Friday, August 9, 2013

வெத்து வேட்டு

கவர்ந்திழுக்கும்படியான
கவர்ச்சியான தலைப்பு
தொடர்ந்து படிக்கும்படியாக
சுவையாக முதல் வரிகள்
எரிச்சலூட்டாது ரசிக்கும்படியாக
இதமான தொடர்வரிகள்
ஆணித்தரமாய் மறுக்கும்படியாகவோ
முழுமனதாய் ஏற்கும்படியாகவோ
அருமையான  முடிவுரை

இவைகள் ஏதும்
கண்ணுக்கெட்டியவரையில் காணாததால்
நான் இன்றும் படைப்பாளி ஆகி
படிப்பவர்களை பரிதவிக்கவிடாது
படிப்பாளி ஆகிப்போகிறேன்

புத்தகக்காட்டிற்குள் நிச்சயம்
வீரிய விதைகள் சிதறிக் கிடக்கும் எனும்
வழக்கமான நம்பிக்கையிலும்...

சேகரிப்பின்றி கொடுக்க முயலுதல்
செல்வந்தனை வறியவனாக்கிவிடும் எனும்
மாற்ற முடியாத விதிப்படியும்...

52 comments:

Anonymous said...

கொட்டிக் கிடக்கின்றன முத்துக்கள் !
பல சமயம் படிப்பாளியும் சில சமயம்
படைப்பாளியும் நன்று .

வெங்கட் நாகராஜ் said...

நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி.....?

இன்னும் பல கவிதைகள் தந்திட வேண்டி.....


த.ம. 2

Seeni said...

ethaarththamaana ...

rasanaiyaana varikal..

இளமதி said...

//சேகரிப்பின்றி கொடுக்க முயலுதல்
செல்வந்தனை வறியவனாக்கிவிடும் எனும்
மாற்ற முடியாத விதிப்படியும்...//

ஐயா... உணரச்சொன்ன வார்த்தைகள்!
முற்றிலும் உண்மை!

வாழ்த்துக்கள்!

த ம.3

இராஜராஜேஸ்வரி said...

சேகரிப்பின்றி கொடுக்க முயலுதல்
செல்வந்தனை வறியவனாக்கிவிடும் எனும்
மாற்ற முடியாத விதிப்படியும்...
குந்தித்தன்றால் குன்றும் மாளுமே..!

வை.கோபாலகிருஷ்ணன் said...


கவர்ந்திழுக்கும்படியான
கவர்ச்சியான தலைப்பு

தொடர்ந்து படிக்கும்படியாக
சுவையாக முதல் வரிகள்

எரிச்சலூட்டாது ரசிக்கும்படியாக
இதமான தொடர்வரிகள்

முழுமனதாய் ஏற்கும்படியான
அருமையான முடிவுரை

இவைகளை நினைவில் நிறுத்தி ’யாதோ’ வாக எழுதும் ரமணி சார் போன்றவர்கள் மட்டுமே என்றுமே ‘வெத்து வேட்டு’ அல்ல.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Anonymous said...

புத்தகக்காட்டிற்குள் வீரிய விதைகள் சிதறிக் கிடக்கும் - நம்பிக்கை¨.
உண்மை தான் பலரின், பிரபலங்களின் பிந்திய ஆக்கங்கள் - முந்திய நூல்களில் வந்த வரிகளென இப்போது தானே புரிகிறது. முன்பு இப்படி எழுதுகிறார்களே என்று வாய் பிழ(ள)ந்தது. நினைவு வருகிறது.
திடீரென சந்தேகம் வந்தது இதில் எது சரியென...அது தான் அடைப்புள் பிழ(ள)ந்தது . 25 வருட டெனிஸ் உறவின் பரிசு.
நல்ல சிந்தனை.
வேதா. இலங்காதிலகம்.

கீதமஞ்சரி said...

சும்மா ஒரு மாறுதலுக்கு என்று எழுதினாலும் தங்களைப்போன்ற அற்புதமான படைப்பாளியிடமிருந்து மாறுபட்ட ஒரு மனநிலை கொண்ட ஒரு படிப்பாளியின் தரப்பிலிருந்து எழுதப்பட்டதாகவே கொள்ளமுடிகிறது என்னால். ஒவ்வொரு படைப்பாளியும் கொண்டிருக்கவேண்டிய சிறப்பம்சங்களை எடுத்தியம்பிய வரிகளில் அசந்துபோனேன். பாராட்டுகள் ரமணி சார்.

ezhil said...

நிறைய படிப்பவர்களே நிறைய எழுத முடியும்...அவர்களின் படிப்பறிவை பகிர்ந்தால் அனைவர்க்கும் பயன்.. அருமை...

சென்னை பித்தன் said...

ஆழ்ந்த படிப்பாளிதான் ஒரு நல்ல படைப்பாளியாவான்;உண்மமைதான்

சென்னை பித்தன் said...

த.ம.4

S.டினேஷ்சாந்த் said...

சிறப்பான படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

அருமை ஐயா! பாராட்டுக்கள்! தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்! முதல்முதலா கவிதை படைத்த அனுபவம்! http://thalirssb.blogspot.in/2013/08/my-first-poem-exeperience.html மறுக்காமல் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்! நன்றி

G.M Balasubramaniam said...


கூடியவரை சேமியுங்கள்; சேமிப்பிலிருந்து வாரி வாரி வழங்குங்கள்.சேகரிக்கப்பட்ட அறிவு கொடுக்கக் கொடுக்க வற்றாதது. வாழ்த்துக்கள்.

Unknown said...

எமது வழியில்..இணைந்து வீட்டீர் போலும்!
எழுத்துக்கும் சற்று ஓய்வு தேவை தான்!
ஆனால் தொடர்ந்து வாசிப்பில் இருந்து,
எழுத்து/கருத்து சீராய்வு மேற்கொள்க..என
அன்புக்கட்டளை இடுகிறோம்!

கோமதி அரசு said...

சேகரிப்பின்றி கொடுக்க முயலுதல்
செல்வந்தனை வறியவனாக்கிவிடும் எனும்
மாற்ற முடியாத விதிப்படியும்...//

நீங்கள் சொன்னது உண்மைதான்.
கற்றல் நன்றுதான்.
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் எங்களுக்கு நன்று.நிறைய சேகரித்து வழங்கிட வேண்டும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒவ்வொரு வரியும் சிறப்பானவை.இது வெத்து வேட்டு அல்ல. வித்தை தெரிந்தவரின் அதிர் வேட்டுதான்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம 7

vimalanperali said...

வாஸ்தவமே>சேப்பு இல்லாமல் அள்ளிக்கொடுப்பது நல்லதும் ஆரோக்கியமானதுமல்ல/

மங்குனி அமைச்சர் said...


இவைகள் ஏதும்
கண்ணுக்கெட்டியவரையில் காணாததால்///

பாஸ் அந்த கூலிங்கிளாஸ்அ கழட்டுங்க , அதுனாலதான் இருட்டா ஒண்ணுமே தெரியாம இருக்கு :-)))


///நான் இன்றும் படைப்பாளி ஆகி
படிப்பவர்களை பரிதவிக்கவிடாது
படிப்பாளி ஆகிப்போகிறேன் ////

சாருக்கு ரெண்டு இட்லி கொஞ்சம் கெட்டி சட்னி , ஒரு வடை பார்சல் :-)))

கரந்தை ஜெயக்குமார் said...

தொட்டனைத்து ஊறும் மனற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு

தோண்டத் தோண்ட ஊறிக் கொண்டே இருப்பதல்லவா அறிவு.
ஒரு போதும் உங்களை வறியவனாக மாற்றாதது தங்களின் படைப்புக்கள் தான்.


Ravichandran M said...

சேகரிப்பின்றி கொடுக்க முயலுதல்
செல்வந்தனை வறியவனாக்கிவிடும் எனும்.....

ஒருவனிடமிருந்து அபகரிக்கமுடியாதது அவனுடைய அறிவு! அது வற்றாத ஜீவ நதியாக இருக்கின்றது! சிந்திக்க சிந்திக்க வற்றாத ஜீவ நதியாக தொடரும்...

எழுத்திற்கு ஓய்வு தேவையில்லை என்பது எனது கருத்து! தொடருங்கள் அய்யா! ஒவ்வொரு படைப்பிற்கும் அவகாசம் கொடுத்து செயல்படுங்கள் புத்துணர்ச்சியுடன்... ஊக்கத்துடன்...

தொடருங்கள்...தொடர்கிறோம்....

ட்

கவியாழி said...

புத்தகக்காட்டிற்குள் நிச்சயம்
வீரிய விதைகள் சிதறிக் கிடக்கும் //இனி எல்லோருக்கும் நல்ல படைப்புகளும் கிடைக்கும்

vanathy said...

Super. Well written.

ராமலக்ஷ்மி said...

/புத்தகக்காட்டிற்குள் நிச்சயம்
வீரிய விதைகள் சிதறிக் கிடக்கும் எனும்
வழக்கமான நம்பிக்கையிலும்...

சேகரிப்பின்றி கொடுக்க முயலுதல்
செல்வந்தனை வறியவனாக்கிவிடும் எனும்
மாற்ற முடியாத விதிப்படியும்.../

வாசிப்பு அனைவருக்கும் அவசியமே. நல்ல வரிகள்.

Ranjani Narayanan said...

வாசித்தலும், வாசிப்பதை பிறருடன் பகிருதலும் தொடரட்டும், ரமணி ஸார்!

மாதேவி said...

படிப்பாளிதான் சிறந்த படைப்பாளனாக முடியும். தொடருங்கள்.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இளமதி /

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//

கவர்ந்திழுக்கும்படியான
கவர்ச்சியான தலைப்பு
தொடர்ந்து படிக்கும்படியாக
சுவையாக முதல் வரிகள்
எரிச்சலூட்டாது ரசிக்கும்படியாக
இதமான தொடர்வரிகள்
முழுமனதாய் ஏற்கும்படியான
அருமையான முடிவுரை
இவைகளை நினைவில் நிறுத்தி ’யாதோ’ வாக எழுதும் ரமணி சார் போன்றவர்கள் மட்டுமே என்றுமே ‘வெத்து வேட்டு’ அல்ல.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.//



தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi said...//
புத்தகக்காட்டிற்குள் வீரிய விதைகள் சிதறிக் கிடக்கும் - நம்பிக்கை¨.
உண்மை தான் பலரின், பிரபலங்களின் பிந்திய ஆக்கங்கள் - முந்திய நூல்களில் வந்த வரிகளென இப்போது தானே புரிகிறது. முன்பு இப்படி எழுதுகிறார்களே என்று வாய் பிழ(ள)ந்தது. நினைவு வருகிறது.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி said...
சும்மா ஒரு மாறுதலுக்கு என்று எழுதினாலும் தங்களைப்போன்ற அற்புதமான படைப்பாளியிடமிருந்து மாறுபட்ட ஒரு மனநிலை கொண்ட ஒரு படிப்பாளியின் தரப்பிலிருந்து எழுதப்பட்டதாகவே கொள்ளமுடிகிறது என்னால். ஒவ்வொரு படைப்பாளியும் கொண்டிருக்கவேண்டிய சிறப்பம்சங்களை எடுத்தியம்பிய வரிகளில் அசந்துபோனேன். பாராட்டுகள் ரமணி சார்.///

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ezhil said...
நிறைய படிப்பவர்களே நிறைய எழுத முடியும்...அவர்களின் படிப்பறிவை பகிர்ந்தால் அனைவர்க்கும் பயன்.. அருமை./

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி




Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் said..//.
ஆழ்ந்த படிப்பாளிதான் ஒரு நல்ல படைப்பாளியாவான்;உண்மமைதான்//

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

டினேஷ்சாந்த் said...//
சிறப்பான படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்/

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

s suresh said...//
அருமை ஐயா! பாராட்டுக்கள்/

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...//

கூடியவரை சேமியுங்கள்; சேமிப்பிலிருந்து வாரி வாரி வழங்குங்கள்.சேகரிக்கப்பட்ட அறிவு கொடுக்கக் கொடுக்க வற்றாதது. வாழ்த்துக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி said..//.
எமது வழியில்..இணைந்து வீட்டீர் போலும்!
எழுத்துக்கும் சற்று ஓய்வு தேவை தான்!
ஆனால் தொடர்ந்து வாசிப்பில் இருந்து,
எழுத்து/கருத்து சீராய்வு மேற்கொள்க..என
அன்புக்கட்டளை இடுகிறோம்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...//

நீங்கள் சொன்னது உண்மைதான்.
கற்றல் நன்றுதான்.
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் எங்களுக்கு நன்று.நிறைய சேகரித்து வழங்கிட வேண்டும்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN said..//
.
ஒவ்வொரு வரியும் சிறப்பானவை.இது வெத்து வேட்டு அல்ல. வித்தை தெரிந்தவரின் அதிர் வேட்டுதான்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///////

Yaathoramani.blogspot.com said...

விமலன் said...//
வாஸ்தவமே>சேப்பு இல்லாமல் அள்ளிக்கொடுப்பது நல்லதும் ஆரோக்கியமானதுமல்ல///

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மங்குனி அமைச்சர் //

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//
தொட்டனைத்து ஊறும் மனற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவுதோண்டத் தோண்ட ஊறிக் கொண்டே இருப்பதல்லவா அறிவு.
ஒரு போதும் உங்களை வறியவனாக மாற்றாதது தங்களின் படைப்புக்கள் தான்.//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

krishna ravi said...
சேகரிப்பின்றி கொடுக்க முயலுதல்
செல்வந்தனை வறியவனாக்கிவிடும் எனும்.....

ஒருவனிடமிருந்து அபகரிக்கமுடியாதது அவனுடைய அறிவு! அது வற்றாத ஜீவ நதியாக இருக்கின்றது! சிந்திக்க சிந்திக்க வற்றாத ஜீவ நதியாக தொடரும்...
எழுத்திற்கு ஓய்வு தேவையில்லை என்பது எனது கருத்து! தொடருங்கள் அய்யா! ஒவ்வொரு படைப்பிற்கும் அவகாசம் கொடுத்து செயல்படுங்கள் புத்துணர்ச்சியுடன்... ஊக்கத்துடன்..//


தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் said...//
புத்தகக்காட்டிற்குள் நிச்சயம்
வீரிய விதைகள் சிதறிக் கிடக்கும் //இனி எல்லோருக்கும் நல்ல படைப்புகளும் கிடைக்கும்
/
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

vanathy said...//
Super. Well written.//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி said...
/
.../வாசிப்பு அனைவருக்கும் அவசியமே. நல்ல வரிகள்./

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan said..//.
வாசித்தலும், வாசிப்பதை பிறருடன் பகிருதலும் தொடரட்டும், ரமணி ஸார்!//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

மாதேவி said...//
படிப்பாளிதான் சிறந்த படைப்பாளனாக முடியும். தொடருங்கள்.//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Post a Comment