Tuesday, February 20, 2024

ம்..வாசித்து வைப்போம்..

 மனித தன்மை சேஷனின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.

.......................................................................

அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்.


பாரதீயதேஸத்தில் ஜனாநாயகத்தில் தேர்தல் நடக்கும்.

ஆனாலும் ,அந்த தேர்தலுக்கு அதை ஜனநாயகரீதியாக நடத்த ஒரு தலைமை தேர்தல் தலைமை அதிகாரி இருக்கின்றார்.

என்பதெல்லாம்.  T.n சேஷன் தேர்தல் தலையைஅதிகாரியாக, வந்தபிறகுதான் பொதுஜனங்களுக்கு தெரியவந்தது, அதுவும் 

தான் ஒரு ரப்பர்ஸ்டாம்ப் அதிகாரி இல்லை! என்று நீருபணம் செய்தவர்தான் இந்த பாலகாடன் ஐயர்.


அப்படிப்பட்ட சேஷன் ஒரு முறை தன்னுடைய கெட்டியோளுடன் உத்திரபிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில் காரில் சென்றுகொண்டேயிருந்தார்.


அப்போது ஒரு இடத்தில் மாந்தோப்பில் ,மாமரங்களில் குருவி கூடுகள் கண்டார்.

அந்த குருவிகூட்டில் குட்டிகுருவிகளின்  கீச்கீச் சப்தத்தை சேஷனும், கெட்டியோளும் ரசித்தனர்.


இதை கண்ட சேஷனின் புருஷத்திக்கு ஒரு இஷ்டம் தோன்றியது.

சில குருவிகூடுகளை தங்களுடைய வீட்டில் வைக்கலாம்.

அந்த கீச்கீச் சப்தத்தை ரசிக்கலாம் என்று தோன்றியது.

அந்த இஷ்டத்தை தன்னுடைய கெட்டியோனிடம் சொன்னாள்.


அந்த மாந்தோப்பில்  காரை விட்டு இருவரும் இறங்கினார்கள்.

அந்த மாந்தோப்பை நிர்வகிக்கும் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனை கண்டு, அந்த மாடுமேய்க்கும் சிறுவனிடம் தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு காவலர்கள் ஒரு ஐந்து குருவிகூடுகளை கேட்டனர்.

அந்த சிறுவனோ கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டான்.


பாதுகாப்பாளர்களுக்கு அதிர்ச்சி.

அவர் யார் தெரியுமா? அவரின் அந்தஸ்து என்ன தெரியுமா? அவர் நினைத்தில் இந்த தோட்டத்தையே, இப்போதே விலைக்கு வாங்கமுடியும், மரியாதையாக குருவிகூடுகளை கொடுத்துவிடு! என்றனர்.


சிறுவனோ! ஐயா நீஙக என்ன சொன்னாலும் கொடுக்கமுடியாது!

அவர் பெரிய ஆளாக இருந்தாலும் குருவிகூடுகளை கொடுக்கமுடியாது!

என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான்.


அதை கண்ட சேஷன் காரை விட்டு இறங்கி தம்பி ஒரு கூட்டிற்கு பத்து ரூபாய் வைத்து தருகின்றேன் ..என்றார்

அன்றைக்கு பத்துருபாய் சிறிதளவு பெரிய பணம்.


ஆனாலும்கூட அந்த சிறுவன் கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டான்


உடனே காவலர்கள் ஒரு கூட்டிற்கு ஐம்பதுரூபாய் வைத்து தருகின்றோம் என்றார்


அதை கேட்ட அந்த சிறுவன் சேஷனை பார்த்து கைகூப்பி நமஸ்கரித்து கண்ணீர் மல்க சொன்னான்! 


ஜீ சாப் : இந்த கூட்டில் உள்ள குருவிகளின் தாய்குருவிகள் தன்னுடைய குழந்தைகளுக்காக, இரைதேடி சென்றிருக்கின்றன.

அந்த தாய்குருவிகள் இரையோடு வரும்போது தன்னுடைய பிஞ்சு சூருவிகளும் கூடுகளும் காணாமல் அவைகள் அழும். கீச்கீச் என்று அழும்!

அதை காணும்போது, அதன் வேதனையை என்னால உணர்ந்து கொள்ளமுடியும்.

அந்த மகாபாவம் எனக்கு வேண்டாம்.

காசுக்காக இரக்தபாசத்தை விற்கமுடியாது. என்று சொன்னான்.


இதை கேட்டதும் சேஷனுக்கு பேரதிர்ச்சி ,அவரின் கண்ணீர் வர தொடங்கியது.


தன்னுடைய கௌவரம் நஷ்டப்பட்டுபோனதுபோல் தோன்றியது.

தன்னுடைய. I.A.S படிப்பு ஒன்றுமே இல்லை போன்று தோன்றியது.

தான் அணிந்துகொண்டிருக்கும் சூட்டும்கோட்டும் ஒன்றுமில்லை போல் தோன்றியது.

தான் இந்தியதேஸத்தின் மிகப்பெரிய பதவியை வகிக்கும் தலைமைதேர்தல் அதிகாரி என்பதையெல்லாம் கணநேரத்தில் மறந்தார்.


தான் வானாளய அதிகாரம் படைத்தவன் என்கிற அகம்பாவம் நஷ்டப்பட்டுபோனது அவருக்கு!


தன் எதிரே  இருக்கின்ற, தலையில் முண்டாசு கட்டிகொண்டிருக்கின்ற மாடுமேய்க்கின்ற சிறுவன்.


நிச்சயமாக சாக்ஷாத் குருவாயூரான் கிருஷ்ணபரமாத்மாவாக தோன்றினான்.


அன்றைக்கு மகாபலி தம்புரானுக்கு வாமனஅவதார மூர்த்தி விஸ்வரூபத்தில் தர்சனம் தந்தாரோ!

அதேபோல்தான் தோன்றியது எனக்கு என்று எண்ணினார்


ஒன்றுபேசவில்லை, தன்னுடைய கெட்டியோளோடு காரில் ஏறி சென்றுவிட்டார்.

பத்துபதினைந்து நாட்களாக உறக்கம் நஷ்டப்பட்டுபோனது அவருக்கு.


ஒரு சிறுவன் தாய்பாசத்தை தனக்கு உணர்த்திவிட்டானே!

என்று எண்ணி துக்கமடைந்தார்.


(கேரளாவில் ஒரு கூட்டத்தில் தான் ஓய்வுபெற்றபின்னர் இதைபற்றி பேசிய தொகுப்பு தான்)


இவன்


ஸ்னேகம்கூடிய

அஜய்குமார்

No comments:

Post a Comment