Friday, February 16, 2018

எனவே இனியேனும்.......

பொதுக்கூட்டங்களில்
விளையாட்டு மைதானங்களில்
பார்வையாளர்களாய் இருக்கும் நாம்
நிச்சயம்
பாராட்டுக்குரியவர்களே

ஏனெனில்
பார்வையாளர்களாய் இருப்பதன் மூலம்
நம்மை மட்டுமல்ல
அந்த நிகழ்வையும்
பொதுக்கூட்டத்தையும்
விளையாட்டையும்
சுவாரஸ்யப்படுத்துவதோடு மட்டுமல்லாது
பங்கேற்றவர்களையும்
கௌரவப்படுத்தியும் போகிறோம்

ஆயினும்
நமக்கான
போராட்டங்களில்
இயக்கங்களில்
நாம் வெறும்பார்வையாளர்கள் எனில்
நிச்சயம்
பரிகாசத்துக்குரியவர்களே

ஏனெனில்
போராட்டக்களத்தில்
நாம் வெறும் பார்வையாளர்களாக இருப்பது
நம்மை மட்டுமல்ல
அந்தப் போராட்டத்தையும்
இயக்கத்தையும்
நீர்த்துப்போகச் செய்வதோடு
போராடுவோரையும்
அவமதித்தும் போகிறோம்

ஏனெனில்
முன்னதன் வெற்றி
அதை நடத்துபவரைச் சாரும்
பின்னதோ
நம்மையும் வந்து சேரும்

உழைப்பின்றி
வந்து சேரும் செல்வம் மட்டுமல்ல
பங்களிப்பின்றி
வந்து சேரும்
நன்மைகள் கூட 
நிச்சயம்
அதன் மதிப்பறியாதே செய்து போகும்

எனவே
இனியேனும்..........

3 comments:

ஸ்ரீராம். said...

பங்களிப்போம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முயற்சிப்போம்.

சிவகுமாரன் said...

இனியேனும்.... போராடுவோம்.
நன்றுரைத்தீர்.

Post a Comment