Thursday, May 28, 2020

அதீத பலம் எப்போதுமே ஜெயிப்பதில்லை

அதீத உடல் பலமும்
அனைத்தையும் அழிக்கும்
ஆதிக்கவெறியும் கொண்டு திரியும்
சிங்க இனமும் புலி இனமும்
தொடர்ந்து சிறுத்துக் கொண்டே போக

காற்றிடைப்பட்ட கற்பூரமாய்
தானே கரைந்து போக

காட்சிபொருளாக வேணும்
காத்துவைக்க வேணும்  என்கிற
அவல நிலைக்குப் போக

பயமொன்றே
பதுங்குதல் ஒன்றே அறிந்த
பலமற்ற
பாவப்பட்ட
அணில்களும் மான்களும்
பல்கிப் பெருகுவது கூட

வன்முறை குறித்த
அதீத பலம் குறித்த
ஆணவம் குறித்த
ஏதோ ஒரு செய்தியை
சொல்லித்தான் போகிறது

எளியவர்களுக்கும் நல்லவர்களுக்கும் புதியநம்பிக்கையைக்
கொடுத்துத்தான் போகிறது


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அது என்னவோ உண்மை தான்...

மாதேவி said...

சரியாக சொன்னீர்கள்.

ஸ்ரீராம். said...

இப்போதைய காலத்துக்கு இந்த உண்மை பொருந்துகிறது.

G.M Balasubramaniam said...

மோடி ஜெயிக்க வில்லை என்கிறீர்களா

Post a Comment