Sunday, January 28, 2018

மடத்தனம் மீண்டும் தொடர்கிறது...

படுத்திருப்பவன்
அனுபவித்துத் தூங்காது
தன்னைக் கடப்பவனுக்கு
தான் உயிர்த்து இருப்பதை
நிரூபிக்கவேண்டும் என்பதற்காக
காலாட்டிக் கொண்டிருக்கும்
மடத்தனத்திற்கு
எந்த விதத்திலும்
குறைவாகப்படவில்லை...

அனுபவப்பட்டவன்
அனுபவத்தைப் பாடமாக்கி வாழாது
தன்னைச் சூழ்ந்தவருக்கு
தான் அனுபவமானவன் என்பதை
நிரூபிக்கவேண்டும் என்பதற்காக
எழுதிக் கொண்டிருப்பதும் என்பதுவும்..

இது தெளிவாகத் தெரிந்தும்...

காலாட்டுபவன் கொள்ளும்
அற்ப சுகத்தை
அவனுக்கு விட மனமில்லை
என்பதுபோல்
எழுதும் அற்ப சுகத்தை விட
எனக்கும் மனமினமையால்...

மடத்தனம்
மீண்டும் தொடர்கிறது

4 comments:

ஸ்ரீராம். said...

தவறில்லை. நன்று.

UmayalGayathri said...

உண்மைதான் ஐயா...
நலமா...

G.M Balasubramaniam said...

பின்னூட்டங்க்சள் ஏதும் பப்லிஷ் ஆவதில்லையே ஏதும் ஏற்கத் தகுதி இல்லாததாலா

vimalanperali said...

தொடரட்டும் ஆனால் எழுத்து மடத்தனம் இல்லை!

Post a Comment