Saturday, October 5, 2019

நெத்தியடி என்பது யாதெனில்...

இன்னும் கொஞ்சம்
நாகரீகமாய்ச் சொல்லி இருக்கலாம்

இதை இவ்வளவு அழுத்தமாய்ச்
சொல்லி இருக்கவேண்டியதில்லை

இதைச் சொல்லும் முன்
இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்

எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க
இது ஏன் இப்போது ?

இந்த அசட்டுத் தைரியம்
நிச்சயம் ஆபத்தானதுதான்

இப்படியெல்லாம்
உன் எழுத்துக்கு விமர்சனம் வருகிறது எனில்...

சரியான நேரத்தில்
மிகச் சரியாக
மிகச் சரியானதைத்தான்
சொல்லி இருக்கிறாய் எனச்
சொல்லத்தான் வேண்டுமா என்ன ?

7 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

KILLERGEE Devakottai said...

ரசித்தேன் கவிஞரே...

Avargal Unmaigal said...

சரியான நேரத்தில் மிகச் சரியாக மிகச் சரியானதைத்தான் சொல்லி இருக்கிறீங்க

G.M Balasubramaniam said...

சிலருக்கு அது தெரிவதில்லையே

Yarlpavanan said...

அருமையான வரிகள்

இனிய தீபாவளி வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

vetha (kovaikkavi) said...

நன்று

Post a Comment