Friday, January 20, 2017

காளைகளுக்குக் கோவில் கட்டுவோம்

வாடிவாசலில்
பொங்கலிடுவோம்
ஜல்லிக்கட்டு
வாடிவாசலில்
பொங்கலிடுவோம்

அங்குப் பற்றிய
அக்கினிக் குஞ்சே
தமிழர்கள் நெஞ்சினில்
ஊழிக்கால நெருப்பாய்
உக்கிரம் கொண்டதால்...

திமிலுக்குப்
பூச்சூட்டுவோம்
காளைகளின்
திமிளுக்குப்
பூச்சூட்டுவோம்

உரமேறிய
இளைஞர்களின்
உள்ளங்களில் அதுவே
உணர்வேறக்
உண்மைக்காரணமானதால்...

காளைகளுக்குக்
கோவில் கட்டுவோம்
ஜல்லிக்கட்டுக்
காளைகளுக்குக்
கோவில்கட்டுவோம்

ஜாதிமதமென
கட்சியே சதமென
பிரிந்துகிடந்தோரை
தமிழினமென
ஒன்றாகச் சேர்த்ததால்...

தலைமைக்குப்
பின்னன்றி
பிரச்சனைக்குப்பின்
தலைமைகளை
அணிவகுக்க வைத்ததால்...

அதிகாரத்தின்
அலட்சியத்தை
முதன்முதலாய்
அடங்கவைத்ததால்
அலறவைத்ததால்....       

12 comments:

KILLERGEE Devakottai said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு...

Unknown said...

மிகவும் அருமை

Thulasidharan V Thillaiakathu said...

அதிகாரத்தின்
அலட்சியத்தை
முதன்முதலாய்
அடங்கவைத்ததால்
அலறவைத்ததால்.... // உண்மை உண்மை.. காளைக்குக் கோயில் ஆஹா அருமையான வரிகள்!!

Nagendra Bharathi said...

அருமை

முனைவர் இரா.குணசீலன் said...

நன்று.

Unknown said...

புதியசகாப்தம்?

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

சிறப்பான வரிகள் படித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் அருமை.

ஜீவி said...

அதிகாரத்தின்
//அலட்சியத்தை
முதன்முதலாய்
அடங்கவைத்ததால்
அலறவைத்ததால்.... //

தேசத்திற்கே வழிகாட்டல்! சிந்து பாடுவோம்!

G.M Balasubramaniam said...

ஏற்கனவே பல கோவில்கள் இருக்கின்றனவே அதில்லாமல்பிரதோஷ வழிபாடு போன்றும் தமிழின உணர்ச்சிகளின் வெளிப்பாடு ...?

Yarlpavanan said...

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

Post a Comment