Saturday, April 28, 2018

..தனக்கான காலம் கடந்தும் ..

காலங்கடக்கும்
சக்தியுள்ள கவிதைக்கான
கரு ஒன்று
வளர்ச்சியடைய விரும்பாது
அவனுள்
கருவாகவே சுழன்று கொண்டிருக்கிறது
தனக்கான காலம் கடந்தும்  ..

அவன் படைப்பின் மீதான
சிலரின் விமர்சனம்
ஒருதலைப்பட்சமானதுதான்
என்றாலும்
இவ்வளவு உணர்சிவசப்படுதல் பிடிக்காது

அவனைப் பாராட்டும் பலரின்
பாராட்டுக்கள் எல்லாம்
மிக நியாயமானதுதான்
என்றாலும்
இவ்வளவு பெருமிதம் கொள்வதை விரும்பாது

சம நிலையடையும்
சமயம் வரட்டும் என்று...

கருவாகவே சுழன்றுகொண்டிருக்கிறது
காலம் கடக்கும் சக்தி கொண்ட
வெகு அற்புதமான கரு ஒன்று.
தனக்கான காலம் கடந்தும்  ..
.

2 comments:

Post a Comment