Friday, August 4, 2023

தமிழைக் காப்போம்

 சமஸ்கிருதத்தால் அல்ல, ஆங்கிலத்தால்!

-முரளி சீதாராமன்

Murali Seetharaman 

பொருள் புதிது தளம்


தமிழகத்தில் அடிக்கடி சமஸ்கிருதத்துக்கு எதிராக முழங்குவது, எளிய அரசியல் உத்தியாகத் தொடர்கிறது. அந்த மேதாவிகளுக்காகவே இதனை எழுதி இருக்கிறார் கட்டுரையாளர்.  


நிதி, நீதி, விதி, வீதி, நியாயம், தர்மம், அக்கிரமம், அராஜகம், மனம் (மனஸ்), க்ராமம், நகரம், பந்தம், சம்பந்தம், சம்பத்து, மரியாதை, சன்மானம், பாபம், 


புண்யம், காரணம், விசேஷம், பாக்யவான், பாக்கியம், அதிர்ஷ்டம், துரதிருஷ்டம், திருஷ்டி, பாதம், சிரசாசனம், பாகம், பாத்யதை…  


காரியம், பலன், சுபகாரியம், மங்களம், சகுனம், ஸ்தாவர ஜங்கமம் (சொத்து) கீதம், வாசனை, பதவி, (மூன்று) போகம், யோகம், சாந்தி, குணம், கோபம், ரகசியம், சந்தோஷம், துக்கம், ஜனனம், மரணம், ஜன்மம், புனர் ஜன்மம், பூர்வ ஜன்மம்…


பழம் (फल), ரசம், வர்ணம், ஆகாசம், அவகாசம், அவசரம், அற்புதம், அதிகம், ஆதி, இஷ்டம், உற்சாகம், உத்வேகம், உத்யோகம், உதயம், ஏகம், ஏகாந்தம், ஐக்கியம், பஞ்சபூதம், மூலம், மூலாதாரம், பலம், குணம், லாபம், நஷ்டம், பலாபலன், சிந்தனை (சிந்தனா) கற்பனை (கல்பனா), ரௌத்ரம், சாந்தம், 


ஆச்சரியம், உபயோகம், பிரயோகம், பிரயத்தனம், தனம், தானம், லட்சியம், கணிதம், சாஸ்திரம், சரித்திரம், சம்பவம், சாதகம், பாதகம்,


சதுரங்கம், சமர்த்து, சாமர்த்தியம், சேனை, சேனாபதி, உதார குணம், மூர்த்தி, முஹூர்த்தம், மௌனம், மோகம், காமம், கஷ்டம், கவனம், கணம், கோஷ்டி, கோஷம், கோ தானம், பாதம், பங்கஜம், ஸ்தூபம், தீபம், அக்னி, தவம் (தபம்), தாபம், பிரதாபம், புஸ்தகம், போஜனம், விரதம், வியர்த்தம், விஸ்வரூபம், விசேஷம்… 


தைரியம், பயம், பீதி, சௌக்கியம், சௌகரியம், சுந்தரம், சுந்தரி, சௌந்தர்யம், சொப்பனம்,  


நதி, சமுத்திரம், பூலோகம், லோகம், நட்சத்திரம், சூரியன், சந்திரன், கிரகம், 


வாசம், வசனம், உச்சம், நீசம், மத்தி, மத்யமம், மத்ய, புஷ்பம், பீஜம், விருட்சம், 


புத்தி, ஆலோசனை, அபிப்ராயம், ஆதி, அந்தம், ஜன்மம், புனர் ஜன்மம், தோஷம், தீரம், லட்சணம், உதரம், சிரம், அங்கம், 


உத்தமம், அந்தரங்கம், பகிரங்கம், பிரியம், தாம்பத்யம், சயனம், சாபம், சங்கீதம், குசலம், போஷணம், பட்சணம், பட்சி, பாலகன், நடனம், நாட்டியம், சலனம், நிஸ்சலனம், நிர்வாணம், நேத்ரம், கதி, அதோகதி, ஸ்தானம், சாமான்யம்…


சித்தாந்தம், தத்துவம், கதை (கதா), கவிதா (கவிதை), காவியம், நாடகம், நிதர்சனம், தத்ரூபம், தாட்சண்யம், தனநாசம், நாசம், விருத்தி, அபிவிருத்தி…


தேகம், தேசம், தெய்வம், தேவாலயம், துஷ்ட, ஜந்து, அல்பம், ஆரோக்கியம், அலங்காரம், அவதாரம், அஞ்சனம், 


சரம், சஞ்சலம், சந்தேகம், நிவாரணம், நிர்மூலம், பரிபாலனம், பூர்ணம், போதனை, பரிசோதனை, பரிவர்த்தனம்,  


முக்தி, பக்தி, வியாபாரம், வியாபாரி, மோட்சம், விமோசனம், ஸ்வதந்திரம் (சுதந்திரம்), சுயதரிசனம், விஸ்வாசம்,


பூமி, பிரபஞ்சம், மேகம், பூலோகம், சொர்க்கம், நரகம், பாதாளம், பவித்ரம்,


இப்படி நம்மையும் அறியாமல் நாம் பேசும் சமஸ்கிருதச் சொற்கள் ஆயிரக்கணக்கில்!  


இதெல்லாம் எந்த ஞானமும் – அடடே இதுவும் சமஸ்கிருதம்! – இல்லாத கும்பல்தான் தமிழை அழித்துவிடும் என்று புலம்புகிறார்கள்! 


இத்தனை சொற்கள் – இவை உதாரணம்தான் – (உதாரணம் – இதுவும் சமஸ்கிருதம்தான்!)  கலந்ததால் தமிழ் என்ன அழிந்தா போயிற்று?


 அதே சமயம்,


“என் டாட்டரை ஸ்கூல் என்ட்ரன்ஸ் கிட்ட டூவீலர்ல கொண்டு ட்ராப் பண்ணிட்டேன்!”… 


 “என் ஹஸ்பெண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்ட்ரன்ஸ்ல டென் மினிட்ஸ் வெயிட் பண்ணினால் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்னு மெஸேஜ் கொடுத்திருக்காரு!”


– என்பது மாதிரி  ‘தங்கிலீஷை’ வேண்டுமென்றே ஊக்குவிக்கிறார்கள்! 


நமது குழந்தைகள் தமிழில் எழுதாமல், ஆங்கில எழுத்துகளைக் கொண்டு டிரான்ஸ்லிட்டேஷன் (TRANSLITERATION) முறையில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள்.


தமிழ் அழிவதும் – அழியப் போவதும்


சமஸ்கிருதத்தால் அல்ல, ஆங்கிலத்தால்!வாட்ஸ் அப் பகிர்வு

4 comments:

ஸ்ரீராம். said...

தமிழ் , அதாலும் அழியாது.  இதாலும் அழியாது. எல்லாமொழிகளிலிருந்தும் வார்த்தைகளை எடுத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலம் அழிந்தா போய்விட்டது?

திண்டுக்கல் தனபாலன் said...

சுயம்பு...

Jayakumar Chandrasekaran said...


பல சொற்களுக்கும் தமிழில் சரியான பதம் இல்லை எனவே பிறமொழி சொற்களை தமிழில் சேர்த்துக் கொள்வது இயல்பு. அதனால் தான் தமிழ் தற்போதும் துடிப்புடன் நிற்கிறது.

தமிழர்கள் சமஸ்கிருதத்தை வெறுக்கவில்லை. ஆனால் ஹிந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள்.

Jayakumar

உமா said...

சிறப்பான பதிவு...

Post a Comment