Saturday, April 10, 2021

இன்று மாலை..

 👆👆👆👆👆

யார் இந்தச் சாலையோரச் சிறுவர்கள்?


உலகம் முழுக்க 100 மில்லியனுக்கும் அதிகமான சாலையோரக் குழந்தைகள் இருப்பதாக யுனிசெஃப் எனும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund) அமைப்பு தெரிவிக்கிறது. இதில், இந்தியாவில் மட்டும் 18 மில்லியனுக்கும் அதிகமான சாலையோரக் குழந்தைகள் இருக்கின்றன என்கின்றனர். 5 முதல் 18 வயதுக்குட்பட்ட இந்தக் குழந்தைகள் எப்படி சாலைக்கு வருகிறார்கள்? சாலையோரங்களில் தஞ்சமடைந்திருக்கும் இவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள்? சாலையோரங்களில் வசிக்கும் இவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இவர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள்? இவர்களால் சமூகத்தில் என்ன பிரச்சனைகளெல்லாம் ஏற்படுகின்றன? இவர்களை மாற்றுவதற்கு அரசு என்ன செய்கிறது? இவர்களது மறுவாழ்வுக்கு அரசு இனி என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள விருப்பமா? அப்படியென்றால், இந்த நிகழ்வு உங்களுக்காகத்தான்...!


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில் பன்னாட்டுச் சாலையோரச் சிறுவர்கள் நாளை (ஏப்ரல் 12) முன்னிட்டு, இன்று (11-4-2021) மாலை 5.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி, சேவை தொடருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜா. ரேவதி அவர்கள் “சாலையோரச் சிறுவர்கள்: மக்கள் பார்வையும் அரசின் கடமையும்” எனும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.


இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், https://meet.google.com/hzr-ekri-gmf எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தி Google Meet எனும் செயலி வழியாக Ask Join அல்லது Join Meeting என்பதைச் சொடுக்கி, அதன் வழியாக  இணையலாம். Enter Code எனும் கேட்கும் நிலையில், அவ்விடத்தில் hzr-ekri-gmf என்று உள்ளீடு செய்து இணையலாம். 


Google Meet வழியாக இணைந்தவுடன், அங்கே தெரியும் தங்களது ஒலிவாங்கி (Mike) மற்றும் நிகழ்படம் (video) ஆகியவற்றுக்கான குறியீட்டை அணைத்து (Mute) வைத்து, சிறப்புப் பேச்சாளரின் உரையினை அனைவரும் தெளிவாகக் கேட்க உதவ வேண்டுகிறோம்.   


இந்நிகழ்வில் பங்கேற்றுப் பின்னூட்டம் பதிவு செய்யும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

2 comments:

KILLERGEE Devakottai said...

நல்ல செயல் தகவலுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல். நன்றி ரமணி ஜி.

Post a Comment