Thursday, March 12, 2020

புதிதாய்ப் பிறந்தேன் இன்றும்...

தவறாது நித்தமும்
தீமைக்கு எதிரான
அணியினில் ஒரு துளியாய்
போராட்டத்தில் ஒரு குரலாய்
இலக்கியத்தில் ஒரு வரியாய்
ஏதும் முடியவில்லையெனில்
குறைந்த பட்சம்
அதற்கு எதிராக
ஒரு முகச்சுழிப்பை
பதிவு செய்தபடி
 நாம் தினமும்  கடந்து போவதால்

தவறாது நித்தமும்
சரியானவைகளுக்கு ஆதரவான
அணியினில் ஒரு துரும்பாய்
இயக்கத்தில் சிறு அலையாய்
பதிவுகளில் ஒரு எழுத்தாய்
குறைந்த பட்சம்
அதற்கு ஆதரவாய்
ஒரு சிறு புன்னகையை
பதிவு செய்தபடி
நாம் தினமும்  கடந்து போவதால்

ஒவ்வொரு நாளும்
திரு நாளைப் போல
மகிழ்வூட்டிப் போவதோடு

ஒவ்வொரு நொடியையும்
அர்த்தப்படுத்தியும்
அழகுப்படுத்தியும் போவதோடு

மிக நேர்த்தியாய்....
பாரதியின் கூற்றினைப் போல

ஒவ்வொரு நாளும்
புதிதாய் பிறப்பெடுக்கும்
வல்லமையும் தந்து போகிறது

உங்களைப் போலவே
எனக்கும்                                                                 என்றும் போலவே                                                        இன்றும்..

5 comments:

ஸ்ரீராம். said...

நல்ல சிந்தனை.

Jayakumar Chandrasekaran said...

பிறந்த நாள்? Jayakumar

சிகரம் பாரதி said...

தீமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.

தங்கள் பதிவில் Page Break தெரிவை பயன்படுத்தவும்.

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது புதிதாய்ப் பிறந்தேன் இன்றும்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்தனை அருமை...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை. தொடரட்டும்.

Post a Comment