எதற்கும் எப்போதும்
பயந்தவனாய் உலவுவதைப்
புரிந்து கொள்ளமுடியவில்லை

மாண்பு மிகு என
அது கொஞ்சம் குறைவானவர்கள்
போட்டுக் கொள்வதனைக் கூட
மனச்சாட்சி உறுத்தல் எனப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

முக நூலில்
தங்கள் முகம் மறைத்து
காரசாரமாய்
பிரச்சனைக்குரிய பதிவுகளாய்
பதிவிடுபவர்களை ஏனோ
புரிந்து கொள்ளமுடியவில்லை

பெண்கள் யுவதிகள்
என்றால் கூட
அதற்குப் போதிய காரணங்களிருக்கின்றன
ஆண்கள் பதுங்கிட
அப்படி என்ன அவசியமிருக்கிறது

குற்றாலம் போய்
குளிரடிக்கிறது என
குளியலறையில் சுடு நீரில்
குளிப்பதைக் கூடச்
சகித்துக் கொள்ளமுடிகிற எனக்கு

அருவியில்
குளிருக்கு அடக்கமாய் இருக்கட்டுமென 
போர்வையினைப் போர்த்திக் குளிப்பவரை
காணச் சகிக்கவில்லை
சிரிப்புத்தான் வருகிறது

ஆம் முகம் மறைத்து
முக நூலில்
உலவுவோர் நிலையினைப் போலவும்...

Sunday, June 25, 2017

முக நூலும் வலைத்தளமும்

திருமண வரவேற்பில்
கூடுதல் அந்தஸ்துக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்த கச்சேரியை
கண்டும் காணாது பலரும் கடக்கிறார்கள்

விருந்துண்ண
இடம் கிடைக்காதோர்
அல்லது உண்ட அலுப்புத் தீர
சிறிது அமர்வோர் மட்டும்
இரசித்துக் கேட்கிறார்ப்  போல
கொஞ்சம் பார்க்கிறார்கள்

அது மனவருத்தம் தருவதுபோல்
இருந்தாலும்
தன்னை அறிமுகம் செய்து கொள்ள
அதுவும் பாடகனுக்குத்
தேவையாகத்தான் இருக்கிறது

சங்கீத சபாக்களில்
ரசிப்பதற்கென்றே
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்தக் கச்சேரியை
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
கேட்டு இரசிக்கிறார்கள்

எண்ணிக்கை சிறிதாயினும்
மிகச் சரியாய்
உணர்ந்து இரசிப்போராய்
அவர்கள் இருப்பதால்
பாடகனின் வளர்ச்சிக்கு
அதுதான்  அவசியமாகப்படுகிறது

(முக நூலில் தொடர்பவர்கள் நான்காயிரமாய்
உயர்ந்திருக்கிறார்கள்  .சும்மா ஒரு .  தகவலுக்காக  )

Saturday, June 24, 2017

புத்தம் புது காலை ..


கிழக்கு வெளுக்கத் துவங்கியது 
தேவாலயம் கிளம்பிய அந்தோணி  
நாட்காட்டியைப் பார்த்தார் 
                                                       அது  2017 ஜூன் 25  என்றது

மசூதிக்கு
தொழக்கிளம்பிய ராவுத்தர்
நாட்காட்டியைப்  பார்க்க
அது ஷவ்வால் ரம்ஜான் 29 என்றது

                                              கோவிலுக்கு
                                             கும்பிடக் கிளம்பிய ஏகாம்பரம்
                                             அதனைப் பார்க்க
                                             ஹேவிளம்பி ஆனி 11 என்றது

நாட்காட்டி அறியாதப்
பறவைகள் எல்லாம்
என்றும்போல
இந்தப் புத்தம்  புது காலையை
நன்னாளை
வரவேற்கும் விதமாய்
உற்சாகமாய்
பாடியபடிச் சிறகு விரித்தன

                                               நாளுக்கே காரணமானவன்
                                               ஏதும் அறியாதவன் போல்
                                               என்றும் போல்
                                               ஒளியாய்
                                              சிரிக்கத் துவங்குகிறான்

உலகம் மெல்ல மெல்ல
அழுக்கு உதிர்த்து
வெளுக்கத் துவங்குகிறது