Monday, April 30, 2018

அதிகம் படித்த மூஞ்சூறு கழனிப்பானையிலே...

அனைத்து மதப் பானைகளிலும்
மேற்பரப்பில் மட்டுமே
உண்ணச் சகிக்கா
அதிகம் வெந்த சோறு

பக்குமாய் வெந்து உள்ளிருக்கும்
சோற்றினை அறிந்து கொள்ளமுடியாதபடி...
அதனை  முற்றிலுமாய்  மூடி மறைத்தபடி

மேற்  கவளம் நீக்கினால் போதும்
ஆம் ஒரே ஒரு கவளமெடுத்து
கழனிப்பானையில் எறிந்தால்போதும்

மீதம் உள்ளிருப்பது எல்லாமே
உடலுக்குறுதி சேர்க்கும்
உன்னதச் சோறு தானே

அதிகம் படிந்த முன்சோறு
கழனிப்பானயிலே என்பதனை
அதிகம் படித்த  மூஞ்சூறு கழனிப்பானையிலே
எனத் தவறாய்ப் புரிந்து கொண்டதைப் போல்...

மேற்சோறேபானைச் சோறு என
இன்னும் எத்தனை நாள்
தவறாய்ப் புரிந்து திரியப்  போகிறோம் ?

மதத் தீவீரவாதிகளின் வாதத்தில் மயங்கி
மதத்தின் அருமையை
மறந்து திரியப் போகிறோம் ?

4 comments:

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற எம் நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil US
www.tamilus.com

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான உவமை...

Kasthuri Rengan said...

பொருள் பொதிந்த்த வரிகள் அய்யா
மலர்த்தரு முகநூல் பக்கத்திற்கு கடத்துகிறேன்

iramuthusamy@gmail.com said...

கருத்து மிக்க கவிதை...

Post a Comment