Thursday, August 31, 2023

படி(கு )த்தறிவோம்

 உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.... விஞ்ஞானிகளின் கூற்று.....

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!


இந்துக்களின் காலக்கணக்கு,

உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...

கி.பி.1947 - பாரத சுதந்திரம்

கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்

கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்

கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்

கி.பி 58 - சாலி வாகன சக வருசம்

கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்

கி.மு 509 - புத்தர் தோற்றம்

கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்

கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்

கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்

கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்

கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்

கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்

கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்

கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்

கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்

கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்

கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு

கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

*உண்மை இதுதான்*

 

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...


நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..


*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,

காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?


சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்

பாா்க்கும்படி வைத்து

மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..


இன்னும் இது போன்ற எத்தனையோ கட்டிடக்கலை..... தொியாமல் கட்ட முடியாது.!


*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.


*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.


*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.


*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.


*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.


*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.


*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.


*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.


*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.


*Bachelor/ Master of Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.


*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. 


*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.


*Anomaly Scan / Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை எப்படியிருக்கும் என்று பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.


இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ, அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் நம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறியச் செய்யுங்கள்.. நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்..


இன்னும் சொல்ல வேண்டுமானால்,


ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...


இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.


லேப் டெக்னிஸ்யன் (LAB technicient ) படிப்பு

கிடையாது.


ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


அப்படி பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது.


இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..


ஆனால், இதை நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,


*திருமூலா் பெருமகனார்* அற்புதமாக தன் ஞானத்தினால்,


*லட்சமாக உருவெடுத்து*  *ஆயிரம் ஆகி*

*நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்*


என்று சொல்லியிருக்கிறார்.


எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.


- இதைப் பகிர பெருமை கொள்கிறேன்.

அறிவோம் முன்னோர் மகிமை.!!!🙏🏻🌹🙏🏻

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திருமூலர் முன்பே திருவள்ளுவர்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழை, தமிழனை அழிக்க துடிப்பது யார்...? ஏன்...?

ஸ்ரீராம். said...

நல்லதொரு பகிர்வு.

மாதேவி said...

சிறப்பான பகிர்வு.
நமது முன்னோரை பெருமை கொள்வோம்.

Post a Comment