Thursday, July 2, 2020

கொரோனாவும் நீதி நூல்களும்.

அரசும்
வலைத்தளங்களும்
முக நூலும்
இன்னபிறவும்
கொரோனா குறித்து
விரிவாக விளக்கியும்

நம் மக்கள்
முகக்கவசம் அணியாதும்
சமூக இடைவெளிக் கடைப்பிடிக்காதும்
கொரோனாத் தொற்றை
அசுர வேகத்தில்
பரவச் செய்வது ஏன் ?

கொரோனா குறித்து
அறிந்தது எல்லாம்
அறிந்ததாகக் கொள்ளமட்டுமே
பிறருக்கு பகிர்ந்து கொள்ளமட்டுமே
தாம் கடைபிடிப்பதற்கு அல்ல என்பதில்
தெளிவாய் இருப்பதால்தானோ ?

ஒரு வகையில்
இந்தத் தெளிதல் கூட...

நீதி நூல்களும்
நீதியை எளிதாய்ப் போதிக்க வந்த
இதிகாசங்களும் புராணங்களும்
காலம் காலமாய் இருந்தும்
ஆயிரமாயிரமாய் இருந்தும்
..
அநீதியும்
அக்கிரமங்களும்
வன்மமும் துரோகங்களும்
புற்றீசல் போல்
பல்கிப்பெருகுவது தெரிந்தும்
பாடாய்ப்படுத்துவது புரிந்தும்

அவையெல்லாம்
காலம் காலமாய்
போற்றத் தக்கதாய்
பாதுகாக்கத் தக்கதாய்
வைத்திருக்கவேண்டியவையன்றி
கடைபிடிக்க வேண்டியவையல்ல என்பது
நம் இரத்தத்தில் கலந்துவிட்டதால் தானோ ?

2 comments:

Post a Comment