Monday, July 27, 2015

எதுகை மோனைத் தேடி நித்தம்

எதுகை மோனைத் தேடி நித்தம்
மொகட்டைப் பாக்கும் மாமா-தாடித்
தடவி நோகும் மாமா

ஒதுங்கி ஓடும் வார்த்தைத் தேடி
அலஞ்சு திரியும் மாமா-மனசு
கலங்கித் திரியும் மாமா

அச்சு ஒண்ணு செஞ்சு வச்சு
வெல்லம் செய்தல் போல-அச்சு
வெல்லம் செய்தல் போல

குட்ட குழியை கணக்கா வைச்சு
மாவு இடுதல் போல-இட்லி
சுளுவா சுடுதல் போல

சந்தம் ஒண்ணு நெஞ்சில் வைச்சு
எழுதிப் பாரு மாமா-நீயும்
பழகிப் பாரு மாமா

பெஞ்ச மழையில் காட்டு ஆறு
ஓடி வருதல் போல-அடப்பைத்
தாவி வருதல் போல

கவிதை நூறு உனக்குள் ஊறித்
திமிறி வருமே மாமா-தானா
பெருகி வருமே மாமா

எளிதா கவிதை வசத்தில் வந்தா
என்னப் பாடு மாமா-அதுக்கே
இந்தக் கவிதை மாமா  

10 comments:

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கே, ஆமா! சொல்றேன் நான் ஶ்ரீராமா!!!

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கே, ஆமா! சொல்றேன் நான் ஶ்ரீராமா!!!

KILLERGEE Devakottai said...

Rasithen

KILLERGEE Devakottai said...

Rasithen

Thulasidharan V Thillaiakathu said...

அட! ஆமா! மாமா உனக்கு நான் எழுதிய கவிதை நல்லா இருக்குதாமா! எல்லாரும் சொல்றாங்க மாமா!!!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

நல்லாத்தான் இருக்கு... ஐயா.. இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஐயா...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நாட்டுப்புறபாணியில் அருமையான கவிதை

”தளிர் சுரேஷ்” said...

கவிதை வசப்படுதலின் இரகசியம் அறிந்தேன்! நன்றி!

Yarlpavanan said...

பாப்புனைய விரும்பும் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டல் பதிவு.

Post a Comment