எனக்கு சுரீர் என்று கோபம் வந்தது.
என் மகன் "என்னப்பா இப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்டயே அதுவும் நீங்க விஜிலென்ஸ்ல வேலை பார்த்து இருக்குறேன்னு சொல்லியும் கேக்குறாங்களே?"
"ஆட்சி மாறினாலும் காட்சி மாறல "
"இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களாப்பா?"
"இனி இவனிடம் பேசக்கூடாது.அடுத்து இவனை காசு வாங்காமல் வேலை செய்ய வைப்போம்" என்று மகனிடம் கூறினேன்.
ஆனால் விஜிலென்ஸில் என்னுடன் வேலை பார்த்த இன்செக்டரே பணிபுரிந்த பொழுதும் அவர்களிடம் சொல்வதற்கு சற்று தயக்கமாக இருந்தது.
சரி ஒரு வாரம் பார்ப்போம் .அவனாக வேலையை முடிக்கின்றானா என்று பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன்.
இன்று கருவூல சூப்பரெண்டென்டை செல்லில் அழைத்து பென்ஷன் பற்றி கேட்க
"சார் இந்த மாசம் க்ளோஸ் பண்ணிட்டோம் அடுத்த மாசம் 3ஆம் தேதிக்கு மேல உங்கள எல் ஒன் செக்ஸன்ல இருந்து காண்டாக்ட் பண்ணுவாங்க சார்"
"ஏன் சார் சென்னையிலேயே ஒரு நாள்ல கொடுத்து இருக்காங்களே? என்று நான் கேட்க..
கொஞ்சம் கூட யோசிக்காமல் "சார் இங்கே பென்ஷனர்கள் ரொம்ப சார்" என்றான்.
இனி நாம் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டரிடம் பேசாமல் வேலையாகாது என்று செல்லை எடுத்த போது..
டிவியில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற செய்தியை பார்த்ததும் எனக்கு டிஎஸ்பியாக இருந்த வேலன் அவர்கள் பையன் ஞாபகத்திற்கு வந்தார்.
வேலன் அவர்களும் நேர்மையாகவும் வெகு சிறப்பாக பணிபுரிபவர்.
காவல் துறைக்கு சவாலாக பிடிபடாமல் இருந்த மதுரை மற்றும் திண்டுக்கல் மிகப்பெரும் ரவுடிகளை வட மாநிலத்திற்கு சென்று பிடித்து போலீசுக்கு பெருமை சேர்த்தவர்.
அவர் எல்லா உச்சபட்ச அதிகாரிகளுக்கும் பரிச்சயமானவர்.
எந்த ஒரு செயலையும் சரியாக திட்டமிட்டு குழுக்களை உருவாக்கி வழி நடத்தி செய்து முடிப்பதில் அவருக்கு நிகர் அவரே!
அவர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை ஒரு குடும்பமாக கருதபவர்.
அவரும் நானும் இன்ஸ்பெக்டராக ஒன்றாக வேலை பார்த்ததாலும் வயதில் அவரை விட மூப்பு என்பதாலும் என்னை சார் என்றே அழைப்பார்
உடனே அவரை தொடர்பு கொண்டு
"சார் வணக்கம்
உங்க பையன் PGக்கு நீட் அப்ளை பண்ணிட்டாரா?"என்று கேட்க
"அப்ளை பண்ண போறான் சார்"
" அப்புறம் ரிட்டையர்டு பணம் எல்லாம் வந்திருச்சா சார் ?" என்று கேட்கவும்
"நம்ம ஆபீஸ்ல இருந்து வரவேண்டிய பணமெல்லாம் வந்துருச்சு சார்"
"ஆனா கருவூலத்தில் பென்ஷன் பேப்பர் ஃபார்மாலிட்டிக்காக டிலே ஆகுது சார்"
'என்ன சார் நாம இவ்வளவு நேர்மையா வேலை பார்த்து பணம் கேட்கிறார்களா?" என்று கோபப்பட்டார்.
"ஆமா சார் ஏதோ பழமொழி சொல்லுவாங்களே .. பொண்டாட்டி நகையே ஆனாலும் இரண்டு உரசு உரசாம விட மாட்டாங்கன்னு" அதுபோல
"அவங்க அப்பனே வந்தாலும் விடமாட்டாங்க போல சார் "
"நீங்க பெயரை மட்டும் சொல்லுங்க சார்" என்றார்
நான் அவரிடம் பெயரை கூறினேன்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் கருவூலத்திலிருந்து சூப்ரெண்டெண்ட் என்னிடம் செல்லில் பேசினார்.
"சார் உங்க பென்ஷன் புக் ரெடியாயிடுச்சு சார் "
"இன்னைக்கு சாயந்தரம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் சார்"
?https://arammsei.blogspot.com/ இல் இருந்து
No comments:
Post a Comment