Wednesday, October 22, 2014

Deepavali kondattam

தீபாவளிக் கொண்டாட்டம்

தான் தன் சுகம் என வாழ்வதை விட
பிறர் சுகம்படக் காரணமாக இருந்து
அதைக் கண்டு மகிழ்தல் மிகச் சிறந்தது என்பதை
கொள்கையாகக் கொண்ட பல நண்பர்கள்
நான் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற
டிலைட் அரிமா சங்கத்தில்  அங்கத்தினர்களாக
உள்ளனர்

அவர்களது உதவியுடன் மதுரை தனக்கன்குளத்தில்
உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுடன்
தீபாவளி விருந்து உண்டு மகிழ்ந்தோம்
விருந்து நட்சித்திர ஹோட்டல் விருந்தினைவிட
மிகச் சுவையாக  இருந்தது (19'10.2014 )

அதேபோல் மதுரை மேலக்குயில்குடியில் உள்ள
மாணவ  மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும்
பட்டாசுகள் வழங்கியும் மகிழ்வினைப் 
பகிர்ந்து கொண்டோம்.உற்றார் உறவினருடன்
வீட்டில் செய்து உண்ட இனிப்பினைவிட
இவர்களுடன் உண்டது மிகச் சிறப்பாக இருந்தது
(21.10.2014 )

இப்படிச் செய்ததை பகிர்வது நிச்சயம் தம்பட்டம்
அடித்துக் கொள்வதற்காக இல்லை.அனைவரும்
கொடுப்பதில் உள்ள சுகத்தை  கொடுத்து உணர்ந்து 
அவர்களும் பெரும்மகிழ்வுக் கொள்ளவேண்டும்
என்பதற்காகவே

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

16 comments:

இராஜராஜேஸ்வரி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

சிறப்பான தொண்டு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
த.ம.2

Angel said...

மனதுக்கு சந்தோஷம் தரும் மிக அருமையான செயல் .உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா .

UmayalGayathri said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Yarlpavanan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

இளமதி said...

வணக்கம் ஐயா!

மிக அருமையான பணி! இதைவிட மகிழ்வேது...!
சிறப்பு ஐயா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

இதனினும் சீரிய பணி ஒன்று உளதோ
அருமை ஐயா
தீபாவளி வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 4

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

சிறப்பான பணியை செய்வதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

அருமையான சேவை.
உங்களுக்கும் டிலைட் அரிமா சங்கத்தில் உள்ள அங்கத்தினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

Unknown said...

இது தம்பட்டம் அல்ல! எரியும் விளக்கிற்குத் தூண்டு கோலாகும்! தொடர்க!

மனோ சாமிநாதன் said...

இள்ம் உள்லங்களுக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்து தீபாவளியை மிகவும் சிறப்பாகவே கொண்டாடி விட்டீர்கள்!! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

அம்பாளடியாள் said...

வணக்கம் !

மிகச் சிறந்த பணி !வாழ்த்துக்கள் ஐயா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

Thulasidharan V Thillaiakathu said...

மிக உயர்ந்த சேவை நண்பரே! தொடரவும்! பல உள்ளங்கள் இனிக்க!

அரிமாசங்கத்தினர் அனைவருக்கும் எங்கள் உள்மார்ந்த வாழ்த்துக்கள்!

தங்கள் குடுமப்த்திற்கும் தங்களுக்கும், அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Anonymous said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Vetha.Langathilakam.

வெங்கட் நாகராஜ் said...

மனதில் மகிழ்ச்சி... தொடரட்டும் உங்கள் சங்கத்தின் இச்செயல்பாடுகள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Post a Comment