Sunday, May 4, 2014

பிணம் கொண்ட மாலை

நாசிக்கு மணமும்
நாவுக்குச் சுவையும்
ஊசிமனைக் குறையும் இன்றி-உணவு
முழுமையாத் தந்த போதும்

உடலுக்கு ஊறு
விளைவிக்கு மாயின்
விஷம்போலத் தானே உணவு-அதை
விலக்குதல் தானே அறிவு

மயங்கிடும் வண்ணமும்
மதித்திடும் வண்ணமும்
உயர்தர உடையே ஆயினும்-அதனால்
மதிப்பது கூடும் போதினும்

சூழலுக்கு மாறாய்
இருந்திடு மாயின்
தீயது தானே உடையே-அதைத்
தவிர்த்திடல் தானே முறையே

அரண்மணை அளவும்
மயக்கிடும் அழகும்
நிறைந்தே இருந்த போதும்-வீடு
வியத்திட வைத்த போதும்

நிம்மதிக்கு ஊறாய்
இருந்திடு மாயின்
நிச்சயம் வீடும் காடே-அதில்
வசிப்பதும் துயரம் தானே

பாகுபோல் எதுகையும்
பால்போல் மோனையும்
ஏதுவாய் கலந்த போதும்-கவிக்கு
சுவையாக அமைந்த போதும்

பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை   தானே

32 comments:

Seeni said...

மிக அருமையாக சொல்லிடீங்க அய்யா...

S.Venkatachalapathy said...
This comment has been removed by the author.
S.Venkatachalapathy said...

மொத்த சமூகமும் இங்கே கௌரவப் பிரியர்கள். இதில் விலக்க வேண்டியவை,தவிர்க்க வேண்டியவை எல்லாம் விலக்கப்படுவதும் இல்லை, தவிர்க்கப்படுவதும் இல்லை. உணவில் பாட்டில் பானங்களும், நூடுல்ஸ்களும், உடையில் கோர்ட் சூட்டுகளும் இந்த வகையில் கௌரவத்திற்காக முன்னிறுத்தப்படுபவை.
பிணத்திற்கு மாலை அடையாளமான போதும் ஆளுயர மாலையை இருவர் மூங்கிலின் நடுவில் தூக்கிவந்து பிணத்திற்கு அணிவித்து கௌரவம் நிலை நாட்டியதை நான் பார்த்திருக்கிறேன். சமூதயம் உணர்வு பூர்வமானது எனவே நிலை மாறப்போவதில்லை.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

'பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே'
அருமையான உவமையும், ஆழ்ந்த உள்ளடக்கமும் கொண்ட அழகான கவிதை அய்யா.

Unknown said...

பயனற்ற கரு கொண்ட கவிதையும் உருவாக தெரிந்தாலும் பிணம்தான் !
த ம 2

Anonymous said...

''..விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே...'''
நல்ல உவமைகள் .
ரசனை, சிந்தனையுடைத்து.
நன்றி
பாராட்டுடன்.
வேதா. இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

ரசிக்க வைத்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சொல்லழகும் வல்ல பொருளழகும் சூழ்ந்தொளிரும்
நல்லழகுப் பாட்டின் நடை!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

ஸ்ரீராம். said...

மிக அருமை. நன்றாகச் சொன்னீர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

///பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்///
அருமை ஐயா
நன்று சொன்னீர்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 6

பால கணேஷ் said...

என் மனதிலும் இருக்கிற எண்ணம் இது. இத்தனை அழகாகச் சொல்லுதல் உங்களுக்கே உரித்தான திறன். பிரமாதம் ஐயா.

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக... உண்மையைச் சொன்னீர்கள் ஐயா...

இராஜராஜேஸ்வரி said...

பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே

கடுமையாய் சுட்ட போதிலும்
உண்மை உண்மைதானே..!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

கோமதி அரசு said...

அருமையாக சொன்னீர்கள் உண்மையை.

கார்த்திக் சரவணன் said...

போலி கவுரவம் வேண்டாம் வாழ்க்கையில், அருமை ஐயா...

”தளிர் சுரேஷ்” said...

பிணம் கொண்ட மாலை! அருமையான உவமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே

நச் என்று இருக்கிறது! அருமை!

Yarlpavanan said...

"உடலுக்கு ஊறு
விளைவிக்கு மாயின்
விஷம்போலத் தானே உணவு-அதை
விலக்குதல் தானே அறிவு" என்ற
வழிகாட்டலை வரவேற்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...

பிணம் கொண்ட மாலைக்கு புதுப்புது உவமைகள்! புதுமைதான்!
த.ம.13

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகச் சொன்னீர்கள் அன்பரே.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தம் சிறந்த கவிதையாக வடிவெடுத்துள்ளது. நன்றி.

அருணா செல்வம் said...

அருமையான உவமைகள்....

வணங்குகிறேன் இரமணி ஐயா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

அருமையான சொல் வீச்சுக்கள் கவிதையில் துள்ளி விளையாடுகிறது நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே
யாரும் இதுவரை சொல்லாத உவமை! உம் திறன் கண்டு வியக்கிறேன்! வாழிய! இரமணி!

வெங்கட் நாகராஜ் said...

பயனற்ற கருவிற்கு பல்லக்கு தூக்கின் விழலுக்கு இறைத்த நீர் போல.....

நல்ல உவமை.

G.M Balasubramaniam said...

நாடுபோய்க் கொண்டிருக்கும் விதம் எது தவிர்க்கப்படவேண்டுமோ அதுவே விரும்பிச் செய்யப்படுகிறது ஒரு வேளை விழலுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசிவதுபோல ////////

காரஞ்சன் சிந்தனைகள் said...

இரசித்தேன்! நன்றி ஐயா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பலவற்றை கவிதைக்குள் வைத்து தந்துவிட்டீர்கள்.
அருமை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த்.ம.17

KILLERGEE Devakottai said...

கவிதையில் கூட வாழ்க்கையை சொல்லமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.
Killergee
www.killergee.blogspot.com

Post a Comment