Monday, August 17, 2015

நாம் வெற்றி கொள்வோம் இனி வரும் தேர்தலிலேனும்

பதவிக்கான
தகுதி  இருந்தும்
பதவி  அடையாதவர்கள்
பிரச்சனைக் குரியவர்கள் இல்லை

அவர்கள்
சட்டெனச் சோர்ந்துபோய்
இலக்குவிட்டு  விலகிவிடுதலே
இங்குள்ள பிரச்சனை

பதவிக்குரிய
தகுதி இன்றி
பதவியடந்தவர்களாலும்
நிச்சயம் பிரச்சனை இல்லை

அவர்கள்
பதவியடைந்தும் தம்மை
தகுதிபடுத்திக் கொள்ளாததே
இங்குள்ள பெரும் பிரச்சனை

தகுதிக்குரியவர்கள்
பதவிபெறாததும்
பதவிபெற்றவர்கள்
தகுதியற்று இருப்பதும் கூட
இங்கு பிரச்சனையில்லை

பதவியின் பலமும்
தகுதி குறித்த   அறிவுமற்றவர்களே
பதவிக்குரியவர்களைத் 
தேர்வுசெய்பவர்களாக இருப்பதே
இங்குள்ள  பெரும் பிரச்சனை

இலைக்கும் கிளைக்கும்
நீரூற்றலை விடுத்து
இனியேனும்
வேருக்கு  நீரூற்றுவோம்

தலைமையையும் கட்சியையும்
விமர்சித்தலைவிடுத்து
இனியேனும்
வாக்காளர்களுக்கு விழிப்பூட்டுவோம்

தும்பைவிட்டு வாலைப்பிடித்து 
இதுவரை பட்டதெல்லாம்
போதும்  போதும்

கொம்புபிடித்து காளைகளை அடக்கி
நாம் வெற்றி கொள்வோம்
இனி வரும் தேர்தலிலேனும்
  

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேரை நிர்ணயிப்பதிலும் பிரச்சனை தான்...

KILLERGEE Devakottai said...

கொம்புபிடித்து காளைகளை அடக்கி
நாம் வெற்றி கொள்வோம்
இனி வரும் தேர்தலிலேனும்

அருமை கவிஞரே நல்லதொரு வரிகள்

அன்பே சிவம் said...

ஆம் நாங்கள் ஆளும் கட்சியென்று
ஆளாளுக்கு ஆடுகின்ற போது
ஆளுங்கய்யா என்று ஆடும் கூட்டத்தை
தேர்ந்தெடுக்கும் சாமான்ய மனிதர்தானே
என்றென்றும் உண்மையான
ஆளும் கட்சி.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கருத்து! மாற்றம் வாக்காளர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்! அருமை!

G.M Balasubramaniam said...

பிரச்சனையின் வேர் தெரிந்து விட்டது.வாழ்த்துக்கள்.

balu said...

seeriya sindhanai. arasuppaniyil irunthathal nilaimai purindhathal.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நம்பிக்கை வைப்போம்.

Thulasidharan V Thillaiakathu said...

மக்கள் நல்லபடி சிந்தித்தால் மாற்றங்கள் நல்லதாய் அமையும்....நம்புவோம்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனை.

Post a Comment