Thursday, October 21, 2021

நவீன உரைகல்

தலைப்பின்றி

எழுதியவர் பெயருமின்றி

ஒரு கவிதையைக் கொடுத்து

வாசிக்கச் சொன்னார்

எம் பத்திரிக்கை ஆசிரியர்


படித்துப் பார்த்தேன்

எதுவும் புரியவில்லை


"எதுவும் புரிந்ததா ?" என்றார்


"இல்லை " என்றேன்


பின் தலைப்பை மட்டும் சொல்லி

"இப்போது புரிகிறதா ? " என்றார்.


"புரிவது போலவும் இருக்கிறது

புரியாதது போலவும் குழப்புகிறது "

என்றேன்


பின் மெல்லச் சிரித்தபடி

எழுதியவர் பெயரைக் காட்டி

"இப்போதாவது புரிகிறதா ? " என்றார்.


அவர் பிற(ர)பலக் கவிஞராய் இருந்தார்


மீண்டும் "இப்போது..."என்றார் ஆசிரியர்


நானும் இப்போது மெல்லச் சிரித்தபடி

"புரிவதோடு மட்டும் இல்லை

மிகச் சிறந்த கவிதையாகவும்..."என்றேன்

3 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆகா!

திண்டுக்கல் தனபாலன் said...

படைப்பாளியைப் பொறுத்து (பார்த்து) பாராட்டும் பேதைமை...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல சோதனை.

Post a Comment