Tuesday, October 8, 2013

சந்திப்பு குறித்து ஒரு சிறு அறிவிப்பு

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் துவங்கப்படவும்
அது தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்பட
காரணமாகவும் இருக்கிற மரியாதைக்குரிய
புலவர் இராமானுஜம் ஐயா அவர்கள்
சொந்த பணியின் நிமித்தம் நாளை
குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லுகிற
வழியில் இன்று மதுரையில்  இரயில்வே விருந்தினர்
விடுதியில் தங்கி நாளைக் காலையில்
தன் பயணத்தைத் தொடர்வார் என அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறோம்

சந்தித்து அளவளாவி மகிழ விருப்பமுடையோர்
மாலை ஏழு மணிக்கு மேல் சந்திக்க இயலும்
என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்

மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களும்
நானும் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும்
மதுரைப் பதிவர்கள் சிலரும் புலவர் ஐயா அவர்களை
 மாலையில் சந்திக்க இருக்கிறோம்


16 comments:

Avargal Unmaigal said...

மதுரைக்கு வருகை தரும் புலவர் அவர்களுக்கு மதுரைக்காரன் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும். சந்திப்பு இனிதாக இருக்கவும் வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் ...

திண்டுக்கல் தனபாலன் said...

சந்திக்க ஆவலாய் உள்ளேன்... தகவலுக்கு நன்றி ஐயா...

ராஜி said...

மினி சந்திப்பா நடத்துங்க! நடத்துங்க! இதை பொறாமையோடுதான் சொல்றேன்ப்பா!

ஸ்ரீராம். said...

எங்கள் மதுரை அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

இளமதி said...

அருமை! சந்திப்புக்கள் நிறைவாக அமைய வாழ்த்துக்கள் ஐயா!

கே. பி. ஜனா... said...

அருமையான சந்திப்பு! வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

சந்திப்பு இனிக்க வாழ்த்துக்கள்!

Anonymous said...

வணக்கம்
ஐயா

நல்ல தகவல் நானும் சந்திக்க ஆவலாக உள்ளேன் புலவர்ஐயா சுற்றிப்பார்க்க மலேசியா வந்தால் என்னால் சந்திக்க முடியும்........ உங்கள் சந்திப்பு இனிதாக அமையட்டும்......ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகேந்திரன் said...

நிகழ்வாகும் சந்திப்பு
நெகிழ்வுடன்
மகிழ்வோடு நடக்கட்டும்...
வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

சந்திப்பு
இனிக்க
சிறக்க
வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பதிவுலகின் அற்புதம் இதுதான்.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நிருபிக்கப் படுகிறது. சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தா.ம. 8

Unknown said...

எனக்கு நேரம் கிடைக்கவில்லை ,உங்களின் சந்திப்பு இனிதாய் நடந்து இருக்குமென நம்புகிறேன் !

கீதமஞ்சரி said...

இனிய வாழ்த்துக்கள். அடிக்கடி நிகழும் பதிவர் சந்திப்புகள் பதிவர்களுக்குள் ஒரு நெருங்கிய பந்தத்தை உண்டாக்குவது மகிழ்ச்சி. நன்றே தொடரட்டும்.

Ranjani Narayanan said...

சந்திப்பை பற்றி விவரமாக எழுதுங்கள் ரமணி சார்!

Post a Comment