Sunday, July 31, 2016

கலைகள் அனைத்துமே......

கலைகள்  அனைத்துமே
மகத்தானவை
அற்புதமானவை
அழகானவை மட்டுமல்ல
விளையாட்டுத்  தனமானதும் கூட

அதானாலேயே
தன்னைப் பயன்படுத்தி
தன்னை  உயர்த்திக் கொள்ள
முயல்வோனுக்கு
முக்காடிட்ட
முகம்காட்டும் அதுவே

தன்மை மறந்து
அதனில் கரைவோனுக்கு
முழுமுகம் காட்டி யும்
முறுவலித்தும்
வாழ்த்திப் போகிறது

ஆம்
கலைகள் அனைத்தும்
மகத்தானவை
அற்புதமானவை
அழகானவை மட்டுமல்ல
விளையாட்டுத்  தனமானதும்  கூட

கலைகள் என்னும்
பொதுப் பெயர்
கவிதைக்கும் பொருந்தும்  என்பது
சொல்ல வேண்டியதா  என்ன ?

2 comments:

G.M Balasubramaniam said...

கவித எழுதுவது கலை ஆகுமா கலைகள்மகத்தானவை அற்புதமானவை விளையாட்டுத்தனமானதும் ஆகும் உண்மை.

G.M Balasubramaniam said...

கவிதை கவித என்று வந்து விட்டது மன்னிக்கவும்

Post a Comment