Tuesday, September 22, 2015

யானையைச் சாப்பிட ----பதிவர் சந்திப்பு ( 5 )

தோட்டத்தில் பாதி கிணறாய் இருந்தால்
வெள்ளாமை வெளங்கின மாதிரிதான் "
என கிராமங்களில் ஒரு
சொலவடை உண்டு

அதைப் போலவே  எந்த ஒரு பொது நிகழ்வுக்கும்
பங்கேற்பாளர்களை விட கலந்துகொள்வபவர்களின்
கூட்டம்அதிகம் இருக்குமானாலும்
(அரசியல்  மற்றும் திருவிழா நீங்கலாக  இதுபோன்ற
சமூக மேம்பாட்டு நோக்கமுள்ள நிகழ்வுகளுக்கு )
 அந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைவதுநிச்சயம் கடினமே

அந்த வகையில் நான் எப்படியும் மாதம்
இரண்டு கூட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும்

அதற்கென சமூக மேம்பாட்டு நோக்கம் உள்ளோரின்
ஒரு நெடும் பட்டியலிட்டு அதில் கொடுத்தவரிடம்
தொடர்ந்து போகாது மாறி மாறி இருவர் மூவர்
எனத் தொகைஅதிகமாகிவிடாதபடி பகிர்ந்து
வாங்கித் தான் நடத்திக் கொண்டுள்ளேன்

யானையை முழுதாக முழுங்குவது
அரக்கனாயினும் கஷ்டமே
பிய்த்து கொஞ்சம் கொஞ்சமாக எனில்
ஒரு சிறுவன் கூட யானையைத் தின்று விட முடியும்

அந்த வகையில் நமது பதிவர் சந்திப்பிற்கு
புதுக்கோட்டையில்  குறைந்த பட்சம்
பத்துப் புரவலர்கள்

ஆர்வமுள்ள பதிவர்கள் அதிகம்
உள்ள மாவட்டங்களில்குறைந்த பட்சம்
மூன்று புரவலர்கள்

அயல் நாட்டுப்பதிவர்கள் குறைந்தப்
பட்சம் ஐந்து பேர்

எனப் பிரித்து முயன்றோமானால் முப்பது
 புரவலர்கள் கிடைத்துவிட வாய்ப்புண்டு
என்பது எனது கருத்து

என்னைப் பொருத்தவரை நான் என்னை
ஒரு  புரவலராகஇணைத்துக் கொண்டதோடு

அயல் நாட்டிலிருந்து புரவலராகத்  தங்கள்
பங்களிப்பைத் தருமாறு மூவருக்கும்

இந்தியாவில் இருவருக்கும்
வேண்டு கோள் விடுத்துள்ளேன்

இப்படி ஒவ்வொருவரும் பொறுப்பேற்றுக்
கொண்டால்நிச்சயமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
நிதி திரட்டுவதில் மட்டும் அதிகக் கவனம் செலுத்தாது
 பிற நிகழ்வுகளில்கவனம் செலுத்த இயலும்
என்பது எனது கணிப்பு

தங்கள் கருத்தை எதிர்பார்த்து....

11 comments:

KILLERGEE Devakottai said...

முயன்று கொண்டு இருக்கிறேன் கவிஞரே
தமிழ் மணம் 2

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி ஜீ

balaamagi said...

விழா வெற்றிபெற தாங்கள் சொல்லும் சிந்தனைகள் ஆக்கப்பூர்வமானவையே,
வாழ்த்துக்கள்.





நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா ரமணி அவர்களே! வணக்கம்.
விழா அறிவிப்பு வந்ததிலிருந்து தங்கள் கருத்துகளைக் கவனித்து இயன்றவரை அதனைச் செயல் படுத்தியும் வருகிறோம். இந்த யோசனை அருமையானது மட்டுமல்ல.. “வேலை செய்வோர் நிதிச்சுமையில் திகைக்காமல் வேலையில் கவனம் செலுத்த உதவும்” என்பதை நான் அடிக்கோடிட்டு வழிமொழிகிறேன் அய்யா. நன்றி

”தளிர் சுரேஷ்” said...

நல்ல ஆலோசனை! விழாக்குழுவினர்கள் ஏற்பார்கள் என்று நம்புகின்றேன்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

நல்ல ஆலோசனை வழங்கியுள்ளீர்கள்.. நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக அமையும்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா த.ம 3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சென்னை பித்தன் said...

நல்ல யோசனைதான்.தங்கள் முயன்றால் நடக்காததும் உண்டோ?

தனிமரம் said...

அருமையான ஆலோசனைதான் ஐயா.விழா சிறக்கட்டும்.

மகிழ்நிறை said...

அண்ணா சொன்னதையே நானும் வழிமொழிக்கிறேன் அய்யா! மூத்தோர் சொல் அமுது என்பார்கள். உங்கள் அறிவுரைகளும் அவ்வாறே இருக்கிறது!! புதுகை விழாக்குழுவினர் சார்பாக மிக்க நன்றி அய்யா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மிக சரியான ஆலோசனை .பதிவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் நிதிப் பங்களிப்பை அளித்தால் நல்லது

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனைகள்....

விழா சிறக்கட்டும்....

Post a Comment