Monday, March 24, 2025

All LPG consumers pl.note

 *All LPG consumers should pay attention to this post:*


(This post is based on a woman's own experience...)


Last Sunday I got a useful information. I had to change my gas cylinder, I removed the empty cylinder and installed a new filled cylinder.


As soon as I turned on the knob, I felt the smell of gas leaking. For safety reasons I turned off the knob. I immediately informed my gas agency and asked for help. He replied that the agency is closed as it is Sunday, now our man will be able to solve your problem only tomorrow, sorry.


I sat down in despair, suddenly I thought that I should search on Google, maybe I will find some emergency number.


Google showed a number *1906* - in case of gas leakage.

 

When I called that number, *Gas Leakage Emergency* appeared on True Caller. A lady picked up the phone, I told her my problem, she replied that the service man will reach your address within 1 hour. If gas pipe is leaking, then you will have to pay the charge for the new pipe, otherwise you will not have to pay anything,

  

I was surprised when within half an hour a boy knocked at the door *That boy checked, and within 1 minute changed the washer inside the cylinder and turned on the gas.* When I tried to give him some money, he politely refused to take it.*He said that this facility has been provided to him free of cost by the Central Govt.*


Within half an hour the lady who received the call called and asked whether my problem was resolved or not?


I checked the facts again on Google and saw that this facility is available 24×7 on web: *services.india.gov.in* which is related to all gas companies/complaints.


*I request you all to share this message with all your acquaintances and groups so that it is useful for everyone at the time of emergency*


*Senior citizen help line phone no. 14567*


*Gas Leakage Emergency 1906*

Sunday, March 23, 2025

வீட்டில் மின் பாதுகாப்பு..

 வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கொஞ்சம பார்ப்போம்...


i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.


ii) வீட்டிலுள்ள வீணாய் போயுள்ள, பழைய சுவிட்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். தரமான சுவிட்ச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.


iii) தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிட்ச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.


iv) எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு, வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும், இதயம் இடது புறத்தில் உள்ளதால்.


v)பாத்ரூம் சுவிட்ச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு, அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.


vi) மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில், ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம். தண்ணீர் இல்லாததால், ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து அந்த நடிகை  இறந்து  போயிருக்கிறார்.

ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட்,  அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது. எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.

அவுட்லெட் , ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே,

ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும். ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும். ஹீட்டர் சுவிட்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிட்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.


vii) பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள். அதற்குப் பதிலாக எம்சிபி வைத்தால், ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும். எப்போதும், சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது. இதே போல,வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.


viii) ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிட்ச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.


ix) இவ்வளவு கவனமாக இருந்தும்,

ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால், நேர்ந்து விட்டால்,

அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால்

பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை  நேரடியாக தொடவே கூடாது.


கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாற்ற அவர்களை தொட்டு இழுத்து , இறந்து போன மாமியாரையும், பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு கீழே வீழ்ந்து கிடந்த டிவி  ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்றப் போன கணவன் தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது. இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும். செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல். அதனால், அடித்துக் கூட காப்பாற்றலாம்.


வீடென்றால் தொடப்பக்கட்டை.. வெளியே என்றால் செருப்பு..


எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான், வேறொன்றுமில்லை

(ஷாக் அடித்தால் தான்.. சும்மா இருக்கும் போது அடித்து வம்பிழுக்க வேண்டாம்). தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?


x) கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது. குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிட்ச் பாக்ஸ் வைக்கக் கூடாது.


xi) சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர், இரு முனை அயன்கிளாட் சுவிச்சும், 3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.

நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்; ஃப்யூஸ் போடக் கூடாது.

நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.


xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPSக்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம்.  மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம்  நமது மின் சாதனங்கள் இயங்கும்போது, அவையேதும் ஃபால்ட்டானால், நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர். ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை  பயன்படுத்திக் கொண்டால்   மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப்  செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.


UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது. UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின், UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும், 

பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து, UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால், சர்கூட்டின் ஃபேனோ, லைட்டோ பழுதடைந்தால், UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது. இது எளிதான காரியமல்ல.

அதற்குப்பதில், RCCB இணைத்தோமானால், யுபிஎஸ் சப்ளை, வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம். இதை கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.


xiii)முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன், ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.


வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஓதம் காக்கும். குறிப்பாக, மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்.. எனவே, நாம்தான், இந்த கடும்  மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.



Tuesday, March 18, 2025

கனவு நிஜமாகுமா..?

 யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி அதிரடியாக சில  முடிவுகள் எடுத்தார். 

அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார்.

ஒவ்வொருவருக்கும்  ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது.

அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும்,  பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான்  இந்த கடன்  வந்தது.

இலவசங்களையும்  பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு  அவர்களுக்கு  ஓட்டு போட்டு  தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும்.

மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும் என்றார்.

மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர்.

கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன.

சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் தேர்தல்  அறிவிக்கப்பட்டது.

இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டில் போட்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வினியோகித்தது.

இம்முறை மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு பெற்று, 

எங்கள் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி செய்யாமல்,

எங்களை,

தன்மானம், சுயமரியாதை என்பதையே உணரவிடாமல் கையேந்த வைத்துக் கொண்டு இருக்க வருகிறாயே என,

செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்து விரட்டி,

பணம், பிரியாணி, இலவசப்  பொருட்கள் கொடுக்காத,

மக்களுக்கு சேவை செய்வோம் என அறிக்கை கொடுத்த,

கட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்து, ஆட்சி செய்ய வைத்தார்கள்.


இப்படி ஒரு கனவு, நேற்றிரவு.

பதறியபடி எழுந்தேன்.

விடிந்ததா என பார்த்தேன்.

இருளாகவே இருந்தது.

விடியவே இல்லை.

எப்போதுதான் அந்த விடியல் வருமோ‌ என எண்ணியபடி மீண்டும் தூங்கத் துவங்கினேன்..

Monday, March 10, 2025

சிம்பொனி என்றால் என்ன..?

🎵 ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். 


🎵 உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை:


1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra)

2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).


🎵 16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது.


🎵 அது தான் சிம்பொனி! இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படுகிற ஜோசப் ஹைடன் (1732-1809). மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர்தான் குருநாதர்.


🎶 மீண்டும் சிம்பொனிக்கு வருவோம்.


🎵 ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது? ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்? எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்?


🎵 ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும். 


🎵 இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்றுதான் அழைக்கப்படும்.


🎶 ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள்? 


🎵 இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.


சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை? அது எப்படி இருக்க வேண்டும்?


🎵 இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 


🎵 1. The Fast Movement: 🎶


🎵 காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், விஐபிகள் போன்றவர்கள் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசை துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.


🎵 2. The Slow Movement: 🎶


🎵 இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள்.‌ இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.


🎵 3. The Dance Number: 🎶


🎵 திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 


🎵 4. An Impressive Fast Movement: 🎶


🎵 இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.


🎵 இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்கு தான் இருபது நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.


🎵 மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்....)

Sunday, March 9, 2025

மனச்சாட்சியும் அரசியல் தெளிவும்

 "மன்னராட்சியின் நீட்சியாய்

வாரீசுக்கு பட்டம் சூட்டிய
மேடையிலேயே
ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து
எப்படிப் ,பேசுவது "

கடைசிச் சொட்டு இரத்தம் போல
கடைசி முயற்சியாய்
மெல்ல முனகியது மனச்சாட்சி..

"குவாட்டருக்கும்
நூறு ரூபாய் பணத்திற்கும்
காத்திருக்கும் கூட்டத்தில்
இதை மட்டுமல்ல
 எதையும் பேசலாம்
 எப்படியும் பேசலாம் "
என எக்காளமிட்டது
அரசியல் தெளிவு

Saturday, March 8, 2025

எதிர்திசையில் ஓரடி...

 புரியாது என புலம்பித் திரிந்ததைவிட

புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட இருக்கிறது
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

Friday, March 7, 2025

சமையலறைச் சுதந்திரம்...

 சமயலறையிலும் படுக்கையறையிலும்

சுதந்திரம் கொடுத்து சுகம் அனுபவிப்பவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
நம்மையும் சுதந்திர வாசம்
என்று அறியச் செய்யப்போகிறார்கள்

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகித் தொலைக்கும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப் போகிறது ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்

ஊதற சங்கை நாமும் ஊதி வைப்போம்

 கேளம்பாக்கம் மட்டும் அல்ல, சென்னை முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடங்கி, கல்லூரிகள் வரை, பெண்களை மயக்க சமூக விரோத கூட்டம், செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் இதே நிலையில்தான் உள்ளது.  


கல்லூரி பெண்கள், வேலைக்கு போற பெண்கள் யென,  முதலில் சமூக விரோத பொறுக்கி பயலுக,  மெதுவாக எதாவது அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து, பேசி பழகுவார்கள் .


அந்த பெண்ணை தன் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி கணவர் இவர்கள் பாதுகாப்பில் இருந்து,   அவர்களின் கட்டுபாட்டில் அடிமையாக்க,  மூலை சலவை செய்வான்கள். அது எப்படி என்பது உங்களுக்கே தெரியாது.


பின்னர் மெதுவாக,   Sunday Happy Street போன்ற நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு போவாங்க,  இதெல்லாம் ஒன்னும்  தப்பு இல்ல மா , இப்ப இதுதான் fashion,    நல்லா டான்ஸ் ஆடி ஹாப்பியா என்ஜோய் பண்ணுங்கனு சொல்லி, 


பின்னர், பெண் சுதந்திரம் பெண்ணுரிமை,  சமூகநீதி,  அடிமைதனம் என்றெல்லாம் எதையாவது போதித்து, அந்த பெண் தன் குடும்ப உறுப்பினர், வீட்டில் இருக்கும் ஆண்களை மீறி நடக்க பழக்கப்படுத்துவான்கள்... 

அப்பா, அம்மாவை எதிர்த்து பேசவும் வைப்பார்கள்.


அதற்கு பிறகு மெல்ல, பெண்ணின் வீட்டுக்கு  தெரியாமல், சில birthday party, marriage party, நண்பர்கள் நிகழ்ச்சிகளுக்கு  அழைத்து செல்வார்கள்..


அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக மது பழக்கத்தை கற்று கொடுப்பார்கள்.

இப்ப இதெல்லாம் இங்க சகஜம்னு சொல்லுவாங்க. மது குடிப்பதை ஊக்கப்படுத்துவார்கள்.  சென்னையில் எல்லா பெண்களும் குடிப்பாங்க,  இதெல்லாம் இங்க சாதாரணம்னு  சொல்லுவாங்க.


கஞ்சா, மது பழக்கத்தை கற்று கொண்ட பெண்ணை,    கொஞ்சம் கொஞ்சமாக பாலியல் ரீதியாக அணுகுவது, எளிதான விசயம் என்பதால்,   ஒரு பெண்ணை பல ஆண்களுக்கு பாலியல் ரீதியில் இறையாக்குவார்கள். 


 அவர்களுடன் வீடியோ எடுத்துக்கொண்டு, மிரட்டி... மீண்டும் மீண்டும் அதையே செய்ய வைப்பார்கள்.. 


பின்னர் வேறு வழியே இல்லாமல், வாழ்க்கை முழுவதும்,  நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாம போய்டும்.


 இப்படிதான்   சாதாரண கிராமத்து பெண்ணை, நகரத்தில் தள்ளுவார்கள்.


இதில் கொடுமை என்னவென்றால்,  முதலில் ஒரு ஆண் நேரடியாக  வந்து இந்த சம்பங்களில் ஈடுபடுவது இல்லை,  


சாதாரண குடும்ப பின்னணி கொண்ட பெண்களைக் குழப்ப,  சமூக விரோதிகளுடன் முன்பே அறிமுகமான  பெண்களை வைத்தே, ஆள் பிடிக்கிறார்கள். அதன் பிறகு ஆண் நண்பர்கள் அறிமுகம் ஆகிறார்கள். 


விடிய விடிய  குடித்த தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவி அதீத மதுபோதையால் இறந்துபோன சோகம் , தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆக்கவில்லை. ஏன்னென்றால் பல இடங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கிறது 


யார் அந்த சார் போல், இங்கு பல பேர் இருக்கிறார்கள்...  ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்துவது அவர்கள்தான்.


மக்களே உங்கள் பெண் பிள்ளைகளை,  கவனமாக வளர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு நம் சமுதாயம், 50 வருடங்களில் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. 


முடிந்த அளவுக்கு,  ஆன்மீக சிந்தனையை கற்று கொடுக்கும் பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்து விடுங்க. 


அப்போதுதான் இந்த பிரச்னைகளுக்கு  ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். 


A "  for ஆப்பிள், B " பானானா என்று சொல்லி கொடுக்கும் பள்ளிகளை  விட, 

 A " for ஆத்திச்சூடின்னு சொல்லும் பள்ளிகளால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். நன்றி..வாட்ஸ் அப்பில் கிடைத்தது



Wednesday, March 5, 2025

சராசரித்தனத்தின்‌சுகமும் .அதீதத்தின் ரணமும்..

 ஓவியக் கோடுகளின்

நளின வளைவுகளின் நேர்த்தியையும்
வண்ணங்களின் அர்த்தங்களையும்
அதிக்மாகத் தெரிந்து கொள்ளாதவரை
அனைத்து ஓவியங்களும்
மிக அழகாகத்தான் தெரிகின்றன

படிமம் குறியீடு
இருண்மை முதலான அறிவும்
இலக்கணம் குறித்த தெளிவும் 
இல்லாத வரையில்
கவிதைகளை மிகச் ச்ரியாக
ரசிக்க மட்டுமல்ல
படைப்பது கூட
மிக எளிதாகத்தான் இருக்கிறது

ஜால வண்ணங்கள் பூசிய
வார்த்தைகளுக்குப் பின் இருந்த
நோக்கமும் துரோகமும் புரியாதவரை
உறவுகளில் குழப்பமில்லை
என்பது மட்டுமல்ல
உறவுகள் எல்லாம் 
மிக இறுக்கமாகத்தான் இருக்கின்றன

வாழ்வு குறித்த தேடலின்றி
மந்தையோடு மந்தையாய்
காலம் செலுத்திய வழியில்
கண் மூடிப் பயணிக்கையில்
மனதில் சங்கடங்கள் ஏதுமில்லை
என்பதுமட்டுமல்ல
வாழ்வு கூட
மிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது

திண்ணையையும் தலைப்பாகையையும்
சிம்மாசனமாகவும் கிரீடமாகவும்
ஏற்றுக் கொண்டு
சாதாரணமான்வனாக இருத்தல்
சுகமாக மட்டும் அல்ல
அது பலருக்கு ஞானத்தின்
 எளிதான குறீயீடாகக் கூடப் படுகிறது

வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக  இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு  இருத்தலுக்கான
 உன்னத அடையாளமாய  இருக்கிறது

Sunday, March 2, 2025

படித்ததில் பிடித்தது

: இன்று எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு தினம் .27-02-2008 மறைந்த சுஜாதா

நினைவு  கொள்வோம் திரு சுஜாதாவின் நினைவுகளை.


(: Sujatha Desikan on Sujatha Rangarajan)


சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக்கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது "இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்" என்பார்.


அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும்வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாது சிலசமயம் நடந்து செல்வார். " ஏம்ப்பா வெயில்ல போற?" என்று கேட்டால், "யாருக்குத் தெரியும்?  இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா?" என்பார்.


அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.


"எப்படியாவது என்னை ஸ்ரீரங்கம் அழைச்சுண்டு போயிடு. என் பிறந்த நாளைக்கு அங்கே போனா நன்னா இருக்கும். முடியுமா?" என்று என்னிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதா கேட்டார்.


ஒவ்வொரு வாரமும் அவரை பார்க்கும் போதும் "இந்த வாரம் டிக்கெட் இருக்கா பார்" என்று கேட்பார்.


"நிச்சயம் போகலாம்," என்று சொல்லியும் அவர் பிறந்தநாளன்று போக முடியாமல், மே மாதம் கடைசி வியாழக்கிழமை (31 மே, 2007) அன்றுதான் எங்களால் போக முடிந்தது.


முதல் முறை ரயிலில் போகும் குழந்தை போல் ஆர்வமாக இருந்தார். அன்று எங்கள் ராசி ஒரு மார்க்கமாக இருந்ததால், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் எல்லாம் ஒரு 'சைடாக' கிடைத்தது. 'சைடு அப்பர்', 'சைடு லோயர்' !


"ரொம்பக் குளிருமோ?" என்று ரயில்வே கொடுத்த போர்வையைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே கேட்டார்.


டிக்கேட் பரிசோதிக்க வந்தவரிடம், "ஸ்ரீரங்கம் எத்தனை மணிக்கு வரும்... எங்களைக் கொஞ்சம் எழுப்பிவிட்டுடுங்க" என்றார்.


ஐந்து அடி ஆறு அங்குலம் இருக்கும் எனக்கே முழுதாக நீட்டினால் சைடு பர்த்தில் கால் கட்டை விரல் மடங்கும். சுஜாதாவிற்கு?


"சார், வேணும்னா வேற யார்கிட்டயாவது கேட்டு பர்த் மாத்தித் தரேன்," என்றேன்.


"வேண்டாம்,  இதுவே ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு," என்று காலை மடக்கிவைத்துப் படுத்துக்கொண்டார்.


"கால் முழங்கால் வரைக்கும் போர்த்திவிடு, குளிரித்துனா இழுத்துக்கறேன்" என்றவர், பின் தூங்கிப் போனார்.


எதோ நினைப்பில் இருந்த டிக்கெட் பரிசோதிப்பவர், சிறிதுதூரம் சென்று திரும்பிப் பார்த்தார். சுஜாதா தூங்கியபின் என்னிடம் வந்து "'இவர்தானே மிஸ்டர் சுஜாதா?" என்று என்னிடம் கேட்டுவிட்டுச் சென்றார். அவர் பார்வையில், "அடடே, அவரிடம் கொஞ்சம் பேசியிருக்கலாமே" என்ற ஏக்கம் தெரிந்தது.


ஸ்ரீரங்கத்தில் காலை ஐந்து மணிக்கு முன்பு இறங்கியவுடன் சுஜாதா உற்சாகமும் சந்தோஷமுமாக, "கோயிலுக்கு, வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துடலாம்" என்றார்.


காலை, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அவர் தம்பியுடன் (திரு.எஸ்.ராஜகோபாலன் ) கிளம்பினோம். போகும் முன், "எனக்குக் கொஞ்சம் இட்டு விடு" என்று தன் தம்பியிடம் கேட்டு, நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு புறப்பட்டார்.


"வெறும் கால்ல நடந்தா எரியும், கோயில் உள்ளே சாக்ஸ் போட்டுக்கலாமா?"


உள் ஆண்டாள் சந்நிதிக்கு வெளியே இருக்கும் வேணுகோபாலன் சந்நிதியில் வெளிப்புற சிற்பங்களைப் பார்த்தார். "நம்ம .... இருக்கானே அவன் எப்பவும் இது பக்கத்திலேயேதான் இருப்பான். அவன் இப்ப எங்கேடா?" என்று தம்பியிடம் கேட்டார். பழைய நினைவுகள்...


"தேசிகன், இந்தச் சிற்பத்துல மட்டும்தான் பெண்களோட அங்கங்களை மிகைப்படுத்தாம ஒழுங்கான அனாடமில செதுக்கியிருப்பாங்க," என்றார்.


"நீங்க சொல்லியிருக்கிங்க, ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்குக் கூட இதை வரைஞ்சிருக்கேன்," என்றேன்.


"இங்கதான் கார்த்திகைக்கு சொக்கப்பானை கொளுத்துவாங்க... இங்கே தான் ஸ்ரீஜயந்தி உரியடி உற்சவம் நடக்கும்... எவ்வளவு தடவை இந்தக் கோயிலைச் சுத்தியிருக்கோம்!"


கோயிலுக்குள் போகும்போது கார்த்திகை கோபுரவாயிலில் திருப்பதியில் இருப்பது போல சிறிய குழாய் வழியாக நீர் கசிந்து கால்களை அலம்புவதைப் பார்த்து, "அட ஸ்ரீரங்கத்லயும் வந்துடுத்தா?" என்றார்


அவருடைய உடல் கொஞ்சம் தளர்ந்திருந்த காரணத்தால் சிறிது நடந்தபின் ஆங்காங்கே சற்றுநேரம் உட்கார்ந்து கொண்டார். அவர் அப்படி உட்காரும்போதெல்லாம் எங்களுக்கு அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. கருட மண்டபத்தில் உட்கார்ந்து, வேடிக்கை பார்த்தபடி, பேசிக்கொண்டு இருந்தார். எல்லாம் நினைவுகள்.


கோயிலுக்குள் பெருமாள் சேவிக்க நெருங்கும்போது அவர் முகத்தில் ஒரு விதமான மகிழ்ச்சி கலந்த பரபரப்பு இருந்தது. சேவித்துவிட்டு வெளியே வந்தபோது என் தோளை அழுத்திவிட்டு, "எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!" என்ற போது அவர் கண்களின் ஓரத்தில் கண்ணீர் தேங்கியிருந்ததைப் கவனிக்க முடிந்தது.


பின் தாயார் சந்நிதியிலும் சேவித்துவிட்டு வெளியே கொஞ்சம் நேரம் உட்கார்ந்துகொண்டார்.


"நீங்களும் உங்க தம்பியும் கொஞ்சம் நேரம் பேசிண்டிருங்க. நான் இருந்தா பர்சனலா பேச முடியாது. நான் இப்படியே ஒரு ரவுண்ட் போய்விட்டு வரேன்," என்று கிளம்பினேன்.


"நீங்க இருந்தா பரவாயில்ல தேசிகன்".


"இல்ல சார், நீங்க பேசிண்டு இருங்க. நான் மேட்டு அழகியசிங்கர் சந்நிதிக்குப் போயிட்டு வரேன். அங்க ஓவியங்கள் நன்னா இருக்கும்."


நான் போய் அவைகளை என் டிஜிட்டல் கேமராவில் கவர்ந்துக்கொண்டு வந்து காண்பித்தேன். ஆர்வமாகப் பார்த்தார்.


"சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட கோயில் பெரியவாச்சான்-பிள்ளை உபன்யாசங்கள் செய்ய முதுகு சாய்த்த மண்டபத்தின் முன் மேட்டு அழகியசிங்கர் சந்நிதியில் உள்ள பழங்காலச் சுவர்ச் சித்திரங்களை தேசிகன் படம் எடுத்து டிஜிட்டலில் உடனே காட்டினார். வடக்கு உத்தர வீதியில் எங்கள் ஆசார்யன் சிறுபலியூர் அண்ணன் சுவாமிகளுக்குத் தண்டம் சமர்ப்பித்துவிட்டு, தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு, தம்பி ராஜகோபாலனின் புத்தகங்களில் ‘கோயில் ஒழுகு’ - பகுதி III, கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ‘A History of God’ இரண்டை மட்டும் கவர்ந்துகொண்டு, அடுத்து அரங்கன் எப்போது அழைக்கப்போகிறான் என்பது தெரியாமல், மறுதினம் பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பினேன்"


என்று 'கற்றதும் பெற்றது'மில் சுஜாதா எழுதியிருந்தார்.


ஒன்பது மாதங்கள்( பிப் 27, 2008 ) கழித்து ஆசார்யன் திருவடிகளை அடைந்தார்


அவர் ஆசார்யன் திருவடிகளை அடைந்து சில நாட்கள் கழித்து, அவரது தம்பி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். நான் மேட்டு அழகியசிங்கர் கோயிலுக்குச் சென்றபோது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதன் விபரம் அதில் இருந்தது.

"

..... ஸ்ரீரங்கமும், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளாகிய நம்பெருமாளை சேவிக்கும் போதும், நம்மை ஒருவித பரவசமான மனநிலைக்கு ஏன் ஆட்படுத்துகின்றன என்று அந்த உணர்வுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க பல சமயம் நினைததுண்டு. மற்ற திவ்யதேசங்களில் இல்லாமல், ஏன் ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்தகைய உணர்வு வருகிறது என்று நானும் என் சகோதரனும் (ரங்கராஜன்) அன்று பேசிக்கொண்டோம். யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழவைக்கிறது? பிறப்பணுவிலேயே(Genes) சொந்த ஊர், மொழி உணர்வு எல்லாம் வந்துவிடுகிறதோ ?


அதற்கான காரணம் 'இந்தப் பெருமாளை சேவிக்கும்போது, நம் தாய் தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பொருமாளின் மூலம் பார்க்கிறோம்' என்பதை அன்று உணர்ந்தோம். அவர்கள் பலப் பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இவனுள்ளேயே வாழ்கிறார்கள்; இவன் பாதங்களையே சென்றடைந்திருக்கிறார்கள்; நம் வாழ்வுகளுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான். கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். பெருமாளை நன்றாக சேவிக்கும்போது அந்த திவ்யமங்கள ரூபத்தில் எங்கள் தாய் தந்தையரை பார்க்கும்படியும் ரங்கராஜனிடம் சொன்னேன். அவனும் 'ஆம், அது தான் உண்மை' என்று ஆமோதித்தான். அந்த உண்மையை தான் அறிந்ததால்தான் இங்கு வந்து பெற்றோருடன் நெருக்கமாக இருக்கும் ஆர்வம் மேலோங்கியதாகச் சொன்னான்.


அவன் உயிருடன் இருக்கும்வரை அந்த ஆசையைப் பூர்த்திசெய்துகொள்ள இயலவில்லை; ஆனால் தற்பொழுது அவனது ஆத்மாவும் ரங்கநாதனுடன் ஐக்கியமாகிவிட்டது...."


... என்னை அன்புடன் 'ராஜப்பா' என்றே அழைப்பான்" என்று கடிதத்தை முடித்திருந்தார்.


இப்பொழுதெல்லாம் ஸ்ரீரங்கம் சென்று நம்பெருமாளை சேவிக்கும்போது, என் அப்பாவையும், ஸ்ரீரங்கம். எஸ்.ஆர் என்கிற சுஜாதா ரங்கராஜனையும் பார்க்க முடிகிறது.

Sunday, February 23, 2025

ஏ.பி.என்..புராணப்பட ஜாம்பவான்

  24-02-2022

-------------------

"அருட்செல்வர்" ஏ.பி.நாகராஜன் அவர்களின் பிறந்தநாள் நினைவு.🙏

------------------------------------------------------------

பூர்வீகம்: சங்ககிரிக்கு அருகே உள்ள அக்கம்மாபேட்டை ஜமீன் பரம்பரை.


பெற்றோர்: திரு.பரமசிவம், திருமதி.லட்சுமி அம்மாள்.


இயற்பெயர்: குப்புசாமி. 




பிறந்த தேதி: 24-02-1928 


சிறு வயதிலேயே தந்தை, தாயை இழந்த குப்புசாமியின் பாட்டி மாணிக்கத்தம்மாள் அவரை டி.கே எஸ் நாடக குழுவில் சேர்த்து விட்டார்.  தன் வாழ்நாளில் பள்ளிக்கூடமே சென்றிராத குப்புசாமி, நாடக குழுவில் இலக்கியப் புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து தனது இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.  தமிழை அழகாக எப்படி ஏற்ற இரக்கத்தோடு பேசுவது, வசனங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று எல்லாமே டி.கே.எஸ் சகோதரர்களின் பால சன்முகானந்த சபாவில் கற்றுக் கொண்டார்.  


டி.கே.எஸ் நாடக குழுவில் இவர் பெயரிலேயே இன்னொரு குப்புசாமி இருந்தார்.  இவர் தப்பு செய்வதற்கெல்லாம் அந்த குப்புசாமி திட்டு வாங்குவார்.  ஒருமுறை இதே மாதிரி பிரச்சினை டி.கே.எஸ் அவர்களிடம் வந்தது.  இந்தமுறையும் செய்யாத தவறுக்கு நாம் திட்டு வாங்க வேண்டுமா என்று யோசித்த அந்த இன்னொரு குப்புசாமி,  "அவர் செஞ்ச தப்புக்கெல்லாம் தப்பே செய்யாத நான் ஏங்க உங்ககிட்ட திட்டு வாங்கணும்?" என்று நடந்ததை டி.கே.எஸ் அவர்களிடம் சொல்லி விட்டார்.  இதை விசாரித்து தெரிந்து கொண்ட சண்முகம் அவர்கள் "இனிமே உன்பேர் குப்புசாமி இல்ல, நாகராஜன்" என்று சொல்லி விளையாட்டுத்தனமாக சிறு சிறு தவறுகள் செய்து வந்த குப்புசாமியின் பெயரை மாற்றினார்.  


டி.கே.எஸ் அவர்கள் அப்படி பெயர் மாற்றிய வேளை நாகராஜன் நாடகங்களில் புகழ்பெற்று விளங்கினார்.  டி.கே.எஸ் நாடக குழுவில் அதிகமாக பெண் வேடம் ஏற்று நடிப்பவர் சண்முகம் அண்ணாச்சி தான்.  சில நேரங்களில் அவருக்கு நிகராக நாகராஜனும் பெண் வேடத்தில் நடிப்பார்.  


"பெண் வேடத்தில் நாகராஜன் மிகவும் அழகாக இருப்பார்.  அவர் ஒவ்வொரு முறையும் பெண் வேடத்தில் நடித்தால், நாடகம் முடிந்ததும்  ரசிகர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றி ரூமுக்கு அழைத்து வர பெரும்பாடாகிவிடும்  எங்களுக்கு.  அவருக்கு Boduguard ஆக நான் மற்றும்  என்னுடன் நாலைந்து பேர்கள் அவருடன் எப்பவுமே இருப்போம்.  நாகராஜன் மட்டும் பெண்ணாகவே பிறந்திருந்தால் நிச்சயம் இந்திய அழகி பட்டத்தை வென்றிருப்பார்".  


என்று நடிகர் வி.கே.ராமசாமி அவர்கள் ஒரு பேட்டியின்போது நாகராஜனைப் பற்றி சொல்லியிருக்கிறார்.  


ஒருமுறை இதுபோல் நாகராஜன் பெண் வேடத்தில் நடிக்க, அவருடன் டி.கே.எஸ் அவர்களும்  நாகராஜனின் கையைப் பிடித்துக் கொண்டு சில வசனங்களைப் பேசி நடிக்க, இதை டி.கே.எஸ் அவர்களின் மனைவிக்கு சகித்துக் கொள்ள முடியவில்லை.  நாடகம் முடிந்து சண்முகம் அண்ணாச்சி வீட்டுக்கு வந்ததும், அவர் மனைவி அவரிடம் எப்போதும்போல் சகஜமாக பேசவில்லை.  முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டார்.     இதைப் பார்த்த சண்முகம் அண்ணாச்சிக்கு அதிர்ச்சி.  எப்பவும்போல் இல்லாமல் இன்னிக்கு ஏன் இப்படி உட்கார்ந்துருக்கான்னு அவளிடமே கேட்டு விடலாம் என்று தன் மனைவியின் அருகே  சென்று "என்னாச்சுன்னு இப்படி உம்முனு மூஞ்சிய தூக்கி வைச்சுட்டு உட்கார்ந்துருக்கே" என்று கேட்டார்.  "பின்னே, நாடகத்துல அந்தப் பொண்ணு கையப் பிடிச்சி வசனம் பேசி நடிக்கரீங்க, ஏன் தள்ளி நின்னு நடிக்க கூடாதா?" என்று பதிலளித்தார் அவர் மனைவி.  "அட இதுக்காகவா இப்படி உட்கார்ந்துருக்க, கொஞ்சம் இரு வரேன்" என்று சொல்லிய சண்முகம் அண்ணாச்சி நேராக நாகராஜன் தங்கியிருக்கும் அறைக்கு வந்து நாகராஜனிடம், "நாடத்துல எப்படி பெண் வேஷத்துல இருந்தியோ அதே வேஷத்தோட இப்ப நீ எங்கூட வா" என்று சொல்லி அவரை தன் வீடுக்கு அழைத்து வந்து சண்முகம் அண்ணாச்சி தன் மனைவியிடம் நாகராஜனின் கூந்தலை எடுத்து விட்டு,  "நாடகத்துல எங்கூட அதிகமா  பெண் வேஷத்துல நடிச்சது இவன் தான்.  பேரு நாகராஜன்.  நான் "குமாஸ்தாவின் பெண்"  நாடகத்தில் தொட்டு தொட்டு நடிச்ச பொண்ணு.  இதுக்காகவா  நீ மூஞ்சிய தூக்கி வைச்சுகிட்ட" என்று சொன்னதும் சண்முகம் அண்ணாச்சியின் மனைவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.  நாகராஜனைப் பார்த்து விட்டு வெட்கத்துடன் உள்ளே சென்று விட்டார்.   


நாகராஜனைப் பார்த்த சண்முகம் அண்ணாச்சி, "பார்த்தியா, இதுவரை என் வீட்டுல இதுமாதிரி குழப்பம் வந்ததேயில்ல.  இப்ப வந்துருக்குன்னா அதுக்கு நீதாம்பா காரணம்.  பெண் வேஷத்துல நீ அவ்வளவு அழகா இருந்தது தான்.  உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குப்பா.  நீ நிச்சயம் எல்லோரும் போற்றும்படி பெரிய ஆளா வருவே" என்று வாழ்த்தினார்.  


அதன்பின் சக்தி நாடக சாபாவில் சில காலம் நாடகங்கள் எழுதி நடித்துவந்த காலங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காகா ராதாகிருஷ்ணன் போன்ற பிரபலங்களின் நட்பு நாகராஜனுக்கு கிடைத்தது.  அதன்பின் பழநி கதிரவன் நாடக சபா என்ற நாடக குழுவைத் தொடங்கி அவரே எழுதி நடித்து வந்தார்.  மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் சில காலம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் நாகராஜன்.  அங்கு கே.சோமு, எம்.ஏ.வேணு போன்றவர்கள் நட்பும் அவருக்கு கிடைத்தது.  


1953 ஆம் ஆண்டு சங்கீதா பிக்சர்ஸ் நிறுவனம் ஏ.பி.நாகராஜன் எழுதிய "நால்வர்" கதையை அதே பெயரில் திரைப்படமாக தயாரித்தது.  இதில் கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக நாகராஜன் நடித்தார்.  அவருக்கு ஜோடியாக நடித்தவர் குமாரி தங்கம்.  இப்படம் வெற்றி பெற்றதன் மூலம் "நால்வர்" நாகராஜன் என அழைக்கப்பட்டார்.  


மாடர்ன் தியேட்டர்ஸில் ஏ.பி.என் பணியாற்றியபோது எம்.ஏ.வேணு அங்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார்.  சேலம் செவ்வாய்பேட்டை தான் அவருடைய ஊர்.  அதிகம் படிக்காதவர்.  மாடர்ன் தியேட்டர்ஸில் சாதாரண வேலையில் நுழைந்த அவர், தனது திறமையால் படிப்படியாக  மேலே வந்து தயாரிப்பு நிர்வாகியாக உயர்ந்தார்.  அதன்பின் அவர் மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து விலகி எம்.ஏ.வி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.  ஏ.பி.ஏன் அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து 1954 ஆம் ஆண்டு "மாங்கல்யம்" என்றொரு படத்தை தயாரித்தார்.  இப்படத்தின் கதை, வசனத்தையும் நாகராஜனையே எழுத வைத்தார் வேணு.  இயக்கியவர் கே.சோமு.  ஏ.பி.நாகராஜனுடன் பி.எஸ்.சரோஜா, எஸ்.ஏ.நடராஜன், எம்.என்.நம்பியார் ஆகியோருடன் ராஜசுலோசனா இதில் தான் அறிமுகம்.  மாங்கல்யம் வெற்றியைத் தொடர்ந்து, ஏ.பி.நாகராஜன், கண்ணாம்பா, சூரியகலா நடித்த  "பெண்ணரசி" (1955) என்ற படத்தையும் தயாரித்தார் வேணு.  இப்படம் "மனோகரா" கதையமைப்பில் இருந்ததால் வெற்றி பெறவில்லை.  


தமிழ் திரையுலகில் நால்வர் படம் மூலம் தடம் பதித்த நாகராஜன் அவர்களுக்கு 1955 ஆம் ஆண்டு நிறைய படங்களில் நடிக்கவும், கதை வசனம் எழுதவும் வாய்ப்பு வந்தது.  இவர் பங்களிப்பில் 6 படங்கள் வெளிவந்தது.  


1. நல்ல தங்கை (05-02-1955), இதில் கதை, வசனம் மட்டுமே எழுதினார் நாகராஜன்.  எஸ்.ஏ.நடராஜன் நடித்து தயாரித்து இயக்கினார்.  இதில் எஸ்.ஏ.நடராஜன், எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, வி.எம்.ஏழுமலை, ஏ.கருணாநிதி, புளிமூட்டை ராமசாமி, கே.சாய்ராம், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, சாண்டோ சின்னப்பா தேவர், டி.ஆர்.நடராஜன், சி.கே.சௌந்தரராஜன், டி.கே.சின்னப்பா, எம்.வி.ராஜு, மாதுரிதேவி, ராஜகுமாரி, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.என்.லட்சுமி, லலிதா, புஷ்பலதா, கே.பி.சுந்தராம்பாள் நடித்திருந்தனர்.  இசையமைப்பு இசை மேதை ஜி.ராமனாதன்.  


2. பெண்ணரசி (14-04-1955) 

இதில் கதை, வசனம் எழுதி நடித்திருந்தார் நாகராஜன்.  இவருடன் கண்ணாம்பா, நம்பியார், சுரியகலா, பி.எஸ்.வீரப்பா, ராஜசுலோசனா நடித்திருந்தனர்.  எம்.ஏ.வி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வெளியிட்டவர் எம்.ஏ.வேணு.  இயக்கியவர் கே.சோமு. 


3. நம் குழந்தை (27-05-1955) 

இதில் நாகராஜன் நடித்தது மட்டும் தான்.  கதை, வசனத்துடன் பாடல்களும் எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள்.  தயாரித்தவர் வின்னர் புரொடக்சன்ஸ் சார்பில் W.M.S.தம்பு.  இயக்கியவர் ஜெமினி நிறுவனத்தின் சக்கரதாரி படத்தை இயக்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.  (இவர் இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அல்ல).  ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வரலட்சுமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம் மற்றும் பலர்.  


4. ஆசை அண்ணா அருமை தம்பி (29-06-1955) 

இதிலும் நாகராஜன் நடித்தது மட்டுமே.  கதை: எஸ்.முகர்ஜி.  திரைக்கதை, வசனம்: சக்தி கிருஷ்ணசாமி. இயக்கியவர் ஜி.ஆர்.ராவ்.  இதில் டி.ஆர்.ராமச்சந்திரன், வி.எம்.ஏழுமலை, ராஜசுலோசனா ஆகியோருடன் நடித்து தயாரித்தவர் நடிகை மாதுரிதேவி.  


5. டவுண் பஸ் (13-11-1955) 

இதில் நாகராஜன் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதினார்.  நடித்தவர்கள்: என்.என்.கண்ணப்பா, அஞ்சலிதேவி, எம்.என்.ராஜம், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி, டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி மற்றும் பலர்.  எம்.ஏ.வி பிக்சர்ஸ் மூலம் தயாரித்தவர் எம்.ஏ.வேணு.  இயக்கியவர் கே.சோமு.  


6. நல்ல தங்காள் (30-12-1955) 

இதில் நாகராஜன் நடித்தது மட்டுமே.  கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ.கே.வேலன்.  இயக்கியவர் பி.வி.கிருஷ்ண ஐயர்.  மெட்ராஸ் மூவிடோன் தயாரித்தது.  நடித்தவர்கள்: ஆர்.எஸ்.மனோகர், ஜி.வரலட்சுமி, ஜே.பி.சந்திரபாபு, மாதுரிதேவி மற்றும் பலர்.  


இவை தவிர இயக்குனர்  கே.சோமு, நடிகர் வி.கே.ராமசாமி இவர்களுடன் இணைந்து சில படங்களில்  நாகராஜன் பணியாற்றினார்.  


"நான் பெற்ற செல்வம்" (1956),  கதை வசனம் மட்டும்,  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜி.வரலட்சுமி நடித்தது.  


"மக்களை பெற்ற மகராசி" (1957), கதை வசனம் மட்டும்,  நடிகர் வி.கே.ராமசாமி உடன் நாகராஜன் தயாரித்திருந்தார்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.பானுமதி நடித்தது.  


"நல்ல இடத்து சம்பந்தம்" (1958) திரைக்கதை, வசனம் மட்டும், (கதை எழுதி நடித்தவர் வி.கே.ராமசாமி) வி.கே ராமசாமி உடன் நாகராஜன் தயாரித்தார்.  நடிகவேள் எம்.ஆர்.ராதா, பிரேம் நசீர், சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம், வி.கே.ராமசாமி நடித்தது.  


"சம்பூர்ண ராமாயணம்" (1958) திரைக்கதை வசனம் மட்டும், என்.டி.ராமாராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி, பி.வி.நரசிம்ம பாரதி, டி.கே.பகவதி, சாண்டோ கிருஷ்ணன், வி.நாகையா, புஷ்பவல்லி, ஜி.வரலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, வி.கே.ராமசாமி, சந்தியா, எம்.என்.ராஜம் மற்றும் பலர் நடித்தது.  


"நீலாவுக்கு நிறைஞ்ச மனசு" (1958) திரைக்கதை வசனம் மட்டும்.  டி.ஆர்.ராமச்சந்திரன் ஸ்ரீராம், தங்கவேலு, பண்டரிபாய், எம்.என்.ராஜம், வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்தது.  


"தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை" (1959) கதை, திரைக்கதை, வசனம் மட்டும், (வி.கே.ராமசாமி உடன் நாகராஜன் தயாரித்தார்).  ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, கே.சாரங்கபாணி, எம்.என்.ராஜம், பண்டரிபாய், கண்ணாம்பா மற்றும் பலர் நடித்தது.  


"அல்லி பெற்ற பிள்ளை" (1959) திரைக்கதை, வசனம் மட்டும்.  எஸ்.வி.சஹஸ்ரநாமம், பண்டரிபாய், வி.கே.ராமசாமி, எம்.என்.ராஜம் மற்றும் பலர் நடித்தது.  


"பாவை விளக்கு" (1960) நாவலாசிரியர் அகிலன் அவர்களின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதினார்.    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, பண்டரிபாய், எம்.என்.ராஜம், குமாரி கமலா, கே.பாலாஜி, ஸ்ரீராம், எம்.ஆர்.சந்தானம் மற்றும் பலர் நடித்தது.  


"வடிவுக்கு வளைகாப்பு" (1962) கதை, வசனம் மட்டும்.  இயக்கியவர் கே.சோமு தான் என்றாலும் படத்தின் டைட்டிலில் ஏ.பி.நாகராஜன் என்று தான் இடம்பெற்றது.  வி.கே.ராமசாமி உடன் நாகராஜன் தயாரித்தார்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வி.கே.ராமசாமி, சாவித்திரி, சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா மற்றும் பலர் நடித்தது.  


தவிர ஏ.பி.நாகராஜன் அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, சரோஜாதேவி, கே.சாரங்கபாணி, ஆர்.எஸ்.மனோகர், சந்தியா மற்றும் பலர் நடித்த "குலமகள் ராதை" திரைப்படத்தின் கதை நாவலாசிரியர் அகிலன் அவர்களின் "வாழ்வு எங்கே" என்ற நாவல்.  


அதன்பிறகு நாகராஜன் அவர்கள் விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் தொடங்கி முதல் படமாக "நவராத்திரி" (1964) திரைப்படத்தை இயக்கினார்.  தொடர்ந்து நாகராஜன் அவர்களுக்கு ஏறுமுகம் தான்.  


"திருவிளையாடல்" (1965), தேசிய விருது பெற்றது.  


"சரஸ்வதி சபதம்" (1966) "திருவருட்செல்வர்" (1967), 


"தில்லானா மோகனாம்பாள்" (1968), தேசிய விருது பெற்றது.  


"திருமலை தென்குமரி" (1970) தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது. 


ஆகிய படங்களை தயாரித்து இயக்கிய நாகராஜன் அவர்கள் "அகத்தியர்" (1972) திரைப்படத்தை இந்நிறுவனத்தின் மூலம் இயக்கி விநியோகித்தார்.  


பிற தயாரிப்பு நிறுவனம் மூலம் நாகராஜன் அவர்கள் இயக்கிய திரைப்படங்கள்: 


வா ராஜா வா (1969) இப்படத்தின்  மூலம் முதல் முதலில் இசைமணி சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்களை காவல்துறை அதிகாரியாக நடிக்க வைத்த பெருமை நாகராஜன் அவர்களையே சேரும்.  


கந்தன் கருணை (1967), 

சீதா (1967), 

குரு தட்சணை (1969), விளையாட்டு பிள்ளை (1970), கண்காட்சி (1971), 

திருமலை தெய்வம் (1973), திருமால் பெருமை (1968), ராஜராஜ சோழன் (1973), காரைக்கால் அம்மையார் (1973), குமாஸ்தாவின் மகள் (1974), மேல்நாட்டு மருமகள் (1975),

ஜெய் பாலாஜி (1976) இந்தி,  நவரத்தினம் (1977) இவற்றுடன் நாகராஜன் அவர்கள் இயக்கி அவர் காலமான பின் வெளிவந்த திரைப்படம் "ஸ்ரீகிருஷ்ண லீலா" (26-10-1977).  


ஏ.டி.கிருஷ்ணசாமி அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய "அருட்பெருஞ்ஜோதி" (1971) திரைப்படத்தில் நடித்திருந்தார். 


இன்று வரை புராண திரைப்படங்களை ஏ.பி.நாகராஜன் அவர்களைப் போல் யாரும் இயக்கியதில்லை என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய புகழையும், கௌரவத்தையும் பெற்றவர்.  வசனங்களில் தனித்துவம் வாய்ந்ததாக அவர் இயக்கிய பக்தி திரைக்காவியங்கள் இன்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன. 


நல்ல ஒழுக்கமும், அயராத உழைப்பும், கூடவே  இறைபக்தியும் ஒருவனுக்கு இருந்தாலே போதும்.  உலகில் மிகச்சிறந்த மனிதனாக விளங்க முடியும் என்பதற்கு அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் எடுத்துக்காட்டு.  


தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒப்பாரும், மிக்காரும்  இல்லாத அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும்.  


...By Muktha film 60(சினிமா தொடர்பான நாம் அறியாத அற்புத அபூர்வ தகவல்களுக்கான முகநூல் பக்கம்) 


Wednesday, February 19, 2025

அம்மணமான ஊரில் ஆடை எதற்கு ?

 நல்லதை நீ

நல்லவிதமாகச் சொல்கிறாயா ?

நீ நிச்சயம் பத்தாம்பசலி

தீயதை நீ
எரிச்சலூட்டும்படியே சொல்கிறாயா

நீ நிச்சயம் அடிமுட்டாள்

பயனுள்ளதை நீ
சுவாரஸ்யமின்றிச் சொல்கிறாயா

நீ அரை வேக்காடு

பயனற்றதை நீ
ரசிக்கும்படிச் சொல்கிறாயா

நீயே இந்தயுகத்தில்
தலைசிறந்தப் படைப்பாளி

பொழுது போக்குதலே கடமையாகிப் போன
போதை ஒன்றே கொண்டாட்டம் என ஆகிப் போன
சேர்ந்து குடிப்பவனே நண்பன் என ஆகிப் போன
பிரபலமாவதே வெற்றியென ஆகிப் போன

இந்தச் சமூகச் சூழலில்

சமூகத்தைப் பிரதிபலிப்பதுதானே
ஜனரஞ்சக படைப்பாய் இருக்கச் சாத்தியம்

நூலைப் போலச் சேலை இருக்கத்தானே
நூற்றுக்கு நூறு  நிச்சயம் சாத்தியம்

Saturday, February 15, 2025

தொடரத்தான் வேண்டும்..

 "சொல்ல வேண்டியவைகளையெல்லாம்

நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு  ".....

மனதின் மூலையில் புகையாய்
 கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரைந்து பரவி
என்னைத்  திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய்த தெரியவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 எப்படியெல்லாம மாறிவிட்டன ?

வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்
எத்தனை எத்தனை  மாறுதல்கள் ?

வசதி வாய்ப்புகளே    தேவைகளை முடிவு செய்ய

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய...

சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய...

செல்வமும் செல்வாக்கும்  நீதியை முடிவு செய்ய ..

உறவுகளைக் கூடப்  பயன் முடிவு செய்ய...

உணவினைக்  கிடைக்கும் நேரம் முடிவு செய்ய...

உடலுறவைக் கூடக்  கிழமை முடிவு செய்ய..

காலம் புதுப் புதுச் சூழலை உருவாக்கிப்போக ..

புதுச் சூழல் புதுப் புதுப் பிரச்சனைகளை உண்டாக்கிப்போக ...

சட்டெனப் பற்றிய சிந்தனை நெருப்பு
கொழுந்து விட்டு   எரியத் துவங்க

 புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
  பதிவு செய்யப்படவேண்டிய பட்டியல்
அனுமார் வாலாய் நீளத் துவங்குகிறது

என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
 அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல்  பரந்து விரியத் துவங்குகிறது

Tuesday, January 28, 2025

ஒளி ஏற்றி இருள் நீக்கி..

 செய்யக் கூடாததைச் செய்து

பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாததைப்
பேசியவர்கள் இழந்ததை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
 அதிகம் கெட்டுத்தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
தெளிவாய் இதை நம் மனதில் நிலை நிறுத்துவோம்.
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

Friday, January 24, 2025

மீண்டும் ஜென் சித்தப்பு

 "எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "

கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

Tuesday, January 21, 2025

வாணீ...என்னுள் வா நீ..

 நாவும் மனமும் இனிக்க

நவின்று மகிழ்ந்துச் சுகிக்க
ஊரும் நாடும் என்னை
உச்சி மோந்து இரசிக்க
பேரும் புகழும் நிழலாய்
விடாது என்னைத் தொடர
நூறு கவிகள் நாளும்
பாட வேணும் நானும்

நாளும் கண்டு இரசித்த
அழகுக் கோலம் எல்லாம்
நாளும் உணர்ந்துத் திளைத்த
நல்ல உணர்வு எல்லாம்
நீளும் எனது கவியில்
இயல்பாய் இணையும் வண்ணம்
நாளும் கவிகள் நூறு
நவில வேண்டும் நானே

கற்றுத் தேர்ந்தோர் உறவில்
கிடைத்தக் கேள்வி ஞானம்
குட்டுப் பட்டு நாளும்
கற்ற உண்மை ஞானம்
முற்றும் விடுதல் இன்றி
முழுமை பெற்ற தாக
நித்தம் நூறு கவிதை
படைக்க வேண்டும் நானே

வெள்ள நீரைப் போல
விரைந்து பெருகும் வண்ணம்
உள்ளம் தன்னில் கவிதை
பொங்கிப் பெருகும் வண்ணம்
வெள்ளைப் பூவில் அமர்ந்து
வீணை மீட்டும் வாணி !
எந்த னுள்ளும் அமர்ந்து
அருளைப் பொழிய வா நீ !

Saturday, January 18, 2025

எம் மதுரை...

 மஞ்சளோடு குங்குமமும்

மணக்கின்ற சந்தனமும்
மங்களமாய் ஊரெங்கும்
மணக்கின்ற மாமதுரை

சுந்தரனாம் சொக்கனோடு
சரிபாதி எனஆகி
எங்களன்னை மீனாட்சி
எமையாளும் சீர்மதுரை

அன்னைமடித் தவழ்ந்துதினம்
அகம்மகிழும் குழந்தையாக
மண்தொட்டு மகிழ்ந்தோடும்
வைகைநதித் தண்மதுரை

மணக்கின்ற மல்லியதன்
மணம்போல நிறம்போல
குணம்கொண்ட நிறைமாந்தர்
நிறைந்திருக்கும் நன்மதுரை

நகரெல்லாம் விழாக்கோலம்
நாளெல்லாம் கொண்டாட்டம்
தவறாதுக் காண்கின்ற
தவச்சீலம் தென்மதுரை

தூங்காதப் பெருநகரம்
கோவில்சூழ் மாநகரம்
ஓங்குபுகழ் தமிழ்வளர்த்த
ஒப்பில்லாத் திருமதுரை

தென்மதுரை தண்மதுரை
சீர்மதுரை வாழியவே
என்றென்றும் புகழ்மங்கா
எம்மதுரை வாழியவே







நேரம்..


செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. 


அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். 


செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். 


எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.


“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”


“நான் எமதர்மராஜனின் ஏவலாள். 


இன்றோடு, 


இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. 


புறப்படு என்னோடு!”


“நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. 


நீ போய்விட்டு சில காலம் கழித்து வா!”


“அது முடியாது. 


நீ கிளம்பு என்னோடு!”


செல்வந்தனுக்கு இம்முறை சற்று கோபம் வந்தது. 


“நான் யார் தெரியுமா? 


இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர்களுள் ஒருவன்!”


“அனைவரையும் நான் அறிவது போலவே, நீ யார் என்பதும் தெரியும். 


உன் வரலாறு என்ன என்பதும் எனக்கு தெரியும். 


பேச நேரம் இல்லை. 


புறப்படு!”


“என்னுடைய சொத்து மதிப்பில் ஒரு 10 % உனக்கு தருகிறேன். 


அதுவே 50 கோடிகளுக்கு பெறும். 


எதுவுமே நடக்காத மாதிரி போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு மாசம் கழிச்சாவது வாயேன்!”


“நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ? 


நீ உடனே கிளம்புகிறாயா இல்லை, உன்னை கட்டி இழுத்துக்கொண்டு போகவா?”


அடுத்த சில நிமிடங்களில், தன்னுடைய நேரத்தை நீட்டிப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த எமதூதனுடன் மும்முரமாக இறங்கினான். 


ஒரு மாதம் என்பதை ஒரு வாரம் ஆக்கினான். 


சொத்தில் பாதியை தருவதாகவும் சொன்னான். 


கடைசியில் சொத்தில் முக்கால் பங்கு தருவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டான். 


ஆனால் எமதூதன் எதற்குமே மசியவில்லை.


இறுதியில், 


தன்னால் எமதூதனை படியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டான்.


தனது தோல்வியை ஒப்புக்கொண்டு “சரி… இறுதியாக இதையாவது செய். 


என்னுடைய சொத்து முழுவதையும் கிட்டத்தட்ட பல நூறு கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது, அத்தனையும் உனக்கு எழுதித் தருகிறேன். 


எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவகாசம் கொடு. 


என் பெற்றோரையும், மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து நான் அவர்களை பிரியப்போவதாகவும் நான் அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்லவேண்டும். 


இதுவரை நான் அவர்களிடம் என் அன்பை சொன்னதேயில்லை. 


அப்புறம் நான் என் வாழ்க்கையில் மிகவும் காயப்படுத்திய இருவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்! 


எனக்கு தேவையெல்லாம் ஐந்து நிமிடம் மட்டும் தான்! 


இதையாவது செய் ப்ளீஸ்!!” எமதூதன் பார்த்தான். 


“நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். 


இந்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை சம்பாதிக்க உனக்கு எத்தனை காலம் பிடித்தது?”


“30 வருஷம் நண்பா. 30 வருஷம். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துக்கு 30 வருஷமா நான் சம்பாதிச்ச சொத்தை தர்றேன்னு சொல்றேன். 


இது ரொம்ப பெரிய டீல். 


பேசாம வாங்கிக்கொண்டால் உன் வாழ்க்கையில் இனி நீ ஒரு நாள் கூட வேலை செய்யவேண்டாம். 


பத்து தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்!”


“எனக்கு உண்மையிலேயே இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவே முடியலே. 


முப்பது வருஷமா நீங்க பாடுபட்டு சம்பாதிச்சதை 5 நிமிஷத்துக்காக தர்றேன்னு சொன்னா… 


வாழும் போது ஏன் அந்த ஒவ்வொரு நிமிடத்தோட மதிப்பையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க? 


முடிவு வரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா? 


நேரத்தை நீங்க உண்மையிலேயே எப்படி மதிப்பிடுறீங்க? 


உங்களோட முக்கியத்துவங்கள் (PRIORITIES) என்ன? 


வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம் செய்யலே? 


யார் எத்தனை கோடிகள் கொட்டிகொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது!!”


அடுத்த சில நொடிகளில், 


செல்வந்தனின் உயிர் அவனது உடலில் இருந்து பிரிந்தது. 


அவனுடைய பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களால், கடைசியில் அவன் செய்ய விரும்பிய செயலை செய்ய ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடங்களை கூட வாங்க முடியவில்லை.


நேரத்தை ஒரு போதும் வீணடிக்காதீர்கள்.


வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் உணருங்கள்.


உங்கள் குடும்பத்தார் உட்பட அனைவரையும் நேசியுங்கள். 


நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்... படித்ததில் பிடித்தது..

Thursday, January 16, 2025

காலத்தை வென்றவன்...

 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும் காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
நல்லவன் வாழ்வான் தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்

யார் பணக்காரன்..?

 யார் பணக்காரன்❓ யார் ஏழை❓

••••••••••••••••••••••••••••••••••••••••••••••


இதென்ன கேள்வி ... 


பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் . 


கஷ்டப்படுபவன் ஏழை . 


அது தானே உங்கள் பதில்❓


இந்த பதில் சரியா❓


சம்பவம் 1 

"""""""""""""""""""

ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்கு செல்கிறாள் புடவை எடுக்க .


 " எனக்கு கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள் . 


விலை மலிவாக இருக்கட்டும் . 


என் மகனுக்கு திருமணம் . 


என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும் ... " என்கிறாள் . 


சேல்ஸ்கேர்ள் எடுத்து போட்ட புடவைகளில் மலிவானதாக ஒன்றை செலக்ட் செய்து பணத்தை கட்டிவிட்டு எடுத்துச் சென்றாள் . 


சற்று நேரம் கழித்து அந்த வேலைக்காரி வருகிறாள் . 


" என் முதலாளியம்மா பையனுக்கு கல்யாணம் . 


நல்ல சேலையா ஒன்னு அவங்களுக்கு எடுத்து கொடுக்கணும் . 


விலை கொஞ்சம் கூட இருந்தாலும் பரவாயில்லை . 


நல்ல டிசைன்ஸ் எடுத்துப் போடுங்க என்றாள்..


சம்பவம் 2 

"""""""""""""""""""

ஒரு பெரிய இடத்துப் பெண் , 


ஒருமுறை பிக்னிக்கிற்கு சென்ற இடத்தில ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தாள் . 


அவளது கைக்குழந்தை திடீரென பாலுக்காக அழ , 


ஹோட்டல் நிர்வாகத்திடம் 


" குழந்தைக்கு பால் கிடைக்குமா❓ " என்றாள் . 


" எஸ் மேடம் ... கிடைக்கும் . 


ஒரு கப் நூறு ரூபாய் ஆகும் " என்று பதில் வந்தது . 


" பரவாயில்லை ... 


உடனே ஒரு கப் வேண்டும் " என்று கூறி ஆர்டர் செய்து பாலை வரழைத்தாள் . 


அவள் ஊருக்கு திரும்பிப் போகும்போது வழியில் மறுபடியும் குழந்தை பாலுக்காக அழ , 


சாலையோரம் இருந்த ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி , 


பால் கிடைக்குமா என்று விசாரித்தாள் . 


" பசும்பாலே இருக்கும்மா " என்று கூறி அக்கடைக்கார் , 


பசும்பால் கொடுத்தார் . 


" ரொம்ப தேங்க்ஸ்பா ... 


எவ்ளோ ஆச்சு❓ " 


" பணம் வேண்டாம்மா ... 


குழந்தைங்க குடிக்கிற பாலுக்கு நான் காசு வாங்குறதில்லை " என்று பதில் சொன்னவர் , 


" இன்னும் வேணும்னாலும் வாங்கிக்கோங்க . 


போற வழியில குழந்தை அழுதா என்ன பண்ணுவீங்க ❓ " என்றார் பரிவுடன் . 


சம்பவம் 3 

"""""""""""""""""""

அலுவலகத்துக்கு புறப்படும்போது தான் அந்த இளைஞன் கவனித்தான் . 


செருப்பு பிய்ந்துபோயிருந்தது . 


பிரதான சாலை வந்ததும் அந்த செருப்பை தைக்க செருப்பு தைப்பவரை தேடிச் சென்றான் . 


ஒரு நபர் சாலையோரம் ஒரு குடைக்கு கீழே செருப்புக்களை தைத்தபடி அமர்ந்திருந்தார் . 


வண்டியை அவர் முன் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி , செருப்பை அவர் முன் போட்டவன் , 


" இதை கொஞ்சம் தைச்சு கொடுங்க . 


புது செருப்பு . 


எப்படி பிஞ்சதுன்னு தெரியலே ... " ' 


எவ்ளோப்பா ஆகும்❓


" செருப்பை வாங்கி ஆராய்ந்த அந்த தொழிலாளி , 


' இருபது ரூபா ஆகும் சார் ... " 


" இருபது ரூபாயா❓


பத்து ரூபாய் வாங்கிக்கோங்க .... 


* அந்த இளைஞரை சற்று தலையை  நிமிர்த்தி பார்த்தார் . 


கதிரவனின் கதிர்கள் சுட்டெரித்தது . 


சரியாக பார்க்க முடியவில்லை . " 


இருபதுக்கு கம்மி தைக்க முடியாது சார் ’ " 


என்ன இதுக்கு போய் இருபது ரூபாயா❓


பதினைஞ்சு வாங்கிக்கோங்க ' 


" நான் கம்மியாத் தான் சொல்லியிருக்கேன் . 


சொல்யூஷன் போட்டு ஒட்டி தைக்கணும் . 


அப்போ தான் தையல் நிக்கும் " 


இளைஞனின் பேரம் தொடர்ந்துகொண்டிருந்தது . 


இதனிடையே ... 


டீ ஆர்டர் எடுக்க பக்கத்து டீக்கடை சிறுவன் வந்தான் . 


" ஒரு டீ கொண்டு வாப்பா ..... 


சார் டீ சாப்பிடுறீங்களா❓❓


அந்த இளைஞனின் பதிலுக்கு காத்திராமல் , 


" சாருக்கும் ஒரு டீ சேர்த்து ரெண்டு டீ கொண்டுவாப்பா ... " என்றார் . 


" இல்லே ஐயா வேண்டாம் ... ! " 


பரவாயில்லை சார் ... 


சாப்பிடுங்க ... 


நல்லா இருக்கும் . 


இந்த ஏரியாவுல முப்பது வருஷமா இருக்குற கடை அது ... 


" சற்று நேரத்தில் சூடான டீ வந்தது . 


அந்தப் பெரியவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய அந்த இளைஞன் நெளிந்தபடி அந்த டீயை அருந்தினான் . 


செருப்பு தைத்து முடித்த பிறகு . 


பைசா கொடுக்கும்போது சாப்பிட்ட டீக்கும் சேர்த்து தர , 


அந்த பெரியவர் சொன்னார் ...


 " செருப்பு தைச்சதுக்கு மட்டும் காசு கொடுங்க ... 


டீக்கு வேண்டாம் ...


 என்னோட கஸ்டமர் நீங்க ... 


உங்களை உபசரிக்கிறது என்னோட கடமை .. " என்றார் . 


தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தம் அருகே உண்மையில் நடந்த சம்பவம் இது. 


நம் வாசகர் ஒருவர் கவனித்த சம்பவம். 


இங்கு யார் பணக்காரர்❓❓


காரில் வத்து விலை குறைந்த புடயை வாங்கிச் சென்ற அந்த சீமாட்டியா❓


அல்லது 


நடந்து வந்து விலையுயர்ந்த புடவையை தனது எஜமானிக்கு வாங்கிச் அவள் வீட்டு வேலைக்காரியா❓


குழந்தையின் பாலுக்கு கூட அறியாய விலை வைத்த அந்த ஸ்டார் ஓட்டல் மேனஜரா❓


அல்லது 


குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு பணம் வேண்டாம் . என்று சொன்ன இந்த சாலையோர டீக்கடைக்காரரா❓


செருப்பு தைப்பவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய பைக்கில் வந்த இளைஞரா❓


அல்லது 


டீயை அவருக்கு கொடுத்து உபசரித்த செருப்பு தைப்பவாரா❓


பணக்காரன் , 


ஏழை குறித்த தவறான மதிப்பீடுகள் ( WRONG DEFINITION ) ஆண்டாண்டு காலமாக நமது சிந்தனையில் ஊறிப்போயிருக்கிறது . 


நம்மால் இந்த உலகை மாற்றமுடியுமா என்று தெரியாது . 


குறைந்த பட்சம் இதை  படிப்பவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தலாம் . 


அவர்கள் உலகை மாற்றுவார்கள் . 


பணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் பணக்காராகிவிடமுடியாது . 


அதே நேரம் , 


பணம் இல்லாததால் ஒருவர் ஏழையும் கிடையாது . 


பணத்திற்கான ஓட்டத்தில் நாம் மனிதர்களை பொருட்படுத்துவதில்லை . பணத்தை பெரிதாக கருதாத 


இதயங்களை கவனிக்க மறந்துவிடுகிறோம் . 


தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவுவோம் . 


அது தரும் மனநிறைவை பணம் நிச்சயம் தரமுடியாது ! 


தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே.


 அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே 


பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை 


இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை....படித்ததில் பிடித்தது.