Monday, November 28, 2016

காலம் கடக்கும் பேராசை...

காலங்கடக்கும் பேராசை
துளியும் எனக்கில்லை
அதன் காரணமாகவே
என்படைப்புகளுக்கும்
அந்தப் பேராசை துளியுமில்லை

பொசுக்கும் மணற்பரப்பில்
வெற்றுக் காலுடன்
தகித்து வருவோனுக்கு
கொஞ்சம் ஒதுங்க இடம்தரும்
ஒற்றைப் பனைமரமாய்...

நீண்டு விரிந்த நெடுஞ்சாலையில்
தன் எடை மீறிய சுமையுடன்
ஒடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் நிமிர இடம் தரும்
ஒரு கற்சுமைதாங்கியாய்...

கொட்டும் பெருமழையில்
முற்றாக நனைந்து ஊறி
நடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் ஒடுங்க இடம் தரும்
ஒரு பாழடைந்த கோவிலாய்..

தனிமை தரும் வெறுமையில்
சூழல் கூட்டும் கொடுமையில்
நசுங்கித் தவிப்போனுக்கு
கொஞ்சம் இளைப்பாற வழிசொல்வதே
இலக்கியம் எனக் கொண்டதால்...

என் படைப்புகளுக்கு
காலம் கடக்கும் ஆசை
துளியும் இல்லை
அதன் காரணமாகவே
எனக்கும் அந்தப் பேராசை
என்றும் எப்போதும்
வருவதே  இல்லை 

10 comments:

Nagendra Bharathi said...

அருமை

ஸ்ரீராம். said...

அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தனிமை தரும் வெறுமையில், சூழல் கூட்டும் கொடுமையில், நசுங்கித் தவிப்போனுக்கு கொஞ்சம் இளைப்பாற வழிசொல்வதே உங்களின் இலக்கியம் என்பதை என் போன்றவர்கள் மிக நன்றாகவே அறிந்துள்ளோம்.

தொடரட்டும் தங்களின் இத்தகைய எழுத்துலக அருந்தொண்டுகள். வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

G.M Balasubramaniam said...

/கொஞ்சம் இளைப்பாற வழிசொல்வதே
இலக்கியம் எனக் கொண்டதால்.../காலம் கடக்கும் ஆசை இருக்கிறதோ இல்லையோ முயற்சி தொடருகிறது வாழ்த்துகள்

Yaathoramani.blogspot.com said...


Nagendra Bharathi //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//

தொடரட்டும் தங்களின் இத்தகைய எழுத்துலக அருந்தொண்டுகள். வாழ்த்துகள்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said..//

../காலம் கடக்கும் ஆசை இருக்கிறதோ இல்லையோ முயற்சி தொடருகிறது வாழ்த்துகள்/

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Post a Comment