Thursday, July 20, 2017

கமல் சார்....

கமல் சார்
இப்பத்தான் தெரிஞ்சது
நீங்க ஒரு பெண்ணை
அவ விருப்பத்துக்கு மாறா
கடத்திட்டுப் போய்
கொடைக்கானலிலே
மறைச்சு வச்சது

அதுக்கு ஆதாரம் தேடி
இப்பத்தான்
அந்தக் குகைக்கு
விசாரணைக் குழு போயிருக்கு

(இதில் தப்புவது கஸ்டம்
ஏன்னா அந்தக் குகைக்குப் பேரே
இப்ப குணா குகைதான் எப்புடீ )

அப்புறம் நீங்க
பரமக்குடி பார்ப்பானாமே
அது கூட
இப்பத்தான் தெரிஞ்சது

(இதிலும் தப்புவது மிக மிக கஸ்டம்
நீங்க படிச்ச ஸ்கூலில் இருந்து
ஆதாரத்தைத் திரட்டிட்டோம் )

ஏன்னா
திராவிடம் ஆரிய மாயையில
சிக்கிடப் பூடாது இல்ல

இன்னும்
நிறைய ஆதாரம் இருக்கு
அவசியமானா அப்ப  அப்ப
வெளியிடுவோம்

தெளிவாய்ச் சொல்லிடறோம்
நாங்க சினிமா எடுக்க
உங்கப் பக்கம் வரலை

நாங்க என்னவோ அரசியல்ல
படம் காட்டித் திரிவோம்
அதுக்கு நீங்க வராதீங்க

அதுதான் இருவருக்கும் நல்லது
புரியுதா ?
 

4 comments:

ஸ்ரீராம். said...

அரசியல் மோசமானது! தம இன்னும் இணைக்கப்படவில்லை.

Unknown said...

இப்படியெல்லாம் மிரட்டினால் கமல் பின் வாங்கிவிடுவார் என்று நினைப்பவர்கள் ஏமாறப் போவது நிச்சயம் !மக்கள் நினைப்பதை கமல் வெளிப்படுத்தியுள்ளார் :)

Thulasidharan V Thillaiakathu said...

ரமணி சகோ! அவர் அரசியலுக்கு வந்தா அப்புறம் நம்ம கதி என்னாகறது? அவர் பேசுவதே புரியாதே!!!

கீதா

K. ASOKAN said...

நாம அனைவரும் நல்ல தமிழ் வாத்தியாரா பார்த்து தூய தமிழை சீக்கிரமா கற்று கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரின் விளிக்கு விடை அளிக்க இயலாது என்றே தோன்றுகிறது. தங்கள் கவிதை மிக நன்று

Post a Comment