Thursday, February 16, 2017

மீட்பின்றி சபிக்கப்பட்ட" பொது ஜனங்களாய் "


ஊழல் பெருச்சாளிகளுக்கும்
உதவாக்கரை தலைவர்களுக்கு மிடையில்
ஈட்டி ஏந்திய கோழைகளாய்
வெறும் வாக்காளிக்கும் எந்திரங்களாய்

புரட்டு மதவாதிகளுக்கும்
முரட்டு பகுத்தறிவாளருக்கு மிடையில்
சுழலில் மாட்டிய படகுகளாய்
இரு தலைக் கொல்லி எறும்புகளாய்....

திமிங்கல  நிறுவனங்களுக்கும்
உள்நாட்டு  முதலைகளுக்கு மிடையில்
தீயில் உருகும் மெழுகாய்
ஏழ்மையில் கரையும் உயிரினங்களாய்.

சிகரத்தைப் பார்த்து ஏங்கியபடி
பாதாளம் பார்த்துப் பயந்தபடி
சரிவினில் தொங்கிடும் ஜந்துக்களாய்
பரிதவித்தே சாகும்  விலங்கினங்களாய்..

பல்லாண்டு அலைந்து திரிகிறோம்
நல்லதொரு மேய்ப்பனைத் தேடி
தீராத பாவப்பட்ட ஜென்மங்களாய்
மீட்பின்றி சபிக்கப்பட்ட" பொது ஜனங்களாய்  "

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... பொறுத்திருந்து... பொறுத்திருந்து... [?]

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா

இராய செல்லப்பா said...

இனிமேல் எல்லா விஷயங்களும் வேகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டு பெண்களுக்குப் பதில் இரண்டு ஆண்கள் இனி கட்சியை நடத்தப்போகிறார்கள். அவ்வளவே. பார்க்கலாம், எப்படியும் இடைத்தேர்தல் வராமலா போய்விடும்? தேசீய நீரோட்டத்தில் தமிழகம் கலந்திடும் நன்னாள் வராமலா போய்விடும்?
- இராய செல்லப்பா நியூஜெர்சி.

Unknown said...

Miracle would have happened in this untrustworthy situation to safeguard us.

G.M Balasubramaniam said...

நாளஈ தெரியலாம் தமிழ்நாட்டின் தலை விதி

Post a Comment