Tuesday, February 20, 2024

இதையும்...

 சு. வெங்கடேசன்  MP எழுத்திலிருந்து.....


"மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன்.  விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்த சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். 


சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது.  


நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.


 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. 


என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். 


கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.


மழை குறையத் தொடங்கியது. தாழ்வாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். 


அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.


அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது.


 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன்.


 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். 

 

நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன்.   


தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.


சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். 


அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்து போய்க்கொண்டிருந்தேன்.


இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 


'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். 


அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.


வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்து போனார். 


இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.


என்னை அழைத்துப் போனவர் தொடர்ந்து சொன்னார்... 


'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.

20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது.  பிறகு  பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.


நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 


'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 


'அதுதான் அந்த நரி’ என்றார்.


அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். 


அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).


நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.


அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.


சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.


கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.


அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.


தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?


அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...


நன்றி-  எழுத்தாளர் சு.வெங்கடேசன்

ம்..வாசித்து வைப்போம்..

 மனித தன்மை சேஷனின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.

.......................................................................

அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்.


பாரதீயதேஸத்தில் ஜனாநாயகத்தில் தேர்தல் நடக்கும்.

ஆனாலும் ,அந்த தேர்தலுக்கு அதை ஜனநாயகரீதியாக நடத்த ஒரு தலைமை தேர்தல் தலைமை அதிகாரி இருக்கின்றார்.

என்பதெல்லாம்.  T.n சேஷன் தேர்தல் தலையைஅதிகாரியாக, வந்தபிறகுதான் பொதுஜனங்களுக்கு தெரியவந்தது, அதுவும் 

தான் ஒரு ரப்பர்ஸ்டாம்ப் அதிகாரி இல்லை! என்று நீருபணம் செய்தவர்தான் இந்த பாலகாடன் ஐயர்.


அப்படிப்பட்ட சேஷன் ஒரு முறை தன்னுடைய கெட்டியோளுடன் உத்திரபிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில் காரில் சென்றுகொண்டேயிருந்தார்.


அப்போது ஒரு இடத்தில் மாந்தோப்பில் ,மாமரங்களில் குருவி கூடுகள் கண்டார்.

அந்த குருவிகூட்டில் குட்டிகுருவிகளின்  கீச்கீச் சப்தத்தை சேஷனும், கெட்டியோளும் ரசித்தனர்.


இதை கண்ட சேஷனின் புருஷத்திக்கு ஒரு இஷ்டம் தோன்றியது.

சில குருவிகூடுகளை தங்களுடைய வீட்டில் வைக்கலாம்.

அந்த கீச்கீச் சப்தத்தை ரசிக்கலாம் என்று தோன்றியது.

அந்த இஷ்டத்தை தன்னுடைய கெட்டியோனிடம் சொன்னாள்.


அந்த மாந்தோப்பில்  காரை விட்டு இருவரும் இறங்கினார்கள்.

அந்த மாந்தோப்பை நிர்வகிக்கும் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனை கண்டு, அந்த மாடுமேய்க்கும் சிறுவனிடம் தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு காவலர்கள் ஒரு ஐந்து குருவிகூடுகளை கேட்டனர்.

அந்த சிறுவனோ கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டான்.


பாதுகாப்பாளர்களுக்கு அதிர்ச்சி.

அவர் யார் தெரியுமா? அவரின் அந்தஸ்து என்ன தெரியுமா? அவர் நினைத்தில் இந்த தோட்டத்தையே, இப்போதே விலைக்கு வாங்கமுடியும், மரியாதையாக குருவிகூடுகளை கொடுத்துவிடு! என்றனர்.


சிறுவனோ! ஐயா நீஙக என்ன சொன்னாலும் கொடுக்கமுடியாது!

அவர் பெரிய ஆளாக இருந்தாலும் குருவிகூடுகளை கொடுக்கமுடியாது!

என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான்.


அதை கண்ட சேஷன் காரை விட்டு இறங்கி தம்பி ஒரு கூட்டிற்கு பத்து ரூபாய் வைத்து தருகின்றேன் ..என்றார்

அன்றைக்கு பத்துருபாய் சிறிதளவு பெரிய பணம்.


ஆனாலும்கூட அந்த சிறுவன் கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டான்


உடனே காவலர்கள் ஒரு கூட்டிற்கு ஐம்பதுரூபாய் வைத்து தருகின்றோம் என்றார்


அதை கேட்ட அந்த சிறுவன் சேஷனை பார்த்து கைகூப்பி நமஸ்கரித்து கண்ணீர் மல்க சொன்னான்! 


ஜீ சாப் : இந்த கூட்டில் உள்ள குருவிகளின் தாய்குருவிகள் தன்னுடைய குழந்தைகளுக்காக, இரைதேடி சென்றிருக்கின்றன.

அந்த தாய்குருவிகள் இரையோடு வரும்போது தன்னுடைய பிஞ்சு சூருவிகளும் கூடுகளும் காணாமல் அவைகள் அழும். கீச்கீச் என்று அழும்!

அதை காணும்போது, அதன் வேதனையை என்னால உணர்ந்து கொள்ளமுடியும்.

அந்த மகாபாவம் எனக்கு வேண்டாம்.

காசுக்காக இரக்தபாசத்தை விற்கமுடியாது. என்று சொன்னான்.


இதை கேட்டதும் சேஷனுக்கு பேரதிர்ச்சி ,அவரின் கண்ணீர் வர தொடங்கியது.


தன்னுடைய கௌவரம் நஷ்டப்பட்டுபோனதுபோல் தோன்றியது.

தன்னுடைய. I.A.S படிப்பு ஒன்றுமே இல்லை போன்று தோன்றியது.

தான் அணிந்துகொண்டிருக்கும் சூட்டும்கோட்டும் ஒன்றுமில்லை போல் தோன்றியது.

தான் இந்தியதேஸத்தின் மிகப்பெரிய பதவியை வகிக்கும் தலைமைதேர்தல் அதிகாரி என்பதையெல்லாம் கணநேரத்தில் மறந்தார்.


தான் வானாளய அதிகாரம் படைத்தவன் என்கிற அகம்பாவம் நஷ்டப்பட்டுபோனது அவருக்கு!


தன் எதிரே  இருக்கின்ற, தலையில் முண்டாசு கட்டிகொண்டிருக்கின்ற மாடுமேய்க்கின்ற சிறுவன்.


நிச்சயமாக சாக்ஷாத் குருவாயூரான் கிருஷ்ணபரமாத்மாவாக தோன்றினான்.


அன்றைக்கு மகாபலி தம்புரானுக்கு வாமனஅவதார மூர்த்தி விஸ்வரூபத்தில் தர்சனம் தந்தாரோ!

அதேபோல்தான் தோன்றியது எனக்கு என்று எண்ணினார்


ஒன்றுபேசவில்லை, தன்னுடைய கெட்டியோளோடு காரில் ஏறி சென்றுவிட்டார்.

பத்துபதினைந்து நாட்களாக உறக்கம் நஷ்டப்பட்டுபோனது அவருக்கு.


ஒரு சிறுவன் தாய்பாசத்தை தனக்கு உணர்த்திவிட்டானே!

என்று எண்ணி துக்கமடைந்தார்.


(கேரளாவில் ஒரு கூட்டத்தில் தான் ஓய்வுபெற்றபின்னர் இதைபற்றி பேசிய தொகுப்பு தான்)


இவன்


ஸ்னேகம்கூடிய

அஜய்குமார்

Friday, February 16, 2024

ம்...படித்து வைப்போம்

 (Very thought provoking message. Please go through the write-up.)


*Whoever wrote, it is wonderfully written.*


I never understood one thing that what do these film actors or actresses do that they get 50 crores or 100 crores for each film?


In a country where top scientists, doctors, engineers, professors, officers, etc. get 10 lakh to 20 lakh rupees per year, in the same country a film actor earns 10 crores to 100 crores of rupees per year!


What does he do after all?


What is their contribution in the development of the country?  After all, what do they do to earn so much in just one year that it might take 100 years for the top scientists of the country!


Today, the three areas which have fascinated the new generation of the country are cinema, cricket and politics.


The earning and prestige of the people belonging to these three fields is beyond all limits.


These three areas are the ideals of modern youth, while their credibility is currently under question.


So it is useless for the country and the society.


Drugs and prostitution in Bollywood, match fixing in cricket, hooliganism and corruption in politics.  Money is the main reason behind all this and it is we who bring this money to them.


We are doing our own harm by burning our own money.  This is the height of stupidity.


Till 70-80 years back, famous actors used to get normal salary.


30-40 years ago, the earnings of cricketers were also not special.


30-40 years ago, there was not so much loot in politics.


Slowly they started robbing us and we went on to let them  rob ourselves happily.

 

By getting caught in the clutches of these mafia, we are destroying the future of our children and our country.

 

50 years back, movies were not made so vulgar and sloppy.  Cricketers and politicians were not so arrogant.  Today they have  become our God (?).  Now there is a need to lift them from the head and slap them so that they can know their status.


Once , when the then Vietnamese President, Ho-Chi-Minh, came to India for a meeting with Indian ministers, he asked, "What do you guys do?"


These people said - "We do politics."


He could not understand this answer, so he asked again - "I mean, what is your profession?"


These people said - "Politics is our profession."


Ho-Chi Minh got a little annoyed and said - "Maybe you people do not understand my meaning. I do politics too, but by profession , I am a farmer and I do farming. Farming makes my livelihood. In the morning and evening I go to my fields.  I work. I do my responsibility for the country as President during the day."


When Ho-Chi-Minh asked the same thing again, a member of the delegation shrugged and said - "Politics is our profession."


It is clear that Indian leaders had no answer to this.  Later, a survey revealed that the livelihood of more than 6 lakh people in India was supported by politics.  Today this number has reached in crores.


Just a few months back, when Europe was being devastated by Corona, the doctors were not getting even a little rest for several months in a row, then a Portuguese doctor said angrily - "Go to Ronaldo, to whom you would give millions of dollars to watch. I only get a few thousand dollars."


I firmly believe that in a country where the idols of young students are not scientists, researchers, educationists, but actors, politicians and sportsmen, they may have their own economic progress, but the country will never progress.  


Socially, intellectually, culturally, strategically the country will always remain backward.  The unity and integrity of such a country will always be in danger.


The country in which the dominance of unnecessary and irrelevant sector continues to grow, that country will be weakening day by day.  The number of corrupt and anti-nationals will continue to increase in the country.  Honest people will be marginalized and forced to lead a difficult life.


We need to create an environment to groom and promote talented, honest, conscientious, social workers, belligerent & patriotic citizens.


Really an eye opener msg to a True Indian