Thursday, February 8, 2018

தமிழகத்தின் பெருமைதன்னை தொய்யவிடாது ...

"குற்றம் நிரூபிக்கப்பட்டு
குற்றவாளி என தண்டிக்கப்பட்ட ஒருவரின்
பிறந்த நாளின் போது நீ விடுவிக்கப்படுவாய்"
எனத் தண்டிக்கப்பட்ட குற்றவாளியைப் பார்த்து
 ஒருவன் சில மாதங்களுக்கு முன்னாலோ
சில வருடங்களுக்கு முன்னாலோ
 சொல்லி இருந்தால் ......

சந்தேகமில்லாமல்
 நிச்சயம் அவனைப் பைத்தியம் என்றுதானே
முத்திரைக் குத்தியிருப்போம் /

அப்படிப் பட்ட தேசம்
ஒரு பைத்தியக்காரர்களின் தேசம்
என்றுதானே முடிவு செய்திருப்போம்/

அப்படி அப்போது
முடிவெடுக்கவில்லை என்றால்
 நம்மை அல்லவா எல்லோரும்
 பைத்தியம் என முத்திரைக் குத்தி இருப்பார்கள்/

சரி சரி இப்போதும்
அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை
 ஆதரிக்கவில்லை எனில்
நமக்கு பைத்தியங்கள் எனப்  பெயர் பெறவே
 நிச்சயம்சாத்தியம் /

எனவே  வை.கோ சார் வகையறாக்கள்
ஆதரிக்கும் முன்னே
நாம் இதனை ஆதரித்து
புரட்சியாளர்கள் எனப் பெயர் பெறுவோம் வாரீர்.

தமிழகத்தின் பெருமைதன்னை
தொய்யவிடாது தொடர்ந்துக் காப்போம் வாரீர்

No comments:

Post a Comment