அக்பர், ஒருநாள் தான்ஸேனிடம் கூறினார்:
“உன் சங்கீதத்தைக் கேட்கும் போது உன்னைப் போல இசைப்பவர்கள் பூமியில் அபூர்வமாகத்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறது...
ஏனென்றால் இதை விட உயர்வாக எது இருக்க முடியும் என்ற அனுமானம்கூட எழ மறுக்கிறது. நீ சிகரமாக இருக்கிறாய்...
ஆனால் நேற்று இரவு உன்னை அனுப்பிவிட்டுப் படுக்கைக்குச் சென்றபின், அப்படி ஒருவர் இருக்க முடியுமோ என்று எனக்கு தோன்றியது...
நீயும் ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்டுதானே இருக்கிறாய்?
உனக்கும் குரு இருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது. அதனால் இன்று உன்னிடம் அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். உன் குரு யார்?
அவர் இருக்கிறார் அல்லவா?”
தான்ஸேன் பதிலளித்தார்:
"என் குருவின் முன்னே,
நான் ஒன்றுமே இல்லை...
எனக்குக் கற்றுக் கொடுத்தவருடைய
கால் தூசு கூட நான் பெற மாட்டேன்... அதனால் நான் சிகரம் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்... தரையளவு கூட இல்லை...
தங்களுக்கு என்னை மட்டுமே தெரியும். அதனால் சிகரமாக நினைக்கிறீர்கள்...
ஒட்டகம், குன்றின் அருகே வந்த பின்தான், தான் குன்று அல்ல என்பதை உணர்கிறது. இல்லாவிட்டால் குன்று தன்னை விட சிறியது என நம்புகிறது...
குருவின் முன்னால் நான் ஒன்றுமே இல்லை. எப்போதும் குருவின் சரணங்களில் அமரும் பேறு கிடைத்தால், யோக்கியதை கிடைத்தாலே, எல்லாம் கிடைத்ததாக மகிழ்வேன்!" என்றார்...
அக்பர் உடனே, “உனது குரு உயிரோடு இருந்தால் இந்தக் கணமே அவரை இங்கே அழைத்து வா. நான் கேட்க விரும்புகிறேன்!" என்றார்...
தான்ஸேன், “அது சிரமம்! அவர் உயிரோடு இருக்கிறார். ஆனால் அவரை அழைத்து வர முடியாது," என்றார்...
அக்பர், "என்ன சன்மானம் வேண்டுமானாலும் கொடுத்து விடலாம்.. எதை விரும்புகிறாரோ அதைக் கொடுத்து விடலாம்.நீ கூறுவதை அளிக்கத் தயார்!" என்றார்.
தான்ஸேன், “சிரமம் அதுதான். அவரை, எதுவும் வாங்கிக் கொள்ளச் செய்வது முடியாது. எதுவும் வேண்டும் என்பது அவரிடம் கிடையாது!” என்றார்...
அக்பர் கேட்டார், "எந்த உபாயம் செய்ய முடியும்?" என்று...
தான்ஸேன், "இப்போது எதுவும் பிரயோசனமில்லை. நீங்கள் கேட்பதற்காகப் பாடுபவர் அல்ல அவர்... அவர் இசைத்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே கேட்க முடியும். அவர் எப்போது இசைக்கிறார் என்று கவனிக்கிறேன் பிறகு நாம் போகலாம்,'' என்று கூறி விடை பெற்றார்...
ஹரிதாஸ், தான்ஸேனுடைய குரு...
யமுனா தீரத்தில் வசித்தார்.
இரவு மூன்று மணிக்கு எழுந்து அவர் வாத்தியத்தை வாசிக்கிறார், ஆடுகிறார் என்று தெரிந்து கொண்டார், தான்ஸேன்..
உலகில் அக்பரைப் போன்ற செல்வாக்குள்ள வேறு சக்கரவர்த்தி எங்கும் மூன்று மணிக்கு இரவில் கண்விழித்து ஒரு சிறந்த சங்கீதக் கலைஞரது பாட்டைக் கேட்கக் காத்திருக்க மாட்டார்கள்...
அக்பரும், தான்ஸேனும் திருடர்களைப் போலக் குடிலுக்கு வெளியே குளிர் நடுக்கும் இரவில் ஒளிந்து உட்கார்ந்திருந்தனர்...
ஹரிதாஸ் பாடத்தொடங்கினார்...
அந்த சங்கீதத்தில் லயித்து அக்பர் கண்களில் நீர் பெருக மௌனமாக அமர்ந்திருந்தார்...
பாட்டு முடிந்து மௌனமாகவே அரண்மனைக்குத் திரும்பினார்கள்... வழியில் இருவரும் பேசவேயில்லை...
வாயிலுக்கு வந்தவுடன் தான்ஸேனிடம், “இதுவரை உன்னைப் போன்ற சங்கீதக் கலைஞன் இல்லையென்று நினைத்திருந்தேன். இப்போது நீ எங்கே, அவர் எங்கே என்று தோன்றுகிறது....
ஏன் உன் குருவைப் போல நீ வாசிக்க முடியவில்லை?” என்று கேட்டார்...
தான்ஸேன் உடனே,
“விஷயம் வெகு தெளிவானது.
நான் எதையோ அடைய வேண்டும் என்று வாசிக்கிறேன்....
என் குரு எதையோ அடைந்து விட்டார்.... அதனால் வாசிக்கிறார்....
எனது சங்கீதத்திற்கு முன் சில லட்சியங்கள், தேவைகள் உள்ளன....
அவை எனக்கு கிடைக்க வேண்டும்....
தேவைக்காக பாடுவதில் என் பிராணன் முழுவதும் ஒருபொழுதும் பாடலில் இருப்பதில்லை....
பாடுவதில் எப்போதும் குறையாகவே இருக்கிறேன்.....
பாடாமலே அவை எனக்குக் கிடைக்கும் என்றால், பாடிக் கிடைக்கும் சன்மானங்கள், பாடாமலே கிடைத்து விட்டால், பாட்டைத் தூக்கி உடைப்பில் போட்டு விடுவேன்....
சங்கீதம் எனக்கு ஒரு சாதனமே'' என்றார்...
வருங்காலத்தில், செல்வத்தில், புகழில், செல்வாக்கில்,
சங்கீதம் ஒரு சாதனம் மட்டுமே....
சாதனம் ஒருபொழுதும் ஆத்மாவாகி விடுவதில்லை...
ஆனால் நீங்கள் இப்போது கேட்டு வந்தது ஒரு மகானுடைய சங்கீதம்....
அவருக்கு எதையும் அடையும் சாதனம் அல்ல சங்கீதம்...
மேலே எதுவும் இல்லை,
அவருக்குப் பாடி அடைவதற்காக.. பின்னால் ஏதோ இருக்கிறது,
அவர் சங்கீதத்தைப் பெருகச் செய்து கொண்டு....
அதன் காரணமாக அவருள் பூரித்துப் பொங்குகிறது சங்கீதம்...
அவர் பாடுகிறார்....
எதையோ அடைந்து விட்டார்....
எதுவோ நிறைந்து விட்டது....
அது பெருகுகிறது....
அது ஒரு அனுபூதி....
ஒரு சத்தியம்....
ஒரு இறைவன் உயிரில் நிறைந்துள்ளான்...
இப்போது அது பெருகித் ததும்புகிறது...
அக்பர் மீண்டும் மீண்டும் கேட்கலானார்..
பிறகு எதற்காக பாடுகிறார்?"
எதற்காக, எதற்காக?” என்று்..
இயற்கைதான்.. நாமும் கேட்கிறோம்.. எதற்காகப் பாடுகிறார்? என்று...
தான்ஸேன் விடையளிக்கிறார்..
"நதி எதற்காக ஓடுகிறது?
மலர் எதற்காக மலர்கிறது?
சூரியன் எதற்காக உதயமாகிறான்?”
அதைப் போலத்தான் அவர் பாடுகிறார்....
‘எதற்காக?’
மனிதனுடைய புத்தி பிறப்பித்த கேள்வி...
மனிதனைத் தவிர எல்லாப் படைப்புகளும் 'எதற்காக' என்று கேட்பதில்லை. உலகம் முழுவதும் உள்ளுக்குள்ளே வாழ்கிறது...
மலர் மலர்கின்றது...
மலருவதிலேயே ஆனந்தம்...
சூரியன் உதிக்கிறான்...
உதிப்பதிலேயே ஆனந்தம்...
காற்று வீசுகிறது...
வீசுவதிலேயே ஆனந்தம்...
ஆகாயம் இருக்கிறது...
இருப்பதிலேயே ஆனந்தம்...
உங்கள் இருப்பில் அந்த லயம் இருந்தால்,
நீங்களும் அந்த ஆனந்த பிரவாகத்தில் இருப்பீர்கள்...
ஆனந்தம் எங்கிருந்தும் வருவதில்லை...
அங்கேயே இருக்கிறது...
ஓஷோ