Friday, April 13, 2012

விசித்திரப் பூதங்கள்

கோடிக் கண்களும்
கோடிக் காதுகளும்
பல கோடிக் கைகளும் கொண்டு
மூளையும் காதுகளும் அற்ற
 எந்த அரசும் விசித்திர பூதங்களே

அதனால்தான்..
குடிமக்களின் தலையைக் காக்க
தலைக் கவச ஆணையைக்
கட்டாயப் படுத்தும் அவை களுக்கு
மது பானம் மூலம்
குடல் கருகுவது தெரிவதே இல்லை

 மிக்ஸியும் கிரைண்டரும்
இலவசமாய் தரும் அவை களுக்கு
அதனைப் பயன்படுத்த
மின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்
அதற்குப் புரிவதே இல்லை

மக்களின் பசித்துயர் தீர்க்க
விலையில்லா அரிசி தரும் அவை களுக்கு
எரி பொருள் விலையேற்றமோ
மளிகைப் பொருட்கள் விலை நிலவரமோ
அதற்கு பொருட்டாய் இல்லை

அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவை களுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூட இருக்கச் சாத்தியமே இல்லை

ஏனெனில்
எதிர்ப்பாளர்களை மிகச் சரியாக்க் கண்டறிய
கோடிக் கண்களும்
எதிர்ப்புகளை ஒரு நொடியில் நசுக்கி எறிய்
ஆயுதங்களுடன் கூடிய
கோடிக் கைகளும் கொண்ட
 இந்த விசித்திர பூதங்களுக்கு
மூளையும் காதுகளும் மட்டுமல்ல
இளகிய மனம் கூட
இருந்ததாக சரித்திரமே இல்லை

நாம் இப்படிப  பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த  பூதத்திற்காயினும்  சரி
இனி வர இருக்கிற  பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை


65 comments:

பால கணேஷ் said...

இந்த விசித்திர பூதங்களை சகித்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் அல்லவோ மக்கள் இருக்கிறார்கள்...? நொந்து கொள்வதைத் தவிர வேறு என்னதான் வழி..? (த.ம.2)

krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

http://tamil.dailylib.com

To get vote button
http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

முத்தரசு said...

இந்த பூதத்துக்கு அது தேவல அதுக்கு இது தேவல ஆக மொத்தத்தில் பூதம் பூதம் தான்

துரைடேனியல் said...

Arumai. Arumai. Poothangal kitta maattikitta appaviagal tham Naam.

இராஜராஜேஸ்வரி said...

அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவை களுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூட இருக்கச் சாத்தியமே இல்லை

மக்களின் பொறுமையும் மறதியுமே அவர்களின் மூலதனமாயிற்றே!

மகேந்திரன் said...

விசித்திர பூதங்கள் தான் நண்பரே..
ஐம்புலன்கள் அற்ற
விசித்திர பூதங்கள்......

மனோ சாமிநாதன் said...

நரி இடது புறம் வந்தாலென்ன, வலது புறம் வந்தாலென்ன, மேலே விழுந்து தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரி என்ற பயம் மக்களுக்கு! இளைய தலைமுறை குமுறி எழுந்தாலொழிய இந்த பூதங்களுக்கு மாற்று இல்லை! கவிதை அருமை!

raji said...

மூளையற்ற காதற்ற பூதங்கள் என்று தெரிந்தும் மூளை உள்ளோர்கள், கண்களிருந்தும் குருடர்களாகவும் காதுகளிருந்தும் செவிடர்களாகவும் வாழும் நிலை இருக்கும் வரை பூதங்களுக்கு கொண்டாட்டத்திற்கு கவலை ஏன்?

ஸாதிகா said...

சாட்டை எடுத்து சுழற்றி இருக்கின்றீர்கள்!

Seeni said...

naattu nadappai!

puttu puttu vachideenga!

enna seyya!

thirunthaatha jenmangal-
irunthenna laapam!

varunthaatha ullangal -
vaazhnthenna laapam!

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

இந்த விசித்திர பூதங்களை சகித்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் அல்லவோ மக்கள் இருக்கிறார்கள்...? //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

krishy //

அருமையான பதிவு //

தங்கள் அழைப்பிற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி™ //

இந்த பூதத்துக்கு அது தேவல அதுக்கு இது தேவல ஆக மொத்தத்தில் பூதம் பூதம் தான் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //
.
Arumai. Arumai. Poothangal kitta maattikitta appaviagal tham Naam.//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //


மக்களின் பொறுமையும் மறதியுமே அவர்களின் மூலதனமாயிற்றே!//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

விசித்திர பூதங்கள் தான் நண்பரே..
ஐம்புலன்கள் அற்ற
விசித்திர பூதங்கள்......//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

இளைய தலைமுறை குமுறி எழுந்தாலொழிய இந்த பூதங்களுக்கு மாற்று இல்லை! கவிதை அருமை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji //

மூளையற்ற காதற்ற பூதங்கள் என்று தெரிந்தும் மூளை உள்ளோர்கள், கண்களிருந்தும் குருடர்களாகவும் காதுகளிருந்தும் செவிடர்களாகவும் வாழும் நிலை இருக்கும் வரை பூதங்களுக்கு கொண்டாட்டத்திற்கு கவலை ஏன்? //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

சாட்டை எடுத்து சுழற்றி இருக்கின்றீர்கள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

naattu nadappai!
puttu puttu vachideenga!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாம் இப்படிப பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த பூதத்திற்காயினும் சரி
இனி வர இருக்கிற பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை//

மிகவும் நியாயமான பேச்சு தான்.

Avargal Unmaigal said...

///அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவை களுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூட இருக்கச் சாத்தியமே இல்லை///

மிக சரியாக சொன்னிர்கள். நம் தலைவர்கள் உணர்வு இல்லாத முண்டங்கள்....

குறையொன்றுமில்லை. said...

நாம் இப்படிப பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த பூதத்திற்காயினும் சரி
இனி வர இருக்கிற பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை

நச்சென்றவரிகள்.

ADHI VENKAT said...

அருமையான வரிகள். த.ம.5

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! விசித்திரமான முரண்பாடுகளைச் செயல்பாடுகளாகக் கொண்ட, விசித்திர பூதங்களைப் பற்றி விசித்திரமான கவிதை!

ஹேமா said...

பூதங்கள்ன்னு சொல்லித் திட்டிட்டீங்க.பூதங்கள் இன்னும் வரும் !

அருணா செல்வம் said...

ரமணி ஐயா...
இன்னும் நிறைய வாரிசு புதங்களும் பெரிய பெரிய குட்டி புதங்களும் வந்து கொண்டே தானே இருக்கும்!!

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

மிகவும் நியாயமான பேச்சு தான்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal s//

மிக சரியாக சொன்னிர்கள். நம் தலைவர்கள் உணர்வு இல்லாத முண்டங்கள்....//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //


நச்சென்றவரிகள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

அருமையான வரிகள். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

விசித்திர பூதங்களைப் பற்றி விசித்திரமான கவிதை!/

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

பூதங்கள்ன்னு சொல்லித் திட்டிட்டீங்க.பூதங்கள் இன்னும் வரும் !//

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //
..
இன்னும் நிறைய வாரிசு புதங்களும் பெரிய பெரிய குட்டி புதங்களும் வந்து கொண்டே தானே இருக்கும்!//

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

இருக்கிற பூதங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தலை மேல் உட்கார வைத்துக்கொண்டு இருக்கிறோம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை!

புதிது புதிதாய் வரும் பூதங்களும் பழைய பூதங்களை விட மோசமாகவே பணம் தின்னி பூதங்களாக இருக்கின்றன...

நல்ல கவிதை! பாராட்டுகள்!

Unknown said...

சூப்பரா சொல்லிருக்கீங்க

அதுலையும் அந்த மின்சார வரிகள்,விலையில்லா அரிசி வரிகள் சூப்பர்

இன்றைய பதிவு
அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க
மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்கலாம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல பதிவு. பூதங்கள் அடையாளம் காணப்படவேண்டும்.

சசிகலா said...

இந்த விசித்திர பூதங்களுக்கு
மூளையும் காதுகளும் மட்டுமல்ல
இளகிய மனம் கூட
இருந்ததாக சரித்திரமே இல்லை // உண்மைதான் ஐயா அப்படியே வாழப்பழகிவிட்டோம் .

Anonymous said...

''..பல கோடிக் கைகளும் கொண்டு
மூளையும் காதுகளும் அற்ற
எந்த அரசும் விசித்திர பூதங்களே...
உலகம் முழுதும் இந்தப் பூதங்கள் தானே! கவியால் செமத்தி அடி. உங்களை ஒரு குட்டி சுகி சிவம் என்று சொல்லலாமோ என்று யோசிக்கிறேன். எனக்குள் இது பல நாள் சிந்தனை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

கவியால் செமத்தி அடி. உங்களை ஒரு குட்டி சுகி சிவம் என்று சொல்லலாமோ என்று யோசிக்கிறேன். எனக்குள் இது பல நாள் சிந்தனை. வாழ்த்துகள்.//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //

இந்த விசித்திர பூதங்களுக்கு
மூளையும் காதுகளும் மட்டுமல்ல
இளகிய மனம் கூட
இருந்ததாக சரித்திரமே இல்லை // உண்மைதான் ஐயா அப்படியே வாழப்பழகிவிட்டோம் //

./தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

நல்ல பதிவு. பூதங்கள் அடையாளம் காணப்படவேண்டும்.//

./தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Vairai Sathish //

சூப்பரா சொல்லிருக்கீங்க
அதுலையும் அந்த மின்சார வரிகள்,விலையில்லா அரிசி வரிகள் சூப்பர் //

./தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

புதிது புதிதாய் வரும் பூதங்களும் பழைய பூதங்களை விட மோசமாகவே பணம் தின்னி பூதங்களாக இருக்கின்றன...
நல்ல கவிதை! பாராட்டுகள்!//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

விசித்திரப் பூதங்களின் விந்தைமிகு விபரீதச் செயல்களை, விதியை நொந்துகிடக்கும் பாமரருக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அடையாளங்காட்டிப் போகும் அருமையான பதிவு. மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.

Ganpat said...

நூறு சதவிகிதம் உண்மை.நன்றி.
சிறு மாற்றங்களை அனுமதிப்பீரா?
உங்கள் தலைப்பு:
விசித்திரப் பூதங்கள்
என் தலைப்பு:
இரண்டு விசித்திரப் பூதங்கள்
உங்கள் வரிகள்:
''நாம் இப்படிப பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த பூதத்திற்காயினும் சரி
இனி வர இருக்கிற பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை//
என் சேர்க்கை வரிகள்:
ஒரேயடியாக இவைகளை அழிக்க நமக்கு மனதும் வருவதில்லை..என்ன இருந்தாலும் ஒருவர் பாட்டனார்,இன்னொருவர் தாயார் ஆயிற்றே!

G.M Balasubramaniam said...

இருக்கும் நிலையைச் சொல்லும் பாங்கிற்கு பாராட்டுக்கள்.

Unknown said...

மொத்தத்தில் மக்கள் உணர்ச்சியற்ற ஜடமாகிவிட்டனர் என்பதே நிஜம்! எதையும் சிறிதேசிறிய எதிர்ப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்!

நல்ல கருத்துமிக்கப் பதிவு!

அப்பாதுரை said...

விரக்தி சுடுகிறது.
என்றமெதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் என்ற வரியின் சிரஞ்சீவித்தனம் துளைக்கிறது.

அப்பாதுரை said...

என்றெமதின்னல்கள்...

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //...

விதியை நொந்துகிடக்கும் பாமரருக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அடையாளங்காட்டிப் போகும் அருமையான பதிவு. மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ganpat //

என் சேர்க்கை வரிகள்:
ஒரேயடியாக இவைகளை அழிக்க நமக்கு மனதும் வருவதில்லை..என்ன இருந்தாலும் ஒருவர் பாட்டனார்,இன்னொருவர் தாயார் ஆயிற்றே//

!சேர்க்கை வரிகள் மிக் மிக அருமை

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //
.
இருக்கும் நிலையைச் சொல்லும் பாங்கிற்கு பாராட்டுக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

நல்ல கருத்துமிக்கப் பதிவு!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //..
.
விரக்தி சுடுகிறது.
என்றமெதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் என்ற வரியின் சிரஞ்சீவித்தனம் துளைக்கிறது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

vimalanperali said...

இருக்கிற எல்லாவற்றையும் இல்லாதது போல காட்டவும்,அதை மெய்ப்பிக்க பல தந்ரோபாயங்களை செய்யவுமாய் இருக்கிற இவைகள் எதைசாதிக்கப்போகின்றன என்பதே இந்த நேரத்தின் கேள்வியாய் உள்ளது.அந்த கேள்வியை தூண்டிய பதிவிற்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

வாக்கு வங்கி அரசியல்!

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி //

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

வாக்கு வங்கி அரசியல்! //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

S.Venkatachalapathy said...

பூதங்களைப்பற்றி சொல்லிவிட்டீர்கள், விட்டேத்தி மக்களைப் பற்றியும் சொல்லிவிட்டீர்கள். இந்த பூதங்களின் செயல்களில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு கோடிகளை விழுங்கும் குட்டி பூதங்களைப் பற்றியும் சொன்னால் இன்னும் நிறைவாயிருக்குமோ?

சிவகுமாரன் said...

அருமை.
ஆனால் அந்த பூதங்களை, கார்ட்டூன் பூதங்களாய் சகிக்கத் (ரசிக்க?!) தொடங்கி விட்டார்களே மக்கள். என்ன செய்வது?

Unknown said...

//அதனால்தான்..
குடிமக்களின் தலையைக் காக்க
தலைக் கவச ஆணையைக்
கட்டாயப் படுத்தும் அவை களுக்கு
மது பானம் மூலம்
குடல் கருகுவது தெரிவதே இல்லை

மிக்ஸியும் கிரைண்டரும்
இலவசமாய் தரும் அவை களுக்கு
அதனைப் பயன்படுத்த
மின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்
அதற்குப் புரிவதே இல்லை// அருமை.. விளாசல்..

Yaathoramani.blogspot.com said...

யோவ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

VENKAT //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment