குற்றவாளிக் கூண்டில் பதட்டத்தில்
கைகளைப் பிசைந்தபடி நீதிபதியைப் பார்க்கிறேன்
அவர் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார்
"எனவே சந்தர்ப்பச் சாட்சியங்களை தீர விசாரித்த
வகையில் இவர் மீதுள்ள குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபணம் ஆன படியால்...."
அவர் தொடர்ந்து படிக்கிறார்
நான் சத்தமாய்க் கதறுகிறேன் " ஐயா நல்ல
விசாரிங்க ஐயா.. இது ஒரு தப்புத்தான்
ஏதோ ஒரு கோபத்தில் நடந்து போனது.
மத்தபடி ஊருக்கு ஆயிரம் நன்மை
செய்திருக்கிறேன் ஐயா......கொஞ்சம்
கருணை காட்டுங்க ஐயா....
என்னை இடைமறித்த நீதிபதி ' இது
நியாய சபையல்ல. உன்னைப்பற்றி
முழுவதும் தெரிந்து கொள்வதற்கு
நீ செய்த இந்தக் குற்றம் குறித்து மட்டுமே
இந்த மன்றம் கவனத்தில் கொள்ளும்....
எனவே நீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய
10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை
இந்த நீதிமனறம் உறுதி செய்கிறது...
இதற்கு மேல் என் செவியில் எதுவும்
விழவில்லை.சடாரென மயங்கிக் கீழே சரிகிறேன்.
நான்விழித்துப் பார்க்கையில் எம கிங்கரர்கள்
புடை சூழ வேறு ஒரு குற்றவாளிக் கூண்டில்
நிற்கிறேன்
எதிரே சிம்மாசனத்தில் ஆஜானுபாவனாய் அமர்ந்திருந்த
எம தர்மன் தீர்ப்பை வாசிக்கக் துவங்குகிறார்
கொஞ்சம் தைரியத்தை கூட்டியபடி "ஐயா
விசாரிக்கவே இல்லை. அதற்குள் தீர்ப்பைப்
படிக்கிறீர்களே ..." என்கிறேன்
அவர் கடகடவென சிரித்தபடி "சாட்சி, சந்தர்ப்பம்
மண்ணாங்கட்டி மட்டை எல்லாம் உங்கள்
நீதிமன்றங்களில் தான்.இங்கு நாங்கள் எவரையும்
விசாரிக்க வேண்டியதில்லை.உன் பிறப்பு முதல்
இறப்பு வரையிலான செயல்பாடுகள் எல்லாம்
எங்களுக்கு அத்துப்படி... எனவே...
அவர் படிக்கத் துவங்க எனக்குள் எண்ணைக்
கொப்பறை சவுக்கு,முள்படுக்கை எல்லாம்
நினைவுக்க் வர உடல் நடுங்கத் துவங்குகிறது
அவர் தொடர்கிறார் " இவர் கோபத்தில்
சில பாவங்களைச் செய்திருந்தாலும் கூட
அதையும் தாண்டிய வகையில் ஏழை எளிய
மக்களுக்கு தன்னாலான சேவையை தொடர்ந்து
செய்துள்ளபடியால்..இவரை இரண்டாம் நிலை
சொர்க்கத்துக்குப் பரிந்துரை செய்கிறேன்..
என்னால் நம்பவே முடியவில்லை.என்னைக்
கிள்ளிப்பார்த்துக் கொள்கிறேன்.
" ஐயா இப்படின்னு தெரிஞ்சா இன்னும் நிறைய
நனமை செய்திருப்பேனே. முதல் நிலைக்குப்
போயிருப்பேனே.. ஐயா ஐயா இன்னொரு
சந்த்ர்ப்பம் கொடுங்கையா.. ஐயா.. ஐயா..
நான் கதறுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை வலுக்கட்டாயமாக அங்குள்ள பல்லக்கில்
ஏற்றுகிறார்கள்..
நான் திமிரத் திமிர என் முகத்தில் சட்டென
ஏதோ ஈரப்பதம் தென்பட முகத்தைத் துடைக்கிறேன்
எதிரே பித்தளைச் செம்புடன் என் மனைவி..
கைகளைப் பிசைந்தபடி நீதிபதியைப் பார்க்கிறேன்
அவர் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார்
"எனவே சந்தர்ப்பச் சாட்சியங்களை தீர விசாரித்த
வகையில் இவர் மீதுள்ள குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபணம் ஆன படியால்...."
அவர் தொடர்ந்து படிக்கிறார்
நான் சத்தமாய்க் கதறுகிறேன் " ஐயா நல்ல
விசாரிங்க ஐயா.. இது ஒரு தப்புத்தான்
ஏதோ ஒரு கோபத்தில் நடந்து போனது.
மத்தபடி ஊருக்கு ஆயிரம் நன்மை
செய்திருக்கிறேன் ஐயா......கொஞ்சம்
கருணை காட்டுங்க ஐயா....
என்னை இடைமறித்த நீதிபதி ' இது
நியாய சபையல்ல. உன்னைப்பற்றி
முழுவதும் தெரிந்து கொள்வதற்கு
நீ செய்த இந்தக் குற்றம் குறித்து மட்டுமே
இந்த மன்றம் கவனத்தில் கொள்ளும்....
எனவே நீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய
10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை
இந்த நீதிமனறம் உறுதி செய்கிறது...
இதற்கு மேல் என் செவியில் எதுவும்
விழவில்லை.சடாரென மயங்கிக் கீழே சரிகிறேன்.
நான்விழித்துப் பார்க்கையில் எம கிங்கரர்கள்
புடை சூழ வேறு ஒரு குற்றவாளிக் கூண்டில்
நிற்கிறேன்
எதிரே சிம்மாசனத்தில் ஆஜானுபாவனாய் அமர்ந்திருந்த
எம தர்மன் தீர்ப்பை வாசிக்கக் துவங்குகிறார்
கொஞ்சம் தைரியத்தை கூட்டியபடி "ஐயா
விசாரிக்கவே இல்லை. அதற்குள் தீர்ப்பைப்
படிக்கிறீர்களே ..." என்கிறேன்
அவர் கடகடவென சிரித்தபடி "சாட்சி, சந்தர்ப்பம்
மண்ணாங்கட்டி மட்டை எல்லாம் உங்கள்
நீதிமன்றங்களில் தான்.இங்கு நாங்கள் எவரையும்
விசாரிக்க வேண்டியதில்லை.உன் பிறப்பு முதல்
இறப்பு வரையிலான செயல்பாடுகள் எல்லாம்
எங்களுக்கு அத்துப்படி... எனவே...
அவர் படிக்கத் துவங்க எனக்குள் எண்ணைக்
கொப்பறை சவுக்கு,முள்படுக்கை எல்லாம்
நினைவுக்க் வர உடல் நடுங்கத் துவங்குகிறது
அவர் தொடர்கிறார் " இவர் கோபத்தில்
சில பாவங்களைச் செய்திருந்தாலும் கூட
அதையும் தாண்டிய வகையில் ஏழை எளிய
மக்களுக்கு தன்னாலான சேவையை தொடர்ந்து
செய்துள்ளபடியால்..இவரை இரண்டாம் நிலை
சொர்க்கத்துக்குப் பரிந்துரை செய்கிறேன்..
என்னால் நம்பவே முடியவில்லை.என்னைக்
கிள்ளிப்பார்த்துக் கொள்கிறேன்.
" ஐயா இப்படின்னு தெரிஞ்சா இன்னும் நிறைய
நனமை செய்திருப்பேனே. முதல் நிலைக்குப்
போயிருப்பேனே.. ஐயா ஐயா இன்னொரு
சந்த்ர்ப்பம் கொடுங்கையா.. ஐயா.. ஐயா..
நான் கதறுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை வலுக்கட்டாயமாக அங்குள்ள பல்லக்கில்
ஏற்றுகிறார்கள்..
நான் திமிரத் திமிர என் முகத்தில் சட்டென
ஏதோ ஈரப்பதம் தென்பட முகத்தைத் துடைக்கிறேன்
எதிரே பித்தளைச் செம்புடன் என் மனைவி..