Saturday, January 18, 2020

தலாக்......மறுமுகம்

என் பள்ளிக் காலங்களிலும்
கல்லூரிக் காலங்களிலும் மட்டுமல்ல
இப்போது நான் வாழும் பகுதியில் கூட எனக்கு
முஸ்லீம் நண்பர்கள் அதிகம்..

அப்படிப் பழகியவர்களில் பழகுபவர்களில்
என் அதிஷ்டமோ என்னவோ இதில் அதித்தீவிர
மதவாதிகள் அவ்வளவாக இருந்ததில்லை
இப்போதும் இல்லை

காரணம் அப்படி இருந்த ஒரு சிலர் கூட
இவன் அதுக்கு ஒத்து வரமாட்டான் என
ஒரு விலகிப் போய் இருக்கிறார்கள்...

காரணம் அப்படிப்பட்டவர்களிடம் நான்
மிகத் தெளிவான ஒன்றைச் சொல்லி விடுவதுண்டு
"நான் இதுவரை அல்லாவைத் தொழுததில்லை
நீங்கள் இதுவரை இராமரையோ கிருஷ்ணரையோ
கும்பிட்டதில்லை.இருவரும் கெட்டுப் போகவில்லை

அதைப் போலவே நீங்கள்
அல்லாவை நம்பித் தொழுகிறீர்கள்
நான் என் தெய்வங்களை நம்பிக் கும்பிடுகிறேன்
இருவரும் நன்றாக இருக்கிறோம்
இது அவரவர் நம்பிக்கை சம்பத்தப்பட்ட விஷயம்
நம்பிக்கையால் விளையும் விஷ்யம்

இதில் தெய்வங்கள் கூட இரண்டாம்பட்சம்தான்
எனத் தெளிவாகச் சொல்லிவிடுவதுண்டு

அவர்கள் இந்து கோவிலுக்கு வருவதில்லை
கும்பிடுவதில்லை பிரசாதம் சாப்பிட மாட்டேன்
என மறுப்பார்கள்
நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை

நான் அவர்கள் மசூதிக்கும் அழைப்பின் பேரில்
சென்றிருக்கிறேன்.கூடுமானவரையில் எல்லா
வருடமும் அவர்கள் அழைப்பின் பேரில்
நோன்பு திறக்கச் சென்றுகொண்டிருக்கிறேன்

சில குறிப்பிட்ட நண்பர்கள் ஒவ்வொரு வருடமும்
வீட்டிற்கே நோன்புக் கஞ்சியை வந்து
கொடுத்துப் போவார்கள்

இவ்வளவு விரிவான முன்னுரை கூட
உங்களுக்கு அவர்களைப் பற்றி என்ன தெரியும்
என எளிதாகச் சொல்லி விடக்கூடாது
என்பதற்காகத்தான்

இப்படிப் பட்ட சூழலில் எனக்கு மிகவும்
பழக்கமான ஜமாத் தலைவராக இருக்கிற நண்பர்
நான் நண்பர்களுடன் அமர்ந்திருந்த இடம் வந்தவர்
"மாமா மாப்பிள்ளை எல்லோரும் கொஞ்சம்
இதைக் கவனியுங்க.இன்னைக்கு நம்ப ஜமாத்துல
பெரிய கூத்து நடந்து போச்சு,,
சிரிப்பை அடக்க முடியவில்லை
நீங்கள் கேட்டாலும் அடக்க முடியாது "என
அவர் பாணியில் சபதம் போட்டுச் சிரிக்க
ஆரம்பித்து விட்டார்

நகைச்சுவையாய் பேசுவதில் பொதுக் காரியங்களுக்கு
எப்போதும் முன் நிற்பதில் பொது விஷயயங்களுக்காக
தனிப்பட்ட பணத்தைச் செலவு செய்வதில்
எப்போதும் அவர் முன்னணியிலேயே இருப்பார்
அதனாலேயே நாங்கள் எங்கள் பொது அமைப்பு
ஒன்றுக்கும் அவரையே தலைவராக வைத்திருந்தோம்
அந்த வகையில் அவர் எல்லோருக்கும் மிக நெருக்கம்

அவர் பேச ஆரம்பித்தார்....

"எங்கள் ஜமாத்தில் கணவன் மனைவிக்கு
சரிப்பட்டு வரவில்லை.நாங்களும்ஜமாத்தில் ஒன்று
சேர்க்க முயற்சித்து முடியாது போக தலாக்
சொல்லவைத்து பிரித்து வைத்துவிட்டோம்

இது நடந்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது
பிரிந்திருந்ததாலோ என்னவோ அல்லது
ஒருவரை ஒருவர்  தவறாகப்
புரிந்து கொண்டாதாக பிறர் மூலம் அறிந்ததாலோ
என்னவோ மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக
ஜமாத்துக்கு தகவல் தெரிவித்தார்கள்

எங்கள் வழக்கப்படி தலாக் சொல்லி விலக்கி
வைக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒன்றாக வாழ
விருப்பம் தெரிவித்தாலும் அந்தப் பெண்
வேறு ஒருவருடன் ஒரு நாள் இரவைத் தனியாகக்
கழிக்கவேண்டும்

அந்த வகையில் இந்தப் பெண்ணும் ஒரு ஆணுடன்
தனியாக இருக்கவேண்டும் என்பதற்காக
நானே தவறு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக
கொஞ்சம் வயதானவரைத் தேர்ந்தெடுத்து
அவரிடம் பக்குவமாய் நாளை கணவன் மனைவியையும்
அவர்கள் விருப்பப்படி சேர்த்து வைக்க இருக்கிறோம்
நம் விதிமுறைப்படி ஒரு நாள் பிறருடன் இருக்கவேண்டும்
என்பதற்காக அனுப்பி வைக்கிறோம்.தப்பு தண்டா இல்லாம
இருந்துக்கோ என சொல்லி அனுப்பி வைத்தோம்"
எனச் சொல்லிவிட்டு மீண்டும் குலுங்கிக் குலுங்கி
சிரிக்கத் துவங்கிவிட்டார்....

"பாய்  சொல்லிட்டுச் சிரிங்க .நாங்களும் சேர்ந்து
சிரிப்போம் இல்ல " என நண்பன் சொல்ல
பாய் சிரித்தபடியே சொல்ல ஆரம்பித்தார்

"சொல்றேன் சொல்றேன்.மறுநாள் நாங்க
இவங்களைச் சேர்த்து வைக்கலாம் எனச் சொல்லி
எங்கள் வழக்கப்படி என்னம்மா நீ உன்
புருஷனோடு சேர்ந்திருக்கச் சம்மதமா எனக் கேட்க..
படுபாவிப்பய என்ன சொல்லி மனசை மாத்தினானோ
இல்லை என்ன செஞ்சி மனசை மாத்தினானோ
தெரியலை...நான் இவரோடயே இருந்துக்கறேன்
புருஷன் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்"
எனச் சொல்லிவிட்டு சப்தம் போட்டு
மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்..

எனக்கும் என் நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சி
இதுவரை இப்படி ஒரு நடைமுறைப் பழக்கம்
அவர்களிடம் இருக்கும் என்பது சத்தியமாய்
தெரியாது

இப்படியொரு மோசமான விஷயம் அவர்களுக்குள்
இருந்ததானால் எத்தனை பேர் அதிகம்
பாதிக்கப்பட்டிருப்பார்கள் என எண்ணிப் பார்க்க
அதிர்ச்சியாய் இருந்தது...

இதன் காரணமாகவே முத்தலாக் குறித்து
பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில்
மௌனம் காக்க அதனால் பயன் அனுபவித்த
சிலரே (இவர்களைத்தான் அல்லக்கைகள்
எனச் சொல்வதுண்டு இவர்கள் தான் சில இயக்கங்கள்
மத ஸ்தாபனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில்
இருந்து கொண்டு பெருவாரியான மக்களை
பொய்ப்பிரச்சாரம் மூலம் திசைத் திருப்புவது )
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
சில நாள் போராடி ஓய்ந்தும் போனார்கள்
என நினைக்கிறேன்.

எந்த மதமாயினும் மதத்தை வைத்து
பிழைப்பவர்கள் அல்லது சுகத்தை அனுபவிப்பவர்களே
மதத்தின் பெயரால் ....இதுபோன்று
எந்த நோக்கத்திற்காக சில சம்பிரதாயங்கள்
ஏற்படுத்தப்பட்டதோ அதனைமிகச் சரியாகப்
புரிந்து கொள்ளாது
தங்கள் சுய நலத்திற்குப் பயன்படுத்துவதால்தான்
மதம் குறித்து ஒரு மோசமான அபிப்பிராயம்
ஏற்படக் காரணமாவதோடு பகுத்தறிவு வாதிகள்
எனச் சொல்லிக் கொள்வோர் அதைத் தங்களுக்கு
சாதகமாக பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள் என்பதைச் சொல்லவும்...
.(மிகக் குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக மட்டும்)

மூட நம்பிக்கை  என்பது ஒரு மதத்தில் தான் உண்டு
என்பதில்லை எல்லா மதத்திலும்
எதன் காரணமாகவோ உண்டு
என்பதைச் சொல்லவுமே இந்தப் பதிவு.. 

5 comments:

KILLERGEE Devakottai said...

நான் இந்த விடயம் முதன் முறையாக கேள்விப்படுகிறேன்...

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //நானும் அப்படியே
யாரோ யாரிடமோ சொல்லக் கேட்டு..
என்கிற ஜால்ஜாப் எல்லாம் இல்லை
சொன்னவர் பொறுப்பில் உள்ளவர்
கேட்டவன் நான்..என்வேதான் எழுதினேன்

Yarlpavanan said...

சிறப்பான சிந்தனை
வரவேற்கிறேன்

ஸ்ரீராம். said...

இந்த விஷயம் பற்றி நானும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  

உண்மை.   எல்லா மதங்களிலும் இதுபோன்ற வழக்கங்கள் இருந்தாலும் பிழைப்பாளிகளால் விமர்சிக்கப்படுவது இந்துமதம் மட்டுமே!

வெங்கட் நாகராஜ் said...

இதுவரை தெரிந்திராத விஷயம்.

எல்லா இடங்களிலும் இப்படி சில! என்ன சொல்ல.

Post a Comment