Sunday, September 1, 2024

முகவரி..

 கடலுக்கு அலையது முகவரி

நிலவுக்கு பனியது முகவரி
மலருக்கு  மணமது முகவரி-என்
மகிழ்விற்கு "அவள்தான்" முகவரி

கொடையதற்கு கருணையே முகவரி
காதலுக்கு அன்பதே முகவரி
படையதற்கு தலைவனே முகவரி-என்
புகழுக்கு "அவள்தான் " முகவரி

மனதுக்கு நினைவதே   முகவரி
நினைவுக்கு மொழியதே  முகவரி
பகலுக்கு ஒளியதே  முகவரி-என்
உயர்வுக்கு  "அவள்தான்" முகவரி

கடவுளுக்கு கோவிலே முகவரி
கனியினுக்கு சுவையதே   முகவரி
உடலுக்கு முகமதே  முகவரி-ஆம் 
எனக்கென்றும் "கவிதையே   " முகவரி

2 comments:

ஸ்ரீராம். said...

சொல்லவந்தேன். நீங்களே சொல்லி விட்டீர்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை. கவிதையே தங்கள் அடையாளம்

Post a Comment